|
|
சென்னைக்கு வந்தது ஆட்டுக்கறியா... நாய்க்கறியா? - இறைச்சி சங்கத்தின் விளக்கம்
[Monday 2018-11-19 18:00]
|
இறைச்சியின் வால் பகுதியைப் பார்த்து அது நாய்க்கறி என்ற தகவல் பரப்பியது தவறானது. ஆய்வுக்குப்பிறகுதான் அது எந்த விலங்கின் இறைச்சி என்பதை தெரிவித்திருக்க வேண்டும்'' என்று தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அலி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூருக்கு தெர்மோகோல் பாக்ஸில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி கொண்டு வரப்பட்டது. அந்த இறைச்சி குறித்து ரகசியத் தகவல் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது.
|
|
|
காதலியை கத்தியால் குத்திவிட்டு தானும் விஷம் அருந்தி விட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்!
[Monday 2018-11-19 17:00]
|
சென்னை திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞர் தானும் எலிமருந்தைக் குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவொற்றியூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பாலாஜி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்துக்கு பாரதியின் பெற்றோர் மறுத்துவிட்டதாக இளைஞர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று பாரதி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கு சென்ற பாலாஜி திருமணத்துக்கு வற்புறுத்தியதாகவும், பாரதி மறுத்ததால் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
|
|
|
நிவாரணம் வழங்க அரசு தீவிரம் காட்ட வேண்டும்: - வைகோ
[Monday 2018-11-19 17:00]
|
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுனாமிக்கு அடுத்து அதிர்ச்சி தரத்தக்க சேதத்தை கஜா புயல் 8 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் திருமறைக்காடு பகுதி புயலால் நாசமாகியுள்ளது.
ஏராளமான கால் நடைகள் இறந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு தொற்று நோய் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
|
|
|
ரயில் தண்டவாளத்தில் சிக்கி சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிருடன் தப்பிய பயணி!
[Monday 2018-11-19 17:00]
|
ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது தண்டவாளத்தின் நடுவே சிக்கியவர் உயிருடன் தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர பிரதேசம் அனந்தபூர் ரயில் நிலையத்திற்கு லக்னோ - எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணி ஒருவர் அடுத்த நடைமேடைக்கு செல்வதற்கு மேம்பாலம் மூலம் செல்லாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார்.
|
|
|
அம்மி கல்லை தூக்கிப்போட்டு பெண் படுகொலை: - வாலிபர் வெறிச்செயல்
[Monday 2018-11-19 17:00]
|
தஞ்சை கீழவாசல் வீதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வேலைப்பார்த்து வந்த கடலூர் வாலிபர் ஒருவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
|
|
|
கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோசை சட்டியால் கணவரை அடித்து கொலை செய்த மனைவி!
[Monday 2018-11-19 17:00]
|
சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு, பார்வதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
செல்வகுமார் கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜி.டி.பி. கிரானைட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.
கடந்த 10-ந்தேதி அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடந்த 15-ந்தேதி இது குறித்து செல்வகுமாரின் தந்தை மாது, தாய் பாப்பா ஆகியோர் ஐஸ்வர்யாவிடம் கேட்டனர். அதற்கு அவர், கணவர் வேலையை விட்டு நின்றதற்கான பணத்தை வாங்குவதற்காக தொழிற்சாலைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.
|
|
|
நடுக்காட்டில் கிடைத்த ஐயப்பன் சிலை: - வேலூரில் நிகழ்ந்த அதிசயம்
[Sunday 2018-11-18 19:00]
|
வேலூர் அருகே வனப்பகுதியில் ஐயப்பன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் சிலை கிடைத்துள்ளதால் பக்தர்கள் வியந்து போய் பக்தியில் மூழ்கினர்.
|
|
|
ரவுடியை கல்லால் தாக்கி கொன்ற கள்ளக்காதலி!
[Sunday 2018-11-18 19:00]
|
வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியான இவர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 25 வழக்குகள் உள்ளது.
சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவருக்கும் வள்ளலாரில் டிபன் கடை நடத்தி வரும் தண்டுமாரி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
|
|
|
நடத்தை சந்தேகத்தில் மனைவி குத்திக்கொலை: - கணவர் வெறிச்செயல்
[Sunday 2018-11-18 19:00]
|
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கவேல்- ருக்மணி தம்பதியினர். இவர்களது மகள் பார்வதி (வயது 24). பார்வதிக்கும், திருச்சி காஜாமலை இந்திராநகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற மணிகண்டன் (30) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீதர், சுதா என மகன், மகள் உள்ளனர்.
|
|
|
சந்தர்ப்பவாத கூட்டணி வெற்றிபெறாது: - நடிகை ரோஜா
[Sunday 2018-11-18 19:00]
|
நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தனது பிறந்த நாளை நகரியில் கொண்டாடினார்.
ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்த ரோஜாவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் வரவேற்று மாலை அணிவித்தனர். ரோஜா தொண்டர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
|
|
|
நேருக்கு நேர் விவாதத்திற்கு பிரதமர் மோடி தயாரா? - ராகுல் காந்தி
[Sunday 2018-11-18 19:00]
|
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் 15 நிமிட நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சட்டீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி,
|
|
|
வைரமுத்து மீது #Metoo டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி !
[Saturday 2018-11-17 19:00]
|
பாடலாசிரியர் வைரமுத்து மீது #Metoo ஹேஷ்டேக் மூலம் பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் துன்புறுத்தல் புகாரை முன்வைத்திருந்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதராகவும், எதிர்ப்பாகவும் ஒருசேர குரல்கள் எழுந்தன. சின்மயி வீடியோ ஆதாரத்தை வெளியிடலாமே என சிலர் சொல்ல, செல்லும் இடங்களுக்கெல்லாம் கேமராவுடனா..? செல்ல முடியும் என சின்மயி எதிர்கேள்வி எழுப்பினார்.
|
|
|
கஜா புயல்: - உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
[Friday 2018-11-16 17:00]
|
தென்னிந்திய கரையோரங்களை கடுமையாக தாக்கிய கஜா புயல் சுமார் 100 தொடக்கம் 120 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சமஸ்கிருதத்தில்
|
|
|
மனைவியை பழிவாங்கிய கணவன்: - தேசத்தை உலுக்கிய இளம்பெண் மரணத்தின் பின்னணி
[Friday 2018-11-16 12:00]
|
இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலையில் அவரது கணவரும் காதலியின் பங்கும் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 27 ஆம் திகதி ஹரியானா அருகில் உள்ள குருகிராமில் 8 வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. அன்று, வட இந்திய பெண்கள் கடைபிடிக்கும்
|
|
|
பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்!
[Friday 2018-11-16 08:00]
|
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது.
இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
|
|
இக்கட்டான நேரத்தில் கனேடிய பெண்மணி எடுத்த முடிவு..?
[Wednesday 2018-11-14 18:00]
|
காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப் போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
|
|
|
காதலி உத்தரவால் மனைவியைக் கொன்ற கணவன்!
[Wednesday 2018-11-14 17:00]
|
ஹரியானாவில் வங்கி ஊழியர் கொலையில் மூளையாக செயல்பட்ட கணவனின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீபிகா (32). இவர் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 27-ம் தேதி இரவு, 8-வது மாடியிலுள்ள இவரது குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரின் கணவர் விக்ரம் சிங் சவுகானை கைது செய்தனர்.
|
|
|
விமானத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் பயணி கைது!
[Wednesday 2018-11-14 17:00]
|
மும்பையில் இருந்து கடந்த 10ம் தேதி சென்ற ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், அதிக மது கொடுக்காததால் விமான ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல், நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி தகராறில் ஈடுபட்டு உள்ளார்.மேலும் விமான பைலட் மீது எச்சில் துப்பி உள்ளார்.
|
|
|
உல்லாசத்துக்கு வர மறுத்தத அண்ணியை கொன்ற வியாபாரி!
[Wednesday 2018-11-14 17:00]
|
தாராபுரம் நஞ்சியாம் பாளையத்தில் உள்ள உப்பாற்றுபாலத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று சாக்குமூட்டையில் இளம்பெண் பிணம் கிடந்தது. இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலியில் பி.ஜே. என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இதுகுறித்து விசாரித்தபோது கடை உரிமையாளர் இந்த தாலி இங்கு செய்யப்பட்டது தான் என்று கூறினார்.
|
|
|
விஷப் பாம்பை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? - திருமாவளவன்
[Wednesday 2018-11-14 17:00]
|
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற் குழு கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது.
|
|
|
குடும்ப தகராறு காரணமாக மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை!
[Wednesday 2018-11-14 16:00]
|
கோவை போத்தனூரை சேர்ந்தவர் பாபு(வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(42).
இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுமதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி சி.டி.சி. காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு தாய் விசாலாட்சியுடன்(60) வசித்து வந்தார்.
|
|
|
சகோதரனுடன் ஏற்பட்ட காதலால் திருமணமான 2-ம் நாளில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்!
[Wednesday 2018-11-14 16:00]
|
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21). இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்தனர். அப்போது திருப்பூரில் வேலை பார்த்து வரும் ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துகிருஷ்ணன் (27) என்பவரும் புதுமண ஜோடியை பார்க்க வந்தார்.
|
|
|
தனக்குத்தானே பிரசவம் பார்த்து 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசய பெண்!
[Tuesday 2018-11-13 13:00]
|
`எனக்குப் பிரசவ வலி வந்தால், வீட்டில் இருக்கும் மூலையில் போய் படுத்துக்கொள்வேன். கொஞ்ச நேரத்துல நல்லபடியா குழந்தை பொறந்திரும். அதுவரை யாரையும் அருகில் விடமாட்டேன். குழந்தை பிறந்ததும், குழந்தையை எடுத்து தொப்புள் கொடியை அறுத்து, குளிப்பாட்டி கணவரிடம் கொடுப்பேன்'' என அசால்டாக சொல்கிறார் 12-வது குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ள சாந்தி.
|
|
|
7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை: - ரஜினிகாந்த்
[Tuesday 2018-11-13 13:00]
|
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆபத்தான கட்சியா என்று கேட்டதற்கு எந்த 7 பேர், எனக்கு தெரியாது, பாஜக ஆபத்தான கட்சியாக பார்த்தால் அப்படித் தான் என்று கூறினார்.
எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
|
|
|
குடும்ப பிரச்சினையில் மனைவியின் கழுத்தை அறுத்து துண்டாக்கிய ஆத்திரம் அடங்காத கணவன்!
[Tuesday 2018-11-13 13:00]
|
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது பெரிய பூலாம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெத்தண்ணன் (வயது 69). இவருக்கு மாரியம்மாள் (60) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மகள் தந்தை வீட்டுக்கு வந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பெத்தண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனைவியை எச்சரித்துள்ளார்.
|
|
|
கரடிகள் தாக்குதலில் இருந்து விவசாயியை காப்பாற்றிய நாய்கள்!
[Tuesday 2018-11-13 13:00]
|
கர்நாடக மாநிலம் கானாபூர் தாலுக்காவில் உள்ள மோகிசெட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம் கிரப்பா மிராஷி (51) விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் தனது வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவர் தன்னுடன் 2 நாய்களையும் அழைத்து வந்தார். கானாப்பூர் வனப்பகுதியில் வந்தபோது அங்கு புதரில் மறைந்திருந்த 2 கரடிகள் மிராஷியை தாக்க பாய்ந்து வந்தன. அதை பார்த்ததும் நாய்கள் குரைத்தன. உடனே சுதாரித்துக்கொண்ட மிராஷி உயிர்பிழைக்க அருகில் இருந்த ஒருமரத்தில் ஏறினார்.
|
|
|
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்
[Monday 2018-11-12 18:00]
|
தருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சவுமியா, தீபாவளி பண்டிகைக்காக தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் சவுமியாவை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
|
|
|
காட்டுக்குள் வாலிபர்களிடம் சிக்கிய மாணவி? - வெளியான தகவல்கள்
[Monday 2018-11-12 18:00]
|
தருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி அருகில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் வாலிபர்கள் ரமேஷ், சதீஷ் இருவரும் பின் தொடர்ந்து சென்று இப்படி ஒரு செயலை நடத்தியுள்ளனர்.
|
|
|
|