|
|
தற்போது பொதுத்தேர்தல் இடம்பெற்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது!
[Friday 2024-03-29 16:00]
|
நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதுடன் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும். அதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே பொருத்தமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
|
|
|
நாடுகடந்த தமிழீழ அரச தேர்தல்! எழுந்த பிணக்குக்கு என்னால் தீர்வு காண முடியவில்லை: ரஞ்சன் மனோரஞ்சன்.
[Thursday 2024-05-09 21:00]
|
இத் தேர்தல் நடைமுறையின்போது கனடா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் சிலரது தேர்தல் வேட்புமனுக்கள் இந் நாடுகளின் தேர்தல் ஆணையகங்களால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் எனக்குக் கிடைக்கப் பெற்றிருந்தன. இவற்றுள் கூடுதலான வேட்புமனுக்கள் நிராகரிக்பட்டிருந்த கனடா நாட்டில் இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்று என்னால் நியமிக்கப்பட்டது.
|
|
|
இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நினைவு வணக்கத்தைச் செலுத்துகிறோம் கனேடியத் தமிழர் கூட்டு
[Thursday 2024-05-09 20:00]
|
1. இலங்கை அரசின் இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நினைவு வணக்கத்தைச் செலுத்துவதோடு, கனேடியத் தமிழர் கூட்டாக எமது மக்கள் மீதி மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுடனும், உயிர் பிழைத்தவர்களுடனும் ஒரு கூட்டாகவும், ஒற்றுமையாகவும் மிகவும் உறுதியாகவும் நாம் நிற்கிறோம்.
|
|
|
செப்ரெம்பர் 17இற்கும் ஒக்டோபர் 16இற்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல்! - அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
[Thursday 2024-05-09 16:00]
|
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
|
|
|
சட்டி பானைகளுடன் போராட்டத்தில் குதிப்போம்!
[Thursday 2024-05-09 16:00]
|
முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களிடம் மேலோங்கியுள்ளது. இதற்கு எதிராக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சட்டி பானையுடன் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தொரிவித்தார்.
|
|
|
டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறத் தடை!
[Thursday 2024-05-09 16:00]
|
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
|
|
|
சஜித்தின் கேள்விகளை உதாசீனம் செய்து வெளியேறிய ஜனாதிபதி!
[Thursday 2024-05-09 16:00]
|
ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தலை கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பி கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுந்து சென்றதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
|
|
|
கூலிப்படையினரை ரஷ்யாவுக்கு அனுப்பிய மேஜர் ஜெனரல் கைது!
[Thursday 2024-05-09 16:00]
|
முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
|
|
நல்லிணக்க ஆணைக்குழுவை எதிர்க்கிறோம்!
[Thursday 2024-05-09 16:00]
|
நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று புதிதாக உருவாக்குவதை முற்று முழுதாக நாம் எதிர்க்கிறோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
|
|
|
சுதந்திரக் கட்சி தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை நீடிப்பு!
[Thursday 2024-05-09 16:00]
|
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
|
|
|
தேர்தலுக்கான செயற்பாட்டு மையத்தை திறந்தது மொட்டு!
[Thursday 2024-05-09 16:00]
|
எதிர்வரும் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் பத்தரமுல்லையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
|
|
|
இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்கள் கட்சியை பதிவு செய்ய தடை இல்லை!
[Thursday 2024-05-09 16:00]
|
இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
|
|
|
நாடாளுமன்றத்தில் வெற்றிடம் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு.
[Thursday 2024-05-09 16:00]
|
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே மாதம் 08ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டமையால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
|
|
|
முல்லைத்தீவை சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள்!
[Thursday 2024-05-09 05:00]
|
தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார்.
வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் புதன்கிழமை இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
ஐ.பி.எல் போட்டியில் அறிமுகமானார் யாழ்ப்பாண சுழற்பந்துவீச்சாளர் வியாஸ்காந்த்!
[Thursday 2024-05-09 05:00]
|
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ.பி.எல் போட்டியில் நேற்று முதல் முறையாக விளையாடினார்.
|
|
|
நோர்வேயில் காருக்குள் எரிந்த நிலையில் புலம்பெயர் தமிழரின் சடலம்!
[Thursday 2024-05-09 05:00]
|
நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
வவுனியாவில் பறிபோகும் தமிழர் நிலம்- திரைமறைவில் காய் நகர்த்தும் இராஜாங்க அமைச்சர்!
[Thursday 2024-05-09 05:00]
|
வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் துணையுடன் தமிழ் கிராமங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிகழ்வு தற்போது திரைமறைவில் அரங்கேறி வருகிறது.
|
|
|
உள்ளூராட்சி மட்டத்தில் குழுக்களை உருவாக்க அரசாங்கம் முயற்சி! - சஜித் குற்றச்சாட்டு.
[Thursday 2024-05-09 05:00]
|
தேர்தலை இலக்கு வைத்து, தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு 10 மில்லியன் ரூபா வீதம், 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 3410 மில்லியனை ஒதுக்கீடு செய்து தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
|
|
|
டயானாவின் தலைவலி தீர்ந்தது!
[Thursday 2024-05-09 05:00]
|
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எமது வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.டயனா கமகே கைச்சாத்திடவில்லை.எமது வேட்பு மனு சட்டப்பூர்வமானது என்பதை உயர் நீதிமன்றமும்,தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது.ஆகவே எமது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
|
|
|
சட்டவிரோதமாக செல்வோருக்கு இராஜதந்திர ஆதரவு கிடைக்காது!
[Thursday 2024-05-09 05:00]
|
திறந்த விசா, சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதை இளைஞர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் சென்று நெருக்கடிக்குள்ளானால் இராஜதந்திர மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
|
|
|
மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர்!
[Thursday 2024-05-09 05:00]
|
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
|
|
|
மீண்டும் காட்டுச் சட்டத்தை அமுல்படுத்த தயாராகிறது ஜேவிபி!
[Thursday 2024-05-09 05:00]
|
தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி.யின் கூற்று கிராமங்களில் மீண்டும் காட்டுச்சட்டத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். .
|
|
|
10 ஆண்டுகளில் 840 மில்லியன் டொலர்களைச் சுருட்டப் போகும் வி.எப்.எஸ் நிறுவனம்!
[Thursday 2024-05-09 05:00]
|
மத்திய வங்கி பிணைமுறி மோசடியைக் காட்டிலும் 25 மடங்கான மோசடி புதிய விசா முறைமை ஊடாக இடம்பெறும்.வி.எப்.எஸ் வெளிநாட்டு நிறுவனம் 10 ஆண்டுகால சேவையில் மாத்திரம் 841 மில்லியன் டொலர் இலாபமடையும்.
|
|
|
டயானாவின் எம்.பி பதவியைப் பறித்தது உயர்நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 19:00]
|
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
நாகதம்பிரான் வழிபாட்டை தடுத்து சப்த நாக விகாரையாக மாற்றம்!
[Wednesday 2024-05-08 19:00]
|
குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
|
|
|
மகாவலி அபிவிருத்தியின் பெயரால் நில ஆக்கிரமிப்பு! - மணலாறு மக்கள் போராட்டம்.
[Wednesday 2024-05-08 19:00]
|
மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
ஜூனுக்குள் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு!
[Wednesday 2024-05-08 19:00]
|
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அரச தலைவர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
|
|
|
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூகுள், யூடியூப் மீது வழக்குகளை தாக்கல் செய்தார் இராணுவத் தளபதி!
[Wednesday 2024-05-08 19:00]
|
தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
|
|
|
மன்னாரில் காற்றாலை மின்திட்டத்துக்கு அனுமதி - பிரஜைகள் குழு எதிர்ப்பு.
[Wednesday 2024-05-08 19:00]
|
மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
|
|
|
|