Untitled Document
May 21, 2024 [GMT]
ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Wednesday 2024-05-01 03:00]


கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பேரைச் சுட்டுக் கொன்று,   45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர்  உட்பட  3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பேரைச் சுட்டுக் கொன்று, 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர் உட்பட 3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  

இந்த தொடர்பிலான வழக்கு செவ்வாய்க்கிழமை கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது .

2013 ஓகஸ்ட் முதலாம் திகதி கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சுத்தமான நீரை வழங்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய கனேடிய வாசிகள் கைது!
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க இலங்கை அனுமதிக்காது!
[Tuesday 2024-05-21 17:00]

பொறுப்பான அண்டை நாடான இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க யாரையும் அனுமதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அடுத்த மாதம் அறிவிப்பார்!
[Tuesday 2024-05-21 17:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்தார்.



வடக்கில் 100 ஆண்டுகளில் மே மாதம் அதிகபட்ச மழைவீழ்ச்சி!
[Tuesday 2024-05-21 17:00]

வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டுக்கு கிழக்காக அநேகமாக 22 ஆம்திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இது எதிர்வரும் 23ம் திகதி மாலையளவில் ஒரு சிறிய புயலாகி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



வற்றாப்பளையில் இருந்து திரும்பிய பேருந்து தடம்புரண்டு 6 பக்தர்கள் காயம்! Top News
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பக்தர்கள் பேருந்து விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.



யுவதி பலியான விபத்து -இராணுவச் சிப்பாய் விளக்கமறியலில்!
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம்!
[Tuesday 2024-05-21 17:00]

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.



மழையினால் யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் பாதிப்பு!
[Tuesday 2024-05-21 17:00]

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.



டயனா கமகே பிணையில் விடுவிப்பு!
[Tuesday 2024-05-21 17:00]

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.



பஸ்சில் பயணித்த பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு!
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



சரணடைந்த குழந்தைகள் எங்கே? - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி.
[Tuesday 2024-05-21 06:00]

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.



இலங்கையில் இன்று துக்கதினம்!
[Tuesday 2024-05-21 06:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வற்றாப்பளை சென்ற உழவு இயந்திரம் விபத்து - சிறுவன் பலி, 5 பேர் படுகாயம்.
[Tuesday 2024-05-21 06:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் அதில் பயணித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த கூட சர்வதேசம் தவறிவிட்டது!
[Tuesday 2024-05-21 06:00]

வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை தமது வீடுகளிலோ, பகிரங்க தளங்களிலோ நடத்த தமிழ் மக்களுக்கு ஐநா அங்கீகரித்த உரிமை இருக்கிறது என்ற குறைந்த பட்ச விஷயத்தை கூட இலங்கை ஆட்சியாளர்களின் தலைகளில் திட்டவட்டமாக புகுத்த சர்வதேச சமூகம் இதுவரை தவறி உள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.



ஜனாதிபதியுடன் இணக்கம் ஏற்படவில்லை! - என்கிறார் சாகர காரியவசம்.
[Tuesday 2024-05-21 06:00]

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



இலங்கையில் அறிமுகமாகிறது ஒக்டேன் 100 சூப்பர் பெற்றோல்!
[Tuesday 2024-05-21 06:00]

வரலாற்றில் முதன்முறையாக IOC நிறுவனம் ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.



சீரற்ற வானிலை - 19,234 பேர் பாதிப்பு!
[Tuesday 2024-05-21 06:00]

தற்போதைய சீரற்ற வானிலையினால் நாட்டின் 07 மாவட்டங்களில் 19,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 4,786 ஆகும். 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 1,140 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



களுத்துறையில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு! - ஒருவர் பலி.
[Tuesday 2024-05-21 06:00]

களுத்துறை - கட்டுக்குருந்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.



அளவெட்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!
[Tuesday 2024-05-21 06:00]

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை 4:00மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.



ரம்புக்வெலவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Tuesday 2024-05-21 06:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா