Untitled Document
April 29, 2024 [GMT]
ஓய்வு பெற்ற பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் வந்த பாம்பு!
[Tuesday 2018-10-09 16:00]

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா, (வயது 60).

 
வர்க்கலை தபால் அலுவலகத்தில் அணிலா, ஊழியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இவர், பணி ஓய்வு பெற்றார். நேற்று இவருக்கு ஒரு பார்சல் வந்தது.

இதுபற்றி தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், தபால் அலுவலகம் வந்து பார்சலை பெற்றுக் கொண்டார். அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால் உறுதியாக சுற்றப்பட்டிருந்தது.

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா, (வயது 60). வர்க்கலை தபால் அலுவலகத்தில் அணிலா, ஊழியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இவர், பணி ஓய்வு பெற்றார். நேற்று இவருக்கு ஒரு பார்சல் வந்தது. இதுபற்றி தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், தபால் அலுவலகம் வந்து பார்சலை பெற்றுக் கொண்டார். அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால் உறுதியாக சுற்றப்பட்டிருந்தது.

  

இதனால் பார்சலை அணிலாவால் பிரிக்க முடியவில்லை. எனவே அவர், பார்சலை தபால் அலுவலக மேஜை மீது வைத்தார். அங்கு வந்த சக ஊழியர்கள் அந்த பார்சலை உடைத்து பார்த்தனர். அதற்குள் 15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி அணிலாவிடம் தெரிவித்தனர். அவரும் பாம்பை தனக்கு பார்சலில் அனுப்பியது யார்? என்று விசாரித்தார். ஆனால் அதில் பார்சல் அனுப்பியவரின் விவரம் இல்லை.

அணிலாவுக்கு வந்த மர்ம பார்சல்.

அதே நேரம் பார்சலுக்குள் ஒரு மிரட்டல் கடிதமும் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அணிலா, வர்க்கலை போலீசில் புகார் செய்தார். இதுபற்றி அணிலா கூறும் போது, தனக்கு எதிரிகள் யாரும் இல்லை. அப்படி இருக்க எதற்காக பார்சலில் பாம்பும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது என தெரியவில்லை என்று கூறினார். போலீசார் பார்சலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தபால் அலுவலக கண்காணிப்பு கேமராக்களில் அணிலாவுக்கு பார்சல் அனுப்பியவர் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே பார்சலில் இருந்த பாம்பு வன ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  
   Bookmark and Share Seithy.com



3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் தற்கொலை!
[Sunday 2019-05-05 15:00]

கேரளாவில் கலமசேரி பகுதியில் வசித்து வந்தவர் சாஜி (வயது 31). இவரது மனைவி பிந்து (வயது 29). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஸ்ரீஹரி என்ற ஆண் குழந்தை உள்ளது. சாஜி ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சாஜி, தனது மனைவி மற்றும் குழந்தை மீது தீ வைத்து கொளுத்தியுள்ளார்.



காதல் திருமணம் செய்த இளைஞரை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம்!
[Monday 2018-10-22 08:00]

இரணியலை அடுத்த குருந்தன்கோடு காடேற்றி பகுதியைச் சேர்ந்தவர் விஜிஸ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிந்து (25). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.



கொள்ளையடிப்பதில் கில்லாடிகள்: - இந்தியாவையே மிரளவைக்கும் தமிழக கிராமம்
[Tuesday 2018-01-09 08:00]

தமிழகத்தில், இந்தியாவே மிரண்டுபோகும் அளவுக்கு ஒரு கிராமம் உள்ளது. திருச்சி அருகே உள்ள அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்மீது இந்தியா முழுவதும் 36 போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. திருச்சி அருகேயுள்ள ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள், குலத் தொழில் போல கொள்ளையடிக்கும் தொழிலைச் செய்கிறார்கள். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட இவர்கள், 'கேப்மாரிஸ்' என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இன மக்களுக்கு திருடுவதுதான் குலத் தொழில். சுதந்திரத்துக்கு முன், கரூர் அருகே தங்கிய இந்த மக்கள், அருகிலுள்ள கிராமங்களில் கைவரிசைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.



எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்ததாக சபாநாயகர் தனபால் அறிவிப்பு!
[Sunday 2016-02-21 19:00]

தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நிலக்கோட்டை புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி, அணைக்கட்டு பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. கலையரசுவும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பதவிவிலகல் கடிதத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் வழங்கினர்.


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா