|
|
சரத் பொன்சேகாவுக்கு எம்.பி பதவி - மௌனம் காக்கும் ஐதேக!
[Sunday 2016-01-31 08:00]
|
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் வழங்குவது குறித்து அரசாங்கத் தரப்பு எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு மிகவும் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.காலமானதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இதுவரையில் எந்தவொரு உறுப்பினரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
கூட்டு எதிரணியின் புதிய கட்சிக்கு ராஜபக்சவினர் தலைமை தாங்கமாட்டார்கள்!
[Sunday 2016-01-31 08:00]
|
உள்ளூராட்சித் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சியினர் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்குவது உறுதி என்று அதன் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இப்புதிய அரசியல் கட்சிக்கு ராஜபக்ஷவினர் எவரும் தலைமை தாங்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் ஆசீர்வாதத்துடனேயே ஒவ்வொரு நகர்வும் முன்னெடுக்கப்படும் என்றும் அறியக் கிடைத்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாக கட்சியைப் பதிவு செய்து கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்றுள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளது.
|
|
|
யோஷித ராஜபக்ஸ கைது - 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Saturday 2016-01-30 20:00]
|
அரசாங்க சொத்துக்களை மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஸ கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
|
|
|
யோஷித கைதாகப் போவது குறித்து நாமலுக்கு துப்புக்கொடுத்த அமைச்சர்கள்!
[Saturday 2016-01-30 20:00]
|
தனது குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் ஒருவரைக் கைது செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சில அமைச்சர்கள் முன்கூட்டியே தனக்குத் தகவல் வழங்கியிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடுவெல நீதிமன்றத்துக்கு வந்திருந்த நாமல் ராஜபக்ச, கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்தார். தனக்கும், தனது சகோதரனுக்கும் இதுபோன்ற நிலைமைக்கு முகம் கொடுக்க தயாராக இருக்குமாறு தனது தந்தை ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|
|
|
கனடாவிலும் பிரித்தானியாவிலும் உலகளாவிய தமிழர் மரபு பெருவிழா: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
[Saturday 2016-01-30 20:00]
|
உலகளாவிய தமிழர் மரபுத் திங்கள் பெருவிழாவின் நிகழ்வரங்குகளின் வரிசையில் பிரித்தானியாவில் தைத்திருநாள் நிகழ்வினை முன்னெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடாவில் நாட்டார் இசைமாலையுடன் கூடிய கருத்தரங்கொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 16.01.2016 அன்று குறைடன் பகுதியில் பொதுப் பொங்கலிடல், அரங்காற்றுகை என தைத்திருநாளினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வைத்தியக் கலாநிதி கந்தப்பு ஜெயந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஈழத்து கவிஞர் க.சிவசுப்பிரமணியன், Mr.Gavin Bawel (central croydon Member of parliament ), Clr.Mike Selvanayagam (Croydon broad green councillor ), Mr.k.balakirushnan (economic consultant Tamil Eelam ), Mr.Anbananthan Sooban (solicitor ) ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
|
|
|
கைதுகளால் ராஜபக்சவினரின் பயணத்தை தடுக்க முடியாது!
- என்கிறார் மகிந்த
[Saturday 2016-01-30 20:00]
|
எனது குடும்பத்தில் உள்ளவர்களைக் கைது செய்வதனால் ராஜபக்ஷவினரின் பயணத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது மகன் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக லண்டனில் பேச்சு!
- கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்பு
[Saturday 2016-01-30 20:00]
|
அரசியல் யாப்பு மறுசீரப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
|
|
|
ஜெனிவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்தும்!
- பான் கீ மூன் நம்பிக்கை
[Saturday 2016-01-30 20:00]
|
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிக் கொள்ளப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், இலங்கையில் இது தொடர்பான நீதிப்பொறிமுறை உட்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதை செயலாளர் பான் கீ மூன் அறிந்துள்ளார்.
|
|
|
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வனவள அதிகாரியால் சிரிப்பொலி!
[Saturday 2016-01-30 19:00]
|
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வனவளப் பிரிவு தொடர்பான விவாதத்தின் போது ஒருங்கிணைப்பு குழு இணை தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரியால் சிரிப்பொலி எழுந்தது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலைமையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கயன் இராமநாதன் ஆகியோரின் இணை தலமையில் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
|
|
|
சம்பூர் சிறுவன் மரணத்துடன் கடற்படைக்குத் தொடர்பில்லையாம்!
- கப்டன் அக்ரம் அலவி தெரிவிப்பு
[Saturday 2016-01-30 19:00]
|
திருகோணமலை- சம்பூரில் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கும் கடற்படையினருக்கும் தொடர்பு இல்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை கிணறு ஒன்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட குகதாஸ் தர்சன் என்ற 6 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கடற்படையினர் மீது அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
|
|
|
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு இல்லையாம்!
- ஜனாதிபதி கூறுகிறார்
[Saturday 2016-01-30 19:00]
|
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.
|
|
|
நட்டாங்கண்டலில் கத்திக் குத்துக்கு ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
[Saturday 2016-01-30 19:00]
|
மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 50 வீட்டுத்திட்டம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்திரபாலன் சந்திரகுமார் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
ஆயுதக் கும்பல்களுக்கு அடிபணிய மாட்டேன்!
- ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விஜயகலா
[Saturday 2016-01-30 19:00]
|
கடந்த காலத்தில் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட சில பிரதேச செயலர்கள், ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்துக்கு அராஜகமான முறையாக அழைப்பு விடுக்கின்றனர். நான் எந்த ஒரு ஆயுதக் கும்பல்களுக்கும் அடிபணிய மாட்டேன். இந்த இடத்திலேயே உயிரை விட தயாராகத் தான் வந்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
|
|
|
பழைய கடதாசியில் கண்கவர் உருவங்கள்!
யாழ். வர்த்தக கண்காட்சியில் அசத்தும் படைப்புகள்
[Saturday 2016-01-30 19:00]
|
பழைய கடதாசிகளைக் கொண்டு கைவினைப் பொருட்களை தயாரித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் நவாலி நட்சத்திரப் பெண்கள் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் வர்த்தகக் கண்காட்சி யாழ்.மாநகர சபை மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இந்தக் கண்காட்சிக்குச் சென்ற போது, நவாலி நட்சத்திரப் பெண்கள் குழுவின் காட்சியறையொன்று இருந்தது.
|
|
|
வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் நெருக்கடி!
[Saturday 2016-01-30 07:00]
|
உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
|
|
|
ரவிராஜ் கொலை வழக்கில் கருணாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சி?
[Saturday 2016-01-30 07:00]
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரச தரப்பு சாட்சி பொய்யான சாட்சியம் அளித்துள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அரச தரப்பு சாட்சியாக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிதிவிராஜ் என்பவர், பொய்யான சாட்சியமளித்துள்ளார் என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள், நேற்று கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் தெரிவித்தனர்.
|
|
|
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு!
- எச்சரிக்கிறார் கம்மன்பில
[Saturday 2016-01-30 07:00]
|
தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் அரச கரும மொழி தமிழாக இருந்த போதிலும் அங்குள்ள மக்கள் வங்காள மொழி தேசிய கீதத்தையே பாடுகின்றனர். அதேபோன்று இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க முடியாது.
|
|
|
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவில்லை என்கிறார் ரணில்!
[Saturday 2016-01-30 07:00]
|
நான் எந்தவொரு ஊடகவியலாளரையும் அச்சுறுத்தவில்லை. பெயரை மாத்திரமே கூறினேன். ஊடகங்கள் எம்.பி.க்களின் பெயர்களை சுட்டிக்காட்ட முடியுமென்றால் ஏன் எமக்கு ஊடகவியலாளர்களின் பெயரை சுட்டிக்காட்ட முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
|
|
|
ஞானசார தேரரை சந்திக்க கட்டுப்பாடு!
[Saturday 2016-01-30 07:00]
|
வெலிக்கடை சிறைச்சாலையில்விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விருந்தினர்கள் சந்திப்பது வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் ஞானசார தேரர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதி பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டும் ஞானசார தேரரை சந்திக்க அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
|
|
|
சட்டமா அதிபர் நியமன விவகாரம் - நாடாளுமன்றில் வெடித்த சர்ச்சை!
[Saturday 2016-01-30 07:00]
|
சட்டமா அதிபர் வெற்றிடத்துக்கு மூப்புரிமை அடிப்படையில் தற்போதைய பதில் சட்டமா அதிபரை நியமிக்காமல் வேறொருவரை வெளியிலிருந்து நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே தினேஷ் குணவர்த்தன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
|
|
|
ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வேண்டி தலதா மாளிகை முன் சத்தியாக்கிரகம்!
[Saturday 2016-01-30 07:00]
|
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கும் படையினருக்கும் பாதுகாப்பு வேண்டி இன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடத்த இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. நாளாந்தம் மத ஸ்தலங்களுக்கு சென்று நாட்டின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை நடத்துமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது. பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
|
|
|
பேரவையின் தீர்வுத் திட்ட வெளியீட்டு நிகழ்வு கைலாசபதி அரங்கில் இருந்து மாற்றம்!
[Saturday 2016-01-30 07:00]
|
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு வெளியீட்டு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டபடி நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசியல் தீர்வு திட்ட வரைபு வெளியீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
மேலும் இரு பிக்குகளுக்கு பிடியாணை!
[Saturday 2016-01-30 07:00]
|
ஹோமகம நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் இரண்டு பிக்குகளுக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹோமகம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினுள் அத்துமீறி நுழைந்து நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை மேற்கொண்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு விளக்கமறியல் தண்டனை விதிக்கப்பட்ட தினத்தில் அதற்கு எதிராக பெருந்தொகையான பிக்குகளும், பொதுமக்களும் ஹோமகம நீதிமன்ற வளாகத்தின் அருகில் கலகம் விளைவித்திருந்தனர்.
|
|
|
கேரதீவு விபத்தில் டிராக்டர் சாரதி பலி!
[Saturday 2016-01-30 07:00]
|
பூநகரி- சங்குப்பிட்டிக்கு அருகாமையில் உள்ள கேரதீவில் தனியார் பேருந்தும், டிராக்டரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிராக்டரின் சாரதியான சிதம்பரப்பிள்ளை கந்தசாமி (வயது 49) என்பவரே உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
|
|
|
மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தயாராகும் அரசியல் கைதிகள்!
[Friday 2016-01-29 19:00]
|
சுதந்திர தினத்திற்குள் தம்மை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பிரதமர் அபாண்டமான பொய்யைக் கூறியுள்ளார். அதாவது தமிழ் அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை என்று கூறியுள்ளார்.
|
|
|
ஞானசார தேரரின் காவி உடையை களைந்து பிக்கு அந்தஸ்து நீக்க வேண்டும்!
- தம்பர அமில தேரர்
[Friday 2016-01-29 19:00]
|
காவியுடை அணிந்து சட்டம், நீதித்துறைக்கு சவால் விடுப்பதுடன், அரசாங்கம் மற்றும் பிரதமரை சங்கடத்துக்குள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஞானசார தேரரின் காவியுடை களையப்பட்டு, பிக்கு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான வண.தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
|
|
|
சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக வவுனியா இளைஞன் ஸ்ரீ.கேசவன்!
[Friday 2016-01-29 19:00]
|
சார்ஜாவின் 7வது சாரணர் ஒன்றுகூடல் எதிர்வரும் மாசி மாதம் 01ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக சாரணர் சங்கத்தின் புலைமைப்பரிசில் பெற்று வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீகரன் கேசவன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக பங்குபெறும் சாரணன் ஸ்ரீகரன் கேசவன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவனும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் என்பதுடன் 2013ம் ஆண்டு சிரேஷ்ட மாணவத் தலைவனாக செயலாற்றியதுடன் 2012ம் ஆண்டு இலங்கையின் சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளதுடன் தொடர்ந்து சாரணர் வளர்ச்சியில் அரும்பாடுபடும் ஓர் இளைஞன் என்பதுடன் வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளராகவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் சமூக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
கறுப்பு ஜூலைக்காக வெட்கப்பட்டாரா ரணில்?
- பொதுபல சேனா கேள்வி
[Friday 2016-01-29 19:00]
|
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்ட போதும், ரோஹண விஜயவீர படுகொலை செய்யப்பட்ட போதும் ரணில் விக்கிரமசிங்க பௌத்தன் என்ற வகையில் வெட்கப்பட்டாரா என்று பொதுபல சேனா கேள்வி எழுப்பியுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
|
|
|
|