Untitled Document
May 11, 2024 [GMT]
கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோசை சட்டியால் கணவரை அடித்து கொலை செய்த மனைவி!
[Monday 2018-11-19 17:00]

சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு, பார்வதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

 
செல்வகுமார் கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜி.டி.பி. கிரானைட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.

கடந்த 10-ந்தேதி அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடந்த 15-ந்தேதி இது குறித்து செல்வகுமாரின் தந்தை மாது, தாய் பாப்பா ஆகியோர் ஐஸ்வர்யாவிடம் கேட்டனர். அதற்கு அவர், கணவர் வேலையை விட்டு நின்றதற்கான பணத்தை வாங்குவதற்காக தொழிற்சாலைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.

சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு, பார்வதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வகுமார் கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜி.டி.பி. கிரானைட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்று விட்டார். கடந்த 10-ந்தேதி அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடந்த 15-ந்தேதி இது குறித்து செல்வகுமாரின் தந்தை மாது, தாய் பாப்பா ஆகியோர் ஐஸ்வர்யாவிடம் கேட்டனர். அதற்கு அவர், கணவர் வேலையை விட்டு நின்றதற்கான பணத்தை வாங்குவதற்காக தொழிற்சாலைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.

  

நேற்று மதியம் வீட்டின் அருகே கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. உடனே உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது கிணற்றுக்குள் செல்வகுமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை கருப்பூர் போலீசார், ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறி ஐஸ்வர்யா கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அப்போது அவர், போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:- எனக்கு சொந்த ஊர் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதி ஆகும். எனது பெற்றோர் கருப்பூர், உப்புகிணறு, பார்வதி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வார்கள். இதில் செல்வகுமாரின் பெற்றோருக்கும், எனது பெற்றோருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் நன்கு தெரிந்தவர்கள் என்ற முறையிலும், பக்கத்து ஊர் என்பதாலும் எனக்கும், செல்வகுமாருக்கும் சம்பந்தம் பேசி திருமணம் செய்து வைத்தனர். இரு வீட்டார் பெற்றோர் முன்னிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்தது.

செல்வகுமாரின் சொந்த ஊர் மேச்சேரி அருகே உள்ள நரியனூர் பகுதியாகும். குடும்பத்துடன் அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பார்வதி தோட்டம் பகுதியில் குடியேறி விட்டனர். கருப்பூர் பகுதியில் உள்ள ஜி.டி.பி. கிரானைட் நிறுவனத்தில் செல்வகுமார் வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் நடத்த முடிவு செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகை வீடு எடுத்து, அங்கு இருவரும் குடியேறினோம். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகள் கரும்பாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறாள். எனது கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவு மற்றும் மகள் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்.

எங்களது வீட்டின் அருகே மாமனார் மாது, மாமியார் பாப்பா ஆகியோர் குடியிருந்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து அடிக்கடி குடும்ப செலவுக்கு பணம் வாங்கி வந்தேன். அவர்களிடம் இருந்து குடும்ப செலவுக்கு எத்தனை நாட்களுக்குத் தான் பணம் வாங்கி முடியும். இதனால் நான், செல்வகுமாரிடம் உங்களுக்கு போதிய சம்பளம் இல்லாததால், நீங்கள் கிரானைட் தொழிற்சாலையில் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று கூறினேன். இதனால் செல்வகுமார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா எழுதி கொடுத்து விட்டு வேலையை விட்டு நின்று விட்டார். பின்னர் வேறு வேலையும் கிடைக்கவில்லை. வீட்டிலேயே இருந்து வந்தார். தொழிற்சாலையில் வேலையை விட்டு நின்றதற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணம் மற்றும் சர்வீஸ் பணம் ஆகியவை செல்வகுமாருக்கு வர வேண்டி உள்ளது. இந்த பணத்தை போய் வாங்கி வாருங்கள் என்று நான் வற்புறுத்தினேன் ஆனால் அவர் மறுத்து விட்டார். அந்த பணம் எனது 2 குழந்தைகளுக்கும் என்றார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ரவி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அன்பாக பேசி பழகி வந்தார். அவரிடம் எனது வீட்டில் உள்ள குடும்ப பிரச்சினைகள் குறித்து தெரிவித்தேன். அதற்கு அவர், உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்றார். முதலில் நாங்கள் இருவரும் நட்பாக தான் பழகினோம். பின்னர் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நான் வீட்டில் இருந்து தினமும் மணிக்கணக்கில் செல்போனில் அவரிடம் பேசி வந்தேன்.

இந்த நிலையில் தோழி ஒருவரும் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து ரவி பற்றி பேசி அவர் மீது ஆசையை மேலும் வளர்க்கும் வகையில் எனது மனதை மாற்றி வந்தார். இதனிடையே தினமும் காலையில் எனது மகளை அழைத்து சென்று பள்ளியில் விட்டு வரும்போது என்னுடன் பேசுவதற்காக அதே பகுதியில் கள்ளக்காதலன் காத்திருப்பார். அவருடன் நீண்ட நேரம் பேசி பழகி வந்தேன். எங்களது இந்த கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரியவந்தது. அவர் என்னை கண்டித்தார். அந்த வாலிபருடன் பழகாதே, அவன் நல்லவன் கிடையாது. உன்னை ஏமாற்றுகிறான் என்று கூறினார். மது குடித்து வந்தும் செல்வகுமார் தகராறில் ஈடுபட்டார். தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் எனக்கும், செல்வகுமாருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் மாமனார், மாமியாரிடம் எனக்கு உங்களது மகனுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறினேன். அவர்கள், இது எல்லா வீட்டிலும் நடக்கிறது தான் என்று கூறி சமாதானம் செய்து வைத்து வந்தனர்.

இதையடுத்து நான், கணவருக்கு சரியாக உணவு கொடுக்காமல் இருந்து வந்தேன். தொடர்ந்து வீட்டில் சண்டை நடந்து வந்ததால் இது பற்றி ரவியிடம் கூறி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் செல்வகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கான திட்டத்தை ரவி வகுத்து கொடுத்தார். அதன்படி கள்ளக்காதலனுடன் சேர்ந்து சம்பவத்தன்று தோசை சுடும் இரும்பு சட்டியை எடுத்து செல்வகுமாரின் தலையில் ஓங்கி அடித்தோம். இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அப்படியே அவரை தூக்கிக் கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கொண்டு போய் போட்டோம். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் நான், எதுவும் தெரியாததை போல் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டேன். கடந்த 15-ந்தேதி கருப்பூர் போலீஸ் நிலையத்தில் எனது கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை மீட்டு தாருங்கள் எனவும் ஒரு பொய்யான புகாரை கொடுத்து நாடகம் ஆடினேன். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் ரவி போலீசாரிடம் சிக்கினார். போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

  
   Bookmark and Share Seithy.com



காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பேரணி!
[Saturday 2024-05-11 18:00]

சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறை சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, ரயில் பயணிகள் விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



காரில் பெண் சடலத்துடன் சுற்றிய இளைஞர்கள்: விசாரணையில் அதிர்ந்த போலீசார்!
[Saturday 2024-05-11 18:00]

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை அம்மைநாயக்கனூர் போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் பயணித்த காரில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருந்தது. சடலம் குறித்து இருவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



“ஆலோசனை என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது” - கார்கே பதிலடி!
[Saturday 2024-05-11 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தரவுகளை தாமதமாக கொடுக்கிறார்கள்; சரியான வகையில் வாக்குப்பதிவு தரவுகள் கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.



“பூர்வ குடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறை” - டி.டி.வி.தினகரன் கண்டனம்!
[Saturday 2024-05-11 18:00]

வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.



அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை!
[Saturday 2024-05-11 06:00]

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு(Arvind Kejriwal), இந்திய உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு நேற்று(10.05.2024) விசாரணைக்காக எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



டெல்லியில் புழுதிப் புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-11 06:00]

டெல்லியில் கடுமையாக புழுதிப் புயல் வீசி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகரின் பகுதியில் பல்வேறு பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பல அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கொடுத்திருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகால வெப்பநிலை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதி புயல் வீசி வருகிறது.



தேர்தல் எதிரொலி: ஈரோட்டில் 1 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் காலி!
[Saturday 2024-05-11 06:00]

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.



“பாகிஸ்தானை மதிக்கணும்” - காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை!
[Friday 2024-05-10 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல், ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்?
[Friday 2024-05-10 18:00]

இன்று தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம்போல, மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்னும் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.



10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன விஜய்!
[Friday 2024-05-10 18:00]

10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 6 -ம் திகதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு!
[Friday 2024-05-10 18:00]

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.



பட்டாசு ஆலைகள் விதிமீறல்: உயிரிழப்பு 10ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

சிவகாசி ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார்.



பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ முயன்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்!
[Friday 2024-05-10 06:00]

நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விட்டு குளத்தில் கை கழுவ முயன்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



செல்போனால் சிதறிய கவனம்: தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து!
[Friday 2024-05-10 06:00]

அண்மையில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாந்தை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதேபோல் பேருந்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் மயக்கம் அடைந்தார்.



பா.ஜ.க அரசை வீழ்த்த தீவிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற பட்சத்தில் அந்தத் தேர்தல் நடைபெற்றது.



தமிழக அரசு தொடங்கிய திட்டத்தால் தொழிலதிபர்களாக மாறலாம்: என்ன திட்டம்?
[Thursday 2024-05-09 18:00]

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 1303 ஆதி திராவிடர்கள் தொழிலதிபர்களாக மாறியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த திட்டமானது பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.



லண்டனில் மகனுடன் இருக்கும் உதயநிதி ஸ்டாலின்!
[Thursday 2024-05-09 18:00]

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டனில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக 24 நாட்களாக தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பின்னர், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.



மதுரையில் நடக்க போகிறது விஜயின் முதல் அரசியல் மாநாடு!
[Thursday 2024-05-09 18:00]

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை எப்போது நடத்துவது தொடர்பான தகவல்கள் வெளியகியுள்ளது. நடிகர்விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.



அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: தொடரும் சோகம்!
[Thursday 2024-05-09 06:00]

அண்மையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே கன்னியாகுமரியில் சுற்றுலா சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



தீவட்டிப்பட்டி சம்பவம்: விசிக போராட்டம்!
[Thursday 2024-05-09 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா