Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கொலை மிரட்டல்: நடிகை சரண்யா மீது வழக்கு!
[Monday 2024-04-01 18:00]

பிரபல தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டு பெண் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். பிரபல தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வரும் சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஶ்ரீதேவி என்ற பெண் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில், நேற்றைய தினம் (31.03.2024) நடிகை சரண்யாவின் வாகனம் மீது வீட்டின் மதில் சுவர் கதவு உரசியதால், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து நடிகை சரண்யா மோசமான வார்த்தைகளால் தீட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஶ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

ஶ்ரீதேவியின் புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த புகாரை சரண்யா மறுத்துள்ளார், அத்துடன் தான் அவரை மிரட்டவில்லை என்றும் சரண்யா கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா