Untitled Document
March 28, 2024 [GMT]
திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற மகன்!
[Saturday 2018-10-13 18:00]

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூங்கில் துறைப்பட்டு கொடியனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 65). இவரது மனைவி பொடி (60). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் கோபி (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.


முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார்!
[Saturday 2018-10-13 08:00]

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர்.


எனது அனுமதியில்லாமல் எப்படி என் மனைவிக்கு குடும்பகட்டுப்பாடு ஆப்ரேசன் செய்யலாம்: - கொந்தளிக்கும் கணவன்
[Saturday 2018-10-13 08:00]

கணவன், மனைவிக்குத் தெரியாமல், அவர்கள் சம்பந்தமின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராகத் தேர்வு!
[Saturday 2018-10-13 08:00]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.


பாலியல் புகார் தெரிவித்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பிரபல பாடகர்!
[Friday 2018-10-12 17:00]

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணிடம் பிரபல பாடகர் ரகு தீக்சித் மன்னிப்பு கேட்டுள்ளார். வைரமுத்துவால் படுக்கைக்கு அழைக்கப்பட்டேன் என கூறிய சின்மயி, பல பெண்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பதிவை டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார். பாடகர் ரகு தீக்சித் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி ஒருவர் தனது பெயரை தெரிவிக்காமல் சின்மயியிடம் கூறினார். அந்த தகவலை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டார்.


லஞ்சம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் தமிழ்நாடு 3வது இடம்:- கருத்துக்கணிப்பில் தகவல்
[Friday 2018-10-12 17:00]

இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-


மாயமான புதுப்பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!
[Friday 2018-10-12 17:00]

கொப்பல் மாவட்டம் குடூரு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் மல்லனகவுடா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி குஷ்டகி தாலுகா புரா கிராமத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் வைத்து நடந்தது.


4 வயது மகளை மகளை சீரழித்த ஆசிரியரான தந்தை கைது!
[Friday 2018-10-12 16:00]

ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார், இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2002-ம் ஆண்டு திருமணமான இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணி குமாரும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.


இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி: - ராகுல் காந்தி
[Friday 2018-10-12 16:00]

இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36


பதிவு திருமணம் செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்: - வெளியான பகீர் காரணம்
[Friday 2018-10-12 09:00]

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருவேறு மதங்களை சார்ந்த காதலர்கள் தங்கள்திருமணத்தை முறைப்படி பதிவு செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இத்திரிக்கர பாலம் அருகே அமைந்துள்ள ஆற்றில் குதித்து காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


ஈழபெண்ணிடம் போனில் மோசமாக பேசிய வைரமுத்து: - பதிவை வெளியிட்ட சின்மயி
[Thursday 2018-10-11 17:00]

ஈழபெண் ஒருவரிடம் வைரமுத்து போனில் மோசமாக பேசியதற்கான ஆதாரம் அப்பெண்ணிடம் உள்ளதாக அவர் எழுதிய பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி கூறினார். இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் ஈழப்பெண் ஒருவர் வைரமுத்துவால் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்!
[Thursday 2018-10-11 08:00]

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26). தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வரும்.


பாலியல் தொல்லை கொடுத்த இலங்கை வீரர் லசித் மலிங்கா: -சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
[Thursday 2018-10-11 08:00]

பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார். வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.


காதலியின் சந்தோஷத்திற்காக பணத்தை திருடிய கூகுள் நிறுவன ஊழியர்!
[Thursday 2018-10-11 08:00]

தன் காதலியின் சந்தோஷத்திற்காக பணத்தை திருடிய கூகுள் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 11-ம் தேதியன்று டெல்லி தாஜ் ஹோட்டலில் ஐபிஎம் மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கான்ஃபிரன்ஸ் நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவனம் சார்பில் ஹரியானாவின் அம்பலா மாவட்டத்தில் வசிக்கும் கர்வித் சஹானி என்ற 24 வயதான இளைஞரும் கலந்துகொண்டார்.


பெற்ற குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி செய்த செயல்: - வெளியான எஃப்.ஐ.ஆர் தகவல்
[Thursday 2018-10-11 08:00]

பெற்ற குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 1.9.2018-ல் வேலை முடிந்து அதிகாலை 4 மணிக்கு எனது வீட்டுக்கு வரும் வழியில் எனது மனைவி அபிராமிக்கு போன் செய்தேன். அபிராமிக்கு போன் போகவில்லை.


பாசத்துடன் வளர்த்த என் அன்பு மகளை பிறந்தநாள் அன்று இழந்துவிட்டேன்: - மாணவியின் தந்தை கண்ணீர் பேட்டி
[Wednesday 2018-10-10 18:00]

விழுப்புரம் அருகே அன்னியூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதியை அவரது காதலன் கார்த்திக் வேல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்பு கார்த்திக்வேலும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுட்டு கொல்லப்பட்ட மாணவி சரஸ்வதியின் உடலை பார்த்து அவரது தந்தை சேகர் கதறி அழுதார். பின்பு அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-


மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - வைகோ
[Wednesday 2018-10-10 18:00]

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட முன் வரவில்லை. இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.


மாணவியை காதலித்த வாலிபர் படுகொலை: - மீண்டும் பயங்கரம்-
[Wednesday 2018-10-10 18:00]

இந்த நிலையில் மீண்டும் காதல் விவகாரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த மாணவி குடும்பத்தினர் குமாரை மிரட்டினர். மேலும் அவர் மீதும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் குமாரை மிரட்டி இனிமேல் மாணவியை பார்க்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அதன் பிறகு குமார் காதலியை பார்க்காமல் இருந்தார்.


மனைவி- குழந்தையை கொல்ல முயற்சி: - கணவர் மீது போலீசில் புகார்
[Wednesday 2018-10-10 17:00]

திருவாரூர் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா(வயது28). இவர் காட்டூர் பகுதியில் கார் பரிசோதனை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் மன்னார்குடி பைங்காநாடு கிராமத்தை சேர்ந்த ஜெயநந்தினிக்கும்(24) கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.


கணவனை பிரிந்து பள்ளி காதலனை மணந்த இளம்பெண்!
[Wednesday 2018-10-10 08:00]

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது.


காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்!
[Wednesday 2018-10-10 08:00]

சென்னையில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக்வேல். இவருக்கு பேஸ்புக் மூலம் சரஸ்வதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். சரஸ்வதியின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர். இந்நிலையில், இன்று காலை அன்னியூர் சென்ற கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும்: நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம்
[Tuesday 2018-10-09 18:00]

நக்கீரன் கோபாலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம் வலியுறுத்தினார். ஆளுநரின் பணியில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆளுநரின் கூடுதல் செயலாளர் செங்கோட்டையன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


பலரின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சல் பெண்: - உதவி கிடைக்காமையால் உயிரிழந்த பரிதாபம்
[Tuesday 2018-10-09 17:00]

தீ விபத்தில் பலரை காப்பாற்றிவிட்டு ஹீரோ உயிரிழக்கும் காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்தில் இப்படியொரு சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது. குருகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சலான பெண், உதவி கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


நக்கீரன் கோபால் மீதான வழக்கு ரத்து: - வைகோ வரவேற்பு
[Tuesday 2018-10-09 17:00]

நக்கீரன் கோபால் மீதான 124 பிரிவின் கீழான வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். நீதித்துறை, காவல்துறை குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை கைது செய்ய விடமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.


நக்கீரன் கோபால் திடீர் கைது!
[Tuesday 2018-10-09 16:00]

நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இன்னும் நிறைய கஷ்டங்களை சண்முகப்ரியா அனுபவிப்பாங்க: - முத்துலட்சுமி வீரப்பன்
[Tuesday 2018-10-09 08:00]

'சந்தன மர' வீரப்பனைப் பிடிக்க, காவல் துறைக்குத் தான் உதவியதற்கு அரசு அறிவித்திருந்த சன்மானம் 14 ஆண்டுகளாகியும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார், கோவையைச் சேர்ந்த சண்முகப்ரியா. இவர், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி, வீரப்பன் குறித்த தகவல்களைச் சேகரித்துத் தந்தவர் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் பேசினோம்.


மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்!
[Monday 2018-10-08 18:00]

திருவெறும்பூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியின் தலையை துண்டித்து உடல் மற்றும் தலையுடன் விடிய விடிய கணவன் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். 30 வயதான இவர் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தஞ்சை, திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, ஜெசிந்தா ஜோஸ்பின் என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது.


வீரப்பனை காட்டி கொடுத்த பெண்ணின் தற்போதைய நிலை......!
[Monday 2018-10-08 18:00]

தமிழக- கர்நாடக வனப்பகுதிகளில் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது, அவர்களைக் கொல்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இந்த நிலையில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளை கோவையில் உள்ள வடவள்ளி பகுதியில் போலீஸார் தங்க வைத்தனர். அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்த செந்தாமரைக்கண்ணன், முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களைப் பெறும்படி தனது குடும்ப நண்பரான சண்முகப்பிரியா என்ற பெண்ணின் உதவியை நாடியுள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா