Untitled Document
May 2, 2024 [GMT]
கனடா ஒன்ராறியோ டூச் ரிவர் தொகுதியில் சாதனை படைத்து பலத்தை வெளிப்படுத்துமா தமிழினம்?
[Thursday 2016-08-18 19:00]

பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பலமுள்ள இனமாக கனடியத் தமிழர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் சில தொகுதிகளை எமதாக்கிக் கொள்ளவேண்டும். அதில் அனைத்து முக்கிய கட்சிகளின் சார்பில் தமிழர்களே போட்டியிடும் சூழலை ஏற்படுத்தவேண்டும் அதனூடாக தொடர்ந்த தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்திக் கொளளவேண்டும் என்பதை முதலில்; எமது சமூகத்தில் விதைத்தவன் நான்.
அப்போது எனக்கு கிடைத்த பெயர் நேருக்கு சுத்த விசர். மூன்று தமிழர்கள் போட்டிபோட்டு மூன்று பேரும் தோக்கிறதுக்கு வழிசொல்லுகிறார் என்றார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பலமுள்ள இனமாக கனடியத் தமிழர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் சில தொகுதிகளை எமதாக்கிக் கொள்ளவேண்டும். அதில் அனைத்து முக்கிய கட்சிகளின் சார்பில் தமிழர்களே போட்டியிடும் சூழலை ஏற்படுத்தவேண்டும் அதனூடாக தொடர்ந்த தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்திக் கொளளவேண்டும் என்பதை முதலில்; எமது சமூகத்தில் விதைத்தவன் நான். அப்போது எனக்கு கிடைத்த பெயர் நேருக்கு சுத்த விசர். மூன்று தமிழர்கள் போட்டிபோட்டு மூன்று பேரும் தோக்கிறதுக்கு வழிசொல்லுகிறார் என்றார்கள்.

  

பின்னர் அதில் தெளிவுபெற்று இல்லை அது நல்ல வழிதான் எந்தக்கட்சிக்கு எப்போது காத்தடிக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் எங்கு காற்றடித்தாலும் மூன்று முக்கிய கட்சிகள் சார்பிலும் தமிழர்கள் போட்டியிட்டால் ஒருவர் வெல்வது எப்படியும் நிச்சயம் என்ற புரிதல் ஏற்பட்டதன் பின் தற்போதாவது தமிழினம் அதற்கு தயாராகிவிட்டது என்ற மகிழ்ச்சி;

பலரிடம் நடைபெறவுள்ள ரூச் ரிவர் இடைத்தேர்தலில் ஏற்பட்டதும் இங்கு நினைவில் கொள்ளலாம்.ஆனால் அதில் ஈற்றில் கோட்டைவிட்டு இரு தமிழர்களே களத்தில் உள்ள நிலையில் இது தமிழரின் வெற்றி வாய்ப்பை பாதித்துவிடுமா? என்ற அச்சமே பலரிடமும் உள்ளதை காண முடிகிறது. எந்நிலை உருவானாலும் அதனை எமக்கு சாதகமாக கொண்டு சாதித்துக் காட்டுவதே இனம் சார்ந்த வலுநிலை. இந்நிலையில் தமிழ் இனமாக இத்தேர்தல் களத்தில் எதனைச் சாதிக்கலாம்.

இரு தமிழர் போட்டியிடும் போது தமிழர் இல்லாத ஒருவரை களத்தில் இறக்கினால் தமிழர் வாக்கு பிரியும் போது தாம் வென்றுவிடலாம் என்ற கணக்கில் தமிழர் இல்லாத ஒருவரை களத்தில் இறக்கியுள்ளது கன்சவேட்டிவ் கட்சி. இதில் அவர்கள் வெற்றிபெற அனுமதித்தால் அதுவே தமிழருக்கு எதிராக ஏனையவர்களாலும் கைக்கொள்ளப்படும் ஆபாயம் இருக்கிறது.

இந்நிலையில் போட்டியிடும் இரு தமிழரும் தேர்தல் முடிவில் முறையே முதலாம் இரண்டாம் நிலைகளில் வந்தால் எதிர்காலத்தில் இத் தொகுதி முழுமையாக தமிழர் தொகுதியாக மாற்றப்படுவது மட்டுமன்றி இவ்வாறான தமிழர் இல்லதா ஒருவரை களமிறக்கும் முயற்சியையும் கட்சிகள் முன்னெடுக்க மாட்டா..

இது சாத்தியமா? என நீங்கள் எழுப்பும் கேள்வி எனக்கு புரிகிறது. ஆம் இலகுவில் சாத்தியம். ரூச் ரிவர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 88592. ஒன்ராரியோ பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பு மிக குறைவாகவே அமைவது உண்டு. கடந்த தேர்தலில் 2014 இல் 52.1 சதவீத வாக்குப்திவும் 2011 இல் 48.1 சதவீத வாக்குப்பதிவும் அமைந்தன. ரூச் ரிவர் தொகுதி ஒன்ராரியோவில் வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளில் ஒன்று. 2014இல் 47.48 சதவீதமும் 2011இல் 42.9 சதவீதமும் 2007இல் 41.8 சதவீத வாக்குப்பதிவுமே அமைந்தன.

பொதுவாக இடைத்தேர்தல் என்று வரும் போது வாக்குப்பதிவு மேலும் வீழ்ச்சியடைவது வழக்கம். 1996இற்கு பின்னர் ஒன்ராரியோவில் நடைபெற்ற 28 இடைத்தேர்தல்களில் ஒன்றில் கூட வாக்குப்பதிவு 40 சதவீதத்தை கடக்கவில்லை. கடந்த முறை 2005 நவம்பர் 24இல் ரூச் ரிவரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் வெறும் 16255 மட்டுமே. சரி இத்தேர்தலில் 30 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம் அது 26500 வாக்குப் பதிவையே கொண்டிருக்கும்.

இந்நிலையில் தமிழர்கள் நீதன் சானும், பிரகல் திருவும் எவ்வாறு முதல் இரண்டு இடங்களையும் பெற முடியும். சரி தொகுதியின் ள்ளார்ந்த நிலையை சற்று பார்ப்போம். இத்தொகுதியில் வாழும் தமிழ் வாக்காளர்கள் தொகை 12 ஆயிரத்திற்கு மேல். அதாவது கனடாவிலேயே அதிக தமிழ் வாக்காளர்கள் வாழும் தொகுதி இது. ஒவவொரு தமிழ் வாக்கும் இத்தேர்தலில் முதன்மை பெறுகிறது. தமிழர் ஒவ்வொருவரும் வாக்களிப்பதை உறுதி செய்வது தமிழர் சமூகத்தின் கடமை. அதேவேளை தமிழர்கள் தமிழர் ஒருவருக்கே வாக்களிக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதும் இனத்தின் கடமை. இதை சனநாயக விரோத செயற்பாடு இன சிலர் முலாமிட முயற்சிக்கலாம். எவ்வாறு ஒரு கட்சி உறுப்பினர்கள் இக்கட்சி சார்ந்து மட்டுமே தொழிற்படுகின்றார்களோ அதேபோன்று ஒரு இனக்குழுமமும் இனம் சார்ந்து தொழிற்ப்படுவதும் சனநாயகமே.

இவ்வாறே பல இனங்கள் கனடிய தேசத்திலும் தங்கள் நிலையை அரசியலில் வலுவுடன் தக்கவைத்துள்ளன. அவ்வாறு யூத, சீக்கிய, இத்தாலிய இனக்குழுமங்களை முதன்மையாக குறிப்பிடலாம். கனடாவில் சிறுபான்மை இன மக்களை அதிகம் கொண்ட தொகுதியும் ரூச் ரிவர்தான். சீன, பிலீப்பீனிய, கரியிய இந்திய மக்களையும் இத்தொகுதி அதிகம் கொண்டுள்ளது. கனடாவிலலேயே இந்துக்களை அதிகம் கொண்ட தொகுதியும் இதுவே. அதாவது 13.7 சதவீதம்இந்துக்கள்.

சரி முதல் இரண்டு இடங்களையும் பெற தமிழ் வேட்பாளர்களுக்கு உள்ள வலுநிலை என்ன?

முதலில் நீதன் சானைப் பார்ப்போம். தொகுதி முழுமையாக அதிகம் அறியப்பட்ட வேட்பாளர் இவரே. அதே தொகுதியில் வாழும் ஒரே வேட்பாளரும் இவரே. 2014 மற்றும் 2011 தேர்தலிகளிலும் இதே தொகுதியில் புதிய சனநாயகக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர். 2014இல் 13019 வாக்குகளையும், 2011இல் 13088 வாக்குகளையும் பெற்று வலுவான இரண்டாம் இடத்தை பெற்றார்.

இரண்டு தேர்தல்களிலும் ஒரேயளவு வாக்குகளைப் பெற்ற இவர் அதில் 80 சதவீதத்தை இம்முறையும் பெற்றால் வெற்றியை உறுதிப்படுத்தலாம். ஏற்கனே பெற்ற வாக்குகளை தக்கவைத்தல் அதேவேளை புதிய வாக்குகளை அணிசேர்த்தலில் இவருடைய வெற்றி தங்கியுள்ளது. எந்தவொரு தேர்தலையும் விட்டுவைப்பதில்லை என்ற குறை இவரிடம் உள்ள பலவீனம். ரஸ்டி தேர்தலை தவிர்த்திருக்கலாம். பல தேர்தல் பிரசன்னம் தேர்தல் களத்தை எதிர்கொள்ள இவரை பலப்படுத்தியும் உள்ளது என்பது இன்னொரு வலுநிலை.

லிபரல் கட்சி சார்பில் போட்டியிடும் பிரகல் திருவை எடுத்துக் கொண்டால், நீதன் சானைப் போன்று தமிழர்களுக்கு அறிமுகமானவர். இருவரும் 37 வயது நிரம்பிய நம்பிக்கை தருகின்ற இளையவர்கள்.

1999ஆம் ஆண்டு ரூச் ரிவர் தொகுதி முதலில் உருவானதன் பின் நடைபெற்ற 6 தேர்தல்களிலும் லிபரல் கட்சியே வென்று அக்கட்சியின் கோட்டை போல் இத்தொகுதி திகழ்ந்தமை இவரது வலுநிலை. கடசி வாக்குகளை தக்கவைத்தாலேயே இவர் வெற்றியை நோக்கி நகரமுடியும். முதல் இரண்டு இடங்களில் கட்டாயம் வரமுடியும். 13 ஆண்டுகளாக லிபரல் கட்சி ஆட்சியில் உள்ளதால் ஏற்ப்பட்டுள்ள சரிவும், பழைய பாராளுமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதால் கிடைக்காமல் போன தார்மீக ஆதரவும் இவர் எதிர்கொள்ளும் சவால் நிலைகள்.

நீதன் சானும், பிரகல் திருவும் முதல் இரண்டு இடங்களில் ஒன்றைப் பெற தமிழர்கள் நாம் என்ன செய்யலாம். அத்;தொகுதியில் வாழ்ந்தால் கட்டாயம் வாக்களிப்பது. முடிந்தால் முன்கூட்டிய வாக்குப்பதிவில் சென்று வாக்களிப்பது. தவறாது இருவரில் ஒரு தமிழருக்கு மட்டுமே வாக்களிப்பது. தொகுதிக்கு வெளியே வாழ்ந்தால் தொகுதியில் உள்ள தெரிந்த தமிழர்கள் அனைவரையும் வாக்களிப்பதை உறுதிப்படுத்துவது. தேர்தலுக்கு முந்திய பரப்புரையிலும், தேர்தல் அன்றும் தொண்டர்களாக இவர்கள் பரப்புரையில் ஒத்தாசையாக இருப்பது. அதிகரித்த தொண்டர் தொகை முதல் இரண்டு இடங்களையும் தமிழர்கள் பெற வழிசமைக்கும்.

அதேவேளை - தெரிந்த அருகில் உள்ள ஏனைய இனத்தவர்களின் வாக்குகளையும் தமிழர் வேட்பாளர்களுக்கே பெற்றுக் கொடுப்பது என நீங்கள் ஒவ்வொருவரும் தமிழினப் பலத்தை வெளிப்படுத்தலாம். அதேவேளை நீதன் சானுக்கும், பிரகல் திருவுக்கும் ஒரு வேண்டுகோள், தமிழ் மக்களிடம் சென்று உங்களுக்காக கட்டாயம் தவறாது வாக்குக் கேளுங்கள் ஆனால் உங்கள் தொண்டர்கள் உங்கள் இருவருக்கும் இடையிலான மோதலாக இதனை மாற்ற அனுமதியாதீர்கள். அது எம் மக்களை வாக்களிப்பில் இருந்து தவிர்த்துவிடும். இருவரில் ஒருவரை தெரிவு செய்து வாக்களிக்க அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அதேவேளை தொகுதியல் உள்ள ஏனைய இனக்குழுமங்கள், இளையவர்கள், முதியவர்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகளை வரிவாக்கி கடினமாக வெற்றிக்காக உழையுங்கள்.

தமிழ் ஊடகங்கள் இனமான உணர்வுடன் தமிழர் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தேர்தலை மக்கள் சார்ந்து அணுகுவார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் உண்டு. தமது வரலாற்றுக் கடமையை அவர்கள் சரிவரச் செய்வார்கள் என்று நம்புவோம்.

இக்கருத்துக்களை முன்வைப்பதால் என்னை சிலர் கன்சவேட்டிக் கட்சிக்கு எதிரானனவனாகவோ அல்லது பற்றிக் பிரவுணுக்கு எதிரானவனாகவோ சித்தரிக்க முயலலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது யாதெனில் பற்றிக் பிரவுணை 2009 பெப்பிரவரியில் முள்ளிவாய்கால் பேரவலத்தின் போது முதலில் அவரின் தொகுதியிலேயே சந்தித்து தமிழர் விவகாரத்தை விளக்கியவன், அவரை தமிழர் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவனும் நானே.

இருவரும் ஒருவரை ஒருவர் சகோதரே என்றே அழைத்துக் கொள்வோம். அதற்கு பின்னர் தமிழரின் ஆதரவு தூணாக நின்றவர்களில் அவரும் ஒருவர் என்பதில் கருத்துவேறுபாடு என்றும் கிடையாது. அதன் பிரதிபலனாக தமிழ் மக்கள் பற்றிக்கின் பின்னால் அணிதிரண்டு அவரை ஒன்ராயோ கென்சவேட்டிவ் தலைவராக்கி அழகுபார்த்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் அதிகம் வாழும் தொகுதியில் ஒரு தமிழரை வேட்பாளராக்கி பற்றிக் வெளிப்படுத்தியிருக்கலாம். தவறான ஆலோசனையால் தவறொன்று இனம் சார்ந்து இளைக்கப்பட்டுள்ளது. ரெப் பேட்டின் அரசியல் மீளெளிச்சிக்காக தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்வி எழுவதும் இங்கு தவிர்க்கமுடியாததாகியுள்ளது. இவ்வாறான ஒரு சூழல் பிரம்டனில் ஏற்பட்டிருந்தால் சீக்கியரில்லாத ஒரு வேட்பாளரை சீக்கிய சமூகம் அனுமதித்திருக்காது. இத்தவறுக்கு ககோதரர் பற்றிக் பிரவுனை மட்டும் தவறு கூறிவிட முடியாது. கட்சிகளைக் கடந்து தமிழர் நலனை மட்டும் முன்னிறுத்தி பயணிக்கின்ற தமிழர் தலைமையும் அமைப்புக்களும் இல்லாமையும் இதற்கான காரணமாகும்.

இப்பலவீனத்தை சில அரசியல் வியாபாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைவதின் விளைவே அது. இது குறித்த சரியான புரிதலுடன் தமிழின நலனையும் ஏற்று சகோதரர் பற்றிக் எதிர்காலத்தில் பயணிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கனடிய சனத்தொகையில் 1 சதவீதம் உள்ள தமிழர்கள் விகிதாசாரப்படி 3 பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஒன்ராரியோ சனத்தொகையில் 2 சதவீதத்திற்கு குறைந்தது 2 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கவேண்டும். 1.5 சதவீத சனத்தொகையை கொண்டிருக்கும் சீக்கிய சகோதரர்கள் 5 சதவீத பாராளுமன்ற உறுப்பின்ர்களை கனடா தழுவி கொண்டிருப்பதற்கு அவர்கள் இனம் சார்ந்த அரசியலும் அதற்கான முன்னெடுப்புமே காரணம்.

கனடியத் தமிழர்களும் ஏனையவர்களுக்கு சேவகம் செய்யும் நிலையில் இருந்து தம்மை அரசியலில் வலுவுள்ள சக்தியாக மாற்றுவார்களா என்பதை ரூச் ரிவர் தேர்தல் நிர்ணயிக்கும். இனமாக எழப்போகின்றோமா இல்லை முள்ளிவாய்கால்களை நாமே எமக்கு தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டிருக்கப் போகின்N;றாமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன்.

புரிதலுடன் நீங்கள் எழுச்சிபெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி

நேரு குணரத்தினம்

nehruguna@gmail.com

  
   Bookmark and Share Seithy.com



அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்துக்கு சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.



எரிக் சொல்ஹெய்முக்கு அம்பிகா கண்டனம்!
[Thursday 2024-05-02 17:00]

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.



அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்!
[Thursday 2024-05-02 17:00]

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்குவதை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றதால் பதற்றம்!
[Thursday 2024-05-02 17:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், நேற்று மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.



லக்ஷ்மன் யாப்பா, நஸீர் அஹமட் ஆளுநர்களாக சத்தியப் பிரமாணம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.



சரத் பொன்சேகாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை!
[Thursday 2024-05-02 17:00]

ஐக்கிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எந்தப் பங்கையும் வகிக்கவில்லை, எனவே அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதன் உப தலைவர் சுஜீவ சேனசிங்க இன்று தெரிவித்துள்ளார்.



பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவு!
[Thursday 2024-05-02 17:00]

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



புங்குடுதீவு அகழ்வில் செப்புக் காசுகளுடன் பெண்ணின் எலும்புக்கூடு சிக்கியது! Top News
[Thursday 2024-05-02 17:00]

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.



அனுரகுமாரவைச் சந்தித்தார் நோர்வே தூதுவர்!
[Thursday 2024-05-02 17:00]

நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.



மன்னாரில் கைதான சந்தேக நபரின் 9 கோடி 30 லட்சம் சொத்துக்கள் முடக்கம்!
[Thursday 2024-05-02 16:00]

யுக்திய தேடுதல் நடவடிக்கையின் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடி 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.



புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்! - மேதினத்தில் சூளுரைத்த சிறீதரன்.
[Thursday 2024-05-02 07:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



விக்கியின் 2 ஆவது விருப்பு வாக்கு யோசனை பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்தும்!
[Thursday 2024-05-02 07:00]

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.



ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டும்! Top News
[Thursday 2024-05-02 07:00]

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினம்! - அனுர சூளுரை.
[Thursday 2024-05-02 07:00]

முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.



எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்! - என்கிறார் மஹிந்த.
[Thursday 2024-05-02 07:00]

ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஈழவேந்தன் மறைவுக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்!
[Thursday 2024-05-02 07:00]

எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.



வடக்கில் வெப்பநிலை 42 பாகை செல்சியசை விட அதிகரிக்கும்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையானருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



இம்மாதக் கடைசியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Thursday 2024-05-02 07:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நாட்டின் மொத்த கையிருப்பு 05 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 07:00]

கடந்தமார்ச் மாதம் வரை நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா