Untitled Document
May 1, 2024 [GMT]
படைத்தளபதிகள் மீது பயணத் தடைகள் வரலாம்!
[Sunday 2021-03-28 18:00]



ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

  

ஜி.எல்.பி. பிளஸ் போன்ற சலுகைகள் இல்லாமல் போகலாம் என்பதுடன் படைப் பிரதானிகளுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடையும் நீடிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளைத் தற்போதைய அரசு உரிய வகையில் முன்னெடுக்கவில்லை.

இதனால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கும் தான் தாக்கம் ஏற்படப் போகின்றது. எனவேதான் இதனைப் பாரதூரமானதொரு பிரச்சினையாக கருதுகின்றோம். நல்லாட்சி அரசால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றதொரு விம்பத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசு முயற்சிக்கின்றது.

ஆனால், உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையிடுவதற்கான களத்தை மஹிந்த ராஜபக்சவே அமைத்துக் கொடுத்தார். போர் முடிவடைந்த பின்னர் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து கூட்டறிக்கை விடுத்தார்.

அதில் பொறுப்புக்கூறலுக்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது. இந்த பொறுப்புக்கூறல் தொடர்பில்தான் இன்று சர்வதேசம் கேள்வி எழுப்புகின்றது. இலங்கை தொடர்பில் முதலாவது தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது அதில் இலங்கை வெற்றி பெற்றது.

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதால் ஆதரவு கிடைத்தது.

இதன்பிரகாரம்தான் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியன அமைக்கப்பட்டன. ஆனால், உரிய வகையில் நடவடிக்கை இடம்பெறாததால்தான் பாரதூரமான தீர்மானங்கள் நிறைவேறின.

இந்நிலையில் நல்லாட்சி வந்த பிறகு சர்வதேச நெருக்கடி குறைந்தது. மின்சாரக்கதிரை உள்ளிட்ட சர்ச்சைகள் இருக்கவில்லை. வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் பலவீனமடைந்தனர்.

பொருளாதார இழப்புகள் ஏற்படவில்லை. ஆனாலும், எவருடனும் கலந்துரையாடாமல் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை தவறான செயலாகும். எது எப்படி இருந்தாலும் ஒற்றையாட்சி, இறையாண்மை, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் படையினரை நாம் பாதுகாப்போம்.

இதில் பின்நிற்கப் போவதில்லை. ஜெனிவாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்த அரசு முயற்சிக்கவில்லை. அதனை வைத்து உள்நாட்டில் பிரச்சாரம் செய்தது. வெளிநாடுகளுக்கு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.

அவற்றை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேற்குலகத்துக்கு அடிபணியமாட்டோம் என சூளுரைக்கின்றனர்.

ஆனால், அமெரிக்காவின் கருணையால்தான் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானார் என்பதை மறந்துவிட முடியாது. இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெறமுடியாமல் போனமை தொடர்பில் இந்த அரசு பொறுப்புக்கூற வேண்டும்.

அதேவேளை, போருக்குப் பின்னர் மனித உரிமைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக மாற்று கருத்துகளை உடைய அரசியல்வாதிகள் வேட்டையாடப்பட்டனர். தற்போதுகூட எமது பிரஜா உரிமையைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

20ஆவது திருத்தச் சட்டம் மூலம் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றின் சுயாதீனம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இவ்வாறு உள்நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளதையே ஐ.நா. மனித உரிமைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கு ஜனநாயகக் கட்டமைப்பு உரிய வகையில் செயற்பட்டால் விமர்சனங்களை முன்வைக்கவேண்டிய தேவை சர்வதேசத்துக்கு எழாது.

அதேபோல தகுதியற்ற ஒருவரே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஒருவர் இருந்தாலும் அமைச்சின் செயலாளரே அமைச்சை வழிநடத்துகின்றார்.

இந்தியாவுக்கு இன்னும் தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. முன்னர் தகுதியான, அனுபவம் வாய்ந்தவர்களே ஜெனிவா அனுப்பப்படுவர், தற்போது என்ன நடக்கின்றது?

குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பயங்கரமானதொன்றாகும். வருகின்ற செப்டெம்பர் மாதத்தில் இது வேறு வடிவில்கூட வரலாம். சர்வதேச விசாரணைக்கு வழிசமைக்கலாம்.

பொருளாதாரத்துக்கு மரண அடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான சந்தை வாய்ப்பை மூடலாம். ஜி.எல்.பி. பிளஸ் போன்ற சலுகைகள் இல்லாமல் போகலாம். படைப் பிரதானிகளுக்கான பயணத்தடை நீடிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவோம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மானிப்பாயில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு! Top News
[Wednesday 2024-05-01 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு இன்று மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் "அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றது.



கிளிநொச்சியில் பழைய நினைவுகளை மீட்டார் எரிக் சொல்ஹெய்ம்!
[Wednesday 2024-05-01 17:00]

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.



கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே தினம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.



காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான முழு நிதியையும் வழங்கும் இந்தியா!
[Wednesday 2024-05-01 17:00]

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.



நுணாவில் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்!
[Wednesday 2024-05-01 17:00]

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரும்பிராயில் சிக்கிய வாள்கள்!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர். வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மொட்டு, யானைக்கு பாஜக அழைப்பு!
[Wednesday 2024-05-01 17:00]

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.



ஐதேக மேடையில் மொட்டு எம்.பி!
[Wednesday 2024-05-01 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் நடைபெற்று வருகிறது.



தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.



இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்!
[Wednesday 2024-05-01 03:00]

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு தடை!
[Wednesday 2024-05-01 03:00]

உயர்நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரை ஏனைய நீதியரசர்களை ஜனாதிபதி நியமிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் நேற்று இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி சரித் மஹீபுத்திர பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.



நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்!
[Wednesday 2024-05-01 03:00]

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.



கோட்டாவை வேட்பாளர் ஆக்குவதை எதிர்த்தேன்!
[Wednesday 2024-05-01 03:00]

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



யாருக்கு வாக்களிக்க தூண்டுகிறேன்! - பேராயர் அறிக்கை.
[Wednesday 2024-05-01 03:00]

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என கர்தினால் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த முதலை!
[Wednesday 2024-05-01 03:00]

வவுனியா - கணேசபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து முதலை மீட்கப்பட்டது. அத்துடன் குறித்த முதலையினை பாதுகாப்பாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கையையும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை!
[Wednesday 2024-05-01 03:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



மைதானத்தில் பேரணி நடத்தும் ஒரே கட்சி பெரமுனதானாம்!
[Wednesday 2024-05-01 03:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதனது மே தினக் கூட்டத்தை விளையாட்டு மைதானத்தில் நடத்தும் தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது, மற்றவர்களுக்கு இதேபோன்ற இடங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Wednesday 2024-05-01 03:00]

கம்பஹா, வெலிவேரிய, ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பேரைச் சுட்டுக் கொன்று, 45 பேரைக் காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர் உட்பட 3 இராணுவ படையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா