Untitled Document
May 15, 2024 [GMT]
தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை இருவரை பதம் பார்த்தது!
[Sunday 2016-02-07 22:00]

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 2 பேரை கடித்து குதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் ஒரு சிறுத்தை நடமாடுவதை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது அதிகாலை நேரத்தில் ஒரு சிறுத்தை பள்ளிக்குள் புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.


நோர்வேயில வசிக்கும் பூனை யுவதி நானோ !
[Thursday 2016-02-04 19:00]

நோர்வே நாட்டில் 20 வயதான நானோ என்ற பெண் வசிக்கிறார். இவர் தன்னுடைய 16-வது வயதில், தான் ஒரு பூனை என்பதை உணர்ந்துகொண்டார். நானோவால் வாசனையை மிகத் துல்லியமாக நுகர முடியும். இருட்டில் கூட மிக நன்றாகப் பார்க்க முடியும்.


பெண்
[Thursday 2016-02-04 13:00]

கொலம்


அமெரிக்காவில் பிடிபட்ட 102 பவுண்ட்ஸ் எடைகொண்ட இரால்!
[Wednesday 2016-02-03 19:00]

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கொமமோசஸ்ஸா பகுதியில் உள்ள கடற்தொழிலாளி ஒருவர் 102 பவுண்ட்ஸ் எடை கொண்ட இராலை பிடித்துள்ளார் இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படகிறது தான் பிடித்துள்ள பெரிய இறாலை அவர் கையில் வைத்திருப்பதைக் காணலாம்.


சாவகச்சேரியில் 7 கிலோ தங்கக்கட்டிகளுடன் சிக்கிய பெண்! Top News
[Tuesday 2016-02-02 19:00]

தலா 100 கிராம் நிறையுடைய 70 தங்க பிஸ்கட்களுடன் பெண் ஒருவர் இன்று அதிகாலை சாவகச்சேரியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்க கட்டிகளின் மொத்த நிறை 7 கிலோ கிராம் என்பதுடன் அவற்றின் பெறுமதி 39,340,000.00 ரூபாய் (சுமார் 4 கோடி) என்று பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.


குடியரசு தினத்தன்று மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த காம கொடூரன் !
[Friday 2016-01-29 13:00]

மத்தியபிரதேச மாநிலம் ரசூல்பூர் கிராமத்தில் கடந்த குடியரசு தினத்தன்று சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து ஒரு பெண்ணின் முணங்கல் சத்தம் கேட்டதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் அந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் அந்த சாக்கு மூட்டையினுள் ஒரு இளம் பெண் அரை நிர்வாண கோலத்தில் குற்றுயீராக கிடந்தை பாரத்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


துன்னாலையில் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு! Top News
[Thursday 2016-01-28 19:00]

வடமராட்சி துன்னாலை வடக்கு பகுதியில் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காணியை துப்பரவு செய்யும் போது 5 மீட்டர் நீளமான மலைப்பாம்பு நகர்வதை அவதானித்துள்ளார். அச்சமடைந்த அவர் உடனடியாக உதவிக்கு சிலரை அழைத்துள்ளார். மலைப்பாம்பை உயிருடன் பிடிக்க அவர்கள் முயன்ற போதிலும் அந்த முயற்சி கைகூடாத நிலையில் அவர்கள் அதனை மண்வெட்டியால் வெட்டிக் கொன்றனர்.


முதலாளிகளை துண்டு துண்டாக வெட்டி கொன்ற செவிலித்தாய்!
[Tuesday 2016-01-26 22:00]

பிரான்ஸ் நாட்டில் செவிலித்தாயின் பராமரிப்பில் இருந்த 2 மாத குழந்தை இறந்ததை தொடர்ந்து, அதை மறைக்க குழந்தையின் பெற்றோர்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த செவிலித்தாயிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஒரு குடியிருப்பில் Ying Wang மற்றும் Liangsi Xui என்ற பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. குழந்தையை பாதுகாப்பாக பராமரிக்க ஒரு செவிலித்தாயை நியமிக்க எண்ணிய பெற்றோர்கள் Hui Zhang(34) என்ற பெண்ணை நியமித்துள்ளனர். இந்நிலையில், செவிலித்தாயின் பராமரிப்பில் இருந்த அந்த குழந்தை ஒரு நாள் திடீரென இறந்து விடுகிறது.


தேனிலவுக்காக அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரிய பெண் !
[Tuesday 2016-01-26 21:00]

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை என மேற்படி பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இப் பெண் 30 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரின் கணவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் தேனிலவுக்காக துருக்கிக்கு தன்னை அழைத்துச் செல்வதாக திருமணத்துக்கு முன்னர் தனக்கு வாக்குறுதி அளித்தார் எனவும் அவ் வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை எனவும் மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.


பெண்ணின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட 8 கிலோ கல்! Top News
[Tuesday 2016-01-26 19:00]

மலையகத்தில், அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இன்று மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம், எட்டு கிலோ எடையுள்ள கல் அகற்றப்பட்டுள்ளது. வயிற்று வலியால் நீண்ட காலமாக அவதியுற்று வந்த பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிகிச்சைக்கென சென்றுள்ளார். இவரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் 6 பேர் கைது:
[Tuesday 2016-01-26 19:00]

கொச்சி துறைமுகநகர் கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்து குடி வந்தனர்.இவர்களை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் மிரட்டி வந்தனர். இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், நண்பர்களிடம் கூறி அழுதார். அவர்கள் அந்த பெண்ணின் கணவரை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். போலீசாரிடம் அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரில், வாலிபர் கள் வீடு புகுந்து தன்னை தாக்கி வெளியே அனுப்பி விட்டு மனைவியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து விட்டதாக கூறி இருந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த புகாரை ரகசியமாக விசாரித்தனர். இதில், கொச்சி துறைமுக நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவரின் மகன் இஜாஸ் (வயது 19) தலைமையில் அவரது நண்பர்கள் அல்தாப் (20), அமல், ஜான் பிரிட்டோ (19), கிறிஸ்டி (18), கிளிப்டன் (18), சஜித் (20) ஆகிய 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.போலீஸ்காரரின் மகன் இஜாஸ் போலீஸ் நிலையத்தில் தனக்கு இருக்கும் தொடர்பை பயன்படுத்தி அந்த தம்பதியை மிரட்டியதோடு, பெண்ணையும் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்தது தெரிய வந்தது.


மட்டக்களப்பு - பாண்டிருப்பு கடற்கரையில் ஒதுங்கியுள்ள டொல்பின்:
[Tuesday 2016-01-26 19:00]

பாண்டிருப்பு கடற்கரையில் இன்று 26.01.2016 காலை மீன் ஒன்று கரையில் ஒதுங்கியுள்ளது சுமார் 6அடி நீளம் கொண்ட இந்த மீன் டொல்பின் இனத்தை சேர்ந்ததாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்த போதும் டொல்பின் என உறுதியாக கூறமுடியாமல் உள்ளது என செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


இரண்டாம் உலகப்போரில் விமானியாக இருந்த ஒரு இலங்கைத்தமிழன்: Top News
[Sunday 2016-01-24 23:00]

கனடாவின் டொரேண்டோவில் வசிக்கும் பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் இலங்கையின் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றிய இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதியை பேட்டி எடுத்துள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.


பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை! - ஏன்? எதற்க்கு?
[Saturday 2016-01-23 19:00]

எல்-சல்வடோர் நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுளம்பினால் பரவும் நோய் நிலையொன்றினால் பிறக்கும் குழந்தைகள் , தீவிர குறைபாடுகளுடன் பிறப்பதை கருத்தில் கொண்டே அந்நாட்டு அதிகாரிகள் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பமாவதை தடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.


மனைவியை பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோக கூறிய பஞ்சாயத்து!
[Thursday 2016-01-21 23:00]

மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு கிராமத்தை சேர்ந்தவர் தீபக் போர் மற்றும் அவரது மனைவி . இவர்கள் கோந்தாலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் தங்கள் சாதி சங்கம பஞ்சாஸ் என்ற பஞ்சாயத்தில் இருந்து 2 வருடங்களுக்கு முன் ரூ. 9 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். இது வரை பஞ்சாயத்துக்கு ரூ.2.5 லட்சம் கட்டி உள்ளனர்.தற்போது அவரது சாதி சங்கம் ரூ. 6 லட்சத்தை விரைவாக கொடுக்க கேட்டு கொண்டது. ஆனால் அந்த பணத்தை கொடுக்க தீபக்கும் அவரது மனைவியும் மறுத்து உள்ளனர். இதை தொடர்ந்து அந்த பஞ்சாயத்து அவர்களை ஒதுக்கி வைத்தது.


குளிர்சாதன பெட்டியினுல் மூச்சுத்திணறி 5 குழந்தைகள் உயிரிழப்பு!
[Thursday 2016-01-21 22:00]

தென் ஆப்பிரிக்காவில் குளிர்சாதன பெட்டியினுல் மூச்சுத்திணறி 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள குழந்தைகள் 3 வயதிற்கும் 7 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாடுவதற்காக குளிர்சாதன பெட்டியினுள் சென்றுள்ள நிலையில் ,குளிர்சாதன பெட்டி திடீரென செயல் இழந்துள்ளதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடமொன்று தெரிவித்தது. பல மணித்தியாலங்களுக்கு பின்னர் குறித்த குழந்தைகளை தேடும் பொழுது குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் 20 வயது மனைவியின் மூக்கை அறுத்த கணவன்!
[Wednesday 2016-01-20 01:00]

ஆப்கானிஸ்தானில் கணவர் ஒருவர் தனது 20 வயதுடைய மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் உள்ளது. குறித்த நபர் வேறொரு மற்றொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்னர் முன் மனைவியை துன்புறுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தனது முதல் மனைவியை அடித்து கொடுமை படுத்திய கணவர், கையில் வைத்திருந்த சிறு கத்தியால் மனைவியின் மூக்கை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


திரிபுராவில் கணவருக்காக கலந்து வைத்த விஷ டீயை குடித்த 4 வயது மகள் பலி!
[Tuesday 2016-01-19 16:00]

திரிபுராவில் பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்ய டீயில் விஷம் கலந்தார். ஆனால் அந்த டீயை தவறுதலாக எடுத்துக் குடித்த 4 வயது மகள் பலியானார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவிந்த சர்தார் பாரா பகுதி. அந்த பகுதியைச் சேர்ந்தவர் சீதா ராணி தெப்பர்மா. அவர் தனது இரண்டாவது கணவரான கௌதம் தெப்பர்மாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அவர் டீயில் விஷம் கலந்து நேற்று கௌதமிற்கு அளித்துள்ளார். ஆனால் அந்த டீயை அவர் குடிக்கவில்லை. மாறாக விஷம் கலந்த டீயை சீதாவின் மகள்கள் மெர்ரி தெப்பர்மா(12) மற்றும் ஸ்ரியா தெப்பர்மா(4) ஆகியோர் குடித்தனர்.


குவைத்தில் ஆறு வயது சிறுவன் தனது நெடுநாள் ஆசையை நிறைவேற்றினான்: Top News
[Monday 2016-01-18 07:00]

ஹமாத் தாமர், ஒரு குவைத் தேச பிரஜையின் ஆறு வயது புதல்வன். நாட்பட்ட சிறு நோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன், தான் வீட்டில் இருக்கும் பொழுது ஆகாயத்தில் ஹெலிகாப்டர் செல்லும் சப்தம் கேட்டு விட்டால் குதூகலித்து அதில் செல்ல வேண்டும் என அடம் பிடிப்பதை வழக்கமாய் வைத்து இருந்து இருக்கிறான் இந்த சிறுவன். நாட்கள் கழிய சிறுவனது தகப்பனார் குவைத் உள்துறை அதிகாரிகளிடம் தனது மகனின் விருப்பத்தை விண்ணப்பமாய் வைக்க உள்துறை அதிகாரிகளும் மேலதிகாரிகளுக்கு தகவலை கொண்டு சென்றதின் பேரில் அந்த சிறுவனின் நெடுநாள் ஆசையான ஹெலிகாப்டரில் பறப்பதை நிறைவேற்றிக் கொடுத்து இருகிறார்கள் குவைத் தேசத்தின் உள்துறை அதிகாரிகள்.


உலகிலேயே அதிக வயதுடன் வாழும் மனிதராக இவர் கண்டு பிடிக்கப்பட்டார்!
[Saturday 2016-01-16 15:00]

பிரேசில் அரசு ஊழியர் ஒருவர் உலகிலேயே அதிக வயதுடன் வாழும் மனிதரை உயிருடன் கண்டு பிடித்து உள்ளார். அவரது வயது 131 அவர் தனது 69 வயது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் ஜோவா கொயிலோவை டி சூசா அவர எஸ்டிரோ டு அல்சாண்ட்ரா என்ற ஒரு தொலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் அவருடன் அவரது 69 வயது மனைவியும் 16 வயது பேத்தியும் உள்ளனர். தெற்கு பிரேசிலின் சமூக பாதுகாப்பு ஊழியர் இவரை கண்டு பிடித்து உள்ளார். அவரது பிறந்த நாள் சான்றிதழை வைத்து அவர் 1884 ஆம் ஆண்டு மார்ச் 10 ந்தேதி பிறந்ததாக கண்டறியபட்டு உள்ளது.


மரணமான மாப்பிள்ளையை இறுதிச் சடங்கின்போது திருமணம் செய்து கொண்ட பெண்!
[Thursday 2016-01-14 19:00]

தாய்லாந்தில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீர் என மாரடைப்பால் மரணம் அடைந்துவிட இறுதிச் சடங்கின்போது அவரையே திருமணம் செய்து கொண்ட பெண்ணை பலரும் பாராட்டியுள்ளனர்.தாய்லாந்தில் உள்ள சசோயிங்சாவ் மாகாணத்தைச் சேர்ந்தவர் நான் திப்பராத். அவருக்கும் ஃபியட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஃபியட் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.ஃபியட்டின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த நான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஃபியட்டை முறைப்படை திருமணம் செய்து கொண்டார்.


அமெ
[Wednesday 2016-01-13 12:00]

அமெ


113 வது வயதில் பாட்டி மரணம் - இறுதி சடங்கில் 100 பேரப்பிள்ளைகள் !
[Tuesday 2016-01-12 14:00]

தமிழ்நாடு - தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த 113 வயது பாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகளில் அவரது 100 பேரப்பிள்ளைகள் கலந்து கொண்டனர். இது குறித்து பாட்டியின் 65 வயது பேரன் வெங்கடாசலம் (வயது 65) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூறியதாவது - 113 வயது பாட்டியின் பெயர் கிருஷ்ணாம்மாள் சேலம் மாவட்டம் சவூரியூரில் மே 26, 1902, ஆண்டு பிறந்தவர் பின்னர் சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த தாத்தா முனுசாமியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மகள் தான் சரஸ்வதி இவரில் இருந்து தான் எங்கள் தலைமுறை தொடங்குகிறது. கிருஷ்ணம்மாள் பாட்டி வாழும் காலம் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.அதற்கு காரணம் அவரது உணவு மற்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்தான்.அவ்ர்ஒரு காய்ச்சல் தலைவலி என எந்த நோயினாலும் பாதிக்கபட்டது கிடையாது. என கூறினார்.


இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
[Monday 2016-01-11 17:00]

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே, ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும். சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.


உடற்பயிற்சி செய்வதையே ஒரு நிமிட சாதனையாக்கியுள்ளார் இவர்! Top News
[Monday 2016-01-11 14:00]

சாதரணமாக தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது உடலுக்கும், மனதிற்கும் நன்மை பயக்க கூடிய ஒன்று. ஆனால் இங்கு ஒருவர் உடற்பயிற்சி செய்வதையே சாதனையாக்கியுள்ளார் அந்த உடற்பயிர்ச்சியிலேயே அசாதாரணமான திறமையை வெளிபடுத்தியிருக்கிறார் 40 பவுண்டு எடையுள்ள பேக்கை முதுகில் சுமந்து கைகளை மடக்கி இவர் செய்திருக்கும் பயிற்ச்சி பாராட்டுக்குரியது. இந்த சாதனையை ஒரு நிமிடம் விடாமல் செய்து கின்னசில் இடம் பிடித்துவிட்டார் ! இதுவரை செய்து இருந்த சாதனையை முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இவர் செய்த உடற்பயிற்சியை நீங்களும் பாருங்கள்.


அதிகமாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில்..? - எதிலுமே முதலிடம்தான்!
[Monday 2016-01-11 11:00]

எந்நாட்டு மக்கள் அதிகளவில் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் போன்றவை குறித்த ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.


தோஷம் இருப்பதாக கூறி ஏமாற்றி 40க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
[Monday 2016-01-11 10:00]

தமிழ்நாடு - கோவையைச் சேர்ந்த வாலிபர் தோஷம் இருப்பதாகவும் இதைக் கழிக்கவேண்டும் என்றும் கூறி ஏமாற்றி 40க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற ஒரு வாலிபர் மாணவியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அழைத்துச் சென்றார். பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து விசாரித்த போது மாணவியை கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.


நேபாலில் நாளொன்றிற்கு டொலர் ஒன்றுடன் வாழும் தம்பதியர்!
[Monday 2016-01-11 07:00]

பெரும்பாலான பிரிட்டிஷ் கொலம்பிய இளம் சமுதாயத்தினர் கட்டணங்களை செலுத்த திண்டாடும் வேளையில் தம்பதியர் இருவர் ஒரு வருடத்திற்கும் மேலாக நாளொன்றிற்கு ஒரு டொலர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியா, ஓக்கநாகன் என்ற இடத்தை சேர்ந்த டானிக்கா மற்றும் நேதன் றெயிட் இருவரும் திருமணம் செய்து நான்கு வருடங்களின் பின்னர் 2014ல் நேபால் சென்றனர். எளிமையான சாகசம்மிக்க வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையில் சென்றனர். நேபால் மக்களிடமிருந்து தாங்கள் ஏராளமான விடயங்களை கற்று கொண்டதாக தெரிவித்துள்ளனர். அனைவரும் ஒன்றாக சமைக்கின்றனர், ஒன்றாக ஆடைகளை கழுவுகின்றனர் சேர்ந்த ஆடிப்பாடுகின்றனர். இவை அனைத்தும் குடும்பம் ஒன்றாக இணைந்து ஐக்கியமாக இருக்க வழி வகுக்கும் என நேபால் மக்கள் கருதுகின்றனர் என ஸ்கைப் மூலம் CTVசெய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா