Untitled Document
May 17, 2024 [GMT]
ஈழவேந்தன் மறைவுக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்!
[Thursday 2024-05-02 07:00]


எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

  

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழவேந்தன் ஐயா எமது தேசவிடுதலை வரலாற்றில் ஒர் பீஷ்மராக திகழ்ந்தவர். எமது தேசியத்தின் மீதும் தேசத்தின் மேலும் கொண்ட அசைக்க முடியாத பற்றுறுதியாலும் தனது ஆழ்ந்த புலமையாலும் அறிவாற்றலாலும் சிறந்த பேச்சுவன்மையினாலும் சுமார் 75 ஆண்டுகளாக தேசவிடுதலைக்கு உரமூட்டி வளமூட்டியவர்.

ம.க கனகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட திரு.ஈழவேந்தன் அவர்கள் தனது சிறு பராயத்திலிருந்தே ஈழத்தமிழினத்தின் விடுதலைப்பயணத்தில் தந்தை செல்வாவின் பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டவர். அன்றைய காலத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக தந்தை செல்வா தலைமையிலான பல அறப்போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

இலங்கை மத்திய வைப்பகத்தில் உயர்பதவி வகித்த போது 1956 ல் சிறிலங்காவின் தலைமை அமைச்சரான இன வெறியர் பண்டாரநாயக்க அவர்கள் தமிழர்களை ஒடுக்க தனிச்சிங்கள சட்டத்தினை கொண்டுவந்து அனைத்து தமிழ் அரச பணியாளர்களும் கட்டாயமாக சிங்களம் கற்கவேண்டுமென திணித்தபோது தனது கொள்கைக்கு முன் தனது பதவியை துச்சமென எண்ணி தூக்கியெறிந்தவர்.

பதவிக்காகவும் பணத்துக்காகவும் தமது கொள்கைகளை கைவிடுகின்றவர்கள் மத்தியில் தனது கொள்கைக்காக தொழிலையே துறந்த இனமான செம்மல் ஈழவேந்தன் ஐயா.

தமிழின விடுதலைப்பயணத்தில் அறப்போர் காலத்திலும் மறப்போர் காலத்திலும் ஈழவேந்தன் ஐயாவின் பங்களிப்பு அளப்பரியதாக அமைந்தது. தனது கூர்மையான அறிவாற்றாலாலும் தமிழினத்தின் நீண்ட வரலாற்றியல் அறிவாலும் நாவன்மையினாலும் மக்களின் உள்ளங்களை தொடும் பல எழுச்சியுரைகளையும் பல சொற்பொழிவுகளையும் ஆற்றி விடுதலை பரப்புரை பீரங்கியாக திகழ்ந்தவர்.

அழகு தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் புலமை மிக்க பேச்சாற்றல் உள்ளவராக திகழ்ந்தவர். தனது எழுத்தாற்றலினால் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். ஈழத்தமிழின வரலாற்றில் வட்டுக்கோட்டை பிரகடனம் மிக உன்னதாமான வரலாற்று பிரகடனமாகும்.

அப்பிரகடனத்தின் மூலம் தனிநாட்டுக்கான மக்கள் ஆணையினை பெற்று நாடாளுமன்றம் சென்ற தமிழ் தலைமைகள் பேரினவாதத்தின் தந்திரமிக்க சதிவலையில் சிக்கி தடம்மாறி மக்களாணையினை மறந்து கொள்கையினை கைவிட்டபோது தமிழர் விடுதலை கூட்டணிக்குள் தமிழீழ விடுதலைக் கூட்டணி எனும் அணியினை கோவை மகேசன், கவிஞர் காசியானந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோருடன் இணைந்து உருவாக்கி கொள்கை மாறிய தலைவர்களை கண்டித்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினையும் அதன் கொள்கையினையும் உருவாக்கப்பட்ட நோக்கத்தினையும் சிதறடிப்பதை தடுக்க அரும்பாடுபட்டவர்.

(1983 ம்)ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு இனவன்முறையில் பாதிக்கப்பட்டு இவர் இந்தியாவுக்கு செல்ல வேண்டியேற்பட்டது. அங்கு சென்றும் ஈழ அகதிகளுக்காக குரல் கொடுத்தவர். அவர் தனது கொள்கையில் உறுதியுள்ளவராகவும் விலைபோகாதவாரகவும் இருந்ததன் விளைவாக இந்தியாவின் சதியினால் 2001ல் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

இதனால் பல்வேறு இடர்களையும் அச்சுறுத்தல்களையும் துன்பங்களையும் சவால்களையும் சந்தித்த போதும் மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பதனைப்போல் தனது விடுதலைக்கு உரமூட்டும் பணியினை மீண்டும் ஆரம்பித்தவர்.

விடுதலை போராட்டத்தின் தார்மீக நியாயத்தினையும் அதன் உன்னதத்தினையும் தனது பட்டறிவின் மூலமும் அறிவாற்றலினாலும், உரைகள், மக்கள் சந்திப்புக்கள் மற்றும் எழுத்துக்கள் மூலமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவர். 2004 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 2006 வரை செயற்பட்டவர். 2009 இனவழிப்பின் பின்னர் மூப்பினால் ஏற்பட்ட உடல் இயலாமையிலும் சர்வதேச அரங்கில் இன அழிப்பிற்கு நீதி வேண்டி பல்வேறுபட்ட அறவழிப்போராட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தவர்.

இவ்வாறாக எமது இன விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழவேந்தன் ஐயா அவர்கள் ஓர் தனிமனித சரித்திரமாக திகழ்ந்தவர். அவர் இவ்வுலகில் இருந்து மறைந்தாலும் ஈழத்தமிழர்களின் உள்ளங்களில் நீக்கமற நிலைத்திருப்பார். தாயக கனவுடன் மீளா துயில் கொண்ட ஈழவேந்தன் ஐயா அவர்களுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தனது இறுதி வணக்கங்களை செலுத்துவதுடன் எமது தேசத்தின் விடுதலைக்காய் தொடர்ந்தும் போராடுவோம் என உறுதி எடுத்து கொள்கின்றோம் என்றுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா