|
|
|
|
|
உறவுகளை கொச்சைப்படுத்தும் இயக்குனர் சாமியின் கார் உடைப்பு:
[Monday, 2010-09-06 17:03:44]
|
உயிர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் இயக்குநர் சாமி. அந்த படத்தில் மைத்துனர் மீது அண்ணி ஆசைப்படும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் தற்போது சிந்து சமவெளி என்று அவர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் மாமனார் மருமகளை விரும்புவதாக கதை அமைத்திருக்கிறார்.
|
|
|
|
|
வைரமுத்து பார்த்து ஒரு படம் ஓடும் என்று சொன்னால் அது நிச்சயம் ஓடும்:- 'நகரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்.
[Monday, 2010-09-06 11:20:03]
|
சுந்தர் இயக்கும் 'நகரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியபோது இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், சுந்தர்.சி. குறிப்பிட்டது போல் வைரமுத்து அரவணைத்த இயக்குநர்களில் நானும் ஒருவன். நான் எழுதிய கவிதைகளை, அவரிடம் காட்டி பிழைகளை திருத்திக் கொண்டிருக்கிறேன். கலைஞர் வசனங்களை மனப்பாடம் செய்ததுபோல், வைரமுத்துவின் கவிதைகளையும் மனப்பாடம் செய்து இருக்கிறேன்.
|
|
|
|
|
படப்பிடிப்பின் போது காதலருடன் நடிகை நிம்மி ஓட்டம்!:-பட அதிபர் போலீஸில் புகார்! நிம்மியைத் தேட போலீஸார் முயற்சித்து வருகின்றனராம்.
[Monday, 2010-09-06 11:07:00]
|
கண்டேன் என்ற படத்தின் படப்பிடிப்பிலிருந்து யாருக்கும் தெரியாமல் காதலனுடன் ஓடிவிட்டார் நிம்மி என்ற புதிய நடிகை. அந்த நடிகை மீது பட அதிபர் போலீஸில் புகார் செய்து இருக்கிறார்.
|
|
|
|
|
ஒவ்வொரு மொழிப் படத்துக்கும் தனித் தனி மேனேஜர் வைக்கும் நமீதா:-இனிமேல் முழு நீள கவர்ச்சியில் நடிக்க மாட்டாராம் கேரக்டரோடு கூடிய கவர்ச்சி பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்றாராம்.
[Monday, 2010-09-06 10:52:56]
|
ஒவ்வொரு மொழிப் படத்துக்கும் தனித் தனியாக மேனேஜரைப் போட்டு வாய்ப்புளை வளைக்க களம் இறங்கியுள்ளாராம் நமீதா. கவர்ச்சிகரமாகவே நடித்து வந்த நமீதாவுக்கு அதில் அலுப்பு தட்டவே இனிமேல் முழு நீள கவர்ச்சியில் நடிக்க மாட்டேன். கேரக்டரோடு கூடிய கவர்ச்சி பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறார்.
|
|
|
|
|
ரஜினி குறித்து வைரமுத்து கூறியது என்ன?-சொல்ல மறுத்த கருணாநிதி!
[Sunday, 2010-09-05 13:40:30]
|
ரஜினிகாந்த் குறித்து வைரமுத்து என்னிடம் ஒன்று சொல்லியுள்ளார். அதை நான் இப்போது சொல்ல மாட்டேன் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி. வைரமுத்துவின் மகன் கபிலன் கல்யாணம் இன்று சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
|
|
|
|
|
இனியானா இடத்தில் திரிஷா:-கால்ஷீட் பிரச்சனையால் நாயகி இலியானா இப்படத்தில் இருந்து விலக திரிஷாவை அணுகி இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
[Sunday, 2010-09-05 13:11:39]
|
இந்தியில் வெளியாகி சக்கைபோடு போட்ட 'லவ் ஆஜ் கல்' படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், இலியானாவை வைத்து ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்தனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனையால் நாயகி இலியானா இப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். இதனால் நாயகி தேடும் படலத்தில் இறங்கினர் தயாரிப்பு தரப்பு.
|
|
|
|
|
பிரகாஷ்ராஜின் அரசியல் பிரவேசம்:-போனி வந்ததுக்கப்புறம் இவர் பாணிய மாத்திகிட்டாரோ என்னவோ..?
[Sunday, 2010-09-05 11:44:25]
|
செல்லம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நல்ல படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்வது பிரகாஷ்ராஜின் பாணி. அதில் அவர் பல வெற்றிகளையும் கண்டவர். அந்த வரிசையில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'ஹேப்பி டேஸ்'-ஐ தமிழில் ரீமேக் செய்தார். மேலும் ராதா மோகனின் 'பயணம்' படத்தை பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ்தான் தயாரித்து வருகிறது.
|
|
|
|
|
ஷ்ரியாவிடம் மயங்கிய சல்மான்!:-அவரது சிபாரிசால், இப்போது தீபா மேத்தாவின் அடுத்த படத்திலும் ஷ்ரியா நடிக்கும் வாய்ப்பு ஓடோடி வந்துள்ளதாம்.
[Sunday, 2010-09-05 11:40:28]
|
ஷ்ரியாவிடம் மயங்கியவர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக ருஷ்டியும் இணைந்துள்ளார். மழை புகழ் ஷ்ரியாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த ரசிகர் பட்டாளத்தில் இப்போது உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியும் இணைந்துள்ளார். அவரது சிபாரிசால், இப்போது தீபா மேத்தாவின் அடுத்த படத்திலும் ஷ்ரியா நடிக்கும் வாய்ப்பு ஓடோடி வந்துள்ளது.
|
|
|
|
|
சினிமாவில் பகுத்தறிவு கருத்துக்களை பயப்படாமல் சொல்ல வேண்டும்:-'நகரம்' படப் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பேச்சு.
[Sunday, 2010-09-05 02:36:31]
|
சினிமாவில் பகுத்தறிவு சீர்திருத்தக் கருத்துக்களை பயப்படாமல் சொல்ல வேண்டும் என்று, 'நகரம்' படப் பாடல் வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
|
|
|
|
|
ஆள விடுங்கய்யா...! தனுஷ் கிரேட் எஸ்கேப்!!:-தனுஷ் நடித்த படங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் ரிலீஸ் செய்ய போட்டி போட ஆரம்பித்திருக்கிறார்களாம் பணம் போட்ட முதலாளிகள்.
[Saturday, 2010-09-04 15:00:23]
|
வாடி வாசலை திறந்துவிடுவாங்களா என்று வரிசையா நிற்குது காளைகள். ஆனால் எந்த காளை முந்தி வரும் என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். காளைக்கும் தனுஷுக்கும் என்ன சம்பந்தம்? நாம் சொன்ன காளைகள் எல்லாம் தனுஷின் படங்கள்தான். 'உத்தம புத்திரன்', 'மாப்பிள்ளை', 'சீடன்', 'ஆடுகளம்' ஆகிய அத்தனைப் படங்களும் முடிந்துவிட்டன. பின்னாலேயே வந்த செல்வராகவன் கூட 'மாலை நேரத்து மயக்கம்' படத்தை முக்கால்வாசி முடித்து விட்டாராம்.
|
|
|
|
|
சூர்யா - கௌதம் கூட்டணி மீண்டும்:-கௌதம் நடுநிசி நாய்கள், இந்தி விண்ணைத்தாண்டி வருவாயாவை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெரிகிறது.
[Saturday, 2010-09-04 14:40:24]
|
கௌதம் - சூர்யா கூட்டணியின் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் லாபமும் பெற்றுத் தந்தது. இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.
|
|
|
|
|
மல்லிகா ஷெராவத்தின் நல்ல மனசு!:-ஹாலிவுட்டில் இவருக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அனாதை குழந்தைகளுக்கே வழங்கப் போவதாக அறிவித்துள்ளாராம்!
[Saturday, 2010-09-04 14:32:15]
|
பலருக்கும் 'செக்ஸ் பாம்' ஆகத் தெரியும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை, கருணை உள்ளம் கொண்டவராகவும் சித்தரிக்கும் ஒரு சம்பவம் இது. ஹாலிவுட்டில் இவரது இந்த கருணை மனதைப் பற்றிதான் பெரிதாகப் பேசுகிறார்களாம்.
|
|
|
|
|
ஷூட்டிங் முடிந்து திரும்பிய பின்னர் வடிவேலு சார் நடித்த காமெடிக் காட்சிகளை பார்த்து விட்டுத்தான் தூங்கப் போவேன்: அல்லாதுபோனால் தூக்கமே வருகுதில்லை என்கிறார் மேக்னா ?
[Saturday, 2010-09-04 07:15:25]
|
காதல் சொல்ல வந்தேன் நாயகி மேக்னா சுந்தருக்கு ஒருவரைப் பார்க்காவிட்டால் தூக்கமே வராதாம். அவர் யார் தெரியுமா? நம்ம வடிவேலுதான். வடிவேலுவின் வெறித்தனமான ரசிகையாம் மேக்னா. தினசரி வடிவேலு நடித்த காமெடிக் களேபரங்களைப் பார்த்து விட்டுத்தான் தூங்கப் போவாராம். ஒரு நாள் மிஸ் ஆகி விட்டால் கூட என்னமோ போலிருக்குமாம்.
|
|
|
|
|
எந்திரனுக்காக காத்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான்:
[Friday, 2010-09-03 09:42:52]
|
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்ட படம் எந்திரன் என்பது ஊரறிந்த செய்தி. இந்த படத்தை காண ஆர்வமாக உள்ளதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
|
|
|
|
|
த்ரிஷாவுக்கு பப்ளிசிட்டி கொடுத்த போதை மருத்து விவகாரம்!
[Friday, 2010-09-03 09:39:00]
|
போதை மருத்து விவகாரம் த்ரிஷாவுக்கு கஷ்டத்தை கொடுத்ததோ இல்லையோ... நல்ல பலனை கொடுத்திருக்கிறதாம். தமிழ் சினிமாவில் மட்டும் அதிக கவனம் செலுத்திய காலகட்டத்தில் பாத்ரூம் குளியல் காட்சியில் தொடங்கி, கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்தி ஆட்டம் போட்டம் போட்டது வரை எக்கச்சக்க சர்ச்சைகளை சந்தித்தவர் த்ரிஷா. இந்தி சினிமாவுக்கு சென்றபின்... அங்கு நிலைத்து நிற்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
|
|
|
|
|
சென்னையில் நடந்த ரஜினிகாந்த் மகள் நிச்சயதார்த்தம்:-மத்திய மந்திரிகள், நடிகர், நடிகைகள் வாழ்த்து.
[Friday, 2010-09-03 02:12:05]
|
ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னையில் நேற்று மாலை நடந்தது. மத்திய மந்திரிகள் மற்றும் நடிகர், நடிகைகள் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.
|
|
|
|
|
ஷங்கரின் தடாலடி முடிவு - சரிகிறதா சினிமா சாம்ராஜ்யம்?
[Thursday, 2010-09-02 11:33:57]
|
ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுகிறார் என்றொரு பரபரப்பு செய்தி சினிமா உலகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஷங்கர் தரப்பு இன்னும் விளக்கமளிக்கவில்லை. ஷங்கர் ஒருபோதும் எஸ் பிக்சர்ஸை மௌனமாக்கப் போவதில்லை, நஷ்டத்தை கண்டு பதறுகிற மனிதரல்ல அவர் என இன்னொரு தரப்பு நம்பிக்கையூட்டுகிறது.
|
|
|
|
|
சட்டம் ஒரு இருட்டறை... விடாத எஸ்.ஏ.சி! விஜயகாந்துக்கு பெரிய திருப்புமுனை அமைத்துத் தந்த படம்.
[Thursday, 2010-09-02 11:30:46]
|
தனக்கும் விஜயகாந்துக்கும் வாழ்வளித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் படம் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றது. நாயகனாக நடித்த விஜயகாந்துக்கு பெரிய திருப்புமுனை அமைத்துத் தந்த படம் இது. எஸ் ஏ சந்திரசேகர், புரட்சி இயக்குநர் என தன் பெயருக்குப் பின் அடைமொழி போட்டுக் கொள்ள காரணமாக அமைந்ததும் இந்தப் படமே.
|
|
|
|
|
"சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று "சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் என்னை மிரட்டுகிறார்கள்":-பட அதிபர் மைக்கேல் ராயப்பன் பேட்டி.
[Thursday, 2010-09-02 10:47:50]
|
நாடோடிகள், கோரிப்பாளையம் ஆகிய படங்களை தயாரித்தவர், மைக்கேல் ராயப்பன். அந்த படங்களை அடுத்து இவர், சாமி டைரக்ஷனில், 'சிந்து சமவெளி' என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் ஹரீஸ் கல்யாண்-அனகா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
|
|
|
|
|
காவ்யா மாதவனின் விவாகரத்து வழக்கு:- படப்பிடிப்பு பகுதிக்கு செல்ல கணவருக்கு கோர்ட்டு தடை உத்தரவு.
[Thursday, 2010-09-02 03:08:55]
|
நடிகை காவ்யா மாதவனின் வீடு மற்றும் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல அவரது கணவர் நிஷாலுக்கு தடை விதித்து எர்ணாகுளம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
|
|
|
|
|
|
|
|
|