Untitled Document
May 11, 2024 [GMT]
 
ஹற்றன் நேஷனல் வங்கியினால் மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு உபகரணங்கள் கையளிப்பு! Top News
[Tuesday 2023-01-24 18:00]

யாழ் ஹற்றன் நேஷனல் வங்கிக்கிளையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு வருகை தந்திருந்த ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜொனதன் அலஸ் அவர்கள், இன்றைய தினம் காலை மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இருக்கும் மாற்று திறனாளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.


நவ மங்கை நிவாசத்தில் கலை மன்றம் அறநெறி வகுப்புகள் ஆரம்பிப்பு! Top News
[Monday 2023-01-23 18:00]

யாழில் அமைந்துள்ள நவமங்கை நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே இந்து சமய ஒழுக்கங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அறநெறி மற்றும் கலா மன்றம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.


அமெரிக்கா பொங்கல் விழாவில் மாதிரி வாக்கெடுப்பு! Top News
[Saturday 2023-01-21 21:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், சங்கம் குளோபல் USA உம் இணைந்து நாடாத்திய பொங்கல் விழா மாலை 6.00மணிக்கு அகவணக்கம், தமிழ் தாய் வாழ்த்து, மங்கல விளக்கேற்றல் ஆகியவற்றுடன் ஆரம்பமானது. பாடல், நடனம், பேச்சு, கவிதை, தாயகப் பாடல்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. இந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன், சங்கம் குளோபல் USA சார்பாக திரு. ந. இராஜேந்திரா ஆகியோரின் உரைகள் இடம்பெற்றிருந்தன.


பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் தமிழ் மரபுத் திங்கள் - தை பொங்கல் நிகழ்வு! Top News
[Friday 2023-01-20 18:00]

தை மரபுத் திங்கள் மற்றும் தை பொங்கல் விழாவினை கடந்த பல வருடங்களை போன்று மிகவும் சிறப்பான முறையில் 17 ஜனவரி 2023 அன்று பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் (Jubilee Hall) பிரித்தானிய தமிழர் பேரவையினால் நிகழ்த்தப்பட்டது. உலகளாவியரீதியிலும் குறிப்பாக பிரித்தானியாவிற்கும் தமிழ் மக்களின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி சிறிலங்காவில் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ் மக்களை சர்வதேசம் தலையிட்டு பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர்.


யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா! Top News
[Thursday 2023-01-19 06:00]

யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறையினரால் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் நேற்று காலை 9மணியளவில் வரலாற்றுத்துறை பேராசிரியர் க.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வரலாற்றுத்துறையின் நான்கு வருட மாணவர்களுக்கிடையிலும் கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்று இறுதியாக துறைபேராசிரியர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.


எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது! Top News
[Thursday 2023-01-19 06:00]

மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், அக் கழகத்தின் தலைவர் செல்வகுமாரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொங்கல் விழாவை இம்முறை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடியுள்ளது! Top News
[Wednesday 2023-01-18 06:00]

இராசபோசனம் என்ற பெயரில் இப்பொங்கல் விழா திங்கட்கிழமை (16.01.2023) அன்று மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லாரை வளர்பிறை முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலாநிதி பாலசிவகடாட்சத்தின் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் 'பயன் அறிந்து உண்க' என்ற நூலும் வெளியிடப்பட்டது.


தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள், தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி! Top News
[Tuesday 2023-01-17 20:00]

கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும் வெய்யோனின் செங்கதிரேந்தி சிரந்தாழ்த்தித் தமிழரெல்லாம் நன்றி சொல்வர். தை அவளை வரவேற்கத் தமிழர் மனமெங்கும் மகிழ்வு பொங்கும். பழையன கழித்துப் புதியன பூண்டிடுவர். ஆதிமுதற் சோதியன் அரங்குவரும் முன்னாலே, முற்றம் பெருக்கிச் சாணியினால் மெழுகிடுவர். மாக்கோலம் போட்டு நிறைகுடம் வைத்தே மங்கலம் பொங்கிடவே சுடரேற்றிடுவர். மாவிலையும் மஞ்சள் இலையும் புது மண்பானையிலே கட்டி, நீர்நிறைத்து அடுப்பினிலேற்றி பொங்கலிடும் அழகோடு, தமிழர் புத்தாண்டு பொலிவுபெறும்.


யாழில் இடம்பெற்ற கோ பவனி! Top News
[Tuesday 2023-01-17 20:00]

பட்டிப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கோமாதா உற்சவமும் கோ பவனியும் இன்று யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பவனியானது ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து மின்சார சபை வீதி, பெரியகடை, பேருந்து நிலைய மேற்கு வீதியூடாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.


நல்லூர் வாயிலில் பொங்கல் விழா! Top News
[Tuesday 2023-01-17 20:00]

சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் யாழ். நாவற்குழி செம்மணி வாயிலில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலில் நேற்றையதினம் தைப்பொங்கல் நிகழ்வு முதன்முறையாக இடம்பெற்றது.


காசி புனித தீர்த்தம் வட்டுக்கோட்டை - அராலி குளத்தில் கலப்பு! Top News
[Tuesday 2023-01-17 20:00]

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்றையதினம் உலகலாவிய ரீதியாக நடைபெற்றது. பொங்கலுக்கு அடுத்த நாளான இன்றையதினம், உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும் காளைகளுக்கும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டை - அராலி உப்புவயல் குளத்தருகில் பட்டிப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.


நூறாவது வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் செய்து முடித்த நெல்மணி உதவும் கரங்கள்! Top News
[Tuesday 2023-01-17 20:00]

நூறாவது வேலைத்திட்டங்களை ஒரு குறுகிய காலத்தில் செய்து முடித்த யாழ்பெருமாள் நெல்மணி உதவும் கரங்கள் ஊடாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கள் தினத்தை சிறப்பாககொண்டாடுவதற்காக யாழ் நவாலி கேலம் பகுதியில் ஒரு பகுதியாகவும், வவுனியாசிதம்பரநகர்,கற்குலம்,மதுராநகர்,சிவபுரம், கிடாச்சூரி,தவசிபுரம் ஆகியகிராமப்பகுதிகளில் இன்னொரு பகுதியாகவும் மொத்தம் நூறு பொங்கள்பொதிகள் வழங்கபட்டது என்பதை தெரிவிக்கின்றோம்.


நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தின் உணவு பரிமாற்றச் சங்கம் பொங்கல் பொதிகள் வழங்கல்! Top News
[Friday 2023-01-13 21:00]

சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக , உணவு பரிமாற்றச் சங்கங்கள் பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன. உணவு வங்கி அல்லது உணவுப் பரிமாற்றம் என்பதன் குறிக்கோள்களில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறையான குடும்பங்களுக்கு அதாவது குடும்பங்களுக்கும் மற்றும் வருமானம் குடும்பங்களுக்கும் உணவுகளை பகிர்ந்து வழங்குதலுமாகும்.


யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Thursday 2023-01-12 16:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 12.01.2023 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது.


யாழ் பல்கலைக்கழக நூல் வெளியீடு! Top News
[Thursday 2023-01-12 16:00]

யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தமிழியற்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி முல்லை முகுந்தினியின் இடர் சுமந்த மேனியர் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ் பல்கலைக்கழக தமிழியற்துறை தலைவி ஜெயா தலைமையில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.


நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல்! Top News
[Wednesday 2023-01-11 06:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.


விவசாயிகளுக்கான பயன்தரு பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டன! Top News
[Wednesday 2023-01-11 06:00]

வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையில் இன்றையதினம் விவசாயிகளுக்கான பயன்தரு பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டன. வலி. மேற்கு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது எண்ணப்பாட்டிற்கு அமைவாக இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது விவசாயத்தில் திகழும் 10 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


ஆறாவது நாளை எட்டிய கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Wednesday 2023-01-11 06:00]

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவாம் இறுதி நாளாகவும் யாழ்ப்பாணம் - நாவற்குழியில் இடம்பெற்றது.


ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவப் பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Wednesday 2023-01-11 06:00]

நேற்று முந்தையை தினம் (09) சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு 752000.00 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டன.


தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி போராட்டம்! Top News
[Tuesday 2023-01-10 06:00]

நேற்று ஐந்தாவது நாளாக யாழ்ப்பாணம் நாவற்குழியில் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இன்றையதினம் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்தனர்.


காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது! Top News
[Tuesday 2023-01-10 06:00]

நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் 1981 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வங்கியின் காங்கேசன் துறை காரியாலயம் நவீனதொழில்நுட்ப வசதிகளுடன் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.


யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியினால் வீடு திறந்து வைப்பு! Top News
[Saturday 2023-01-07 08:00]

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதின் கீழ் பெண்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம், சுழிபுரம் - காட்டுப்புலத்தை சேர்ந்த மாணவி கிருசிகாவிற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தியாகி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் இராணுவத்தினரின் சரீர பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த வீட்டிற்கு கடந்த வருடம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.


கனடா மாணவியால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு! Top News
[Friday 2023-01-06 06:00]

கனடாவில் உயர்கல்வி பயிலும் யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த தயாபரன் சுவேதிகா என்ற மாணவியின் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டு பிரிவின் ஒழுங்கமைப்பில் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஈழத்து சிதம்பரம் இரதோற்சவம்! Top News
[Friday 2023-01-06 06:00]

வரலாற்று சிறப்புமிக்க ஈழத்து சிதம்பரத்தின் காரைநகர் தின்னபுர சிவன் ஆலயத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்சரத தேர் இரதோற்சவம் நேற்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றுயிருக்கும் தின்னபுர சிவனுக்கும், சிவாபாதசுந்தரிக்கும் விஷேட அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வர் ஆகிய தெய்வங்கள் உள்வீதியுடாக வலம் வந்து பஞ்சரததேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நாவற்குழியில் மாபெரும் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது! Top News
[Thursday 2023-01-05 18:00]

05.01.2023 வடக்கு கிழக்கு ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க . தமிழ் அரசியல் கட்சிகளின் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை பிரதிநிதிகளுக்கும் இலங்கை சனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம்.


தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் புதிய பேராயர் பதவியேற்பு! Top News
[Wednesday 2023-01-04 07:00]

தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தின் 5வது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் அவர்கள் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்றைய தினம் யாழ். வட்டுக்கோட்டை - தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது.


ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் 07 ஆம் நாளுக்கான விஷேட அபிஷேக ஆராதனை! Top News
[Wednesday 2023-01-04 07:00]

வரலாற்று சிறப்புமிக்க யாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் 07 ஆம் நாளுக்கான விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன. கடந்த 28.12.2022 அன்று திருவெம்பாவை நிகழ்வு ஆரம்பமாகிய நிலையில் 07ஆம் நாள் உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.


யாழ்- வரணி கரம்பைக்குறிச்சு பாடசாலைக்கு முன்பாக போராட்டம்! Top News
[Wednesday 2023-01-04 07:00]

யாழ்- வரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது, பேற்றோர்களினனால் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.


2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 2 Jan 2023 யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது! Top News
[Wednesday 2023-01-04 07:00]

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றது.


கொழும்பு மாநகர சபை வழங்கிய வாகனங்கள் மானிப்பாய் மாநகர சபைக்கு கொண்டுவரப்பட்டது! Top News
[Sunday 2023-01-01 08:00]

தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த வருட இறுதியில் கொழும்பு மாநகரசபைக்கான நட்புறவு பயணத்தினை மேற்கொண்டனர்.

Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா