|
|
புதிய அரசியலமைப்பு தனிஈழத்தை உருவாக்கும்!
- என்கிறது பொது பலசேனா
[Wednesday 2016-01-06 07:00]
|
புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
|
|
|
போரின்போதும், ஐநாவிலும் பாகிஸ்தான் அளித்த உதவியை மறக்க முடியாது!
- மைத்திரி
[Wednesday 2016-01-06 07:00]
|
எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
|
|
|
குடும்பங்களைச் சீரழித்து விட்டார் மஹிந்த!
- விவாகரத்து அதிகரிப்புக்கு அவரே காரணம்.
[Wednesday 2016-01-06 07:00]
|
நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டார்.
|
|
|
இலங்கையின் கல்வித் திட்டத்தில் விரைவில் மாற்றம்!
[Wednesday 2016-01-06 07:00]
|
இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
|
|
|
நோர்வே வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்குப் பயணம்!
[Wednesday 2016-01-06 07:00]
|
இலங்கையுடன் மீள உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரென்டே நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. 2006 ம்ஆண்டிற்கு பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற் கொள்வது இதுவே முதற் தடவை என நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
|
|
|
சிவா பசுபதி விவகாரம் - பதிலளிக்க மறுத்த முதலமைச்சர்!
[Tuesday 2016-01-05 19:00]
|
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உப குழுவில் சிவா பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அதனை அவர் நிராகரித்தது தொடர்பாகவும், வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
|
|
|
வீமன்காமம் வதைமுகாம் தடயங்கள் அழிப்பு
[Tuesday 2016-01-05 19:00]
|
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதைமுகாம்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடயங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதி கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
|
|
|
பேஸ்புக் பாவிக்க விமானப்படையினருக்குத் தடை!
[Tuesday 2016-01-05 19:00]
|
விமானப் படையினர் பேஸ்புக் பாவிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை தளபதி சுகத் புளத் சிங்களவின் உத்தரவுக்கு அமையவே விமானப்படை நிர்வாக இயக்குனர் இதற்கான அறிவுறுத்தலை விமானப்படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.
அதன்படி, சுமார் 4000 விமானப்படை வீர வீராங்கணைகள் தமது பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
|
|
|
மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த இனவாத சக்திகள் தலைதூக்குகின்றன!
- அர்ஜுன ரணதுங்க
[Tuesday 2016-01-05 19:00]
|
இலங்கையில் மீண்டும் யுத்தத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இனவாத சக்திகள் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த தேர்தலில் வெற்றபெற்ற போதிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது போனவர்கள், மற்றும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்களும் இவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
|
|
|
பாகிஸ்தான்- இலங்கை இடையே 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Tuesday 2016-01-05 19:00]
|
இலங்கை - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில், இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.
|
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்கள் பேரவையுடனும்
ஈபிஆர்எல்எவ் இணைந்து செயற்படும்:
[Tuesday 2016-01-05 19:00]
|
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் முழுப்பங்களித்தல் உட்பட முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) மத்திய குழுக்கூட்டம் அவ்வமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் 05.01.2016 அன்று வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 10.30முதல் 1.30வரையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர்கள்; பங்கேற்றிருந்தனர்.
|
|
|
முல்லைத்தீவு பொலிசார் வராததால் 4 நாட்களாக பிரேத அறையில் காத்திருந்த பெண்ணின் சடலம்!
[Tuesday 2016-01-05 19:00]
|
முல்லைத்தீவுப் பொலிசாரின் அசமந்த செயற்பாட்டினால், மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் கடந்த நான்கு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஜீவகுமார் செல்வகுமாரி (வயது 30) என்பவர் கடந்த இரண்டாம் திகதி மரணம் அடைந்துள்ளார்.
|
|
|
மைத்திரி ஆட்சியின் ஒரு வருட நிறைவு நிகழ்வில் தலைமையுரை ஆற்றுகிறார் காந்தியின் பேரன்!
[Tuesday 2016-01-05 19:00]
|
இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெறும் தேசிய நிகழ்வில் மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பினை ஏற்று கலந்து கொள்ளும் கோபாலகிருஸ்ணகாந்தி இந்த நிகழ்வில் தலைமையுரை ஆற்றவுள்ளார்.
|
|
|
மன்னார் கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[Tuesday 2016-01-05 19:00]
|
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட போது நேற்று இரவு 9 மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
|
|
|
தாஜூடின் கொலை - சிசிடிவி காட்சிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பரிந்துரை!
[Tuesday 2016-01-05 19:00]
|
றகர் வீரர் வசீம் தாஜூடின் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை, வௌிநாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி பரிசோதிப்பது சிறந்தது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக கனணிப் பிரிவினரால் இன்று இந்த விடயம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
முதிரை மரக்குற்றிகளைக் கடத்திய 15 இராணுவத்தினர் கைது!
[Tuesday 2016-01-05 19:00]
|
அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற வேளை கைது செய்யப்பட்ட 15 இராணுவ வீரர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, இன்று அனுமதியளித்தார். கஜுவத்தை இராணுவ முகாமிலுள்ள இவ் இராணுவ வீரர்கள், நேற்று மாலை 14 முதிரை மரக்குற்றிகளை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இராணுவ முகாமிற்குச் சென்றுள்ளனர்.
|
|
|
வலி.வடக்கில் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் மட்டும் தப்பின!
[Tuesday 2016-01-05 19:00]
|
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் மட்டும் நல்ல நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறான வீடுகளின் சொந்தக்காரர்கள் அந்த வீடுகளை உடனடியாக தங்களின் மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில் வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும், வலிகாமம் கிழக்கில் 233 ஏக்கர் காணிகளும் கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டன.
|
|
|
ஊடகவியலாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஐதேகவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்!
[Tuesday 2016-01-05 19:00]
|
தன்னைக் கொலை செய்யப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன், அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
|
|
ரவிராஜ் கொலைக்கு கடற்படைப் புலனாய்வுப் பிரிவே காரணம்!
- அம்பலப்படுத்திய அரசதரப்பு சாட்சி
[Tuesday 2016-01-05 09:00]
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு உள்ளதாக, அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ள வழக்கின் சந்தேகநபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். சம்பத் ப்ரித்விராஜ் என்ற நபரே இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
|
|
|
கடுமையான நிலைப்பாடுகளின் மூலம் சந்தர்ப்பத்தை பாழடிக்கக் கூடாது!
- இரா.சம்பந்தன்
[Tuesday 2016-01-05 09:00]
|
கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை பாழடித்து விடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேவையில்லாத கண்டிப்புக்கள் மற்றும் கடுமையான தோரணைகள் ஒருபோதும் உதவியளிக்காது. எந்தவொரு தீர்வும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், அது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
|
|
|
ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள்!
- புலனாய்வு தகவலுக்கு அமைய நடவடிக்கை
[Tuesday 2016-01-05 09:00]
|
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 36 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விவ காரம் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளின்
நடவடிக்கைகளுக்கு அமைய சரியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்போம். எவ்வாறு இருப்பினும் உறுதியான வகையில் இந்த தகவல்கள் கிடைக்காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க முடியும் என பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்தார்.
|
|
|
முஸ்லிம்களின் வீடுகளில் சிங்க லே!
- இனமோதலை உருவாக்க முயற்சி
[Tuesday 2016-01-05 09:00]
|
முஸ்லிம்களின் வீடுகளில் சிங்கலே என எழுதி இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்க முற்படுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க இனிமேலும் இடமளிக்க கூடாது எனவும் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தனது முக நூலில் கருத்து வௌியிட்டுள்ளார்.
|
|
|
சேனாதிபதியிடம் 7 மணிநேரம் விசாரணை!
[Tuesday 2016-01-05 09:00]
|
அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவிடம் நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சேனாதிபதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். காலை 10 மணியளவில் ஆணைக்குழுவிற்கு சென்ற சேனாதிபதி மாலை 5 மணி வரையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இவ்வாறு நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
|
|
|
புலிகளின் அச்சுறுத்தல் நீங்கவில்லை!
- என்கிறார் கோத்தபாய
[Tuesday 2016-01-05 09:00]
|
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக நீங்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் உறுதியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்பிலியான சுனேத்திராதேவி விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம்!
- டக்ளஸ், தொண்டாவுக்கும் வாய்ப்பு?
[Tuesday 2016-01-05 09:00]
|
பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக் கூடும் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, தற்போதைய அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்து கொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன என்றும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
பொய்ச்சாட்சி சொன்ன மேஜர் ஜெனரலுக்கு பிணை!
[Tuesday 2016-01-05 09:00]
|
பொய்ச்சாட்சி கூறிய முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் பண்டார ஜெயசுந்தரவை 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 500,000 பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல கொழும்பு முதன்மை நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய நேற்று உத்தரவிட்டார். ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜெயசுந்தரவிடம் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட போதே பொய்த்தகவல்களை வழங்கியிருந்தார்.
|
|
|
நான்கு ஆண்டுகளில் புகையிலை உற்பத்தியைத் தடை செய்ய அரசாங்கம் திட்டம்!
[Tuesday 2016-01-05 09:00]
|
2020ஆம் ஆண்டு முதல் புகையிலை உற்பத்திகளுக்குத் தடைவிதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். மஹாவலி அமைச்சின் கள உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், புகைப்பொருட்களின் ஊடாக ஏற்படுகின்ற புற்றுநோயைத் தடுப்பதே, அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
|
|
|
உலகிலேயே மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டுபிடிப்பு!
[Tuesday 2016-01-05 09:00]
|
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இதன் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அழகுக்கல் நிறுவகம் மதிப்பிட்டுள்ளது.
|
|
|
|