Untitled Document
May 3, 2024 [GMT]
ட்ரம்ப் வழக்கு விசாரணை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு!
[Saturday 2024-04-20 08:00]

டொனால்ட் டிரம்பின் குற்றவியல் விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்ற வளாகத்தில் திடீரென்று ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரவத்தை தன் மீது ஊற்றிக் கொண்ட அந்த நபர் அருகில் கூடியிருந்த செய்தி ஊடகங்கள் முன் துண்டு பிரசுரங்களை வீசியுள்ளார். அதன் பின்னரே தம்மீது நெருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தீக்கொளுத்திக்கொண்ட அந்த நபர் 37 வயதான Maxwell Azzarello என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் குற்றவியல் விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்ற வளாகத்தில் திடீரென்று ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரவத்தை தன் மீது ஊற்றிக் கொண்ட அந்த நபர் அருகில் கூடியிருந்த செய்தி ஊடகங்கள் முன் துண்டு பிரசுரங்களை வீசியுள்ளார். அதன் பின்னரே தம்மீது நெருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தீக்கொளுத்திக்கொண்ட அந்த நபர் 37 வயதான Maxwell Azzarello என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  

ட்ரம்ப் விசாரணை நடைபெறுவதால் நீதிமன்ற வளாகத்தில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே அந்த நபர் தீக்குளித்துள்ளார். இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தீயை அணைத்துள்ளனர்.

மேலும், அந்த நபர் ஒரு ஸ்ட்ரெச்சரில் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார், அவரது உடல் மிகவும் மோசமாக எரிந்துள்ளது என்றே கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

911 இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் கடந்த வாரத்தில் புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் இருந்து நியூயார்க் வந்தவர் என்றே தெரிய வந்துள்ளது.

நியூயார்க்கில் அவர் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை, புளோரிடாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அவர் நியூயார்க் நகரத்திற்குச் சென்றது தெரியாது என்றே கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை பொலிசார் விசாரித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



டான்பாஸில் தாக்குதல் தீவிரம்: அடுத்த கிராமத்தை பிடித்த ரஷ்யா!
[Friday 2024-05-03 06:00]

ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் இன்னொரு கிராமத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கு உக்ரைனில் உள்ள பேர்டிச்சி(Berdychi) கிராமத்தை தனது படைகள் கைப்பற்றியதாக வியாழக்கிழமை அறிவித்தது. டான்பாஸ் பகுதியில் ரஷ்யா சமீபத்தில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளதன் தொடர்ச்சியாக இது இருக்கிறது.



உடை விதிமீறல்: சவுதி பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டு சிறை!
[Friday 2024-05-03 06:00]

சவுதி அரேபியாவின் மனஹெல் அல்-ஓடாய்பி என்ற பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் 29 வயதான உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரும், செயற்பாட்டாளருமான மனஹெல் அல்-ஓடாய்பி(Al-Otaibi), பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது மற்றும் அதிகாரிகளால் "மோசமானது" என்று கருதப்படும் வகையில் உடை அணிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.



வேல்ஸ் கடற்கரையில் கிடந்த 32 வயது பெண்ணின் உடல்!
[Friday 2024-05-03 06:00]

பிரித்தானியாவின் வேல்ஸில் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸின் பெம்புரோக் டாக் (Pembroke Dock) அருகே உள்ள பென்னார் (Pennar) என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செவ்வாய் கிழமை மாலை 32 வயது பெண் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டது.



துபாயில் மீண்டும் கனமழை: சர்வதேச விமான சேவைகள் ரத்து!
[Thursday 2024-05-02 18:00]

துபாயில் மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மேலும், போக்குவரத்து வசதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கனடாவில் உடல் எடை குறைப்பு மருந்துக்கு அனுமதி!
[Thursday 2024-05-02 18:00]

கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடிய உடற்பருமண் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த உடல் எடை குறைப்பு மருந்து வகை கனடாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.



இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்ட பிரபல நாடு!
[Thursday 2024-05-02 18:00]

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.



கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

குடியுரிமை பெற்றும், அதாவது, கனேடிய குடிமக்களானபின்பும், கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமையன்று வெளியான McGill Institute for the Study of Canada என்னும் அமைப்பின் ஆய்வு முடிவுகள், கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கின்றன.



சூடான் உள்நாட்டுப் போர்: மண், இலைகளை உண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்!
[Thursday 2024-05-02 06:00]

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக அங்குள்ள மக்கள் மண், இலைகளை உண்டு உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சூடானில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே வெடித்த உள்நாட்டு போர், நாட்டை மோசமான பசி பட்டினியில் தள்ளியுள்ளது.



பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு!
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 14 வயது பள்ளி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் நேற்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியது.



நாளை லண்டன் மேயர் தேர்தல்: 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவில், லண்டன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை (மார்ச் 02) நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 107 உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தல், பல இடங்களில் பொலிஸ், குற்றப்பிரிவு கமிஷனர் தேர்தல் கூட இதனுடன் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு சற்று முன்னதாக நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலை, பொதுத் தேர்தலின் அரையிறுதிப் போட்டியாகவே கருதப்படுகிறது.



இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
[Wednesday 2024-05-01 16:00]

ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவதை எதிர்த்து, நிகராகுவா என்னும் மத்திய அமெரிக்க நாடு, ஐ.நா சபையின் ஒரு அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஜேர்மனி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவது, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயலாகும் என நிகராகுவா குற்றம் சாட்டியிருந்தது.



லண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2024-05-01 16:00]

பிரித்தானியாவில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லண்டனில் இந்திய வம்சாவளியினரான 25 வயதான சாகில் சர்மா தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.



சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: 19 பேர் பலி!
[Wednesday 2024-05-01 16:00]

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
[Wednesday 2024-05-01 16:00]

கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது. நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது.



காசாவில் அமெரிக்காவின் மிதக்கும் தளம்!
[Wednesday 2024-05-01 07:00]

அமெரிக்க இராணுவம் காசா உதவிக்காக மிதக்கும் தளத்தை கட்டமைத்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய தரைகடலில் மிதக்கும் தளத்தை கட்டுவதைக் காட்டும் படங்களை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இது காசா கடற்கரைக்கு அவசர உதவிப் பொருட்களை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



லண்டன் ஹெயினால்ட் பகுதியில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்!
[Wednesday 2024-05-01 07:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் வாள் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹெயினால்ட் டியூப் நிலையம் (Hainault Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது.



கனடாவில் மாயமான நபர் ஏரியில் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 07:00]

கனடாவில் காணாமல் போன நபரின் உடல் சென்ட் ஜார்ஜ் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ பிராந்திய காவல்துறை (OPP) செவெர்ன் டவுன்ஷிபில்(Severn Township) பகுதியில் உள்ள சென்ட் ஜார்ஜ் ஏரியில்(Lake St. George) காணாமல் போன ஒரு மனிதரின் உடலை மீட்டுள்ளது.



பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புக்கொண்ட நிறுவனம்!
[Tuesday 2024-04-30 18:00]

தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசியால் அபூர்வமாக பக்கள் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவத்துவங்கிய நிலையில், அதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.



வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல்!
[Tuesday 2024-04-30 18:00]

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது எளிதில் வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.



பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!
[Tuesday 2024-04-30 18:00]

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா