Untitled Document
April 29, 2024 [GMT]
வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்யும் திருமாவளவன்!
[Tuesday 2024-04-16 18:00]

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியின் விளிம்புக்கு சென்று திருமாவளவன் வெற்றி பெற்றார். அதேபோல இந்த ஆண்டும் கடும் சவால்கள் வரக்கூடாது என்பதற்காக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியின் விளிம்புக்கு சென்று திருமாவளவன் வெற்றி பெற்றார். அதேபோல இந்த ஆண்டும் கடும் சவால்கள் வரக்கூடாது என்பதற்காக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

  

அதுமட்டுமல்லாமல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகனும் உதவி செய்து வருகிறார். சிதம்பரம் மக்களவை தொகுதி நீண்ட காலமாகவே தனி தொகுதியாகவே இருந்து வருகிறது.

இந்த தொகுதியானது கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியும் உள்ளடக்கியது ஆகும்.

இந்த தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்திகாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இரவு பகலாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று காரில் எழுந்து நின்றபடியும், உட்கார்ந்த படியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

திருமாவளவனின் கால் இரண்டும் வீங்கிய நிலையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை வன்னி அரசு வெளியிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு: ராகுல் காந்தி உறுதி!
[Monday 2024-04-29 18:00]

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், எனவே தங்கள் தாலியை அவர்கள் அடகு வைக்க தேவையில்லை என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.



வேட்புமனு வாபஸ் பெற சிறிது நேரம் இருந்தபோது இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவில் சேர்ப்பு!
[Monday 2024-04-29 18:00]

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம், கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



"முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்" - தோற்றத்தால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்!
[Monday 2024-04-29 18:00]

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர் இது. உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, ​​98.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.



கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நீதிமன்றத்தின் தீர்ப்பு!
[Monday 2024-04-29 18:00]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?' - அதிமுக ஜெயக்குமார் கேள்வி!
[Monday 2024-04-29 06:00]

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்' - ராமதாஸ் கோரிக்கை!
[Monday 2024-04-29 06:00]

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



கட்டுப்பாட்டை இழந்த லாரி: தப்பிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு!
[Monday 2024-04-29 06:00]

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார்.



அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்: பரபரப்பில் குஜராத்!
[Sunday 2024-04-28 18:00]

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.



திக் திக் நொடிகள்: சென்னையை கலங்கடித்த சம்பவம்!
[Sunday 2024-04-28 18:00]

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



குழந்தையின்மை சண்டையால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
[Sunday 2024-04-28 18:00]

தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40) கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளராக உள்ளார்.



தமிழகத்தின் வெப்பநிலை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை!
[Sunday 2024-04-28 18:00]

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!
[Sunday 2024-04-28 08:00]

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.



குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!
[Sunday 2024-04-28 08:00]

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.



முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!
[Sunday 2024-04-28 08:00]

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.



மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்: 2 வீரர்கள் பலி!
[Saturday 2024-04-27 18:00]

மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருந்தது.



ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி!
[Saturday 2024-04-27 18:00]

மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2024 -ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.



விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்: ஆசிரியர்கள் செய்த செயல்!
[Saturday 2024-04-27 18:00]

தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகின.



தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து 50 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!
[Saturday 2024-04-27 18:00]

நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



நூதன மோசடியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் கைது!
[Saturday 2024-04-27 06:00]

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.



வெப்ப அலை முன்னெச்சரிக்கை: ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு!
[Saturday 2024-04-27 06:00]

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா