Untitled Document
September 21, 2024 [GMT]
திருமணம் செய்வதாக சுவிஸ் பெண்ணை ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது முறைப்பாடு!
[Tuesday 2024-04-16 15:00]



சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.

அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார். அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



இன்று ஜனாதிபதி தேர்தல்!
[Saturday 2024-09-21 05:00]

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.



வன்முறைகள் நடந்தால் முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்படும்!
[Saturday 2024-09-21 05:00]

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



தியாக தீபம் திலீபன் வரலாற்று ஆவணக் காட்சியகம் திறந்து வைப்பு! Top News
[Saturday 2024-09-21 05:00]

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.



ஜெனிவா தீர்மான இறுதி வரைவு ஒக்டோபர் முதல் வாரத்தில்!
[Saturday 2024-09-21 05:00]

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது.



வெட்டுப்புள்ளி வெளியானது!
[Saturday 2024-09-21 05:00]

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



கசியவிட்ட 3 பேர் பணி இடைநீக்கம்!
[Saturday 2024-09-21 05:00]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் விநியோகித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய தலைமை ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ரவி, ஷானியை கைது செய்யும் திட்டம் இல்லை!
[Saturday 2024-09-21 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.



மக்கள் ஒத்துழைத்தால் அமைதி ஏற்படும்!
[Saturday 2024-09-21 05:00]

அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஆதரவு வழங்கினால், அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



தொடர் கொலைகளுக்குப் பின்னால் தொடர்பு!
[Saturday 2024-09-21 05:00]

தெஹிவளை நெதிமால பகுதியில் நேற்று காலை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உள்ளூர் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் நெருங்கிய உறவினரான 45 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



போதையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சாரதி கைது!
[Saturday 2024-09-21 05:00]

தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டன - தேர்தலுக்கு ஏற்பாடுகள் தயார்! Top News
[Friday 2024-09-20 16:00]

ஜனாதிபதி தேர்தல் நாளை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.



நீளமான வாக்குச் சீட்டு - அதிகாரிகளுக்கு தாங்க முடியாத சுமை!
[Friday 2024-09-20 16:00]

மிக நீளமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 39 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறுவதால் வாக்குச் சீட்டு இரண்டே கால அடி வரை நீளமுள்ளதாக காணப்படுகிறது. அவற்றை இன்று பொறுப்பேற்ற தேர்தல் அதிகாரிகள் தூக்கிச் செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.



பவித்ரா, றோகித, சந்திரசேனவை கட்சியில் இருந்து நீக்கியது மொட்டு!
[Friday 2024-09-20 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது.



நாட்டை விட்டு வெளியேறினால் பசில் - விரைவில் திரும்புவாராம்!
[Friday 2024-09-20 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்றதாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார். அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் துபாய்க்குப் புறப்பட்டார்.



வவுணதீவில் கைக்குண்டுகள் மீட்பு!
[Friday 2024-09-20 16:00]

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாவட்டுவான் பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.



இன்று திறக்கப்படுகிறது திலீபன் ஆவணக் காட்சியகம்!
[Friday 2024-09-20 16:00]

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.



புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்!
[Friday 2024-09-20 16:00]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.



பால் புரையேறி 12 நாள் குழந்தை மரணம்!
[Friday 2024-09-20 16:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த எட்டாம் மாதம் 31ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.



சங்கிலி அறுத்த தம்பதி பிடிபட்டது!
[Friday 2024-09-20 16:00]

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.



9 அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்து நீக்கம்!
[Friday 2024-09-20 15:00]

தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்தார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா