Untitled Document
April 29, 2024 [GMT]
வடக்கில் தகுதியற்ற அதிகாரிகளுக்கு உயர் பதவி - கல்வியை சீரழிக்கும் சதி என்கிறார் சந்திரசேகரன்!
[Monday 2024-04-29 05:00]

வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.


நாயாறு கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கினார்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவுநாயாறு கடல் பகுதியில் நீராடச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவில் இருவர் நீரில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


கோட்டாவுக்குப் பின்னால் நின்றவர்கள் இப்போது தங்களின் பக்கம் என்கிறார் அனுர!
[Monday 2024-04-29 05:00]

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் முதன்மைத் தேர்வாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


முகமாலையில் இன்று அகழ்வுப் பணி!
[Monday 2024-04-29 05:00]

பளை - முகமாலை பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில், இன்று மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


சுண்டிக்குளத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் ரவிகரன் சந்திப்பு!
[Monday 2024-04-29 05:00]

கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.


ஆவரங்காலில் காய்ச்சலுக்கு 5 வயதுச் சிறுமி பலி!
[Monday 2024-04-29 05:00]

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமி காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.


புதுக்குடியிருப்பில் ஊழியரின் தாக்குதலில் மரக்காலை உரிமையாளர் படுகாயம்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால், மரக்காலை உரிமையாளர் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த மரக்காலை உரிமையாளர் வேலுப்பிள்ளை வரதகுமார் (35 வயது) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறையும் பிறப்பு, உயரும் இறப்பு! - பாதிக்கப்படும் இயற்கைச் சமநிலை.
[Monday 2024-04-29 05:00]

2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.


ஊழியர் சேமலாப நிதியத்திற்கான வட்டி 13 வீதமாக அதிகரிப்பு!
[Monday 2024-04-29 05:00]

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற பாதாள உலகத் தலைவரை காட்டிக் கொடுத்தது இயந்திரம்!
[Monday 2024-04-29 05:00]

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


பாரதிபுரத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்த 5 பொலிசாருக்கு மரணதண்டனை!
[Sunday 2024-04-28 18:00]

கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டமா?
[Sunday 2024-04-28 18:00]

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஊடகவியலாளர் சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Sunday 2024-04-28 18:00]

ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.


பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல!
[Sunday 2024-04-28 18:00]

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல, துணை ஜனாதிபதியாகக் கூட தெரிவு செய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


அச்சுவேலியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் - இருவர் கைது!
[Sunday 2024-04-28 18:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பசிலின் தாளத்துக்கு ஆட நான் ஒன்றும் பொம்மையில்லை!
[Sunday 2024-04-28 18:00]

பசில் ராஜபக்ச கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை அல்ல என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


ஐதேக மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்த விசேட அறிவிப்பு!
[Sunday 2024-04-28 18:00]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.


அளம்பிலில் இராணுவத்துக்கு காணி சுவீகரிக்க நடவடிக்கை!
[Sunday 2024-04-28 18:00]

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவீட்டு பணிகள் எதிர்வரும் மே மாதம் 02ஆம் ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் 4 கிலோ தங்கக் கட்டியுடன் மூவர் கைது!
[Sunday 2024-04-28 18:00]

கிளிநொச்சிப் பகுதியில் கார் ஒன்றில் 4 கிலோ 170 கிராம் தங்கக் கட்டியைக் கடத்திச் சென்ற இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பரந்தன் சந்தியில் கவிழ்ந்த டிப்பர்! - ஒருவர் காயம். Top News
[Sunday 2024-04-28 17:00]

கிளிநொச்சி - பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போனதால் வீதியின் நடுவே புரண்டது. விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சிவராம் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-04-27 16:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.


நாச்சிக்குடா பாடசாலை விவகாரம் - அதே பெயரைப் பயன்படுத்த உத்தரவு!
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்ப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலையானது எப்படி?
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.


அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


அனுர, சஜித்துடன் டீல் வைத்துள்ளாரா பேராயர்?
[Saturday 2024-04-27 16:00]

கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது!
[Saturday 2024-04-27 16:00]

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


விஜயதாசவை நீக்க மொட்டு அழுத்தம்! - தம்மிக்கவுக்கு அமைச்சர் வாய்ப்பு?
[Saturday 2024-04-27 16:00]

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா