|
|
ரணில் நல்லவர் - மைத்திரி நியமித்த அமைச்சர் கூறுகிறார்!
[Saturday 2018-11-03 16:00]
|
ஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நல்லவர் என்றும், அவரை சூழ உள்ளவர்கள் காரணமாகவே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் விசித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அரசியல்வாதிகளின் இருப்புக்கு அதிகாரம் முக முக்கியம் என்றும் கூறினார்.
|
|
|
சிறிசேனவின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் வன்முறைகள் வெடிக்கலாம்!
- சமந்தா பவர் எச்சரிக்கை
[Saturday 2018-11-03 09:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் வன்முறைகள் இடம்பெறலாம் என ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|
|
|
முல்லைத்தீவு அரசியல் கட்சி அலுவலக கொலை - இருவருக்கு மரணதண்டனை!
[Saturday 2018-11-03 09:00]
|
முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அரசியல்கட்சி அலுவலகம் ஒன்றில் ஒரே கட்சியை சேர்ந்தவர்களிற்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவரை தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக, இரண்டு பேருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
|
|
|
வவுனியாவில் ஊடகவியலாளர் கைது!
[Saturday 2018-11-03 09:00]
|
வவுனியாவை தளமாகக் கொண்டு செயற்படும் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவரை நேற்று மாலை 7.30 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட வவுனியா பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வந்துவிட்டு செல்லுமாறு அழைத்துள்ளனர். அவர் அங்கு சென்றபோது அவரை கைதுசெய்து வாக்குமூலத்தை பதிவுசெய்துவிட்டு தடுத்து வைத்துள்ளனர் .
|
|
|
வியாழேந்திரன் நம்பிக்கைத் துரோகி - விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை என்கிறது புளொட்!
[Saturday 2018-11-03 09:00]
|
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் தம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது.-
|
|
|
இந்தியாவை ஒதுக்கி விட்டு சீனாவுடன் சேரமாட்டோம்!
- சரத் அமுனுகம
[Saturday 2018-11-03 09:00]
|
இந்தியாவை புறக்கணித்து விட்டு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை பேணமாட்டோம் என்று, இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையில் உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தமைக்காக , இலங்கை சீனாவை நோக்கி நகராது எனவும் தெரிவித்துள்ளார்.
|
|
|
வரிச் சலுகைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்!
- ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
[Saturday 2018-11-03 09:00]
|
இலங்கை தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்க வேண்டி வரும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
|
|
|
நாடாளுமன்றத்தின் அதியுயர்தன்மையை உறுதிபடுத்த வேண்டியது கட்டாயம்!
- சம்பந்தன்
[Saturday 2018-11-03 09:00]
|
சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
|
|
|
1.5 பில்லியன் டொலர் திட்டத்தை நிறுத்தியது ஜப்பான்!
[Saturday 2018-11-03 09:00]
|
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை அடுத்து, ஜப்பான் இலங்கையுடனான இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் கையாளப்பட்ட இந்த திட்டம் தற்போது ஜப்பான் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த இலகு ரயில் போக்குவரத்து திட்டமானது 1.5 பில்லியன் டொலர் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
ஐதேக நீதிமன்றம் செல்லாதது ஏன்!
- மகிந்தானந்த கேள்வி
[Saturday 2018-11-03 09:00]
|
புதிய பிரதமர் நியமனம் அரசியல் அமைப்புக்கு முரணானது எனின் ஏன் ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டப்படாது, 16 ஆம் திகதியே கூட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கனடிய தமிழரின் பங்களிப்பு!
[Friday 2018-11-02 23:00]
|
ஹார்வர்டு பல்கலைக்கழக தென்கிழக்காசிய கல்வித்துறையில் ஓர் அங்கமாக தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது யாவரும் அறிந்ததே. அதன் பொருட்டு உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு இன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
|
|
|
மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
[Friday 2018-11-02 18:00]
|
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது. அந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்.
|
|
|
கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன் பிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் பாய்ச்சல்!
[Friday 2018-11-02 18:00]
|
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சற்றுமுன்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
|
|
|
பழைய குரோதங்கள், பின்னணிகளை மறந்து ஒன்றுபட அழைக்கிறார் விக்கி!
[Friday 2018-11-02 18:00]
|
பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்து செயற்படுவது அவசியம் என்று, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்வி பதில் பகுதியில் கனேடிய ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்!
- பொது அமைப்புக்கள் கோரிக்கை
[Friday 2018-11-02 18:00]
|
இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்ற நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
|
|
|
மைத்திரியின் குட்டு வெளிப்பட்டது - அம்பலப்படுத்தினார் நாமல்!
[Friday 2018-11-02 18:00]
|
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நான்கைந்து மாதங்களாகப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்டிடீவிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
|
|
|
இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச - தமிழர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது: - விஜய் தணிகாசலம்
[Friday 2018-11-02 18:00]
|
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் மற்றும் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து ஒண்டாரியோ மாகாணத்தின் முதல் தமிழ் பேசும் மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரனான Scarborough-Rouge Park தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் செவ்வாய் கிழமை உரையாற்றினார்
|
|
|
எதிர்பாராதவர்கள் அரசில் இணைவார்கள்!
- என்கிறார் நிமால்
[Friday 2018-11-02 18:00]
|
இதுவரை எவரும் எதிர்பார்த்திராத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார். இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்து கொள்ள முடியுமென்றும், அமைச்சர் தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
|
|
|
ஜனாதிபதி மைத்திரியுடன் ஐ.நா பொதுச் செயலர் பேச்சு!
[Friday 2018-11-02 18:00]
|
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குடாரெஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று இரவு, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இலங்கையில் சட்டத்தை நிலைநிறுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஐ.நா பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.
|
|
|
ஐதேமு அரசாங்கம் மீண்டும் வருமானால், தமுகூ, ஸ்ரீமுகா, அஇமகா ஆகிய சிறுபான்மை கட்சிகளே காரணம்: -மனோ கணேசன்
[Friday 2018-11-02 18:00]
|
திங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் அரசாங்கம் உருவாகுமனால், அதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளே பிரதான காரணம். நாங்கள் தடம் மாறி இருந்தோமானால், இந்நேரம் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும்.
|
|
|
அட்மிரல் விஜேகுணவர்த்தனவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2018-11-02 18:00]
|
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்யுமாறு, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்கு முன்னர் அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
|
|
|
மகிந்த பிரதமரானதும், நீதிமன்ற உத்தரவை மீறி நாயாறில் புத்தர் சிலை!
[Friday 2018-11-02 18:00]
|
முல்லைத்தீவு, செம்மலை- நாயாறு, நீராவியடி பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் திடீரென புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் நேற்று இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
|
|
|
தனது அமைச்சில் கடமையாற்றும் சம்பிக்க!
[Friday 2018-11-02 18:00]
|
பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று தனது அமைச்சுக்கு சென்று கடமைகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
|
|
|
ஒரு எம்.பிக்கு 50 கோடியும், அமைச்சர் பதவியும்!
- மகிந்த அணியின் பேரம்
[Friday 2018-11-02 18:00]
|
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 50 கோடி ரூபாய் பேரமாக பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
|
|
|
குடத்தனை தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணும் மரணம்!
[Friday 2018-11-02 18:00]
|
குடத்தனை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த 29ஆம் திகதி அதிகாலை புகுந்த தாக்குதலாளி உறக்கத்தில் இருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த கணவன் -மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்திருந்தனர்.
|
|
|
ரணிலைச் சந்திக்க அலரி மாளிகைக்குச் சென்ற கோத்தா!
- மீண்டும் பரபரப்பாகும் அரசியல்
[Friday 2018-11-02 09:00]
|
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ நேற்று இரவு ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்போது ரணிலின் பாதுகாப்பு தொடர்பாக கோத்தாபய உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
|
|
|
மஹிந்தவின் நியமனம் தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து!
- ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் விஜய்
[Friday 2018-11-02 09:00]
|
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளது, இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது என ஒன்றாரியோ பாராளுமன்றத்தின், ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
|
|
|
ஆளுநர் மாற்றம் குறித்து எனக்குத் தெரியாது!
-ரெஜினோல்ட் குரே
[Friday 2018-11-02 09:00]
|
வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான ரெஜினோல்ட் கூரே மாற்றப்பட்டு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
|
|
|
|