|
|
கல்முனையில் கறுப்புச் சித்திரை போராட்டம்!
[Monday 2024-04-15 04:00]
|
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக 21 ஆவது நாளாகவும் போராட்டம் கறுப்பு சித்திரை என்ற பெயருடன் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
யாழ். ஆசிரியை வயிற்றோட்டத்தினால் மரணம்!
[Monday 2024-04-15 04:00]
|
யாழ்ப்பாணத்தில் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வண்ணார் பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி கல்பனா (37 வயது) என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
|
|
|
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2024-04-15 04:00]
|
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
|
|
வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடனேந்திரன் காலமானார்!
[Monday 2024-04-15 04:00]
|
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் (கஜன்) நேற்று காலமானார். உடல்நலமின்மை காரணமாக இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
|
|
|
யாரையோ வெல்ல வைக்க முயற்சிக்கிறார் கஜேந்திரகுமார்!
[Monday 2024-04-15 04:00]
|
இலங்கையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்ப்பாளரினை தெரிவு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார்.
|
|
|
சித்திரைப் புத்தாண்டிலாவது பேதங்களைக் களைந்து ஒன்றுபடுவோம்! - அழைக்கிறார் சி.வி.கே.
[Sunday 2024-04-14 06:00]
|
இலங்கைத் தமிழரசுக் கட்சியினராகிய நாம், சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது பேதங்களைக் களைந்து நபர்களாகவோ, கூட்டாகவோ, அணிகளாகவோ நின்று பேசுவதைத் தவிர்த்துக் குறிப்பாக அணிகள் என்ற நிலையைத் தவிர்த்து கட்சி என்ற ஒரு பொதுச் சிந்தனையில் வந்து ஒற்றுமையாக ஒரே கட்சியாகச் செயற்படுவோம் என்று சபதம் எடுக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளில் யாவரும் ஈடுபட வேண்டும் என்றும் வினயமாகக் கேட்டுக்கொள்வதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சீ.வீ.கே.சிவஞானம் இதர கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
|
|
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
[Sunday 2024-04-14 05:00]
|
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
|
|
புத்தாண்டு பாதுகாப்பில் 15 ஆயிரம் படையினர், பொலிசார்!
[Sunday 2024-04-14 05:00]
|
புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
|
|
|
குரோதி வருடம் பிறந்தது!
[Sunday 2024-04-14 05:00]
|
மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த நேற்றிரவு உதயமானது. சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும் சோபனம் நாமயோகம், கவுலவம் நாமகரணத்தில் சனி ஹோரையிலும், செவ்வாய் மகா தசையில் சுக்கிர புத்தி, புதன் அந்தரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது.
|
|
|
அரிசி இறக்குமதிக்கு அனுமதி இல்லை!
[Sunday 2024-04-14 05:00]
|
சுற்றுலா ஹோட்டல்களின் தேவைக்காக பாசுமதி அரிசியைத் தவிர அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
|
|
|
அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் தகுதிகளை மக்களுக்கு காட்ட வேண்டும்!
[Sunday 2024-04-14 05:00]
|
அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் பகிரங்க விவாதங்களில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும் தங்களின் வெளிப்படையான தகுதிகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
|
|
|
பண்டிகைக் காலத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு!
[Sunday 2024-04-14 05:00]
|
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
|
|
|
பொதுவேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை சிலர் குழப்ப முயற்சி!
[Saturday 2024-04-13 15:00]
|
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ள நிலையில் அதனை குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
|
|
|
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி ஒகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்!
[Saturday 2024-04-13 15:00]
|
தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
|
|
|
இருண்ட கண்டத்தின் “நம்பிக்கை ஒளி”
[Saturday 2024-04-13 15:00]
|
“சிறீலங்கா அரசினால் தமிழர்கள் தங்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அநீதி நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சமாதனத்துடன் வளமாக வாழவேண்டும்”- யூன் 30.2009 இவ்வாறு நோபல் பரிசு பெற்றவரும் “நாசி” வதைமுகாமிலிருந்து தப்பியவருமான பேராசிரியர் எலைவைசல் (Professor Elie Wiesel) கூறியதை இத்தருணத்தில் நினைவுகூர்தல் சாலச் சிறப்பு.
|
|
|
ஜனாதிபதி ரணிலின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
[Saturday 2024-04-13 15:00]
|
புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
|
|
|
ருவாண்டா இனவழிப்பிற்கும், தமிழ் இனவழிப்பிற்கும் சர்வதேச சக்திகளின் முரண்பட்ட நிலைப்பாடு
[Saturday 2024-04-13 15:00]
|
கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி ஆகும். 100 நாட்களில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட Tutsi இன மக்களையும். மிதவாத Hutu இனமக்களையும், Hutu பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது.
|
|
|
யாழ். - சென்னை இடையே ஜூன் முதல் இன்டிகோ விமான சேவை!
[Saturday 2024-04-13 15:00]
|
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவையை இன்டிகோ நிறுவனம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
|
|
|
மண்ணெண்ணெய் அடுப்பில் தீப்பற்றி படுகாயமடைந்த பெண் மரணம்!
[Saturday 2024-04-13 15:00]
|
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
|
|
|
பாரதிபுரத்தில் வீட்டின் மீது தாக்குதல்!
[Saturday 2024-04-13 14:00]
|
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மதுபோதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றினை தாக்கியுள்ளனர்.
நேற்றிரவு 11மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
விருந்தில் துப்பாக்கி வேட்டு! - இருவர் காயம்.
[Saturday 2024-04-13 14:00]
|
ஹம்பேகமுவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
|
|
|
பொதுவேட்பாளரைத் தெரிவு செய்ய விக்கி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!
[Saturday 2024-04-13 05:00]
|
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
பூநகரி விபத்தில் ஒருவர் பலி!
[Saturday 2024-04-13 05:00]
|
கிளிநொச்சி - பூநகரி வாடியடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
|
|
|
பாலத்துக்குக் கீழ் தேங்கியிருந்த நீரில் குளித்தவர் மரணம்!
[Saturday 2024-04-13 05:00]
|
முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
|
|
|
பீரிஸ் மீது ஒழுங்காற்று நடவடிக்கை - பொதுஜன பெரமுன தீர்மானம்!
[Saturday 2024-04-13 05:00]
|
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
|
|
|
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு இல்லை!
[Saturday 2024-04-13 05:00]
|
புத்தாண்டையொட்டி இன்று விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் கைதிகளின் பட்டியலில், கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் பெயர் இல்லையென தெரிவிக்கப்படுகிறது. அரச மன்னிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
|
|
|
வடக்கு, கிழக்கில் இன்று மழை பெய்யும்!
[Saturday 2024-04-13 05:00]
|
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
|
|
|
தேர்தல் முறை திருத்தத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
[Saturday 2024-04-13 05:00]
|
தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|