Untitled Document
May 12, 2024 [GMT]
இருண்ட கண்டத்தின் “நம்பிக்கை ஒளி” Top News
[Saturday 2024-04-13 15:00]


“சிறீலங்கா அரசினால் தமிழர்கள் தங்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அநீதி நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சமாதனத்துடன் வளமாக வாழவேண்டும்”- யூன் 30.2009 இவ்வாறு நோபல் பரிசு பெற்றவரும் “நாசி” வதைமுகாமிலிருந்து தப்பியவருமான பேராசிரியர் எலைவைசல் (Professor Elie Wiesel) கூறியதை இத்தருணத்தில் நினைவுகூர்தல் சாலச் சிறப்பு.

“சிறீலங்கா அரசினால் தமிழர்கள் தங்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அநீதி நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சமாதனத்துடன் வளமாக வாழவேண்டும்”- யூன் 30.2009 இவ்வாறு நோபல் பரிசு பெற்றவரும் “நாசி” வதைமுகாமிலிருந்து தப்பியவருமான பேராசிரியர் எலைவைசல் (Professor Elie Wiesel) கூறியதை இத்தருணத்தில் நினைவுகூர்தல் சாலச் சிறப்பு.

  

ஏனெனில் எலைவைசலின் அதேநோக்கோடு காயனா நாட்டினைச் சேர்ந்த கனடியத் தயாரிப்பாளரும் இயக்குனருமாகிய திரு. ராயன்சிங் RAY OF HOPE எனும் ஆவணத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

மனிதரால் மனிதருக்குச் செய்யப்பட்ட “நாசி” வதைமுகாமிற்குப் பின்னர் “இனி ஒருபோதும் வேண்டாம்” என்று உறுதிபூண்ட மனிதகுலத்தின் கண்களின் முன்னாலேயே இந்த நவீன நவநாகரீக யுகத்திலும் காட்டு மிராண்டித் தனமான மிலேச்சத் தனமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உலகம் பார்த்துக் கொண்டிருக்க அரங்கேறியது. புலம் பெயர்ந்த தமிழர்கள் அந்த பாரிய மானிடப்பேரவலத்தை வீதிகளில் நின்று கதறகதற, தாயகத்தில் நம்மக்கள் அனுபவித்த வன்கொடுமை மரணத்தின்போதிலும் மறக்கமுடியாது.

இன்றும் பாலஸ்தீனத்தில் அதேகாட்சிகள் கண்களில் படும்பொழுது (கைகால்கள் கண்கள் கட்டப்பட்டு மனிதர்களை சித்திரவதைப் படுத்தி சுட்டுக்கொல்லப்படும் காட்சி) நெஞ்சம் பதைபதைக்கின்றது. எங்கு மனிதப்பேரவலம் நடந்தாலும் தமிழ் மக்களாகிய நாம் மிகப்பாரிய மனித அவலங்களைக் கண்ட இனமாக எமக்கு நடந்ததைப்போன்ற வன்கொடுமை மனிதகுலத்திற்கெதிராக எங்கு இனப்படுகொலை நடந்தாலும் நாம் குரல் கொடுக்கத் தலைப்படுகின்றோம். இவ்வாறான உந்துதலால் மானிட சமுதாயத்தில் மானிட உரிமைகளுக்காகவும், உலக சமாதானம் மற்றும் உலக அமைதிக்காகவும் போராடும் அளவிற்கு எங்களைக் காலம் வழிநடத்தியுள்ளது என்பதே கண்கூடு.

ஈழத்தமிழினம் சந்தித்த பேரவலத்தின்பின் முன்னாள் கனடாப் பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்களுடன் ஒரு பயண ஒளிப்பதிவாளராக இலங்கையில் பயணித்த கயானா நாட்டைச் சேர்ந்த கனடியர் ராயன்சிங் அவர்களின் சிந்தையில் பெருமாற்றத்தைக் கொண்டுவந்தது.

சீரிய சிந்தனையுடன் தமிழர்களின் அடையாளத்தை மற்றும் அவர்கள் இலங்கை மண்ணில் எதிர்கொள்ளும் பேரபாயத்தையும், வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் போராட்டத்தையும் கண்ணீருக்கும் நீதியும், பொறுப்புக் கூறலும் கிடைக்கவேண்டும் என்ற ஐ.நா நோக்கிய போராட்டத்தையும் எந்தவிதமான அரசியல் பின்னணியும்; இன்றி ஆவணப்படமாக்கியுள்ளார். தனது சொந்த முதலீட்டிலேயே இதனை அவர் செய்துள்ளார்.

அதன்பின்னர் இவரது நன்முயற்சி அறிந்து கனடா அரசும் மற்றும் தமிழ்ச் சமூகத்திலுள்ள ஆர்வலர்களும் வழங்கிய ஆதரவுடன் பல்கலாச்சாரக் கலைஞர்களின் கூட்டு முயற்சியினால் RAY OF HOPE எனும் நம்பிக்கை ஒளி இலங்கை எனும் இருண்ட கண்டத்தில் வடக்கு-கிழக்கு எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் நடந்தேறிவரும் திட்டமிட்ட இனவழிப்பை உலகம் வாழ் மக்கள் எல்லாம் அறியும் வகையில் சொல்கின்றது இத்திரைபபடம்;. இருண்ட கண்டத்தில் வாழும் தமிழினத்தின் நம்பிக்கை ஒளியாக இவ்விடிவெள்ளி வெள்ளித்திரையில் 15 ஆவது வருட இனப்படுகொலை நினைவு வாரத்தில் முதன்முதலாக வெளியிடப்படுகின்றது.

பேரிருளில் ஏற்றப்படும் விளக்குத்தான் இருள் நீக்கி ஒளி தருகின்றது. இத்திரைப்படக்குழுவின் இந்த அரிய கூட்டு முயற்சியை தமிழ்ச்சமூகத்தின் சார்பாக கனடாத்தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு மற்றும் கனடாத் தமிழ் திரைப்பட மேம்பாட்டு அமையமும் இருகரங்கூப்பி வரவேற்கின்றது.

அத்தோடு மட்டுமல்லாது 2024 மே 5 ஆம் திகதி இந்த ஆவணத்திரைப்படக்குழுவை விருந்தோம்பல் செய்து கௌரவித்து தமிழ்மக்களின் நன்றியறிதலைத் தெரிவிக்கஉள்ளோம். கனடா மத்திய பாராளுமன்றம் மற்றும் ஒன்ராரியோ மாகண பாராளுமன்றம் அத்துடன் 5 மாநகரசபைகள் மற்றும் அதன் உறுப்பினர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எம் இனமே எம் சனமே உங்களின் பேராதரவையும் இந்நிகழ்விற்கு வழங்கி வரலாற்றுக் கடமையை ஒன்றுபட்டுச் செய்ய எம்முடன் வந்து இணையுமாறு பேரன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

- கனடாத் தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு!
[Sunday 2024-05-12 06:00]

15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ளது.



ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு சம அங்கீகாரம்!
[Sunday 2024-05-12 05:00]

தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இணைந்தாலும், அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்!
[Sunday 2024-05-12 05:00]

ஈழத் தமிழர் வாழ்வில் பெருந்துயர் தோய்ந்த மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவு வாரம் இன்று ஆரம்பமாகின்றது.



கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! Top News
[Sunday 2024-05-12 05:00]

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் சனிக்கிழமைகஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.



போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்றவர்கள் கைது!
[Sunday 2024-05-12 05:00]

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - யாழ். பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை நிகழ்வு!
[Sunday 2024-05-12 05:00]

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.



நாடாளுமன்றத்தில் மேலும் 10 “டயானா”க்கள்!
[Sunday 2024-05-12 05:00]

நாட்டில் மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.



கதிர்காமம் பாதயாத்திரை செல்வச்சந்நிதியில் இருந்து ஆரம்பம்!
[Sunday 2024-05-12 05:00]

தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய- இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை நேற்று காலை 7.30 மணிக்கு தவத்திரு .நா.க.சி .கணபதி கதிர்வேலு திருநீற்று சித்தர் தலைமையில் தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.



தேசிய சுதந்திர முன்னணி எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு?
[Sunday 2024-05-12 05:00]

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



லதவியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இலங்கையர்கள் கைது!
[Sunday 2024-05-12 05:00]

லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதிக்கு புதிய அமெரிக்க தூதுவர் ஆதரவு!
[Saturday 2024-05-11 18:00]

இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.



2009 இல் இடம்பெற்றது இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்ய வேண்டும்!
[Saturday 2024-05-11 18:00]

தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கொல்பேர்ன் முள்ளிவாய்க்காலில் 169,000 தமிழர்கள் கொல்லப்பட்டது, ஒரு இனப்படுகொலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.



கிளிநொச்சி, முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Saturday 2024-05-11 18:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது.



முருகனைக் காண கிளிநொச்சி வந்தார் நளினி!
[Saturday 2024-05-11 18:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையான நளினி தனது கணவர் முருகனை பார்ப்பதற்கு கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.



தாளையடியில் குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை!
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



தம்மிக்க பெரேராவுடன் கலந்துரையாட மொட்டு முடிவு!
[Saturday 2024-05-11 18:00]

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.



ஒன்ராறியோவின் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம்! Top News
[Saturday 2024-05-11 18:00]

அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டத்துக்கான 'சட்டமூலம்-104' வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதியில் முடிவடையுமாறு ஏழு நாட்களை உள்ளடக்கியதாக 'தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்' (மே 12 - 18) கடைப்பிடிக்கப்படுவதை சட்டமூலம்-104 உறுதிசெய்கிறது.



யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்!
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.



ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக எல்லா கட்சிகளும் இணைந்து சதி!
[Saturday 2024-05-11 18:00]

நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே, அவை அனைத்தும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றியது! - ஒருவர் காயம்.
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் நேற்று மழையுடனான காலநிலையின் போது மின்னல் தாக்கி தென்னை மரமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா