Untitled Document
May 1, 2024 [GMT]
தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் Top News
[Tuesday 2022-04-19 21:00]

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னால் முடிந்த பணியை நிறைவாக செய்துநின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்கள் 85வது வயதில் மறைந்த நிலையில், தன்னால் முடிந்தவரை இணைத்துக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டியாக செயற்பட்ட அவரின் நினைவுகளை ஆழ எங்களின் மனங்களில் பதித்துக்கொள்ளுகின்றோம் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னால் முடிந்த பணியை நிறைவாக செய்துநின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்கள் 85வது வயதில் மறைந்த நிலையில், தன்னால் முடிந்தவரை இணைத்துக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டியாக செயற்பட்ட அவரின் நினைவுகளை ஆழ எங்களின் மனங்களில் பதித்துக்கொள்ளுகின்றோம் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

இன்று 19-04-2022 வெளியிடப்பட்ட அவ்வறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னால் முடிந்த பணியை நிறைவாக செய்துநின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்கள் 85வது வயதில் மறைந்த நிலையில், அவரது நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றோம். தன்னிடமிருந்த மும்மொழி ஆற்றலையும் தமிழின விடுதலைக்காக அர்ப்பணித்து வாழ்ந்த அவர், திருகோணமலையில் 25-12-1938 இல் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் விளைவுகளால், இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் - வதிரியில் வாழ்ந்து வந்திருந்தார். நெல்லியடி இருதயக் கல்லூரியில் கல்விகற்று அதன் பின்னர், நிர்வாகசேவை பரீட்சையில் சித்தியடைந்து தபால் சேவையில் இணைந்துகொண்டார்.

இலங்கைத்தீவின் அனைத்து மாவட்டங்களிலும் சேவையாற்றிய அவர், 1983 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் உயிர்தப்பி மீளவும் ஊர் திரும்பினார். பின்னர் சவூதிக்கு சென்று 7 வருடங்கள் பணியாற்றிய அவர், தனது ஒரே மகனுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தாயகம் திரும்பினார். தனது மகனுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. தானே முன்வந்து தனது சிறுநீரகத்தை தானம் செய்தது மட்டுமன்றி, தான் ஐம்பது வயதை கடந்த பின்னரும் உறுப்பு தானம் செய்தும் சுகதேகியாக வாழ்கின்றேன் என்றும், உறுப்புதானம் செய்வது நல்லதொரு சமூகசேவை எனவும், பலருக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார்.

எமது விடுதலை இயக்கத்தோடு இணைந்து 1993 தொடக்கம் கற்பித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் எமது அமைப்பின் கோண்டாவில் ஆங்கிலக்கல்லூரியில் கற்பித்த அவர், பெரும் முற்றுகைப்போர் ஏற்பட்டு 1995 இல் குடாநாட்டு இடப்பெயர்வின்போது வன்னிக்கு வந்தார். கிளிநொச்சி - திருநகர் பின்னர் முல்லைத்தீவு என அவரது கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்ந்தன. அவரது ஆங்கில மொழியாளுமை தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட பலராலும் பாராட்டக்கூடியதாக இருந்தது. நேரடியான மொழிபெயர்ப்பை விட யதார்த்தமான மொழிபெயர்ப்பு தான் நல்லது என கற்பிப்பார்.

தமிழ்மொழியிலும் அவரது ஆழமான பற்று ஒவ்வொரு சிறு விடயங்களிலும் வெளிப்படையாக தெரிந்தது. ஒரு தடவை தமிழக பத்திரிகையாளர் ஒருவருக்கு "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" என்ற பாடலை பாடி, அந்த வரிகளின் ஊடாக தமிழர் வாழ்வையும் வலியையும் ஆழமாக விளக்கியதை உதாரணமாக குறிப்பிடலாம்.

சமாதான காலப்பகுதியில் “தேதுண்ண” (வானவில் Rainbow) என்ற மாதாந்த சிங்கள பத்திரிகையை எமது விடுதலை இயக்கத்தின் சார்பாக வெளிக்கொண்டு வருவதற்கும் ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகவிருந்தது. இவரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நினைவுகூரும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகள் பத்திரிகையில் வரும் பொருத்தமான ஆவணங்களை தேர்வு செய்து அவற்றை சிங்கள ஊடகம் ஊடாக கொண்டுவருவதற்கு அதீத கவனம் எடுத்ததை குறிப்பிடுகின்றார். அதேவேளை எமது விடுதலை அமைப்பின் சமாதான செயலகத்தின் இணையத்தளத்திற்கான விடயங்களை தயாரித்து, பதிவேற்றுவதற்கும் மிகவும் ஆர்வமானவராக அவர் இருந்தார். எமது அமைப்பின் அறிக்கைகள் மற்றும் தகவல்களை ஊடகங்கள் ஊடாக பிரசுரிப்பதற்காக, ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உத்தியோபூர்வ மொழிபெயர்ப்பாளராக அவரது பணி பாராட்டப்படவேண்டியதாகும்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உரைபெயர்ப்பாளராக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். நோர்வே, தென் ஆபிரிக்கா, சுவிஸ்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று தனது பணியை ஆற்றியிருந்தார். தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் பங்குகொண்ட சில சந்திப்புகளிலும் உரைபெயர்ப்பாளராக பங்குகொண்டிருந்தார். அதன் பின்னர் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பா. நடேசன் அவர்கள் நியமிக்கப்பட்டபோது, அவருடனும் பல சந்திப்புகளில் உரைபெயர்ப்பாளராக அவர் பங்குகொண்டிருந்தார்.

ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் மும்மொழி ஆளுமை என்பது பலரது கவனத்தை பெற்றிருந்தது. ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் மறைவையொட்டி சர்வதேச அனுசரணையாளராக பங்குகொண்ட எரிக்சொல்கெம் அவர்கள் அவரை "உறுதியான தமிழ் நாட்டுப்பற்றாளர்" எனவும் "திறன் மிக்கமொழிபெயர்ப்பாளர்" எனவும் குறிப்பிடுகின்றார்.

இவரது துணைவியார் சுகவீனமாக இருந்த காலங்களில் அவரையும் தனியே பராமரித்தவாறு, தேச விடுதலைப்பணிக்கும் நேரத்தை ஒதுக்கி அர்ப்பணிப்புடன் செயற்படுபவராக இருந்தார். துணைவியார் 2005 இல் சாவடைந்த பின்னரும், ஏற்கனவே துணைவியாரிடம் கலந்துரையாடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய பணத்தில் பெரும் பகுதியை உதவி தேவைப்பட்டவர்களுக்கு வழங்கிவந்தார்.

இறுதிப்போரில், 2009 இல் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டு, சிறிலங்கா அரசோடு இணைந்து ஒத்துழைக்கும்படி வற்புறுத்தப்பட்ட நிலையில் அதனை நிராகரித்திருந்தார்.

ஒவ்வொரு மாதமும் பொலிஸ்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன் 2010 இல் விடுவிக்கப்பட்டு நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின்னர் 2016 இல் வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்கள் 05-09-2021 அன்று சாவடைந்த நிலையில், வவுனிக்குளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின்னரும், அதன் பங்குத்தந்தையை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை என்பது, தொடர்ந்திருந்த அடக்குமுறையின் அபாயநிலையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

மிகவும் எளிமையாக வாழ்ந்த அவர், துவிச்சக்கர வண்டியில் சென்றே அனைத்து பணிகளையும் செய்தார். பிறமொழி பத்திரிகையாளர்களோடும் கடும் நெருக்கடியான நிலைகளிலும் தொடர்புகளை பேணிவந்திருந்தார்.

வயோதிப வயதில் தனித்தவராக வாழ்ந்தபோதும், தமிழர் தேசத்தின் மீது பற்று மிகுந்தவராக உறுதியானவராக இருந்தார். பேரழிவில் தமிழினம் சிக்கியபோதும், தேசியத்தலைமை தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து, தமிழர் தலைவிதியை சர்வதேச அரங்குக்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறது என்றும் அதன் உண்மைநிலையை உலகம் விரைவில் விளங்கிக்கொள்ளும் எனவும் குறிப்பிடுவார்.

அந்த வகையில் தமிழினத்தின் விடுதலைக்கான பணியில் தன்னால் முடிந்தவரை இணைத்துக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டியாக செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் அவர்களின் நினைவுகளை ஆழ எங்களின் மனங்களில் பதித்துக்கொள்ளும் நாம், அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருடன் எமது கரங்களையும் பற்றிக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  
   Bookmark and Share Seithy.com



தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.



இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்!
[Wednesday 2024-05-01 03:00]

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு தடை!
[Wednesday 2024-05-01 03:00]

உயர்நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரை ஏனைய நீதியரசர்களை ஜனாதிபதி நியமிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் நேற்று இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி சரித் மஹீபுத்திர பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.



நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்!
[Wednesday 2024-05-01 03:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.



கோட்டாவை வேட்பாளர் ஆக்குவதை எதிர்த்தேன்!
[Wednesday 2024-05-01 03:00]

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



யாருக்கு வாக்களிக்க தூண்டுகிறேன்! - பேராயர் அறிக்கை.
[Wednesday 2024-05-01 03:00]

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என கர்தினால் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த முதலை!
[Wednesday 2024-05-01 03:00]

வவுனியா - கணேசபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து முதலை மீட்கப்பட்டது. அத்துடன் குறித்த முதலையினை பாதுகாப்பாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கையையும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை!
[Wednesday 2024-05-01 03:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



மைதானத்தில் பேரணி நடத்தும் ஒரே கட்சி பெரமுனதானாம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதனது மே தினக் கூட்டத்தை விளையாட்டு மைதானத்தில் நடத்தும் தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது, மற்றவர்களுக்கு இதேபோன்ற இடங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Wednesday 2024-05-01 03:00]

கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பேரைச் சுட்டுக் கொன்று, 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர் உட்பட 3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!
[Tuesday 2024-04-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது.



கட்டுநாயக்க விமான நிலைய விபைி முனையத்தில் துப்பாக்கி வெடிப்பு!
[Tuesday 2024-04-30 16:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விவசாயம் செய்யும் பௌத்த பிக்கு! - அந்தரிக்கும் விவசாயிகள்.
[Tuesday 2024-04-30 16:00]

குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



சஜித் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பு!
[Tuesday 2024-04-30 16:00]

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சி வெற்றியீட்டும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார கொள்கை நிறுவகம் (Institute for Health Policy’s (IHP)) இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.



தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்வு குறித்து தீர்மானிக்க வேண்டும்! - பிரித்தானிய தூதுவர்
[Tuesday 2024-04-30 16:00]

இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருவதா இல்லையா என்பது இணையனுசரணை குழுவுக்கான பொறுப்பாகும். அதை அந்தக்குழுவே முடிவு செய்ய வேண்டும். ஆனால் செப்டெம்பர் மாத அமர்வில் மற்றுமொரு பிரேரணை இலங்கை தொடர்பில் வரும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார்.



மானிப்பாயில் குளியலறையில் ஆணின் சடலம்!
[Tuesday 2024-04-30 16:00]

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கல்லூரி வீதி, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு அவரது வீட்டு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணம் வருகிறார் எரிக் சொல்ஹெய்ம்!
[Tuesday 2024-04-30 16:00]

எரிக் சொல்ஹெய்ம் இரு நாள் பயணமாக இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். 2002இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான பேச்சுகளுக்கு நோர்வேயின் சமாதான தூதுவராக சொல்ஹெய்ம் பணியாற்றியிருந்தார்.



சுன்னாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீர் சாவு!
[Tuesday 2024-04-30 16:00]

சுன்னாகம் சுப்பிரமணியம் வீதி, கந்தரோடைச் சேர்ந்த கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் சிறீதரன் சுஜிதரன் (வயது 19) மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.



கொழும்பில் இருந்து வந்தவர் காங்கேசன்துறையில் மயங்கி விழுந்து மரணம்!
[Tuesday 2024-04-30 16:00]

கொழும்பில் இருந்து வந்த ஒருவர் நேற்று காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.



சம்பிக்கவிடம் சிஐடி விசாரணை!
[Tuesday 2024-04-30 16:00]

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று வருகை தந்தார். இரத்தினபுரியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா