Untitled Document
April 28, 2024 [GMT]
கொள்ளையடிப்பதில் கில்லாடிகள்: - இந்தியாவையே மிரளவைக்கும் தமிழக கிராமம்
[Tuesday 2018-01-09 08:00]

தமிழகத்தில், இந்தியாவே மிரண்டுபோகும் அளவுக்கு ஒரு கிராமம் உள்ளது. திருச்சி அருகே உள்ள அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்மீது இந்தியா முழுவதும் 36 போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. திருச்சி அருகேயுள்ள ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள், குலத் தொழில் போல கொள்ளையடிக்கும் தொழிலைச் செய்கிறார்கள். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட இவர்கள், 'கேப்மாரிஸ்' என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இன மக்களுக்கு திருடுவதுதான் குலத் தொழில். சுதந்திரத்துக்கு முன், கரூர் அருகே தங்கிய இந்த மக்கள், அருகிலுள்ள கிராமங்களில் கைவரிசைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில், இந்தியாவே மிரண்டுபோகும் அளவுக்கு ஒரு கிராமம் உள்ளது. திருச்சி அருகே உள்ள அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்மீது இந்தியா முழுவதும் 36 போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. திருச்சி அருகேயுள்ள ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள், குலத் தொழில் போல கொள்ளையடிக்கும் தொழிலைச் செய்கிறார்கள். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட இவர்கள், 'கேப்மாரிஸ்' என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இன மக்களுக்கு திருடுவதுதான் குலத் தொழில். சுதந்திரத்துக்கு முன், கரூர் அருகே தங்கிய இந்த மக்கள், அருகிலுள்ள கிராமங்களில் கைவரிசைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

  

திருட்டுத் தொல்லைத் தாங்காமல், கிராமத்தினர் இவர்களை விரட்டி அடித்துள்ளனர். அப்போதையை திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்த மக்களுக்கு ராம்ஜி மில்லில் வேலை வாங்கிக்கொடுத்து தங்கவும் இடமளித்துள்ளார். அப்படித்தான் ராம்ஜி நகர் உருவானது. மில்லில் வேலைக்குச் சேர்ந்தாலும், திருட்டுத் தொழிலை இவர்களால் விட்டுவிட முடியவில்லை. அந்தக் காலத்தில் பர்மா, மலேசியாவுக்கு வேலைக்குப் போவதுபோல, இவர்கள் கொள்ளைத் தொழிலில் அங்கெல்லாம் சென்று ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களின் செல்வச் செழிப்பைப் பார்த்து, மற்ற மக்களும் கொள்ளையர்களாக மாறிய வரலாறெல்லாம் உண்டு. இந்தியா முழுவதும் குழுக் குழுவாகச் சென்று கைவரிசை காட்டும் இவர்கள், திருடப்போவதற்கு முன், சொந்தக் கிராமத்தில் உள்ள கடவுளுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள். நல்லநாள் பார்த்துதான் திருடப் போவார்கள். திருடிவிட்டு வந்ததும், கன்னியாகுமரி சென்று கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, முக்கடலும் சங்கமிக்குமிடத்தில் கால்களைக் கழுவி, தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக, இதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த மக்கள், கொள்ளையில் ஈடுபடுவதோடு சரி. கொலை செய்வதில்லை. போலீஸ் தங்கள்மீது சந்தேகப்பட்டால், போலி நபரை கைதாக வைத்துவிடுகிறார்கள். கைதாகும் நபரின் குடும்பத்துக்குத் தேவையான பணத்தையும் பிற வசதிகளையும் செய்துகொடுக்கிறார்கள். அப்படி, போலீஸிடம் சரண் அடைபவர்களைக் 'கொன்னையன்' என்கிறார்கள். கொள்ளையடிக்கப் போவதை 'வல்லடைக்குப் போகிறோம்' என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் சென்று, குழுக் குழுவாக கைவரிசை காட்டும் இவர்கள், தெலுங்கு கலந்த தமிழில்தான் உரையாடுகிறார்கள். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கிளம்பி கொள்ளைக்குப் போவார்கள். அந்தச் சமயத்தில், ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ராம்ஜி நகர் வெறிச்சோடிக் கிடக்கும்.

2014-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் ஒரு நகைக்கடையில் கொள்ளை நடந்தது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பதை மோப்பம்பிடித்த கேரள போலீஸ், ராம்ஜிநகரைச் சுற்றி கண்காணிப்பைப் பலப்படுத்தியிருந்தது. அதே வேளையில், ஆந்திர போலீஸ் மற்றொரு கேஸுக்காக அங்கே முகாமிட்டிருந்தது. இப்படி, பல மாநில போலீஸும் ஒரே நேரத்தில் பொறி வைத்துக் காத்திருக்கும் கிராமம்தான் ராம்ஜிநகர். ராஜஸ்தானில் தமிழக போலீஸார் சந்தித்தது போன்ற மோதலும் இந்த கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள்குறித்து துப்புக்கொடுப்பதற்காக பல குழுக்கள் இயங்கிவருகின்றன.

ராஜஸ்தானில், கொள்ளையர்கள் சொகுசு பங்களா கட்டி வாழ்வதுபோல, இந்தக் கிராமத்திலும் பல சொகுசு வீடுகள் காணப்படுகிறது. பிள்ளைகளை இன்ஜினீயரிங், மருத்துவம்கூட படிக்கவைத்துள்ளனர். 3 ஆயிரம் சதுர அடிக்குக் குறைவாக இந்தக் கிராமத்தில் வீடுகள் கட்டப்படவில்லை. பெரிய பெரிய இரும்பு கேட்டுகளுடன் வீடுகள் காணப்படுகின்றன. போலீஸார் எளிதில் உள்ளே நுழைந்துவிட முடியாதபடி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வீடுகள் கட்டுப்பட்டுள்ளன. கேரள போலீஸ் எடுத்த நடவடிக்கையில் மித்ர மோகன், சத்யாக ஆகியோர் பிடிபட்டனர். இதில், மித்ரமோகனின் வீடு கிட்டத்தட்ட குட்டி அரண்மனை போல காணப்பட்டது. அத்தனை அறைகளும் ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளன. அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாயையும் கேரள போலீஸ் கைப்பற்றியது.

இந்தியா முழுவதும் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் இருந்தாலும், இவர்கள் எளிதில் சிக்கிவிடுவதில்லை. சாட்சியங்கள் இல்லாமல் கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். வெளி மாநில மீடியாக்கள் 'ராம்ஜி நகர் கேங்க்' என்றே இவர்களைப் பற்றி செய்திகள் வெளியிடுகின்றன.

  
   Bookmark and Share Seithy.com



3 பேர் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு இளைஞர் தற்கொலை!
[Sunday 2019-05-05 15:00]

கேரளாவில் கலமசேரி பகுதியில் வசித்து வந்தவர் சாஜி (வயது 31). இவரது மனைவி பிந்து (வயது 29). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஸ்ரீஹரி என்ற ஆண் குழந்தை உள்ளது. சாஜி ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சாஜி, தனது மனைவி மற்றும் குழந்தை மீது தீ வைத்து கொளுத்தியுள்ளார்.



காதல் திருமணம் செய்த இளைஞரை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம்!
[Monday 2018-10-22 08:00]

இரணியலை அடுத்த குருந்தன்கோடு காடேற்றி பகுதியைச் சேர்ந்தவர் விஜிஸ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிந்து (25). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.



ஓய்வு பெற்ற பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் வந்த பாம்பு!
[Tuesday 2018-10-09 16:00]

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா, (வயது 60). வர்க்கலை தபால் அலுவலகத்தில் அணிலா, ஊழியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இவர், பணி ஓய்வு பெற்றார். நேற்று இவருக்கு ஒரு பார்சல் வந்தது. இதுபற்றி தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், தபால் அலுவலகம் வந்து பார்சலை பெற்றுக் கொண்டார். அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால் உறுதியாக சுற்றப்பட்டிருந்தது.



எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்ததாக சபாநாயகர் தனபால் அறிவிப்பு!
[Sunday 2016-02-21 19:00]

தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நிலக்கோட்டை புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி, அணைக்கட்டு பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. கலையரசுவும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பதவிவிலகல் கடிதத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் வழங்கினர்.


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா