Untitled Document
May 1, 2024 [GMT]
போர்க்களமானது ரம்புக்கனை! ஒருவர் பலி – 11 பேர் காயம்! Top News
[Tuesday 2022-04-19 21:00]
 
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மோதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மோதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

  

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட காயத்தால்தான் பலியாகியுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

” போராட்டக் காரர்களால் ஆட்டோவொன்று கொளுத்தப்பட்டுள்ளது. சொத்துகளுக்கும் தேசம் விளைவிக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் பொலிஸார்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பொலிஸாரும் காயமடைந்துள்ளனர். ” – என்றார். ரம்புக்கனை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.



இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்!
[Wednesday 2024-05-01 03:00]

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு தடை!
[Wednesday 2024-05-01 03:00]

உயர்நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரை ஏனைய நீதியரசர்களை ஜனாதிபதி நியமிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் நேற்று இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி சரித் மஹீபுத்திர பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.



நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்!
[Wednesday 2024-05-01 03:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.



கோட்டாவை வேட்பாளர் ஆக்குவதை எதிர்த்தேன்!
[Wednesday 2024-05-01 03:00]

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



யாருக்கு வாக்களிக்க தூண்டுகிறேன்! - பேராயர் அறிக்கை.
[Wednesday 2024-05-01 03:00]

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என கர்தினால் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த முதலை!
[Wednesday 2024-05-01 03:00]

வவுனியா - கணேசபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து முதலை மீட்கப்பட்டது. அத்துடன் குறித்த முதலையினை பாதுகாப்பாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கையையும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை!
[Wednesday 2024-05-01 03:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



மைதானத்தில் பேரணி நடத்தும் ஒரே கட்சி பெரமுனதானாம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதனது மே தினக் கூட்டத்தை விளையாட்டு மைதானத்தில் நடத்தும் தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது, மற்றவர்களுக்கு இதேபோன்ற இடங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Wednesday 2024-05-01 03:00]

கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பேரைச் சுட்டுக் கொன்று, 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர் உட்பட 3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!
[Tuesday 2024-04-30 16:00]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது.



கட்டுநாயக்க விமான நிலைய விபைி முனையத்தில் துப்பாக்கி வெடிப்பு!
[Tuesday 2024-04-30 16:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விவசாயம் செய்யும் பௌத்த பிக்கு! - அந்தரிக்கும் விவசாயிகள்.
[Tuesday 2024-04-30 16:00]

குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



சஜித் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பு!
[Tuesday 2024-04-30 16:00]

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சி வெற்றியீட்டும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார கொள்கை நிறுவகம் (Institute for Health Policy’s (IHP)) இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.



தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்வு குறித்து தீர்மானிக்க வேண்டும்! - பிரித்தானிய தூதுவர்
[Tuesday 2024-04-30 16:00]

இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருவதா இல்லையா என்பது இணையனுசரணை குழுவுக்கான பொறுப்பாகும். அதை அந்தக்குழுவே முடிவு செய்ய வேண்டும். ஆனால் செப்டெம்பர் மாத அமர்வில் மற்றுமொரு பிரேரணை இலங்கை தொடர்பில் வரும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார்.



மானிப்பாயில் குளியலறையில் ஆணின் சடலம்!
[Tuesday 2024-04-30 16:00]

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கல்லூரி வீதி, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு அவரது வீட்டு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணம் வருகிறார் எரிக் சொல்ஹெய்ம்!
[Tuesday 2024-04-30 16:00]

எரிக் சொல்ஹெய்ம் இரு நாள் பயணமாக இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். 2002இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான பேச்சுகளுக்கு நோர்வேயின் சமாதான தூதுவராக சொல்ஹெய்ம் பணியாற்றியிருந்தார்.



சுன்னாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் திடீர் சாவு!
[Tuesday 2024-04-30 16:00]

சுன்னாகம் சுப்பிரமணியம் வீதி, கந்தரோடைச் சேர்ந்த கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் சிறீதரன் சுஜிதரன் (வயது 19) மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.



கொழும்பில் இருந்து வந்தவர் காங்கேசன்துறையில் மயங்கி விழுந்து மரணம்!
[Tuesday 2024-04-30 16:00]

கொழும்பில் இருந்து வந்த ஒருவர் நேற்று காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.



சம்பிக்கவிடம் சிஐடி விசாரணை!
[Tuesday 2024-04-30 16:00]

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று வருகை தந்தார். இரத்தினபுரியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா