Untitled Document
May 1, 2024 [GMT]
இந்தியா அதிகாரப் பகிர்வை உறுதி செய்தால் சீனா காலூன்ற விடமாட்டோம்!
[Wednesday 2021-12-29 08:00]


 இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிட்டுவதை இந்தியா உறுதி செய்யுமானால், தமிழர் தாயகத்தில் சீனா உட்பட வேறு எந்த சக்தியும் காலூன்றாமல் தமிழர்கள் பார்த்துக் கொள்வர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிட்டுவதை இந்தியா உறுதி செய்யுமானால், தமிழர் தாயகத்தில் சீனா உட்பட வேறு எந்த சக்தியும் காலூன்றாமல் தமிழர்கள் பார்த்துக் கொள்வர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

  

சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சிச் சேவையின் "நேர்பட பேசு' என்ற விவாத அரங்கத்தில் 'இலங்கைத் தமிழர் பகுதிகளில் சீனத்தூதர்: இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?' என்ற தலைப்பில் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் கொழும்பில் இருந்து கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

சீனா இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் நிலை கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்பதை எங்கள் கட்சி பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. அதன் பேச்சாளராக நானே இதனை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உத்தியோகபூர்வமாக அறிவித்து இருக்கின்றேன்.

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் - நாங்கள், இலங்கைத் தமிழர்கள், எங்கள் அரசியல் உரிமைகளைக் கோருவது இரண்டு அடிப்படைகளில். ஒன்று - மனித உரிமைகள் அடிப்படையில். மற்றையது - ஜனநாயகத்தின் அடிப்படையில்.

சீனா இந்த இரண்டிலும் மிக மிகத் தரம் குறைந்த நாடாக இருக்கின்றது. ஆகவே, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் இருக்குமானால் அது எங்கள் நலனைப் பாதிக்கும். அடுத்த காரணம் - இலங்கை தென் சீனக் கடலில் ஒரு தீவாக இருந்திருக்குமானால் சீனாவினுடைய நியாயமான பாதுகாப்புக் கரிசனைகளை நாம் கவனத்தில் கொண்டிருப்போம்.

ஆனால், யதார்த்தம் அப்படி அல்ல. இலங்கை இந்துமா சமுத்திரத்தில், இந்தியாவில் இருந்து கூப்பிடு தொலைவு தூரத்தில் இருக்கின்றது. ஆகவே, இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை நாம் கவனத்தில் கொள்வோமாக இருந்தால் சீனாவை நாம் வரவேற்க முடியாது.

சீனா இந்தியாவினுடைய நட்பு நாடும் அல்ல. அத்தகைய நாட்டை, இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள இலங்கையில், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் கால் ஊன்ற அனுமதிக்க முடியாது என்பதைத் தெட்டத் தெளிவாக நாம் கூறியிருக்கின்றோம்.

அதற்குப் பிறகுதான் சீனத் தூதுவர் வடக்கே பயணம் மேற்கொண்டிருக்கின்றார். ராமர் சேது பாலம் வரைப் படகில் பயணம் செய்திருக்கின்றார். இந்தியாவைச் சீண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றார்.

அண்மையில் நான் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்குள்ள உயர் அதிகாரிகளோடு பேசி இருக்கின்றேன். அவர்கள் நேரடியாக ஒரு கேள்வி கேட்டார்கள். நாங்கள் உங்களுக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உதவி செய்தால், அது இலங்கையிலிருந்து சீனர்களை வெளியேற்ற எப்படிப் பங்களிக்கும் என்று கேட்டனர். அவர்களுக்குக் கூறிய அதே பதிலைத்தான் கொழும்பிலுள்ள இந்திய இராஜதந்திரிகளுக்கும் கூறியிருக்கின்றேன்.

வழமையாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் பிரச்சினையில் தலையிட்டால், அந்தப் பிரச்சினையைத் தொடர்ந்தும் நீடித்து வைத்திருக்கவே விரும்பும். தீர்த்து வைக்க விரும்பாது. அந்தப் பிரச்சினை நீடித்தால்தான் தொடர்ந்தும் தலையீட்டையும் பேண முடியும், ஈடுபாட்டை வைத்திருக்க முடியும் என்ற எண்ணமே இருக்கும்.

ஆனால், இலங்கைத் தமிழர் விடயத்தில் அது மாறுபட்டது. எங்களுக்கு அதிகாரப் பகிர்வை ஒழுங்காகக் கிடைக்கச் செய்தால் வடக்கு, கிழக்கில் சீனர்கள் காலூன்றுவதை நாங்கள் தடுப்போம்.

காணி அதிகாரம், சட்டம் - ஒழுங்கு என்பவை அதிகாரப் பகிர்வில் இருக்க வேண்டும். இன்றும் அரசமைப்பில் அவை இருக்கின்றன. ஆனால், நடைமுறையில் கிடையாது. ஆகவே, அதற்கு அப்பாலும் சென்று, நமது கைகளில் இருந்து அவற்றைப் பிரிக்க முடியாததாக ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை, ஓர் அரசியல் தீர்வாகக் கிடைக்குமானால் நாங்கள், எங்கள் நிலங்களிலே சீனர்கள் வந்து கால் ஊன்றுவதை நிச்சயமாகத் தடுப்போம்.

ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் இருக்கின்ற வரைக்கும் அந்த அதிகாரங்கள் எல்லாம் இலங்கையின் மத்திய அரசிடம்தான் இருக்கப் போகின்றன. இன்றைக்கு இருப்பதைப் போல.

ஆகவே, காணி அதிகாரம், சட்டம் - ஒழுங்கு அதிகாரம் என்பன இலங்கை மத்திய அரசிடம் இருக்கும் வரை அங்கு சீனர்கள் வந்து கால் ஊன்றுவதை எங்களாலும் தடுக்க முடியாது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் அப்படி ஒன்றும் தீர்க்க முடியாத பெரிய விடயங்களே அல்ல. இந்தியாவில் இருப்பதைப் போன்ற ஓர் அதிகாரப் பகிர்வைக் கூட நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதைப் பெற்றுத்தருவதில் இந்தியா முனைப்பாகச் செயற்படுமானால் அதை எங்களுக்குப் பெற்றுத் தருவதை இந்தியா உறுதிப்படுத்துமானால் நிச்சயமாக சீனா மட்டுமல்ல, எந்தப் பிராந்திய வல்லரசு அல்லது வேறு எந்தச் சக்தியும் இந்தியாவுக்குச் சவாலாக எங்கள் நாட்டில் நிலை கொள்வதை நாங்கள் நிச்சயமாகத் தடுப்போம் என தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவோம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மானிப்பாயில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு! Top News
[Wednesday 2024-05-01 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு இன்று மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் "அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றது.



கிளிநொச்சியில் பழைய நினைவுகளை மீட்டார் எரிக் சொல்ஹெய்ம்!
[Wednesday 2024-05-01 17:00]

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.



கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே தினம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.



காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான முழு நிதியையும் வழங்கும் இந்தியா!
[Wednesday 2024-05-01 17:00]

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.



நுணாவில் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்!
[Wednesday 2024-05-01 17:00]

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரும்பிராயில் சிக்கிய வாள்கள்!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர். வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மொட்டு, யானைக்கு பாஜக அழைப்பு!
[Wednesday 2024-05-01 17:00]

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.



ஐதேக மேடையில் மொட்டு எம்.பி!
[Wednesday 2024-05-01 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் நடைபெற்று வருகிறது.



தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.



இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்!
[Wednesday 2024-05-01 03:00]

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு தடை!
[Wednesday 2024-05-01 03:00]

உயர்நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரை ஏனைய நீதியரசர்களை ஜனாதிபதி நியமிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் நேற்று இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி சரித் மஹீபுத்திர பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.



நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்!
[Wednesday 2024-05-01 03:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.



கோட்டாவை வேட்பாளர் ஆக்குவதை எதிர்த்தேன்!
[Wednesday 2024-05-01 03:00]

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



யாருக்கு வாக்களிக்க தூண்டுகிறேன்! - பேராயர் அறிக்கை.
[Wednesday 2024-05-01 03:00]

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என கர்தினால் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த முதலை!
[Wednesday 2024-05-01 03:00]

வவுனியா - கணேசபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து முதலை மீட்கப்பட்டது. அத்துடன் குறித்த முதலையினை பாதுகாப்பாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கையையும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை!
[Wednesday 2024-05-01 03:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



மைதானத்தில் பேரணி நடத்தும் ஒரே கட்சி பெரமுனதானாம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதனது மே தினக் கூட்டத்தை விளையாட்டு மைதானத்தில் நடத்தும் தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது, மற்றவர்களுக்கு இதேபோன்ற இடங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Wednesday 2024-05-01 03:00]

கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பேரைச் சுட்டுக் கொன்று, 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர் உட்பட 3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா