|
|
அலரி மாளிகைக்குள் நுழைந்த மஹிந்தவின் ஆட்களால் பதற்றம்!
[Wednesday 2018-10-31 18:00]
|
வெளிநபர்கள் இருவர் அலரி மாளிகைக்குள் நுழைந்தமையால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியதாக ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அலரி மாளிகைக்குள், இன்று மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இருவர் நுழைந்தமையாலேயே இந்த பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
ஆட்சி மாற்றத்தை அடுத்து பாதையை மூடி கடற்படை அடாவடி!
- முள்ளிக்குளம் மக்கள் அவதி
[Wednesday 2018-10-31 18:00]
|
மன்னார்- முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குச் செல்லும் பிரதான வீதிகளை, கடற்படையினர் மீண்டும் இன்று காலை முட்கம்பிகளால் மூடியுள்ளனர். கடற்படையினரின் இந்தச் செயற்பாட்டால், முள்ளிக்குளம் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.
|
|
|
சிக்கல் நிலை குறித்த சட்ட நிலைப்பாட்டைக் கூற முடியாது!
- சட்டமா அதிபர் நழுவல்
[Wednesday 2018-10-31 18:00]
|
பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பான சட்டரீதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் மூலம் சட்டமா அதிபர் இன்று அறிவித்துள்ளார்.
|
|
|
176 ரூபாவையும் தாண்டி இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
[Wednesday 2018-10-31 18:00]
|
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைப்படி இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.25 ரூபாயாக பதிவாகியுள்ளது.
|
|
|
வடக்கில் தொடங்கியது மகிந்தவின் அதிகாரத்துவ ஆட்சி!
- ஊடகவியலாளர், இளைஞர்களுக்கு மிரட்டல்
[Wednesday 2018-10-31 08:00]
|
வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக விசாரணைக்கு வருமாறு நேற்று அழைத்துள்ளார்.
|
|
|
ரணில் ஆங்கிலத்தை விட்டு விட்டு சிங்களத்தை படிக்க வேண்டும்!
- மகிந்த
[Wednesday 2018-10-31 08:00]
|
அரசியலமைப்பின் சிங்கள மொழிப் பிரதியில், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்தார் என்றும், அமைச்சரும், அரசாங்க பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
|
|
|
மஹிந்தவை ஏற்கத் தயாராகும் இந்தியா!
[Wednesday 2018-10-31 08:00]
|
இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இந்தியாவின் NDTV வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
தற்போதைய அரசு நிச்சயமற்றது!
- அதில் பதவிகள் வேண்டாம் என்கிறார் கோத்தா
[Wednesday 2018-10-31 08:00]
|
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
|
|
|
அரசியல் குழப்பம் - ஜனாதிபதியுடன் பேசவுள்ளார் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர்!
[Wednesday 2018-10-31 08:00]
|
முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் நேற்று கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
|
|
|
கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த!
- சரத் பொன்சேகா
[Wednesday 2018-10-31 08:00]
|
குறுகிய கால பிரதமர், குறுகிய கால அமைச்சரவை என கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரை நினைத்து நாட்டு மக்கள் மாத்திரமல்ல சர்வதேசமே நகைக்கின்றது என பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.ஐக்கிய தேசிய முன்னனியினர் நேற்று அலரி மாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
|
|
|
மகிந்தவையும், மைத்திரியையும் கைது செய்ய வேண்டும்!
- விக்ரமபாகு கருணாரத்ன
[Wednesday 2018-10-31 08:00]
|
மைத்திரிபால சிறிசேனனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்து சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும் முரணான வகையில் செயற்படுவார்களாயின் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னனியினர் அலரிமாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
|
|
|
ஆளும்கட்சி தொழிற்சங்கங்களை அடங்கியிருக்குமாறு கோருகிறார் ஜனாதிபதி!
[Wednesday 2018-10-31 08:00]
|
அரச நிறுவனங்களினுள் மோதல் நிலைமைகளுக்கு இடமளிக்காது அமைதியை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.
|
|
|
தமிழக மீனவர்கள் 17 பேருக்கு விளக்கமறியல்!
[Wednesday 2018-10-31 08:00]
|
இலங்கை கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 17 தமிழக மீனவர்களை பொலிசார் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது தமிழக மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் மகிழ் மகாதேவா தீபாவளியை கருத்தில் கொண்டு மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த ஊர்காவற்துறை நீதிபதி ஜூட்சன் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
|
|
|
வவுனியா கிராமத்துக்குள் யானைகள் அட்டகாசம்!
[Wednesday 2018-10-31 08:00]
|
வவுனியா - சேமமடுவுக்கு அருகிலுள்ள, பரசங்குளம் கிராமத்தில் நேற்று அதிகாலை காட்டு யானைகள் 3 வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. அத்துடன் வயல்களையும் வாழை, தென்னை போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளன. அயல்கிராமமான இளமருதங்குளம் கிராமத்திற்கு மின்சாரவேலி போடப்பட்டிருப்பதால் யானைகளில் இருந்து பாதுகாக்கபடுகிறதாகவும் அதேபோல் தங்கள் கிராமத்திற்கும் யானைகளுக்கு வேலி அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
|
|
|
மக்களின் ஆணைக்கு ஜனாதிபதி நம்பிக்கைத் துரோகம்!
- ஐதேகவின் பாரிய எதிர்ப்புப் பேரணியில் ரணில்
[Tuesday 2018-10-30 18:00]
|
மக்களின் ஆணைக்கும் நம்பிக்கைக்கும் துரோகமிழைப்பது வெறுக்கத்தக்க செயல் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய பேரணியில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
|
|
|
தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கான மகிந்தவின் உத்தரவாதங்களைக் கோரினார் சம்பந்தன்!
[Tuesday 2018-10-30 18:00]
|
70 ஆண்டுகாலமாக நீடிக்கும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உங்களிடத்தில் உள்ள உத்தரவாதம் என்ன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், தெரிவித்தார். கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்களை மஹிந்த ராஜபக்ஷ ஆக்கபூர்வமானதாக பார்க்காது தவறவிட்டதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
|
|
|
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டத் திட்டம்!
- ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்
[Tuesday 2018-10-30 18:00]
|
நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டுவது தொடர்பான தனது தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கவுள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே, அவர் இந்த உறுதியை அளித்துள்ளார்.
|
|
|
கபில வைத்தியரத்னவையும் நீக்கினார் ஜனாதிபதி!
- புதிய பாதுகாப்புச் செயலராக ஹேமசிறி பெர்ணான்டோ
[Tuesday 2018-10-30 18:00]
|
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்ணான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கபில வைத்தியரத்ன பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹேமசிறி பெர்ணான்டோ, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கான பிரதானியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் சிறிசேன!
- சமந்தா பவர்
[Tuesday 2018-10-30 18:00]
|
போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்று, ஐக்கிய நாடுகளிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
எண்ணெய் வள ஆய்வு - மன்னார் மீனவர்களுக்கு தடை!
[Tuesday 2018-10-30 18:00]
|
மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட சில தினங்களுக்கு குறித்த கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மன்னார் கடற்தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
|
|
|
மற்றொரு ஐதேக எம்.பிக்கு அமைச்சர் பதவி!
[Tuesday 2018-10-30 18:00]
|
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த துனெஸ் கன்கந்த சுற்றாடல் துறை இராஜாங்க அமைச்சராக இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
|
|
|
சமூக வலைத்தளங்களை தடை செய்யும் தீர்மானம் இன்னமும் இல்லை!
[Tuesday 2018-10-30 18:00]
|
முகநூலை இலங்கையில் தடை செய்யப் போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். முகநூல் மட்டுமல்ல வேறெந்த சமூக வலைத்தளங்களையும் இலங்கையில் தடை செய்வது குறித்து இதுவரை எதுவித தீர்மானங்களும் எடுக்கப்பட்டவில்லையென நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.
|
|
|
அரசமைப்புக்கு அமைவாகச் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் வலியுறுத்தல்!
[Tuesday 2018-10-30 18:00]
|
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல், தெளிவுபடுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்யும் தீர்மானத்துக்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை, இதன்போது ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.
|
|
|
கூட்டமைப்பு, ஜேவிபியுடன் இணைந்து இடைக்கால அரசை அமைக்க ஐதேக முயற்சி!
[Tuesday 2018-10-30 18:00]
|
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க ஐக்கிய தேசிய கட்சி, பேச்சுக்களை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளபடுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
சகோதரியின் கணவனை கொலை செய்த சகோதரர்கள் இருவருக்கு மரணதண்டனை!
[Tuesday 2018-10-30 18:00]
|
சகோதரியின் கணவரைப் படுகொலை செய்தமை தொடர்பில் கொலைக் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்ட சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கி, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன், இன்று தீர்ப்பளித்தார். களுவாஞ்சிகுடியில் வயல் பகுதியில் 2005ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 29ஆம் திகதி, மயில்வாகனம் வடிவேல் என்பவர் கடுமையான முறையில் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
|
|
|
சிவசக்தி ஆனந்தனுக்கு வலை வீசும் ரணில், மஹிந்த தரப்புகள்!
[Tuesday 2018-10-30 18:00]
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக ரணில், மஹிந்த தரப்புக்கள் முயற்சிகளை எடுத்துள்ளன.
|
|
|
உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு அழுத்தம்!
[Tuesday 2018-10-30 07:00]
|
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகியுள்ளதாக எச்சரித்துள்ள ஐரோப்பா ஒன்றியம் உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
|
|
|
இன்று மஹிந்தவைச் சந்திக்கிறார் சம்பந்தன்!
[Tuesday 2018-10-30 07:00]
|
அரசியல் குழப்ப நிலை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று சந்திக்கவுள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பிரதான இரு கட்சிகளும் நம்பி இருக்கின்றன. மஹிந்த தரப்புக்கா, ரணில் தரப்புக்கா தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு என்ற கேள்வி அதிகரித்து வருகிறது.
|
|
|
|