Untitled Document
May 19, 2024 [GMT]
கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்! - பொது அமைப்புக்கள் கோரிக்கை
[Friday 2018-11-02 18:00]

இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்ற நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்ற நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

  

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமைப்பு, யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், பசுமை எதிர்காலத்துக்கான நிலையம், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு ஆகிய அமைப்புக்கள் இணைந்தே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளன.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமேனன் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளனர். இதன்போது அவர்கள் அறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.

அவ்வறிக்கையில்,அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பாக தென்னிலங்கையில் இரு பிரதான கட்சிகளுக்கிடையேயும் கடும் போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே தீர்மானிக்கும் சக்தியாக மேலெழுந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் எழுத்து மூல உத்தரவாதங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றோம். கால அட்டவணைகளை விதித்து அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்ற உத்தரவாதத்தை பெறுமாறும் கோருகின்றோம்.

தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும். அரசியல் யாப்பு வடிவம் வழங்கும் போது தமிழ் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணக்கூடிய அதிகார அலகு, சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றுக்கு உத்தரவாதம் வழங்குதல் வேண்டும். அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்கள் தங்கள் விவகாரங்களை தாங்களே பார்க்கக் கூடிய இடைக்கால நிர்வாகத்துக்கு ஒழுங்கு செய்தல் வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் நிறுத்தப்படுவதோடு மகாவலி குடியேற்றத்திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும். படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.

வனப்பரிபாலனத் திணைக்களம், தொல்பொருட் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் இடைக்கால நிர்வாகம், வடமாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் என்பவற்றினூடாக மட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

தமிழ் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மாவட்ட செயலகங்களில் அதிகாரங்கள் மீளவும் மாகாணசபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். வடமாகாண சபை முதலமைச்சர் நிதியம் உடனடியாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். கல்முனை தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவு உடனடியாக தரமுயர்த்தப்படல் வேண்டும்.

காணாமல் போனோர் விடயத்தில் இடைக்காலத்தீர்வாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படல் வேண்டும். மலையகத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படைச்சம்பள உயர்வுக் கோரிக்கை உடயடியாக நிறைவேற்றப்படல் வேண்டும். இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மலையக மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படல் வேண்டும். மலையக மக்களின் காணி உரிமை அங்கீகரிக்கப்படுவதோடு தற்போது இடம்பெறும் மலையக வீட்டுத்திட்டங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கோரிக்கைகளை கூட்டமைப்பிடம் முன்வைத்துள்ள பொது அமைப்புக்கள் அக் கோரிக்கைகளை கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



குற்றமிழைத்தவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாகின்ற நிலையில் தமிழ் மக்கள் 2009 இனப்படுகொலைகளை நினைவுகூரும்போது அவர்களிற்கு தங்கள் ஆதரவை வெளியிடுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



மாவை தலைமையில் தமிழரசின் மத்திய குழு கூடியது!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.



நீர்மூழ்கிகளை தடுக்க அமெரிக்காவிடம் ஒத்துழைப்புக் கோரியது இலங்கை!
[Sunday 2024-05-19 17:00]

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.



கூலிப்படைகளாகச் சென்றவர்கள் குறித்து 400 முறைப்பாடுகள்!
[Sunday 2024-05-19 17:00]

ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.



ஒக்டோபர் 5 அல்லது 12இல் ஜனாதிபதி தேர்தல்!
[Sunday 2024-05-19 17:00]

ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.



மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வை குழப்பிய பொலிசாருக்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் செயலை ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் தெரிவித்துள்ளார்.



காங்கேசனுக்கான கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு!
[Sunday 2024-05-19 17:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையர்களுடன் துணை நிற்கிறது அமெரிக்கா!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



எலோன் மஸ்க்கைச் சந்தித்தார் ஜனாதிபதி!
[Sunday 2024-05-19 17:00]

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.



ஈரானியத் தூதுவரைத் தாக்கிய கொழும்பு வர்த்தகர் கைது!
[Sunday 2024-05-19 17:00]

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர கனேடிய பிரதமர் அழைப்பு!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் சார்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.



இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு கனடா சுகாதார அமைச்சர் அஞ்சலி! Top News
[Sunday 2024-05-19 08:00]

கனடாவின் சுகாதார அமைச்சரான மார்க் ஹொலண்ட் அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.



நினைவேந்தல் கைதுகள் - அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு கவலை!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்து கவலையடைந்துள்ளதாக அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின் தெரிவித்துள்ளார்.



கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தலைக் குழப்பியதற்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 08:00]

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை காவல்துறையினர் அநாகரீகமான அடாவடியான விதத்தில் குழப்பியமை குறித்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது



தமிழரின் விடிவு காலம் நினைவேந்தல் சுடரில் பிரகாசமாக ஒளிர்வதை காண்கின்றேன்!
[Sunday 2024-05-19 08:00]

வட, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக்கொண்டுவரும் விதத்தில் நடந்து கொள்வோம் என்று தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



பொது வேட்பாளரை ஏற்கவே முடியாது! - அடம்பிடிக்கிறாராம் சம்பந்தன்.
[Sunday 2024-05-19 08:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்! - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு. Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2024!
[Saturday 2024-05-18 20:00]

எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.



மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா