Untitled Document
April 29, 2024 [GMT]
நாடகம் போடும் அமைச்சர்கள்!
[Tuesday 2021-11-02 08:00]


கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். 
உண்மையில் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசாங்கத்தைவிட்டு வெளியேறி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும்.

கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். உண்மையில் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசாங்கத்தைவிட்டு வெளியேறி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும்.

  

ஆனால் தற்போது அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு எதிர்ப்பை வெளியிடுபவர்கள் எவரும் இன்னமும் அமைச்சுப்பதவிகளைக்கூடக் கைவிடவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டுமக்களால் 'கறுப்புப்பட்டியலில்' சேர்க்கப்பட்டிருக்கும் தற்போதைய அரசாங்கம், அதன் அண்மைக்கால செயற்பாடுகளால் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கின்றது.

எமது நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக அரச வங்கியொன்று வெளிநாட்டு தனியார் நிறுவனமொன்றுடனான கொடுக்கல், வாங்கலுக்காக கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்துப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் உரத்தின் தரம் தொடர்பில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பதாக கடன் தவணைக் கடிதத்தை விநியோகிப்பதற்கு உத்தரவிட்டது யார் என்பதை நாட்டுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரத்தை நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்னர் அதுகுறித்து இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்திடம் அனுமதி பெறப்படவேண்டும். இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளால் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களே வெளியிடப்படுகின்றன.

குறிப்பாக உரம் தொடர்பான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னரேயே எதற்காகக் கடன் தவணைக் கடிதம் விநியோகிக்கப்பட்டது? என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாட்டிலுள்ள இருபெரும் உர நிறுவனங்களும் விரைவில் கடன் தவணைக் கடிதத்தை வெளியிடுமாறு கோரியதாக மக்கள் வங்கியின் அதிகாரி பதிலளித்திருக்கின்றார். நாமறிந்த வரையில் மேற்கூறப்பட்ட இரண்டு உர நிறுவனங்களும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரது அமைச்சுக்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

அதுமாத்திரமன்றி கடன் தவணைக் கடித விநியோகத்தின்போது அதற்குரிய நிபந்தனைகள் எவையும் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய முறையற்ற செயற்பாடுகள் தற்போது இராஜதந்திர ரீதியான பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு வழிவகுத்துள்ளன. அதேவேளை இவ்விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் ஊடாக மீண்டும் உரம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சீனா கூறுகின்றது.

அதுமாத்திரமன்றி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்தாமையினால் மக்கள் வங்கியைக் கறுப்புப்பட்டியலில் சேர்ப்பதாக சீனா அறிவித்திருக்கின்றது. மக்கள் வங்கி என்பது சாதாரண மக்களால் சிறுகச்சிறுக சேகரிக்கப்பட்ட பணத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட அரச வங்கியாகும்.

அவ்வாறிருக்கையில் உரிய நடைமுறைகளுக்குப் புறம்பாக, நாட்டிற்குள் உரத்தைக் கொண்டுவருவதற்கு தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னதாக, கடன் தவணைக் கடிதத்தை விநியோகித்து மக்கள் வங்கி கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்டநடவடிக்கை என்ன? என்பது குறித்து அரசாங்கம் நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

மறுபுறம் அத்தியாவசியப்பொருட்களின் சடுதியான விலையேற்றத்துடன் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்திருப்பதன் காரணமாக அண்மைக்காலத்தில் மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதைக் கிராமங்கள்தோறும் முன்னெடுக்கப்படக்கூடிய விவசாயிகளின் போராட்டங்கள் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

இதுஇவ்வாறிருக்கையில் இந்தியாவிலிருந்து திரவ நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதுகுறித்து உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் அதுபற்றி செய்தி வெளியிட்ட சிங்களப்பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் மாத்திரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபுறம் திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் பயன்பாடு தொடர்பில் உரியவாறான பரிசோதனைகளை மையப்படுத்திய ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டும்.

அடுத்ததாக 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை தொடர்பான சட்டவரைபைத் தயாரிப்பதற்கென புதிதாக ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மட்டுமீறிய அதிகாரங்களைக்கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நீதிக்கட்டமைப்பையும் பொலிஸ் மற்றும் இராணுவம் உள்ளடங்கலாக பாதுகாப்புத்தரப்பையும் அரச அதிகாரிகளையும் பயன்படுத்தி 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யமுடியாத அரசாங்கம், அதற்கெனத் தற்போது விசேட ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்திருக்கின்றது.

அதேபோன்று ஜனாதிபதியின் 'வியத்மக' கோட்பாடு இப்போது என்ன நிலையில் இருக்கின்றது என்பதை மக்கள் நன்கறிந்திருப்பார்கள். அனைத்துத்துறைகளிலும் புத்திஜீவிகளை உள்வாங்கி, அவர்கள்மூலம் நாட்டைக் கட்டியெழுப்பப்போவதாகக்கூறிய அரசாங்கம், தற்போது அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டும் புத்திஜீவிகளை அவர்களுக்குரிய பதவிகளிலிருந்து நீக்கிவருகின்றது. இவ்வனைத்து விடயங்களையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நிறைவேற்றுவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்த அனைத்திற்கும் மாறாக அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்பது தெளிவாகின்றது. இதற்கு எதிராக அமைச்சரவை அமைச்சர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் என அனைத்துத்தரப்பினரும் ஒன்றுதிரண்டுள்ள நிலையில், அவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதன் ஊடாகப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயத்தங்களில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது.

அதுமாத்திரமன்றி அமைச்சரவை அனுமதியின்றி கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டு நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். உண்மையில் அவர்கள் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அரசாங்கத்திலிருந்து வெளியேறி தமது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஆனால் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அதன் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் இன்னமும் அமைச்சுப்பதவிகளைக் கைவிடவில்லை. எதுஎவ்வாறிருப்பினும் அண்மைக்காலத்தில் அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

எதிர்வரும் இருமாதகாலத்திற்குள் கிராமிய மற்றும் நகரமட்டத்தில் எமது கட்சி அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, பலப்படுத்தப்படும். அதேபோன்று ஒவ்வொரு துறைசார்ந்த கொள்கைகளை உருவாக்குவதற்கென கட்சிக்குள் 'கொள்ளை உருவாக்கக்குழு' நிறுவப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com



வடக்கில் தகுதியற்ற அதிகாரிகளுக்கு உயர் பதவி - கல்வியை சீரழிக்கும் சதி என்கிறார் சந்திரசேகரன்!
[Monday 2024-04-29 05:00]

வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.



நாயாறு கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கினார்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவுநாயாறு கடல் பகுதியில் நீராடச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவில் இருவர் நீரில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.



கோட்டாவுக்குப் பின்னால் நின்றவர்கள் இப்போது தங்களின் பக்கம் என்கிறார் அனுர!
[Monday 2024-04-29 05:00]

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் முதன்மைத் தேர்வாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



முகமாலையில் இன்று அகழ்வுப் பணி!
[Monday 2024-04-29 05:00]

பளை - முகமாலை பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில், இன்று மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.



சுண்டிக்குளத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் ரவிகரன் சந்திப்பு!
[Monday 2024-04-29 05:00]

கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.



ஆவரங்காலில் காய்ச்சலுக்கு 5 வயதுச் சிறுமி பலி!
[Monday 2024-04-29 05:00]

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமி காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.



புதுக்குடியிருப்பில் ஊழியரின் தாக்குதலில் மரக்காலை உரிமையாளர் படுகாயம்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால், மரக்காலை உரிமையாளர் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த மரக்காலை உரிமையாளர் வேலுப்பிள்ளை வரதகுமார் (35 வயது) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறையும் பிறப்பு, உயரும் இறப்பு! - பாதிக்கப்படும் இயற்கைச் சமநிலை.
[Monday 2024-04-29 05:00]

2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.



ஊழியர் சேமலாப நிதியத்திற்கான வட்டி 13 வீதமாக அதிகரிப்பு!
[Monday 2024-04-29 05:00]

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற பாதாள உலகத் தலைவரை காட்டிக் கொடுத்தது இயந்திரம்!
[Monday 2024-04-29 05:00]

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



பாரதிபுரத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்த 5 பொலிசாருக்கு மரணதண்டனை!
[Sunday 2024-04-28 18:00]

கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டமா?
[Sunday 2024-04-28 18:00]

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஊடகவியலாளர் சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Sunday 2024-04-28 18:00]

ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.



பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல!
[Sunday 2024-04-28 18:00]

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல, துணை ஜனாதிபதியாகக் கூட தெரிவு செய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



அச்சுவேலியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் - இருவர் கைது!
[Sunday 2024-04-28 18:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பசிலின் தாளத்துக்கு ஆட நான் ஒன்றும் பொம்மையில்லை!
[Sunday 2024-04-28 18:00]

பசில் ராஜபக்ச கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை அல்ல என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.



ஐதேக மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்த விசேட அறிவிப்பு!
[Sunday 2024-04-28 18:00]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.



அளம்பிலில் இராணுவத்துக்கு காணி சுவீகரிக்க நடவடிக்கை!
[Sunday 2024-04-28 18:00]

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவீட்டு பணிகள் எதிர்வரும் மே மாதம் 02ஆம் ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கிளிநொச்சியில் 4 கிலோ தங்கக் கட்டியுடன் மூவர் கைது!
[Sunday 2024-04-28 18:00]

கிளிநொச்சிப் பகுதியில் கார் ஒன்றில் 4 கிலோ 170 கிராம் தங்கக் கட்டியைக் கடத்திச் சென்ற இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பரந்தன் சந்தியில் கவிழ்ந்த டிப்பர்! - ஒருவர் காயம். Top News
[Sunday 2024-04-28 17:00]

கிளிநொச்சி - பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போனதால் வீதியின் நடுவே புரண்டது. விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா