Untitled Document
May 26, 2024 [GMT]


இறால் பண்ணை,இல்மனைட் அகழ்வுக்கு எதிராக வாகரை மக்கள் போராட்டம்! Top News
[Monday 2024-04-22 15:00]

வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .


வவுனியாவில் ஜனாதிபதிக்கு கறுப்புக்கொடி! - பொலிஸ் குவிப்பால் பதற்றம். Top News
[Sunday 2024-05-26 17:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தப்பட்டது.


இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மரணம்!
[Sunday 2024-05-26 17:00]

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ஜீன் பிராங்கோயிஸ் பகெட் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவருக்கு வயது 53 ஆகும். சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.


காணாமல் போனவர்கள் தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? - சுகாஸ் கேள்வி.
[Sunday 2024-05-26 17:00]

திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் 2 தமிழ் மீனவர்களை 5 நாட்களாகக் காணவில்லை. சிங்கள மீனவர்கள் காணாமற்போனால் ஹெலிகொப்டரில் தேடும் அரசு, தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.


காங்கேசன்துறை சட்டவிரோத விகாரையில் தமிழ்ப் பொலிசாரை பிரித் ஓத நிர்ப்பந்தித்த பொலிஸ் தலைமை!
[Sunday 2024-05-26 17:00]

காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கு கண்டனக் கடிதம் அனுப்பினார் ஹிமாலி!
[Sunday 2024-05-26 17:00]

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதர் ஹிமாலி அருணதிலக கண்டனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி பரிந்துரை!
[Sunday 2024-05-26 17:00]

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.


ஆட்கடத்தலில் ஈடுபட்ட சதாசிவம் சிவகங்கனை நாடு கடத்துகிறது பிரிட்டன்!
[Sunday 2024-05-26 17:00]

ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழர் ஒருவரை பிரான்ஸூக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது. வாடகை வீட்டில் இருந்தபடி அவர் இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட 58 வயதான சதாசிவம் சிவகங்கன் என்பவரே நாடுகடத்தப்படவுள்ளதாக, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஜனாதிபதி ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
[Sunday 2024-05-26 17:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்தின் போது வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலார்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


ஒக்ரோபர் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல்! -அடித்துச் சொல்கிறார் விஜயதாச
[Sunday 2024-05-26 17:00]

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மக்களின் பிரச்சினைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும்! - ஜனாதிபதியிடம் தெரிவித்த செல்வம்.
[Sunday 2024-05-26 17:00]

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


தமிழர்கள் ஒன்றுபடமாட்டார்கள் - விக்கியின் வீடு தேடிச் சென்று சவால் விட்ட ரணில்!
[Sunday 2024-05-26 05:00]

யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, சந்தித்தார். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா?
[Sunday 2024-05-26 05:00]

ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் ,நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.


சண்டையை தடுக்கச் சென்ற இளைஞன் மைத்துனரின் கத்திக்குத்துக்குப் பலி!
[Sunday 2024-05-26 05:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் தனது தந்தைக்கும் மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற, 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


அனுரவின் ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு!
[Sunday 2024-05-26 05:00]

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


குத்துவிளக்கு கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு!
[Sunday 2024-05-26 05:00]

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 15பேர் கொண்ட நிர்வாக தெரிவு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.


பொன்னாலையில் இன்று பனைத் திருவிழா!
[Sunday 2024-05-26 05:00]

பொன்னாலை, திருவடிநிலையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பனைத் திருவிழா இடம்பெறவுள்ளது. அழிவடைந்து வரும் பனையைக் காக்கவும், பனைசார் உணவு மற்றும் ஏனைய நன்மைகளை அனுபவித்து ஆரோக்கியம் பெறவும், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தும் நோக்கிலும் 'பனை இருந்தால் பஞ்சம் இல்லை' எனும் தொனிப் பொருளில் பனைத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சீரற்ற வானிலையால் நேற்றிரவு கொழும்பு வீதிகள் பலவற்றுக்கு பூட்டு!
[Sunday 2024-05-26 05:00]

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நேற்று இரவு மூடப்பட்டிருந்தது. அதன்படி கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து தும்முல்லை சந்தி, பௌத்தலோக மாவத்தை, சர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சுற்றுவட்டத்திலிருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


அரச நிகழ்வுகளில் அரசியல் நலன் தேடாதீர்கள்!
[Sunday 2024-05-26 05:00]

அரச வைத்தியசாலை கட்டடம் திறத்தல், காணி உறுதி வழங்கல் போன்றவை அரசு நிகழ்வுகள். அந்த நிகழ்வு மேடைகளை தேர்தல் பிரசாரத்துக்கான தளமாக்கிக் கொள்ளாதீர்கள் என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பங்குபற்றிய இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றனவாம்!
[Sunday 2024-05-26 05:00]

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.


யாழ். போதனா மருத்துவமனையில் குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் கைது!
[Sunday 2024-05-26 05:00]

யாழ் போதனாமருத்துவமனைக்குள் நோயாளிகளை பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் நேற்று கைதுசெய்யப்பட்டனர். அண்மைக்காலமாக யாழ் போதனா மருத்துவமனைக்குள் மதுபோதையில் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி வருகைக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!
[Saturday 2024-05-25 17:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மூத்த அதிகாரிகளை வெறுக்கும் ஆளுநர்! - ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்.
[Saturday 2024-05-25 17:00]

வடக்கில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!
[Saturday 2024-05-25 17:00]

முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


ரணிலைப் புகழ்ந்து தள்ளிய சுமந்திரன்!- 2005 தேர்தல் புறக்கணிப்புக்காக தமிழ் மக்கள் வருந்துகிறார்களாம். Top News
[Saturday 2024-05-25 17:00]

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தமையை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்பாகத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பொருளாதாரப் போரை வெற்றி கொள்ளக்கூடியவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம்!
[Saturday 2024-05-25 17:00]

போரை மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்தது போல் பொருளாதாரப் போரை வெற்றி கொள்ளக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் சிறப்பு மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவமனை திறந்து வைப்பு!
[Saturday 2024-05-25 17:00]

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் இல்லை!
[Saturday 2024-05-25 17:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் இடம்பெறமாட்டாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.


அடுத்த தேர்தலுக்குப் பின் அரசியலுக்கு முழுக்கு! - விஜயகலா அறிவிப்பு.
[Saturday 2024-05-25 17:00]

அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா