Untitled Document
May 12, 2024 [GMT]
சகோதரனுடன் ஏற்பட்ட காதலால் திருமணமான 2-ம் நாளில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்!
[Wednesday 2018-11-14 16:00]

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21). இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது.

 
திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்தனர். அப்போது திருப்பூரில் வேலை பார்த்து வரும் ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துகிருஷ்ணன் (27) என்பவரும் புதுமண ஜோடியை பார்க்க வந்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21). இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்தனர். அப்போது திருப்பூரில் வேலை பார்த்து வரும் ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துகிருஷ்ணன் (27) என்பவரும் புதுமண ஜோடியை பார்க்க வந்தார்.

  

விருந்து நடந்து கொண்டு இருந்தபோது அருகில் இருந்த ஒரு வீட்டில் புதுப்பெண் ரம்யாவும், முத்து கிருஷ்ணனும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். முத்துகிருஷ்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் முத்துகிருஷ்ணனும், தங்கை உறவு முறை உள்ள ரம்யாவும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர்கள் பல முறை எடுத்துச் சொல்லி அவர்களை பிரிக்க பார்த்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்ததால் ரம்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் வேதனையடைந்த ரம்யாவும், முத்துகிருஷ்ணனும் வி‌ஷம் குடித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



இந்திய மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர்!
[Sunday 2024-05-12 06:00]

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்காவுக்கான தூதராக செயற்பட்ட, தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாவில் இணைந்து இந்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.



இந்தியாவிற்கு சவால் விடும் சீன போர்க்கப்பல்!
[Sunday 2024-05-12 06:00]

பிரமாண்ட போர் கப்பலை சீனா(China) தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தமையானது இந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. 80 ஆயிரம் தொன் நிறையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாக இது அமைந்திருந்துள்ளது. இதற்கு ஃபியூஜியன் என சீன தரப்பு பெயரிட்டுள்ளது.



பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை நோக்கி இந்திய படையினர் துப்பாக்கி பிரயோகம்!
[Sunday 2024-05-12 06:00]

இந்திய (India)- ஜம்மு காஸ்மீரின் (Jammu and Kashmir) சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே, பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக இந்திய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பேரணி!
[Saturday 2024-05-11 18:00]

சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறை சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, ரயில் பயணிகள் விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



காரில் பெண் சடலத்துடன் சுற்றிய இளைஞர்கள்: விசாரணையில் அதிர்ந்த போலீசார்!
[Saturday 2024-05-11 18:00]

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை அம்மைநாயக்கனூர் போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் பயணித்த காரில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருந்தது. சடலம் குறித்து இருவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



“ஆலோசனை என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது” - கார்கே பதிலடி!
[Saturday 2024-05-11 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தரவுகளை தாமதமாக கொடுக்கிறார்கள்; சரியான வகையில் வாக்குப்பதிவு தரவுகள் கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.



“பூர்வ குடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறை” - டி.டி.வி.தினகரன் கண்டனம்!
[Saturday 2024-05-11 18:00]

வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.



அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை!
[Saturday 2024-05-11 06:00]

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு(Arvind Kejriwal), இந்திய உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு நேற்று(10.05.2024) விசாரணைக்காக எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



டெல்லியில் புழுதிப் புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-11 06:00]

டெல்லியில் கடுமையாக புழுதிப் புயல் வீசி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகரின் பகுதியில் பல்வேறு பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பல அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கொடுத்திருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகால வெப்பநிலை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதி புயல் வீசி வருகிறது.



தேர்தல் எதிரொலி: ஈரோட்டில் 1 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் காலி!
[Saturday 2024-05-11 06:00]

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.



“பாகிஸ்தானை மதிக்கணும்” - காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை!
[Friday 2024-05-10 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல், ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்?
[Friday 2024-05-10 18:00]

இன்று தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம்போல, மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்னும் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.



10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன விஜய்!
[Friday 2024-05-10 18:00]

10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 6 -ம் திகதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு!
[Friday 2024-05-10 18:00]

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.



பட்டாசு ஆலைகள் விதிமீறல்: உயிரிழப்பு 10ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

சிவகாசி ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார்.



பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ முயன்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்!
[Friday 2024-05-10 06:00]

நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விட்டு குளத்தில் கை கழுவ முயன்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



செல்போனால் சிதறிய கவனம்: தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து!
[Friday 2024-05-10 06:00]

அண்மையில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாந்தை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதேபோல் பேருந்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் மயக்கம் அடைந்தார்.



பா.ஜ.க அரசை வீழ்த்த தீவிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற பட்சத்தில் அந்தத் தேர்தல் நடைபெற்றது.



தமிழக அரசு தொடங்கிய திட்டத்தால் தொழிலதிபர்களாக மாறலாம்: என்ன திட்டம்?
[Thursday 2024-05-09 18:00]

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 1303 ஆதி திராவிடர்கள் தொழிலதிபர்களாக மாறியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த திட்டமானது பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.



லண்டனில் மகனுடன் இருக்கும் உதயநிதி ஸ்டாலின்!
[Thursday 2024-05-09 18:00]

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டனில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக 24 நாட்களாக தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பின்னர், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா