Untitled Document
May 4, 2024 [GMT]
மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கைது!
[Thursday 2018-09-27 18:00]

சென்னை அசோக்நகர் 87-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (60). இவரது மனைவி மகேஸ்வரி (53). இவர்களுக்கு கவிதா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அண்ணாமலை வடபழனியில் தனியாக ஆடிட்டிங் அலுவலகம் நடத்தி வருகிறார். மகள் கவிதா தரமணியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகன் சந்தோஷ் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வருகிறார். கம்ப்யூட்டர் விளையாட்டுக்கும் அடிமையாகி உள்ளான்.


திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை: - உச்சநீதிமன்றம் அதிரடி
[Thursday 2018-09-27 12:00]

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ஐ நீக்கி, திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் தகாத உறவில் ஈடுபட்டால், ஆண்களுக்கு மட்டுமே 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.


உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்கள் இல்லையா? - மாணவியின் வாக்குமூலம்
[Thursday 2018-09-27 09:00]

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர்,


இரு மனைவிகள்... ஆறு பிள்ளைகள்: - விஸ்வரூபம் எடுக்கும் விஜயகுமாரின் குடும்ப சண்டை -
[Thursday 2018-09-27 09:00]

நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது 2010 ஆம் ஆண்டில் விஜயகுமாரின் குடும்பத்துக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை விஸ்வரூபம் எடுத்தது. அன்றிலிருந்து தொடர்ந்து நடந்து வரும் இந்த பிரச்சனை மீண்டும் தற்போது வீட்டு பிரச்சனைக்காக மோதல் வந்துள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூலக்காரணமே சொத்துதான் என கூறப்படுகிறது.


பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் என பூசாரி சொன்னதை நம்பி ஏமாந்த நுாற்றுக்கணக்கான மக்கள்!
[Thursday 2018-09-27 09:00]

தமிழகத்தில் திருமணமான ஒரு பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் என பூசாரி சொன்னதை நம்பி நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் அவர் கர்ப்பமே ஆகவில்லை என தெரியவந்துள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் கோகிலா (42). இவருக்கும் நடராஜன் (45) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத நிலையில் குழந்தை இல்லை.


இராவணன் தமிழர் இல்லை: - சுப்ரமணிய சாமி கிளப்பும் புது சர்ச்சை.!
[Tuesday 2018-09-25 18:00]

பாஜக முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவரக்கூடியவர். ஈழ விவகாரம் தொடங்கி காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு விவகாரம் என எப்போதும் தமிழகத்திற்கு, தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடிய சுப்ரமணிய சாமி தற்போது ராவணன் குறித்து புது சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.


மனைவி மீதுள்ள கோபத்தில் நாயைக் கொன்ற கணவர்!
[Tuesday 2018-09-25 18:00]

சென்னையில், மனைவி மீதுள்ள கோபத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் செல்லமாக வளர்த்த 'பப்பி' என்ற நாயை கணவர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி, சாரதி தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கடை வைத்துள்ளார். இவரின் மனைவி செல்வி. அழகு நிலையம் நடத்திவருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வீட்டில் பப்பி என்ற பெயரில் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர்.


தாயைக் கொன்ற மகனை காட்டிக்கொடுத்த மனைவி!
[Tuesday 2018-09-25 18:00]

சொத்துத் தகராறில், பெற்ற தாயை கொடூரமாகக் கொலைசெய்த மகனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். `தாயைக் கொன்ற மகனிடம், எந்தவித குற்ற உணர்வும் இல்லை' என்கின்றனர், போலீஸார். சென்னை பாலவாக்கம், மணியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ராணியம்மாள். 62 வயதாகும் இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ராணியம்மாள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். மணியம்மாள் தெருவின் அருகில் உள்ள கால்வாய்ப் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்துவந்தார்.


குரங்கிற்கு இறுதிசடங்கு செய்த பொதுமக்கள்!
[Tuesday 2018-09-25 18:00]

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, ஊட்டல்மலை கானாறு கரையில் நெமிலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே மரம் விட்டு, மரம் தாவும் போது மின்கம்பியில் சிக்கி பெண் குரங்கு ஒன்று உயிரிழந்தது. இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் மின்சாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து, இறந்த குரங்கின் உடலை மீட்டனர்.


பெண் வழக்கறிஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிபதி பதவி நீக்கம்!
[Tuesday 2018-09-25 18:00]

பெண் வழக்கறிஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதும், போனில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் வகையிலும் பேசி வந்திருக்கிறார். இது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தில் தங்களுடைய குமுறல்களைக் கொட்டி கண்ணீர் விட்டிருக்கின்றனர்.


வாக்கு வங்கி அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்: - பிரதமர் மோடி
[Tuesday 2018-09-25 18:00]

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உற்சாகமான லட்சக்கணக்கான தொண்டர்களை நான் பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார். உலகின் பெரிய ஜனநாயக கட்சி என்பதில், பெருமிதம் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.


விசித்திர மலை கிராமம்: - இசையை பெயராக கொண்டுள்ள மக்கள்!
[Tuesday 2018-09-25 18:00]

மேகாலயா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்காமல் இசை மூலம் அழைக்கின்றார்கள். அங்குள்ள கொங்தங் என்ற மலைக்கிராமத்தில் இந்த வினோத நிகழ்வு நடந்து வருகிறது. அங்குள்ள குழந்தைகளுக்கு தனித்தனி பெயர்கள் இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு இசையை உருவாக்கி அதன்படியே அவர்கள் அழைத்து வருகிறார்கள்.


இராவணன் தமிழர் இல்லை: சு.சாமி கிளப்பும் புது சர்ச்சை.!
[Monday 2018-09-24 19:00]

பாஜக முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவரக்கூடியவர். ஈழ விவகாரம் தொடங்கி காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு விவகாரம் என எப்போதும் தமிழகத்திற்கு, தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடிய சுப்ரமணிய சாமி தற்போது ராவணன் குறித்து புது சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.


கணவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய காஜல்!
[Monday 2018-09-24 17:00]

தெருக்கூத்து கலைஞரான இவருக்கும், காஜல் என்ற பெண்ணிற்கும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. காஜல் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அவருக்கும் அவரது கணவர் கரண்சிங்குக்கும் கலை நிகழ்ச்சி தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கரண்சிங்கின் பெற்றோர் தலையிட்டு அவர்களது சண்டையை தீர்த்து வைத் தனர். பிறகு இரவு சாப் பிட்டு முடித்ததும் தூங்க சென்றனர். அப்போதும் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.


கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு பெற்ற குழந்தையை விட்டுச் சென்ற பெண்!
[Monday 2018-09-24 17:00]

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு, பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரத்தில் நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த காதலனை கரம்பிடித்த காதலி
[Monday 2018-09-24 17:00]

தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கு முன், ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த விஜய் என்பவர் செயற்கைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளதாக அவர் மனைவி ஷில்பா கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய்யும், ஷில்பாவும் காதலித்து வந்த நிலையில் ரயில் விபத்தில் கால்களை விஜய் பறிகொடுத்தார். கால்கள் இல்லாத விஜய்யை ஷில்பா திருமணம் செய்ய அவர் வீட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதையும் மீறி அவரை திருமணம் செய்தார் ஷில்பா.


விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்!
[Monday 2018-09-24 08:00]

விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.


வேலைக்கு போகவில்லை திட்டிவந்த தந்தையைஅடித்துக் கொன்ற மகன் !
[Monday 2018-09-24 08:00]

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் சிமாலியா கிராமத்தில் வசிப்பவர் ராம்சிங் தட்வி. இவரது மகன் ராஜேந்திர தட்வி வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்துள்ளார். ராஜேந்திர தட்வி தனது அடிப்படை தேவைக்கு கூட சம்பாதிக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ளாத தந்தை தினமும் அவரை திட்டிவந்ததாகவும், வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.


மகள்களுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை!
[Monday 2018-09-24 08:00]

தமிழகத்தில் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன் (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுக்கு சுதா (16), மேகலா (10) என 2 மகள்கள் உள்ளனர்.


ஆளுக்கொரு நீதி வேளைக்கொரு நியாயம் என்ற நிலையில்தான் சட்டம் அமல்படுத்தப்படுகிறது: - மு.க.ஸ்டாலின்
[Sunday 2018-09-23 17:00]

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ` ஆளுக்கொரு நீதி- வேளைக்கொரு நியாயம் என்ற நிலையில்தான் சட்டம் அமல்படுத்தப்படுகிறது' என்று ஆளும் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக் கூடாது என்பதிலும்;பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்;இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.


பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த இளைஞர்: - கைது செய்த பொலிசார்
[Sunday 2018-09-23 17:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றி வந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலத்தின் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன்(19). வேலை ஏதும் இன்றி சுற்றித்திரிந்த இவர் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை தொடங்கி தனது முகத்தை மாற்றி மார்பிங் செய்து அதில் பதிவிட்டுள்ளார்.


இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி நிர்வாண ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்!
[Sunday 2018-09-23 17:00]

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போலி மது விற்பனை மேற்கொண்டதாக கூறி இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி கிராம மக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 19 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல்!
[Sunday 2018-09-23 17:00]

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், பொலிசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


விஜயகுமாரின் மகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: -நடன இயக்குநர் ராபர்ட் பதில்
[Sunday 2018-09-23 16:00]

நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானதால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக, ராபர்ட் தெரிவித்துள்ளார்.


குறிவைக்கப்படும் பெண்கள்: - மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறுகிறதா டெல்லி?
[Saturday 2018-09-22 18:00]

கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகரான டெல்லி மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறிவருகின்றது. மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரர்கள் சர்வதேச தொடர்புகளுடன் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015 முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மனித கடத்தல் தொடர்பான சுமார் 535 மீட்பு நடவடிக்கைகளில் பல அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை கைது செய்த பொலிசார்!
[Saturday 2018-09-22 17:00]

சென்னையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொன்னேரியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது நண்பர் சின்னதுரை. இருவரும் கடந்தாண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் மோகனபிரியா (23) என்ற பெண்ணை அங்கு சந்தித்தனர்.


மனைவி மற்றும் குழந்தைகளை தீ வைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன் கைது!
[Saturday 2018-09-22 17:00]

தமிழ்நாட்டின் சேலத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும் பூவரசன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.


சட்டையில்லாமல் திருட வந்த திருடன்: - சாமர்த்தியாக மாட்டி கொடுத்த நாய்
[Saturday 2018-09-22 06:00]

சென்னையில் உள்ள வீட்டில் மேல் சட்டையில்லாமல் அரைநிர்வாணமாக திருட வந்த திருடனை நாய் ஒன்று சாமர்த்தியாக மாட்டி விட்டுள்ளது. வேளச்சேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் வீட்டில் கீழ் தளம், மற்றும் மேல் தளத்தில் நான்கு குடியிருப்புகள் உள்ளன. இரவு நேரத்தில் மேல்சட்டை அணியாத வாலிபர், சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா