Untitled Document
May 3, 2024 [GMT]
உண்மையை மறைக்க முற்படும் தற்போதைய அரசாங்கத்துக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பா?
[Monday 2024-04-22 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காண்பிக்காமல் இருப்பதிலிருந்தும், உண்மைகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இதில் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதைய அரசாங்கத்துக்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காண்பிக்காமல் இருப்பதிலிருந்தும், உண்மைகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இதில் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதைய அரசாங்கத்துக்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

  

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபையும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை முற்றாக மறுப்பதாகக் தெரிவித்த பேராயர், தனது இயலாமைக்கு தானே தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு ஏனையோர் மீது குறை கூறுவது பொறுத்தமற்றது என்றும் சாடினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நினைவேந்தல் நிகழ்விலேயே பேராயர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் திருத்தலம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கொழும்பிலுள்ள ஷங்ரிலா, சினமன் கிரான்ட், கிங்ஸ்பெரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த துரதிஷ்டவசமாக தாக்குதல்களால் 273 அப்பாவி பொது மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்டது. இவர்களில் 82 சிறுவர்களும், 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்தோடு 500க்கும் மேற்பட்டவர்கள் சிறிய அல்லது பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்றும் அங்கவீனமுற்றவர்களாகவுள்ளனர். இந்த தாக்குதல்கள் நாட்டின் அரசியலுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியதோடு, பொருளாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை செலுத்தியது. அன்று வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இன்று வரை கட்டியெழுப்ப முடியாமலிருப்பதிலிருந்து அந்த தாக்குதல்கள் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளன என்பதை எமக்கு உணர்த்துகின்றன.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அப்போதைய அரசாங்கத்தினால் நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான குழுவொன்றும், பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவற்றின் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொறுப்பு உரித்தாக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்னர் நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசங்களில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களிலும், கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதும் தான் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாக கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். எனினும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மறுநாள் தன்னால் குறித்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று தொலைபேசியில் எனக்கு தெரிவித்ததை இங்கு நினைவு கூர்கின்றேன்.

அதன் பின்னர் அந்த அறிக்கையின் முதற் பகுதியை எமக்கு வழங்குவதை தாமதப்படுத்தியதோடு, ஏனைய பகுதிகளை வழங்காமலேயே இருந்தார். குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை மாத்திரம் நடைமுறைப்படுத்தி, தமது அமைச்சரவை அமைச்சர்கள் அறுவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தார். எவ்வாறிருப்பினும் எந்த வகையிலும் வழங்கிய வாக்குறுதிய நிறைவேற்றாத கோட்டாபய ராஜபக்ஷ எம் கண் முன்னே ஆட்சி காலம் நிறைவடைய முன்னரே அதனை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு 2021 ஜூலையில் கத்தோலிக்க ஆயர் பேரவை அனுப்பி கடிதத்துக்கு இன்று வரை பதில் கடிதம் கூட கிடைக்கவில்லை.

அதே போன்று 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆயர் பேரவையால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றதாகக் கூட பதில் கடிதமொன்று வழங்கப்படவில்லை. புதிதாக வெளிப்படுத்தப்படும் தகவல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இந்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதில் செயற்படும் விதமானது எமக்கு இந்த ஆட்சியிலும் நியாயம் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்த்துகிறது. இவை அனைத்தின் ஊடாகவும் பாரதூரமான சந்தேகமொன்று எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள உண்மைகளை மறைப்பதற்கு கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில நபர்களையும், நிறுவனங்களையும் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கமும் முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது என்பதைத் தவிர வேறொரு எண்ணப்பாட்டுக்கு எம்மால் வர முடியாது. அவர்களுக்கு இதனுடன் தொடர்பில்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது.

தாக்குதல்களின் பின்னணியில் அடிப்படைவாத முஸ்லிம்கள் காணப்படுகின்றமை உண்மை என்ற போதிலும், அவர்களின் பின்னால் வேறு சக்திகளும் இருக்கின்றமைக்கான சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையிலிருந்தும், சாட்சிகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இந்த தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான தேவை காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

வெளியாகியுள்ள புதிய தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமல், அவற்றை மறைப்பது கவலைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசியல் மற்றும் பாதுகாப்பு துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவரும் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றமையை கண்டிக்கின்றோம்.

கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் எமது கோரிக்கையை பொருட்படுத்தாமையின் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்கிற்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது. தாக்குதல்களின் இடம்பெற்ற போது சட்டமா அதிபராக பணியாற்றிய தப்புல டி லிவேரா 2021 மே 17ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில், தெரிவித்தவாறு இந்த தாக்குதல்களின் பின்னால் காணப்பட்ட பாரதூரமான சதி என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புகின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள நூலில், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபையும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளமை நியாயமற்ற காரணியாகும். தேர்தலுக்கு முன்னர் அவர் மீது நம்பிக்கை காணப்பட்டது என்பது உண்மையாகும். ஆனால் அதன் பின்னர் அவர் செயற்பட்ட விதம் அந்த நம்பிக்கையை முற்றாக இழக்கச் செய்தது. காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதில் சகல மதத்தவர்களும் பங்கேற்றனர் என்பதையும் அவர் மறந்து விடக் கூடாது.

தற்போதைய அல்லது இனிவரும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாகும். அவ்வாறில்லை எனில் அது இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். உண்மைகளை மறைத்து ஏனையோர் மீது குற்றஞ்சுமத்துவது நாட்டுக்கு நன்மையாக அமையாது. எமக்கான நியாயம் நிலைநாட்டப்படும் வரை எமது கோரிக்கைகளும், போராட்டங்களும் தொடரும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஊடக சுதந்திர பட்டியலில் 15 இடங்கள் சறுக்கியது இலங்கை!
[Friday 2024-05-03 17:00]

2024ம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்ட நிலையில், 15 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.



ஏப்ரலில் பணவீக்கம் அதிகரிப்பு!
[Friday 2024-05-03 17:00]

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது.



தமிழீழ இலட்சியத்தில் எவரும், எவரையும் தோற்கடிக்க முடியாது!
[Friday 2024-05-03 17:00]

தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் பெரும் நெருக்கடியில் இருக்கும் ஒரு காலகட்டத்தில், இவ்வாறானதொரு ஊடக சந்திப்பை மேற்கொள்ள வேண்டி இருப்பது தொடர்பில் - நான், உண்மையிலேயே பெரும் கவலை அடைகிறேன். ஆனாலும் எங்களுடைய மௌனம் தமிழினத்துக்கு மேலும் பேராபத்தை ஏற்படுத்திவிடலாம் என்னும் உந்துதலின் காரணமாக உண்மைகளை உரைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.



அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள்!
[Friday 2024-05-03 17:00]

ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



மனோ கணேசன்- பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் சந்திப்பு!
[Friday 2024-05-03 17:00]

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது, பிரான்சிய தூதுவருடன், தூதரக துணை தலைமை அதிகாரி திருமதி மாரி நொயெல்லா தூரிசும் உடன் இருந்தார்.



ஈழ வேந்தன்: காலத்தை முன்னுணர்ந்த தமிழ்த் தேசியப் போராளி!
[Friday 2024-05-03 17:00]

தமிழீழத் தேசிய விடுதலைப்போராளியும். நாட கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் ஐயா அவர்கள் காலம் ஆகிய செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு சிரம் தாழ்த்தி எமது மரியாதை வணக்கத்தை தெரிவிப்பதுடன், அவரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.



எரிவாயு விலைகள் போட்டிக்கு குறைப்பு!
[Friday 2024-05-03 17:00]

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை இன்று அறிவித்தார்.



நெடுங்கேணியில் கணவன் கொலை?- மனைவி உயிர் மாய்ப்பு!
[Friday 2024-05-03 17:00]

வவுனியா - நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை 37 வயதான அவரது மனைவி பரமேஸ்வரி, நஞ்சருந்திய நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



வீட்டு வாடகை செலுத்தவில்லை- ரம்புக்வெல்லவின் நாடாளுமன்ற சம்பளத்தில் பிடித்தம் செய்யுமாறு அறிவிப்பு!
[Friday 2024-05-03 17:00]

அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில், ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை- மறுக்கிறார் ரணதுங்க.
[Friday 2024-05-03 16:00]

தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



அச்சுவேலியில் வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
[Friday 2024-05-03 05:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த, வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை!
[Friday 2024-05-03 05:00]

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.



கட்டுநாயக்க விமான நிலைய விசா வழங்கும் பிரிவை இந்திய நிறுவனம் பொறுப்பேற்கவில்லை!
[Friday 2024-05-03 05:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.



வட இலங்கை சமாதானத்தை அனுபவிக்கிறதாம்!- சொல்கிறார் சொல்ஹெய்ம்.
[Friday 2024-05-03 05:00]

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு - 15ஆம் ஆண்டு நினைவு நாள்! Top News
[Friday 2024-05-03 05:00]

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திரவேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்டஎம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணிதிரள்வோம் வாரீர்.



உமா ஓயாவினால் மின்சார சபைக்கு தினமும் 80 மில்லியன் ரூபா மிச்சம்!
[Friday 2024-05-03 05:00]

உமாஓயா அபிவிருத்தி திட்டம் செயற்படத் தொடங்கியதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படுவதாக என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.



நள்ளிரவில் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை!
[Friday 2024-05-03 05:00]

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்ற அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



அனுரவின் மேதின கூட்டத்திலேயே அதிக சனம்! - என்கிறார் சம்பிக்க.
[Friday 2024-05-03 05:00]

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



இன, மதக் கலவரத்தை தடுத்தவர் பேராயர்!
[Friday 2024-05-03 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.



கனடாவில் முதியவர்களிடம் மோசடி செய்த இரு தமிழர்கள் கைது!
[Friday 2024-05-03 05:00]

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா