Untitled Document
May 21, 2024 [GMT]
தைப்பொங்கலை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 55 பேர் விடுதலை:
[Friday 2016-01-15 13:00]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுதது வைக்கப்பட்டிருந்து 55 இந்திய மீனவரகள் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு நல்லிணக்க அடிப்படையில் குறித்த மீனவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
[Friday 2016-01-15 12:00]

தமிழர்களுக்கு என்று ஒரு சிறப்பு பண்பாடு உண்டு மற்றவர்களுக்கு நன்றி பாராட்டுவது. அதே போன்று பொங்கலிட்டுப் எம்மை வாழவைக்கும் சூரியனுக்கு படைத்து மகிழ்வது தமிழர் வரலாற்றுவளி பண்பாடு. வாசலில் தோறணம் கட்டி,மாக்கோலம் போட்டு, மண் அடுப்பில், பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வணங்கி படைத்து, ஊர் உறவோடு வயலும் வாழ்வும் செழிக்க ,சுற்றமும் சொந்தமும் கூடி பேதங்கள் மறந்து,தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில்,வெடிகொளுத்திகொண்டாடும் இப்பொங்கல்நாளில். எல்லோருடைய வாழ்வும் வளமும் செழிக்க அன்புடனும் பாசத்துடனும் வாழ அனைவரையும் அன்போடு வாழ்த்துகின்றோம்.


இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு:
[Friday 2016-01-15 12:00]

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இணை அமைச்சர், ஹியூகோ ஸ்வைருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் அமைப்பு மீள் உருவாக்கம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பம்!
[Friday 2016-01-15 12:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு , முகமாலை மற்றும் திருகோணமலையில் சிறிய பகுதியொன்றில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கூறினார். சர்வதேச கண்ணி வெடி அகற்றும் குழு மற்றும் இராணுவத்தின் விசேட குழுவொன்றும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணி வெடிகளை அகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்டிகை: - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தைப்பொங்கல் வாழ்த்து
[Friday 2016-01-15 12:00]

மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பிளிக்கும் பண்டிகையே தைப்பொங்கல் என்று தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமான உணர்வு சகல இனத்தவர்களின் உள்ளங்களிலும் பொங்கிப் பிரவாகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


மீண்டும் பாணின் விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானம்:
[Friday 2016-01-15 12:00]

ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. தேச நிர்மாண வரி 2 வீதத்திலிருந்து 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டமையினால் அனைத்து பேக்கரி உற்பத்திகளின் செலவும் அதிகரித்திருந்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார் இதனடிப்படையில் பாண் இறாத்தலொன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. அரசாங்கத்தினால் மீண்டும் தேச நிர்மாண வரி குறைக்கப்பட்டமையினால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக ஜயவர்த்தன கூறினார்.


தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் விடுதலை பெற போராடுவோம்: - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி !
[Friday 2016-01-15 12:00]

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, தமிழீழ மக்களின் பெருவிருப்பான சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தப்படும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் முகமாக உலகலாவிய தமிழர் மரபுரிமைத் திங்கள் பெருவிழாவினைக் கொண்டாடுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :


இலங்கைக்கு பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நிமியக்க உள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு!
[Friday 2016-01-15 12:00]

பிரித்தானியா இலங்கைக்கு பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நிமியக்க உள்ளதாக, தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் விசேட ஆலோசகர் ஒருவரை பிரித்தானிய அரசாங்கம் நியமிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் பிரித்தானிய வர்த்தகர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை மையப்படுத்திய கூட்டுச் செயற்பாடு: - புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டறிக்கை ! Top News
[Friday 2016-01-15 12:00]

நாற்பது ஆண்டுகளை எட்டியிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலுவூட்டியும், அத்தீர்மானத்தினை அரசியல் ரீதியாக முழுவீச்சுடன் அடுத்த கட்டத்துக்கு இவ்வாண்டு எடுத்துச் செல்வதற்கும் கூட்டாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புகள் விடுத்துள்ள இக்கூட்டறிக்கையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை ஒரு முகமாக வெளிப்படுத்தும் வகையில் ஒற்றை இலச்சினையினைப் பயன்படுத்துவதெனத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.


தமிழ்மக்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்: - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
[Friday 2016-01-15 12:00]

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பாகிய நாம் தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழர்களின் தேசிய திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். இத் தைத்திருநாளில் எமது மக்களுக்கு விடுதலையையும், நீதியையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் மனதில் நினைத்துக்கொண்டு எமது பணியை தொடருவோம். அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எமது மக்கள் மீளவும் தமது சொந்த நிலங்களுக்கு சென்று அடுத்த ஆண்டு தைப்பொங்கலாவது சொந்த நிலத்தில் நடைபெறச் செய்யவேண்டும் என்பதை நினைத்து தமிழ்மக்களின் தலைவர்கள் போராட வேண்டும்.


பிரகீத் எக்நெலிகொட கடத்தல் தொடர்பில் இராணுவத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வாபஸ்!
[Friday 2016-01-15 12:00]

பிரபல பெரும்பாண்மையின ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் சார்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவ உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் சட்டத்தரணிகளின் ஊடாக, ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்களே வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் நீதிமன்றில், முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி ரணில் சமரசூரிய நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தார்.


ஆனையிறவில் கடுகதி ரயிலில் மோதுண்டு இராணுவ வீரர் மரணம்! - பொலிசார் விசாரணை
[Friday 2016-01-15 11:00]

ஆனையிறவு பகுதியில் இன்று காலை ரயில் மோதி இராணுவ பொலிஸ் படைப்பிரிவு வீரர் உயிரிழந்துள்ளார். இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதிப் புகையிரதத்தில் மோதுண்டே குறித்த இராணுவ வீரர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவத்தில் புத்தளம், ஆனமடுவ பகுதியை சோ்ந்த 42வயதான மா.நந்தசூரிய என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ வீரரின் சடலத்தை இராணுவ பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். உயிரிழந்த நபர் ஆனையிறவு இராணுவ பொலிஸ் படைமுகமாமை சோ்ந்தவர் எனவும் இவர் தற்கொலைக்காக ரயிலின்முன் பாய்ந்தாரா அல்லது வீதியை கட்க்கமுற்படுகையிர் மோதுண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் ! - கால்கட்டுப் போடும் மாகாணசபை உறுப்பினர்கள்
[Thursday 2016-01-14 20:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் இவ்வாறு வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர்.


சொந்த இடங்களில் உறவுகளோடு தைப்பொங்கலை கொண்டாடும் நிலை உருவாக வேண்டும்! - சம்பந்தன்
[Thursday 2016-01-14 20:00]

தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-


ஜனாதிபதி மைத்திரியின் பொங்கல் வாழ்த்து! Top News
[Thursday 2016-01-14 20:00]

தமிழர் தைத்திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளர். அவரது வாழ்த்துச் செய்தியில், இன்றைய தினம் பொங்கிப் பிரவாகிக்கும் பாற்குடத்தைப் போன்று மற்றவர் மீதான மானிட அன்பும் எம்மக்களின் உள்ளங்களில் பொங்கிப் பிரவாகிக்கவும். ஏற்றப்படும் ஒளி விளக்குகள் இருளை நீக்கி உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கவும் எனது பிரார்த்தனைகளை தெரிவிப்பதோடு அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


ஜெனிவா தீர்மானத்தை ஜூனுக்கு முன் நடைமுறைப்படுத்தக் கோருகிறது பிரித்தானியா!
[Thursday 2016-01-14 20:00]

ஐ.நா மனித உரிமைப் பேரைவயினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னதாக அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உள்ளிட்ட நாடுகள் இணை அணுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானம், மனித உரிமைப் பேரவையின் ஜூன் மாத அமர்வுகளுக்கு முன்னதாக அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய எதிர்பார்ப்பதாக அந்நாட்டுக்கான வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.


லிபியா, உகண்டாவிலுள்ள தூதரகங்களை மூடுகிறது இலங்கை!
[Thursday 2016-01-14 20:00]

உள்நாட்டுப் போரால், தூதரக சேவை அதிகாரிகள் லிபியா மற்றும் உகண்டா நாடுகளில் பணிபுரிய விரும்புவதில்லை என்பதால், இந்நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


மன்னார் ஆயர் ஒய்வு - அப்போஸ்தலிக்க பரிபாலகராக கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை நியமனம்! Top News
[Thursday 2016-01-14 19:00]

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பதவி துறப்பை திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை மறைமாவட்ட இளைப்பாறிய ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.


கோத்தபாயவிடம் இன்றும் விசாரணை!
[Thursday 2016-01-14 19:00]

பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இன்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இன்று காலை 9.00 மணியளவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சாட்சி வழங்குவதற்காக கடற்படை அதிகாரிகள் நால்வரும் ஆணைக்குழுவில் ஆஜராகினர்.


கிரிதலே இராணுவ முகாமிற்கு சீல் வைக்கப்படவில்லை! - என்கிறார் இராணுவப் பேச்சாளர்
[Thursday 2016-01-14 19:00]

கிரிதலே இராணுவ முகாமிற்கு சீல் வைக்கப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். கிரிதலே இராணுவ முகாமிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தவறான பிரச்சாரம் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகவும், அந்த இராணுவ முகாமிலுள்ள சில அலுமாரிகளுக்கு மாத்திரமே சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


களை கட்டிய தைப்பொங்கல் வியாபாரம்! Top News
[Thursday 2016-01-14 19:00]

தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. சூரிய பகவானுக்கு நன்றிக் கடன் தெரிவிக்கும் முகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கலாகும். வீட்டில் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி பொங்குவார்கள். பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.


வலி.வடக்கில் இரண்டாம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்!
[Thursday 2016-01-14 19:00]

யாழ்.வலிகாமம் பகுதியில் இரண்டாம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு உட்பட்டிருக்கும் மகக்ளின் காணிகளை மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்க மீள்குடியேற்ற அமைச்சு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


இந்தோனேசிய தாக்குதலில் இலங்கையருக்குப் பாதிப்பில்லை!
[Thursday 2016-01-14 19:00]

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.


மட்டக்களப்பில் தீர்த்தக்குளத்தில் நீராடியவர் முதலை கடித்து மரணம்! Top News
[Thursday 2016-01-14 19:00]

மட்டக்களப்பு- களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவுள்ள தீர்த்தக் குளத்தில் நீராடிய ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலுக்கு இன்று வந்த மண்டூர் தம்பலவத்தையைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான கிருஷ்ணபிள்ளை மாதவன் (வயது 31) என்பவர் குளத்தில் நீராடியபோது இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கனடா - ரொறன்ரோ நகர சபைத்தலைவர் John Tory தைப் பொங்கல் வாழ்த்து: Top News
[Thursday 2016-01-14 16:00]

ரொறன்ரோ நகரசபைத்தலைவர் John Tory அவா்கள் கனேடியத் தமிழர்களுக்கு தனது தைப் பொங்கல் நல்வாழ்துக்களை தெரிவித்துள்ளார். 13-01-16 நேற்றையதினம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தொடர்பான சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே அவா் தனது வாழ்த்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி நிகழ்வில் பல தமிழ் பிரமுகர்களும் ஊடகவியலாளா்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


போர்க்குற்ற விபரங்களை அறிந்த ஜெனரலுக்கு இராஜதந்திரப் பதவி! - இராணுவத் தரப்புக்குள் பதற்றம்
[Thursday 2016-01-14 07:00]

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகளைப் பெற்றிருந்தனர்.


திருவள்ளுவராண்டு 2047 இல் நம்பிக்கையோடு எடுத்து வைப்போம்: - நக்கீரன்
[Thursday 2016-01-14 07:00]

திருவள்ளுவராண்டு 2047 இல் நம்பிக்கையோடு எடுத்து வைப்போம்.

நக்கீரன்

தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள், கிழமை, மாத சஞ்சிகைள் தீபாவளி மலர் வெளியிடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தன. பொங்கல் மலர் வெளியிடுவதில்லை. ஆனால் திராவிட தேசியத்தின் வளர்ச்சி காரணமாக இன்று பொங்கல் விழா தமிழர்களின் தனிப் பெரும் விழாவாக பரிணமித்துள்ளது.


கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன? - கேள்வி எழுப்புகிறார் வாசு
[Thursday 2016-01-14 07:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கலின் வரையறை என்னவென்பதை வெளியிட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்த காலத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாகவும் ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையர்களாக வாழத் தயாரென்றும் கூறிவருகிறார்.

Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா