Untitled Document
April 29, 2024 [GMT]
கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.

  

கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும் வெளியேற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது.

இத்தனை மருத்துவ குணம் கொண்ட கோவைக்காயை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோவக்காய்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 கரண்டி

மஞ்சள் தூள் - 1 கரண்டி

மிளகாய் தூள் - 1/2 கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 கரண்டி

மிளகு தூள் - 1/2கரண்டி

கடலை மாவு - 2 கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

சீரகம் - 1 கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய கோவக்காயை அதில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன்பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், கசூரி மேத்தி மற்றும் தேவையான அளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனதன் பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

குழம்பு நன்றாக கொதிக்கும் நிலையில் வதக்கி வைத்துள்ள கோவக்காயை அதில் போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். கடைசியில் மிளகு தூளை தூவி இறக்கினால் மணமணக்கும் சுவையான கோவக்காய் குழம்பு தயார்.

  
   Bookmark and Share Seithy.com



வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் பயன் என்ன?
[Monday 2024-04-29 18:00]

தினமும் காலையில் வெறு வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். நெய்யில் பல வகையான நன்மைகள் உள்ளது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடும் பொழுது அது நம்முடைய செரிமானத்தை தூண்டச்சயெ்கிறது.



நீரிழிவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா?
[Sunday 2024-04-28 18:00]

நீரிழிவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் இன்று பெரும்பாலான நபர்களை தாக்கி பல சிக்கல்களை கொண்டு வருகின்றது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுவிட்டால், அவர்களின் உணவுமுறை முற்றிலும் மாறிவிடும்.



உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு!
[Saturday 2024-04-27 18:00]

பொதுவாக அனைவருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது மனமும் உடலும் பெரும்பாலான சமயங்களில் அதற்கு ஒத்துப்போவதில்லை. சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்கவிட்டால், அது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.



ஆடையே நனையும் அளவுக்கு வியர்க்குதா? - இந்த 4 வழிகள் தீர்வு கொடுக்கும்!
[Friday 2024-04-26 18:00]

பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதும் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் இயல்பான விடயமாகும். ஆனால் இது வேலைக்கு செல்லும் நபர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும். சில சமயங்களில் ஆடை முழுமையாக நனைந்துவிடும் அளவுக்கு வியர்வை வெளியேறும்.இந்த பிரச்சினைக்கு எவ்வாறு எளிமையாக தீர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



கோடை காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாதா? - பலரும் அறிந்திடாத உண்மை!
[Thursday 2024-04-25 18:00]

கால்சியம் சத்து அதிகம் கொண்ட தயிரை தினமும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தயிர் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.



தினமும் சக்கரை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றம்!
[Wednesday 2024-04-24 18:00]

நாம் நமது வாழ்க்கையில் அறுசுவைள் சாப்பிட்டாலும் சக்கரையை கொஞ்சம் அதிகமாக தான் உண்கிறோம். இந்த சக்கரை உண்பது சரியா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சக்கரை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்கான காரணம் சக்கரையில் அதிகளவு கொழுப்பு இல்லாமல் இருந்தாலும் இதை உண்ணும் போது வேறு வழியில் நாம் நிறைய கலோரியான உணவுகளை உண்கிறோம்.



இட்லி, தோசை மாவு அரைக்கும் போது தயிர் சேர்த்து அரைத்துள்ளீர்களா?
[Tuesday 2024-04-23 18:00]

இட்லி, தோசை நாம் பொதுவாக காலையில் இலகுவாக செய்யும் ஒரு உணவு வகையாகும். இட்லி, தோசை மாவு அரைக்கும் போது அதில் நாம் ஏகப்பட்ட தானியங்களை சேர்க்கின்றோம். இதில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.



சரியான தூக்கம் இல்லையா? இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்!
[Monday 2024-04-22 18:00]

தினமும் சரியான தூக்கம் இல்லாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தூக்கமின்மை பிரச்சினை கவனம் செலுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கும் கடினமாக்கும். எரிச்சல், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.



மாம்பழத் தோல் டீ-ன் ஆரோக்கிய நன்மைகள்!
[Sunday 2024-04-21 18:00]

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு அடிமையானவர்கள் பலர், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மாம்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. விட்டமின் ஏ, பி6, சி மற்றும் இ நிறையவே உள்ளன, இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இப்பழம் செரிமானத்திற்கு உகந்தது. மாம்பழத்தில் உள்ள தாமிரம் ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.



நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை சட்னி!
[Saturday 2024-04-20 16:00]

பொதுவாகவே கீரையில் ஏகப்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக வல்லாரை இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் வல்லாரை பெரிதும் துணைப்புரிகின்றது. மனித மூளை நன்கு செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வல்லாரையில் செறிந்து காணப்படுகின்றது.



தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
[Friday 2024-04-19 16:00]

காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது. தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.



ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
[Thursday 2024-04-18 18:00]

ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.



கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday 2024-04-17 15:00]

கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது. கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.



சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
[Friday 2024-04-12 18:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழம்பு!
[Thursday 2024-04-11 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-04-10 18:00]

சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
[Tuesday 2024-04-09 18:00]

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா