Untitled Document
May 20, 2024 [GMT]
உதவி காவல் ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை! - குவிந்து வரும் பாராட்டுக்கள்
[Wednesday 2016-02-17 07:00]

முதன்முறையாக உதவி காவல் ஆய்வாளராக திருநங்கை ஒருவர், தேர்வு செய்யப்பட்டுள்ளமை பலருடைய பாராட்டுதல்களையும் வாரிக் குவித்துள்ளது.சேலம் மாநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையர் சுமித் சரண், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.அப்போது, சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையைப் பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பை ப்ரித்திகா யாஷினி பெற்றுள்ளார்.


இடைதேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெற்றுள்ள வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது: - பிரதமர் மோடி
[Wednesday 2016-02-17 06:00]

இடைதேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், இது வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி இடைதேர்தல் நடத்தப்பட்டது. இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 7 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த மூன்று தொகுதிகளில் 2-ல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. உ.பி.யில் ஆளுங்கட்சி வசம் இருந்த முசாபர் நகர் தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது.


தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் 308 பதக்ககங்களுடன் இந்தியா முதலிடம்!
[Tuesday 2016-02-16 20:00]

இந்தியாவில் நடைபெற்று வந்த 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவுபெற்றது. 12 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 308 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் வடகிழக்கு நகரங்களான குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் நகரில் நடைபெற்று வந்தன. இதன் நிறைவுவிழா குவஹாட்டி இந்திரா காந்தி தடகள மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. நிறைவுவிழாவையொட்டி வடகிழக்கு மாநிலங்களின் வலிமையை காட்டும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடக்க விழாவின் போது ஏற்றப்பட்ட தீபம் அணைக்கப்பட்டதும் கண்ணை கவரும் வான வேடிக்கை நடைபெற்றது.மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா ஸ்நோவால் போட்டிகளை முறைப்படி நிறைவு செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய், மேகாலாய மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சர் ஷெனித் எம். சங்மா மற்றும் இந்திய ஒலிம்பக் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவையில் பிள்ளைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு கணவன்
[Tuesday 2016-02-16 12:00]

கோவை பெரியநாயக்கன் பாளையம் கணேசபுரம் 3


மேற்கு வங்காளம் மாநிலத்தில் படுத்தபடி மேல்நிலை தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவி!
[Tuesday 2016-02-16 09:00]

ஆறடிக்கு மேலே வளர்ந்த சில விடலைப் பருவத்தினருக்கு படிப்பு என்றாலே இப்போதெல்லாம் எட்டிக்காயாக கசக்கிறது. மாறாக, லேப்டாப்பில் சினிமா பார்ப்பது, மொபைலில் கேம்ஸ் விளையாடுவது என்றால்.., அல்வாபோல் இனிக்கிறது. வளர்ச்சி அதிகமாக, அதிகமாக.., உடம்பு வணங்கி, முதுகு குனிந்து, மனதும் பாடங்களின்மேல் நாட்டம் கொள்ள மறுத்து விடுகிறது. இது, அனைவருக்கும் பொதுவான விதியல்ல.., பெரும்பாலான பதின்பருவ மாணவர்களை பீடித்துள்ள சாபம் என்றே கருத வேண்டியுள்ளது. ஆனால், ஆறடியிலும் பாதியான உடல் வளர்ச்சியான மூன்றடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர், தனது இயலாமையை வென்று, படுத்தபடியே மேல்நிலைப் பள்ளியில் இறுதி தேர்வெழுதி, அதில் நூற்றுக்கு எண்பது சதவீத மதிப்பெண்களை பெற்று, தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, இதர மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுதாரணமாகவும், ஊக்கசக்தியாகவும் திகழ்கிறார்.


காதல் திருமணம் செய்து அனுபவித்த கொடுமை:
[Tuesday 2016-02-16 09:00]

முஸ்லீம் பெண் இந்துவை காதல் திருமணம் செய்து அனுபவித்த கொடுமை பாரீர்! இன்று சில முஸ்லிம் பெண்கள் பிற மதத்தினருடன் காதல் என்ற போர்வையில் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். அவர்கள் படும் படும் அவலங்கள் கீழ் காணும் வீடியோவை பிளே செய்து பார்க்கவும்! காதல் திருமணம்


ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் பலி: - சுஷ்மா சுவராஜ் தகவல்
[Tuesday 2016-02-16 08:00]

ரஷ்ய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் இறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும்


நேதாஜியின் அஸ்தி டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது: - பிரிட்டன் வலைதளம் தகவல்
[Tuesday 2016-02-16 08:00]

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியானது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இறுதி நாள்கள் குறித்து பல்வேறு தகவல்களை பிரிட்டனில் செயல்படும் வலைதளம் ஒன்று வெளியிட்டு வருகிறது. தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறி, அதனை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களையும் இந்த வலைதளம் அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், நேதாஜியின் அஸ்தி, ஜப்பானில் உள்ள கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அந்த வலைதளத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மும்பை மேக் இன் இந்தியா வார விழா தீ விபத்து: - விசாரணை தொடங்கியது
[Tuesday 2016-02-16 08:00]

மும்பை கிர்காவ் கடற்கரையில்


தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,773 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்: - ராஜ்நாத் சிங்
[Tuesday 2016-02-16 07:00]

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மேலும் ரூ.1,773 கோடியே 78 லட்சத்தை வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிவாரண உதவியை வழங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான உயர் நிலைக் குழு கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மஹரிஷி மற்றும் உள்துறை, நிதி மற்றும் வேளாண் அமைச்சகங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தின்போது கடும் பேரிடர் பாதிப்புக்கு உள்ளான தமிழகம், ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய ஏழு மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டன.கூட்டத்தின் முடிவில், தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் (என்டிஆர்எஃப்) இருந்து தமிழகத்துக்கு ரூ.1,773 கோடியே 78 லட்சத்தை நிவாரண உதவியாக அளிக்க உயர் நிலைக் குழு ஒப்புதல் அளித்தது.


காதலர் தினத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்: - பேஸ்புக் காதலால் வந்த விபரீதம்
[Monday 2016-02-15 19:00]

பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணுடன் காதல்வயப்பட்ட இளைஞர் காதலர் தினத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றி டெல்லி காவல்துறை தரப்பில், "டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஈஷ்வர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண் மீது காதல் கொண்டுள்ளார்.இதனையடுத்து அவர், அந்தப் பெண்ணை நேரில் சந்திக்க காதலர் தினத்தன்று குர்கான் பகுதிக்குச் சென்றுள்ளார்.முதலில் பொது இடத்தில் ஈஷ்வரை சந்தித்த அந்தப் பெண், பின்னர் அவரை தான் தங்கியிருக்கும் அடுக்குமாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.


சாதி வெறி பிடித்த இந்திய நாட்டில் நான் இருக்க விரும்பவில்லை: - சென்னை ஐகோர்ட் நீதிபதி பகீர்
[Monday 2016-02-15 19:00]

"சாதிவெறி பிடித்த நாடு இந்தியா... அந்த நாட்டில் நான் இருக்க கொஞ்சமும் விரும்பவில்லை..!'' என்று சொல்லி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்.சமீபத்தில் கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவின் மீது நீதிபதி கர்ணன் தடை விதித்தார். அத்தோடு நீதி பரிபாலனத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும், பணியிட மாற்றம் தொடர்பான ஆவணங்களுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளிக்க வேண்டும் என்றும் அவருக்கு கர்ணன் நோட்டீஸ் அனுப்பினார். இந்த சம்பவம் இந்திய அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்யக்கோரி சிறை அதிகாரிக்கு தாயார் மனு!
[Monday 2016-02-15 18:00]

முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவருடைய தாய் அற்புதம் சிறை அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளார்.அந்த மனுவில் கூறி இருப்பதாவது:


உத்திரப்பிரதேசத்தில் காணாமல் போன மாணவியின் சடலம் முதல்வரின் வீட்டருகே மீட்பு!
[Monday 2016-02-15 12:00]

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் உடல், கவுதம்பள்ளியில் உள்ள முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.ஜானகிபுரத்தைச் சேர்ந்த பெற்றோர், தனது மகளை 10ம் தேதி முதல் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு மிக அருகே, கல்லெறி தூரத்தில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கொங்கு மண்டலத்தின் 60 ஆண்டு காலக் கோரிக்கை நிறைவேற்றப்படும்: - வைகோ
[Monday 2016-02-15 08:00]

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், கொங்கு மண்டல மக்களின் முக்கிய கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை. மக்கள் நலனில் அக்கறையற்ற தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சிகள் கைவிட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று, மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதி அளித்து இருக்கின்றோம்.


அழகிரிக்கும் தி.மு.க.வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது: - கருணாநிதி அறிக்கை
[Monday 2016-02-15 08:00]

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பற்றி கருத்து கூறிய மு.க.அழகிரிக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், மு.க.அழகிரி செய்யும் துரோகத்திற்கு என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கருணாநிதி அறிவித்துள்ளார்.சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கூட்டணி வியூகங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி இந்த கூட்டணி குறித்து விமர்சித்ததுடன், அ.தி.மு.க.வை யாராலும் வெல்லமுடியாது என்று கூறினார்.இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர்.


பீகார் மாநிலத்தில் குற்றச் செயல்கள் குறைந்து வருகின்றது: - எதிர்க்கட்சிகளுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் பதிலடி
[Monday 2016-02-15 08:00]

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து குற்றச் செயல்கள் குறைந்து வருவதாக அம்மாநில முதல்-மந்திரி நீதிஷ்குமார் தெரிவித்துள்ளார். கடந்த, 25 ஆண்டுகளாக பீகாரை ஆட்சி செய்வோர் காட்டாட்சி நடத்துகின்றனர் என்றும் இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்று முக்கிய எதிர் கட்சியான பா.ஜ.க., தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், லாலு பிரசாத் ஆட்சி காலத்தை போன்றே தற்போதைய நிதிஷ் குமார் ஆட்சியிலும் காட்டாட்சியால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று பா.ஜ.க., கூறி வருகிறது.


பயங்கரவாத இயக்கங்களுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை: - முக்தார் அப்பாஸ் நக்வி
[Monday 2016-02-15 08:00]

பயங்கரவாதிகளுக்கும், மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் காம்பாத்தில் சூஃபி முஸ்லிம் பிரிவினரின் சர்வதேச மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:ஐஎஸ், அல்-காய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை. பயங்கரவாதிகள் தங்களைப் பாதுகாக்கும் கேடயமாக மதத்தைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்றவர்கள் மனித இனத்துக்கும், உலகின் அமைதிக்கும் எதிரானவர்கள். மத அமைப்புகளின் தலைவர்கள், பயங்கரவாதிகளின் தவறான பிரசாரத்தில் இருந்து மக்களைக் காக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் பயங்கரவாதப் பாதையில் செல்லாமல் தடுக்க வேண்டும்.


காஷ்மீர் மாநிலத்தில் மறியலில் ஈடுபட்டோர் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு: - இருவர் பலி
[Monday 2016-02-15 08:00]

காஷ்மீர் மாநிலம் வடக்கு பகுதியில் உள்ள குப்வாரா மாவட்ட எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.இதையடுத்து ராணுவம், போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் கக்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் இருப்பதை அறிந்து அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.


உத்தரப்பிரதேசத்தில் குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் கீழே விழுந்து பலி!
[Sunday 2016-02-14 16:00]

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் தவறி கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி (55) என்பவர் நேற்று மாலை வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் காயவைத்துள்ள துணிகளை எடுத்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று குரங்குகள் அவரைப் பார்த்து கொரூரமாக முறைத்தபடி தாக்க வந்தன.அவற்றிடம் இருந்து தப்பிப்பதற்காக லீலாவதி வேகமாக ஓடினார். ஓரிடத்தில் நிலைதவறி மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


ஊட்டியில் காதலர் தினம்: தாவரவியல் பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள்
[Sunday 2016-02-14 14:00]

காதல்... இந்த ஒற்றைச்சொல் உலகையே கட்டிப்போட்டுள்ளது. மனித இனம் தோன்றியது முதல் வரலாற்றையே புரட்டிப்போட்டுள்ளது. வாலன்டைன்ஸ் நினைவாக இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.காதலர் தினத்தையொட்டி ஊட்டியில் இன்று காதலர்கள், மற்றும் காதல் திருமணம் செய்த புதுமணத்தம்பதிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ரோஜா மலர்களுடன் காதல் ஜோடிகள் உலா வந்தனர். எங்கு பார்த்தாலும் இளம் ஜோடிகள் பட்டாம்பூச்சியாய் சுற்றத்திரிந்தனர்.


தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த ஜெயலலிதா!
[Sunday 2016-02-14 08:00]

தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வனத்துறை மற்றும் ஊரக வளர்சித் துறை சார்பில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆல மரக்கன்றினை நட்டு, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.


நாம் தமிழால்,நாம் தமிழராய் இணைவதை தவிர வேறு வழியில்லை: - சீமான் வேண்டுகோள்
[Sunday 2016-02-14 08:00]

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று கடலூரில் நடந்தது.அப்போது கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:


பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்: - பாஜக
[Sunday 2016-02-14 08:00]

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இதுதொடர்பாக தில்லியில் பாஜக தேசியச் செயலாளர் சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பாகிஸ்தான் அரசு அமைப்புகளைச் சேராத நபர்கள் என்று தெரிவித்து தனக்கு இருக்கும் பொறுப்பை தவிர்ப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கச் சிறையில் இருந்தபடி காணொலி மூலம் ஹெட்லி வாக்குமூலம் அளித்து வருகிறார்.


விஜயகாந் நிச்சயம் வருவார் என்று நம்புகிறேன்: - குஷ்பு
[Sunday 2016-02-14 08:00]

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது கட்சி நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: காங்கிரஸ்


மோடியின் மனைவி யசோதாபென் மும்பையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் !
[Saturday 2016-02-13 22:00]

பிரதமர் மோடி தனது மனைவி யசோதாபென்னை பிரிந்து பல ஆண்டுகளாக தனியே வசித்து வருகிறார். தனது தேர்தல் வேட்பு மனுவில் மனைவியின் பெயரை சுட்டிக்காட்டவில்லை என்ற சர்ச்சையிலும் சிக்கினார். இதற்கிடையில், தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியும், பாஸ்போர்ட்டில் பிரதமர் மோடி குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் அடிக்கடி யசோதாபென் பரபரப்புகளை ஏற்படுத்தி வந்தார். இந்த சூழலில் இன்று மும்பையில் மேக் இந்தியா திட்டத்திற்கான வாரத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி மும்பை வருகிறார். இந்நிலையில் நேற்று குடிசை வாழ் மக்களின் நலன்களை வலியுறுத்தி யசோதாபென் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். யசோதாபென் அண்மைகாலமாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.


தெற்காசிய விளையாட்டில், இந்தியா வென்றுள்ள தங்கபதக்கங்களின் எண்ணிக்கை 155-ஐ தாண்டியுள்ளது:
[Saturday 2016-02-13 22:00]

தெற்காசிய விளையாட்டில், இந்தியா வென்றுள்ள தங்கபதக்கங்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 155 தங்கம்‌, 84 வெள்ளி 26 வெண்கலம் என மொத்தம் 265 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 25 தங்கம், 55 வெள்ளி, 81 வெண்கலம் என 161 பதக்கங்களுடன் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 8 தங்கம், 26 வெள்ளி, 45 வெண்கலம் என 79 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. நேபாள அணி ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் உள்ளன.


மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணிதான் திமுக - காங்கிரஸ் கூட்டணி: - தமிழிசை சௌந்தரராஜன்
[Saturday 2016-02-13 17:00]

திமுக - காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினர்.இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.இந்த கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கருத்துக் கேட்ட போது, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. திமுக - காங்கிரஸ் கூட்டணியை பாஜக கூட்டணியோடு ஒப்பிட வேண்டிய அவசமியல்லை.

Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா