Untitled Document
April 25, 2024 [GMT]
நான் எதிர்கொண்ட விபத்து எதேச்சையாக நடக்கவில்லை: - சந்தேகம் எழுப்பும் ஹனான்
[Saturday 2018-09-08 16:00]

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள ஹனான், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். தான் எதிர்கொண்ட விபத்து எதேச்சையாக நடக்கவில்லை, வேண்டுமென்றே நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார்.


திருமண மண்டபத்தில் உறவினர்கள் கண் எதிரிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்ட அண்ணன் தம்பி!
[Saturday 2018-09-08 15:00]

ஆந்திராவில் திருமண மண்டபத்தில் உறவினர்கள் கண் எதிரிலேயே பெட்ரோல் ஊற்றி அண்ணன், தம்பி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், சங்கவரம் மண்டலம், எஸ்சி காலனியை சேர்ந்தவர் சுதாகர். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த நூகராஜ் என்பவரும் திருமண மண்டபத்தில் சந்தித்துக்கொண்ட போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரசாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாகரை தாக்கினார்.


இறந்த சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை!
[Saturday 2018-09-08 15:00]

பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நேற்று 11 வயது சிறுவன் வாகன விபத்தில் காயம் அடைந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தனது மகன் இறந்த செய்தி கேட்ட சிறுவனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.


போதையில் தகராறு செய்த கணவரை அடித்து கொன்ற மனைவி!
[Saturday 2018-09-08 15:00]

நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் சிவசக்தி தெருவைச் சேர்ந்தவர் குமரப்பராஜன், (வயது 51), தொழிலாளி. குமரப்பராஜனின் மனைவி பானுமதி. குமரப்ப ராஜன் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி மது குடித்து விட்டு தெருவில் மயங்கி கிடப்பது வழக்கம். மனைவி மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அப்போது அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். பின்னர் வீடு அருகே மயங்கி கிடப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல மது குடித்து மயங்கி கிடந்த குமரப்பராஜன் திடீரென இறந்து போனார்.


தாய் உட்பட 3 பேரை உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய 11 வயது சிறுவன்!
[Saturday 2018-09-08 15:00]

அசாம் மாநிலம் வடக்கு கெளகாத்தியில் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் கமல் கிஷோர் என்ற 10 வயது சிறுவன் படித்து வருகிறான். அங்கு வடக்கு கெளகாத்தி மற்றும் கெளகாத்தி இடையே பிரம்மபுத்திரா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இரு நகருக்கு இடையே படகு போக்குவரத்து மட்டுமே உள்ளது.


சொத்துக்காக மாமனாருக்கு கத்தி குத்து: - மருமகனுக்கு போலீஸ் வலை
[Saturday 2018-09-08 08:00]

புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் 6வது தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (62). கப்பல் சிப்பந்தியாக வேலை செய்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (57). இவர்களுக்கு லதா (28) என்ற மகள் உள்ளார். இவரது கணவர் பாபு (31). அதே பகுதியில் வசிக்கின்றனர். கடந்த வாரம் தெய்வசிகாமணியின் தாய் இறந்துவிட்டார். இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தெய்வசிகாமணி உள்பட பலர் சென்றனர்.


7 பேர் விடுதலை குறித்து ஆலோசனை: - நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை
[Friday 2018-09-07 21:00]

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 9-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்!
[Friday 2018-09-07 15:00]

சென்னை குன்றத்தூரில் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு கடும் தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார். சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமி, வீட்டைவிட்டு தப்பினார்.


மகளின் திருமணத்துக்காகப் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த மனுவை வாபஸ் பெற்றார் நளினி!
[Friday 2018-09-07 15:00]

சென்னை உயர் நீதிமன்றத்தில், மகளின் திருமணத்துக்காகப் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த மனுவை வாபஸ் பெற்றார் நளினி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் மத்திய பெண்கள் சிறையில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இவரின் கணவர் முருகனும் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்தத் தம்பதியரின் மகளான ஹரித்ரா தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.


அமைதிப் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த அழகிரி!
[Friday 2018-09-07 08:00]

தனது அழைப்பை ஏற்று அமைதிப் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அழகிரி. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் 30 வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. திருவல்லிக்கேணியில் இருந்து காலை 10 மணியளவில் தொடங்கிய அமைதிப் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.


கணவரின் இரண்டாவது மனைவியின் மகளை கொடூரமாக கொன்ற முதல் மனைவி!
[Thursday 2018-09-06 15:00]

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் ஏற்கனவே உள்ளூரை சேர்ந்த பக்மீதா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முஸ்தாக் அகமது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவர் மூலம் 9 வயது பெண் குழந்தை உள்ளிட்ட குழந்தைகள் இருந்தன.


மர்மமான முறையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த நடிகை!
[Thursday 2018-09-06 15:00]

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டலின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது, மேற்குவங்காள மாநில நடிகையான பாயெல் சக்ரபோர்டி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
[Thursday 2018-09-06 15:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.


உடம்பில் ஆவி இருப்பதாகக் கூறியதால் அவர் சொன்னதைச் செய்தேன்: - மந்திரவாதியை எரித்துக்கொன்ற பெண் வாக்குமூலம்
[Thursday 2018-09-06 15:00]

``என் உடம்பில் ஆவி இருப்பதாகக்கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணத்தை பெற்று ஏமாற்றியதால் மந்திரவாதியைக் கொன்றேன்'' என்று கைதான தாஜ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை முதலாவது தெருவைச் சேர்ந்த சையத் பஸ்ருதீன் என்கிற பாபுபாய். இவருக்கு வயது 62. இவர், திருவல்லிக்கேணியில் உள்ள வணிகவளாகத்தில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து, 40 ஆண்டுகளாக ஓதுதல் வேலை செய்துவந்தார்.


காலில் விழுந்த காதலன்...ராக்கி கட்டிய காதலி...: - ஆன்டி-ரோமியோ படை அதிரடி
[Thursday 2018-09-06 15:00]

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களை கேலி செய்பவர்கள், பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது.


குறும்பு செய்த குழந்தைகளை சைக்கோ போல் துன்புறுத்திய அபிராமி!
[Thursday 2018-09-06 08:00]

குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் விஜயின் மனைவி அபிராமி (25). தனது 2 குழந்தைகளை பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த குற்றத்துக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் கள்ளக்காதலன் சுந்தரம் (28) என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


புளூவேல்கேம் விளையாடிய என்ஜினீயர் தற்கொலை!
[Wednesday 2018-09-05 19:00]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சேஷாத்திரி (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். புதுவை மேட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சேஷாத்திரி அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. பின்பு தனது அறையில் சேஷாத்திரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது: - முதல்வர் பழனிசாமி
[Wednesday 2018-09-05 19:00]

கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:


குழந்தைகளை இழந்த குன்றத்தூர் ரசிகருக்கு ரஜினி ஆறுதல்!
[Wednesday 2018-09-05 19:00]

சென்னையில், இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.


நாயின் காதுகளைக் கடித்துக்குதறிய குடிமகனுக்கு தர்ம அடி!
[Tuesday 2018-09-04 18:00]

மது போதையில் இருப்பவர்கள், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் செய்திகளை அன்றாடம் கடந்துசெல்கிறோம். ஆனால், மேற்கு வங்கத்தில் ஒருவர், தெருவில் சுற்றித்திரிந்த நாயின் காதைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளார்.


கணவனை கட்டையால் தாக்கி தற்கொலை நாடகமாடிய மனைவி
[Tuesday 2018-09-04 18:00]

ஆழ்வார் திருநகர், ஸ்ரீலட்சுமிநகர் 3வது தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி செளந்தரராஜன்(56), குடிக்காரர். இவரது மனைவி வள்ளி(48). நேற்று முன்தினம் இரவு செளந்தரராஜன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு வள்ளி தகவல் தெரிவித்தார். செளந்தரராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கோயம்பேடு போலீசார் அனுப்பினர். கட்டையால் தாக்கியதில் உயிரிழப்பு என பிரேதபரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. அதையடுத்து வள்ளியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கணவரை அடித்து கொலை செய்ததை வள்ளி ஒப்புக் கொண்டார்.


அதிமுக அரசு இருக்கும் தைரியத்தில் பாஜக செயல்படுகிறது: - - மு.க ஸ்டாலின்
[Tuesday 2018-09-04 18:00]

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த மாணவி சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.


தனிக்குடித்தனம் வர மறுத்தத கணவர்: - மனவேதனையில் புதுப்பெண் தற்கொலை
[Tuesday 2018-09-04 16:00]

கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.


அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? - கமல் ஹாசன்
[Tuesday 2018-09-04 16:00]

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியாவை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.


6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்து அறுத்து கொலை!
[Tuesday 2018-09-04 07:00]

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 31), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (26). இவர்களுக்கு வீட்டின் அருகே விவசாய நிலங்கள் உள்ளது. லதா தினந்தோறும் விவசாய நிலத்துக்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு 8 மணிக்கு லதா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு 9 மணி ஆகியும் லதா வீடு திரும்பவில்லை.


விஜய் ரொம்ப நல்லவர்... நான்தான் தவறு செய்துவிட்டேன்: - அபிராமி வாக்குமூலம்
[Monday 2018-09-03 16:00]

சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த தாய் அபிராமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல பின்னணி தகவல்கள் இருப்பதாக போலீஸாரும் மனநல மருத்துவரும் தெரிவித்தனர்.


எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனோடு தப்பியோட்டம்!
[Monday 2018-09-03 16:00]

ஈரோட்டில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், திருமண ஏற்பாடுகள் நடந்துவந்த வேளையில், காதலனுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 83 ஆயிரம் வாக்குகள் பெற்று, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானவர், ஈஸ்வரன். 40 வயதான ஈஸ்வரனுக்கு, கடந்த சில மாதங்களாக திருமணத்துக்கு பெண் பார்த்து வந்திருக்கின்றனர்.


மிரட்டிய உறவினர்கள்... பாதுகாத்த பெற்றோர்: - 24 விரல்கள் கொண்ட சிறுவனுக்கு உதவிய போலீஸ்!
[Monday 2018-09-03 16:00]

மனிதர்கள் இயல்பாக தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு கை, கால்களுடன் விரல்களுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. 10 விரல்களில் ஒரு விரல் இல்லையென்றாலும் சிரமம்தான். அதே நேரத்தில் 10-ல் ஒரு விரல் அதிகமாக இருந்தாலும் சிரமமே.

Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா