Untitled Document
April 28, 2024 [GMT]
செக்ஸ் மூலமும் பரவக்கூடியதாம் ஜிக்கா வைரஸ்: - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
[Thursday 2016-01-28 19:00]

தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் ஜிக்கா வைரஸ் பரவி வருகிறது. ஜிக்கா வைரஸால் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை வள்ர்ச்சி பாதிப்பு அடைந்து அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள். இதனால் தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தென் பசிபிக் கடலில் 118 தீவுகளை உள்ளடக்கிய பிரெஞ்சு பாலினேசியாவைச் சேர்ந்த 44 வயது நபரின் விந்தணுவில் ஜிக்கா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கொலரடோவைச் சேர்ந்த விஞ்ஞானியான பிரையன் டி. ஃபாய் செனகலுக்கு சென்று வந்த பிறகு அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.


நாட்டு மருந்து மூலம் அல்சரை விரட்டலாமா.?
[Thursday 2016-01-28 06:00]

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.


பெண்களின் கைகளை வைத்தே அவர்களை பற்றி சொல்லிவிடலாமாம்!
[Wednesday 2016-01-27 22:00]

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மிருதுவான கைகள் :

கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

வறட்சியான கைகள் :

கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.


மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா!
[Wednesday 2016-01-27 22:00]

மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த இந்த பூத உடல் உன்று. மற்றொன்று கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் ஆகும். நாம் இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிக்கிறோம். நமது நன்மை, தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ செல்கிறோம் எனவே மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பது நம்ப்பிக்கை,


"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?" - ஞாபகமறதி..? மூளையை சுறுசுறுப்பாக்க என்ன வழி ?
[Wednesday 2016-01-27 19:00]

"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?" "என்னாச்சு! அம்மா கடைக்குப் போகச் சொன்னாங்க, கடைக்கு வந்துட்டோம், என்ன வாங்கணும்னு மறந்திடுச்சே..." "இன்னிக்குத்தானே படிச்சோம் அதுக்குள்ளே மறந்துபோச்சே!" "வண்டி சாவிய எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லியே!" அன்றாடம் இதுபோன்ற எண்ணங்கள் நமக்குத் தோன்றியோ அல்லது மற்றவர்கள் சொல்லியோ நாம் கேட்டுகொண்டிருக்கிறோம். பயப்பட வேண்டாம். இது நோய் இல்லை. எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதான். அதற்காக இதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று இல்லை. ஞாபகமறதியைக் கட்டுப்படுத்த, மூளை சுறுசுறுப்பாக இயங்க நான்கு வழிகளைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். 1. மெமரி டயட் அட! இது என்னடா புது டயட்டா! எனத் தலைப்பைப் படித்துவிட்டுச் சோர்ந்துவிடாதீர்கள். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் சாப்பிட்டால், ஞாபகமறதியைத் தவிர்க்கமுடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


திருமணம் செய்த புது மாப்பிள்ளைகள் கட்டாயம் சேர்க்கக்கூடாத உணவுகள்!
[Sunday 2016-01-24 20:00]

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சில வகையான உணவு களை சில காலம் தவிர்த்து விடுவது நல்ல‍து. காரணம் கீழ்க்காணும் உணவுகளை அவர்கள் உட்கொள்ளும் பொருட் டு அவர்களின் பாலியல் உணர்வினை சிதைத்து வீரியத்தையும் குறைத்து விடும். ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போ ஹை டிரேட், கொழுப்பு, வைட்ட மின்கள், தாதுப்பொருட்கள் செறி ந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக்கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலி யல் திறனும் சிதைந்துவிடும். சர்க்கரை, மதுபானங்கள், காப் பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் அதீத காதல் உணர்வு களால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவு களால் இச்சையை ஒரளவாவது கட்டுப் படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.


பூமியை விட 10 மடங்கு பெரிய கிரகம்! - சந்தேகத்தை தீாக்க நாசா தீவிரம்
[Thursday 2016-01-21 22:00]

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது.புளூட்டோ சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் அது உள்ளது. புளூட்டோதான் நமது சூரியக் குடும்பத்தில் கடைசி என்பது நாம் ரொம்ப காலமாக கூறி வருவது. ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போதைய புதிய கிரகமானது சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பூமியை விட 10 மடங்கு பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 வருடங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.


சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து!
[Wednesday 2016-01-20 22:00]

சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து இருப்பதாக நாற்பது லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சோதனைகளை ஆய்வுசெய்ததில் தெரியவந்துள்ளது. ஏட்ரியக் குறு நடுக்கம் அல்லது ஆங்கிலத்தில் ஏட்ரியல் ஃபிப்ரில்லேஷன் எனப்படும் இதயத் துடிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு, உயிராபத்து மிக்க இதய நோய்களும் மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகின்ற ஸ்ட்ரோக்-உம் ஏற்பட கிட்டத்தட்ட இரட்டை மடங்கு வாய்ப்பு அதிகம் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது. ஆனால், பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனை ஆண்களை விட மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏட்ரியக் குறு நடுக்கத்தை தடுப்பதற்கான மருந்துகள் அந்தப் பெண்களுக்கு பலனளிக்காமல் போவதும் இன்னொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.


கருவில் இருக்கும் குழந்தையிடம் எப்படி பேசலாம்..?
[Wednesday 2016-01-20 13:00]

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள் .

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்


அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் என்றால் என்ன?
[Tuesday 2016-01-19 22:00]

கொடிவகை செடியான இதனை காணாதவர்களே இருக்க முடியாது. இரண்டில் ஒரு வீட்டில் கண்டிப்பாக மணி பிளாண்ட் வளர்க்க தவறுவதில்லை. அதனால் பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்த நிலையில் மணி பிளாண்ட்டை காண நேரிடலாம். அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது. மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள். மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட்.


ஊட்டச்சத்து மிக்கதாம் வாழைப்பழத்தோல்! - அமெரிக்க நிபுணர் ஆய்வு
[Tuesday 2016-01-19 00:00]


பசலைக்கீரையும் ரத்தசோகையை தீர்க்கும!
[Wednesday 2016-01-13 19:00]

கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், டானிக் எதுவும் தேவையில்லை. பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். பசலைக்கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கும்.


ஏன் நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள்?
[Wednesday 2016-01-13 07:00]

நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. ஏன், நகம் கடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று தெரியுமா? நகம் கடிக்கும் பழக்கம் ஏன் மிகவும் மோசமானது என்று தெரியுமா? ஏனெனில் நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடக்கூடும். நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால், கை மொட்டையாகவும் ஒருவித அசிங்கமாகவும் இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருப்பதோடு, சிவப்பாகவும் இருக்கும். இதனால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். நகங்களைக் கடிப்பதால், நகங்கள் இல்லாமல் இருப்பதோடு, நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.


கடவுள் படைத்த பெண்ணும் தேவதையின் கேள்விகளும்!!
[Tuesday 2016-01-12 15:00]

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று,


இந்த ஆண்டு ஸ்மார்ட் கைபேசிகளில் வரவுள்ள 8 புதிய மாற்றங்கள்!
[Tuesday 2016-01-12 07:00]

கைத்தொலைபேசிகளின் வளர்ச்சி ஆண்டுதோறும் புதிய பரிணாமத்தை பெற்று வருகிறது. அந்த வகையில், 2015-ம் ஆண்டில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் பல புதிய மாற்றங்கள் காணப்பட்டன. குறிப்பாக, குறைந்த விலை மற்றும் மிட் ரேஞ்ச் போன்களின் வடிவமைப்பு, வேகத்திறன் ஆகியவைகள் மாறியிருந்தன. அதேபோல், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பின்வருமாறு..


அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறிதான்!
[Monday 2016-01-11 18:00]

அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறிதான். சிலருக்கு சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளது. தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனை மட்டும் செய்தால், ஒரு சில நேரங்களில் தெரியாது. ரத்தத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும். பெண்களுக்கு யூரினரி இன்ஃப‌க்சன் என்பது பொதுவான பிரச்சனை. இதனால்கூட அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். எனவே, ஒரு மருத்துவரை அணுகி, முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.


பெண்களது ரத்தச் சோகையை போக்கவல்லது வெல்லம்! - உடல் வெளுக்கும், நகமும் வெளுக்கும்!
[Monday 2016-01-11 11:00]

உலகப்பரப்பில் இரத்தசோகையால் ஆயிரக்கணக்கான பருவப் பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. இரும்புச் சத்துக் குறைவுதான் இரத்தசோகைக்கு முக்கியக் காரணம், உடல் வெளுக்கும், நகமும் வெளுக்கும். முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள். பனைவெல்லத்தைவிடவும், கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரண்டும் சேரும் போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும்.


வெறும் தரையில் படுக்க கூடாது என்பது ஏன் தெரிமா..?
[Monday 2016-01-11 07:00]

நம் உடலின் வெப்பநிலை 37


ஒன்பது விசயங்களை பின்பற்றினால் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெறலாம்:
[Sunday 2016-01-10 18:00]

ஆஸ்துமா ஒவ்வாமையால் தான் பெரும்பாலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமாவை விரட்ட சில உணவுகளை தவிர்ப்பது அவசியம் என்கிறார்கள் வைத்திய நிபுனர்கள். அந்தவகையில் ஒன்பது விசயங்களை பின்பற்றனால் ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பின்பற்ற வேண்டியவை:

1. குளீர் சாதனப் பெட்டியில் வைத்த எந்தப் பொருளையும் சாப்பிடக்கூடாது.

2. வாரம் ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.

3. அவ்வப்போது குடல் சுத்தம் செய்தல் வேண்டும்.


முதுகு வலி பாதிப்பை தவிர்க்க சில வழிகள்:
[Saturday 2016-01-09 19:00]

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். இப்போது முதுகு வலியை சரிசெய்வற்கான சில எளிய சிகிச்சைகள் முறைகளை பார்க்கலாம்.


நமது மூளையைப் பாதிக்க நாமே செய்யும் 10 கெடுதல்கல்!
[Friday 2016-01-08 00:00]

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


டெங்கு சிக்குன் குனியா - பரப்பும் கொசுக்களுக்கு பூக்கள் அதிகமாக பிடிக்குமாம்!
[Thursday 2016-01-07 18:00]

டெங்கு, சிக்குன் குனியா நோய் களைப் பரப்பும் கொசுக்கள் பூக்கள் நிறைந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் முட்டையிடுகின்றன என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க வேளாண் துறை, புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து, ஏடீஸ் அல்போபிக்டஸ் வகை கொசுக்கள் மற்றும் அவை முட்டையிடும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பில் காப்மன், திமோதி டேவிஸ் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். ஏடீஸ் வகை கொசுக்கள், மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா ஆகியவற்றை பரப்புகின்றன. முட்டைகளை இடுவதற்காக கொசுக்களை பூக்கள் அதிகம் ஈர்ப்பது தெரியவந்துள்ளது. பட்டர்பிளை புஷ் வகை பூக்கள் உள்ள நீர்நிலைகளில் அதிக முட்டைகளை இட்டுள்ளன. இந்த ஆய்வு, கொசு உற்பத்தி யைக் கட்டுப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.


அதிக வேலையால் முதுகு வலியா! - இதோ இலகுவான வழி பற்றிய காணொளி Top News
[Thursday 2016-01-07 18:00]

நவீன யுகத்தில் அநேகமானோர் கணினியில் வேலை செய்வதாலும், நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் பலருக்கு முதுகு வலி என்பது பெரிய பிரச்சனையே! முதுகு வலியை நீங்களே இலகுவான பயிற்சி மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால் முதுகு வலியின் போது கால்கல் விறைப்புத் தன்மையை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு உள்ள தனிச்சிறப்புகள்!:
[Wednesday 2016-01-06 18:00]

2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த சிறப்புகள் என்னவென்று அறிந்து கொள்வோமா..? மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. அடுத்து இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது?
[Tuesday 2016-01-05 19:00]

சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது. இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.


உங்கள் Android போனில் pattern Lock/ Password ஆகியவற்றை மறந்து விட்டீர்களா?
[Tuesday 2016-01-05 19:00]

Pattern Lock அல்லது Password மூலம் Lock ஆகிய Android போனை இரண்டு வழிகளில் Unlock செய்யலாம். அவை இரண்டையும் கீழே தருகிறேன். முதலாவது வழிமுறை பொதுவாக அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதாவது உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட Google Account மூலமாக Reset செய்வது. உங்கள் போனில் போடப்பட்ட Password அல்லது Pattern Lock தெரியாத பட்சத்தில், ஒரு சில முறைகள் பிழையான Pattern Lock/ Password-ஐ வழங்கும் போது உங்கள் போனில் Forgot Pattern என்று ஒரு option வரும்.


புருவமுடிகளைத் திருத்துகிறோம் (THREADING)என்ற பெயரில் பெண்கள் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
[Tuesday 2016-01-05 08:00]

இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு! புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.


குழந்தையின் அழுகைக்கான காரணத்தை கண்டறியும் மொபைல் ஆப் அறிமுகம்:
[Sunday 2016-01-03 09:00]

குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தை கண்டறியும் புதிய மொபைல் ஆப் ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில், நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த 'ஆப்' குழந்தை ஏன் அழுகிறது? என்பதை தீர்மானிக்கிறது.

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா