Untitled Document
May 18, 2024 [GMT]
காலிமுகத்திடல் தாக்குதல் - மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு!
[Thursday 2022-05-12 06:00]


அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின்  உரிமைகளை மீறும் வகையில்,  கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், ரோஹித்த, பவித்ரா, சனத் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் உரிமைகளை மீறும் வகையில், கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், ரோஹித்த, பவித்ரா, சனத் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தன்னையே முறைப்பாட்டாளராக பெயரிட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக ( private plaint) அதனை அவர் இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கின் பிரகாரம், இவ்வழக்கின் சந்தேக நபர்களாக ஜோன்ஸ்டன் பெர்னாடோ,சமத் நிஷாந்த, சமன்லால் பெர்னான்டோ, மஹிந்த ராஜபக்ஷ,நாமல் ராஜபக்ஷ,டேன் பிரியசாத்,சுதத் ஹேவா பதிரன, சஞ்ஜீவ எதிரிமான,பவித்ரா வன்னியராட்சி, ரோஹித அபேகுணவர்தன (ரத்தரான்), மஹிந்த காந்தகம,லேகா காந்தகம, சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய,வசந்தா ஹதபான்கொட, சங்கீத் சில்வா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சந்திரகுமார, சிரேஷ்ட பொலிஷ் அத்தியட்சர் நிஷாந்த சந்திரசேகர,பொலிஸ் பொறுப்பதிகாரி சாகர லியககே, பொலிஸ் பொறுப்பதிகாரி குணரத்ன, ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத கூட்டமொன்றில் உறுப்பினராகவிருத்தல்,கலகம் ஏற்படுத்த ஒன்று கூடுதல், கலகத்தை அடக்க முற்பட்ட அரச சேவையாளர் மீது தாக்குதல் நடாத்தியமை அல்லது அவரது கடமைக்கு இடையுறு விளைவித்தமை, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மக்களை கோபப்படுத்தியமை, சட்டவிரோத கூட்டத்திற்காக கூலிக்கமர்த்தப்பட்டவர்களுக்கு தங்குமிடமளித்தமை, காயம் ஏற்படுத்தியமை, ஆபத்தான ஆயுதங்களில் அல்லது முறைமைகள் ஊடாக நபர்களை காயப்படுத்தியமை, வேண்டுமென்றே கடும் காயம் ஏற்படுத்தியமை,இடையூறு விளைவித்தமை, கட்டாயப்படுத்தியமை,பெண்களை கட்டாயப்படுத்தியமை,அனர்த்தம் ஏற்படுத்தியமை, அச்சுறுத்தியமை, அவசரகால சட்ட வர்த்தமானி இலக்கம் 2279,23 மற்றும் 2022.05.06 ஆம் திகதியிலான விதிமுறைகளின் கீழ் குற்றமிழைத்தமை,பொதுச்சொத்து துஸ்பிரயோக சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு ஆகியன 15 குற்றச்சாட்டுக்களாக வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன.

தண்டனை சட்டக் கோவையின் 140,144,149,150,154,314,315,316,315,332,342,345,409,486, ஆகிய அத்தியாயங்களின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

சி.சி.ரி.வி. காணொளிகள், ஊடகங்களில் வெளியான காணொளிகள் போன்ற 12 சான்றுப் பொருட்களையும், சாட்சியாளர்களின் பட்டியலும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு பயணத்தடை விதிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாருக்குப் பரிந்துரை செய்யுள்ளது.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் இவ்விடயத்தில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரிமாளிகையிலும் காலிமுகத்திடலிலும் வன்முறைத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைத் தூண்டியவர்கள் மற்றும் சதிசெய்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் பிரகாரம் உடனடியாகக் கைதுசெய்யவேண்டும் என்றும், இதன்போது அவர்கள் அரசாங்கத்தில் வகிக்கக்கூடிய பதவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தொடர்புகள் என்பவற்றின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் காண்பிக்கப்படக்கூடாது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில், நேற்று இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர், முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், சனத் நிசாந்த, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 14 பேரை சந்தேக நபர்களாக பெயரிட்டு சட்ட மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

19 விடயங்களை சுட்டிக்காட்டி முன் வைக்கப்பட்டுள்ள அதே முறைப்பாடு கோட்டை பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் முன் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதிகள் பிரதம நீதியரசர் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கும், பொலிஸ் ஆணைக் குழுவுக்கும் அனுப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்! - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு. Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2024!
[Saturday 2024-05-18 20:00]

எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.



மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வடக்கு -கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மன்னாரில் இன்று காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.



நல்லூரில் இனப்படுகொலை வரலாற்று ஆவண காட்சியகம்! Top News
[Saturday 2024-05-18 20:00]

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதத்தினால் நேர்ந்த இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவண காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக பிதிர்க்கடன் நிறைவேற்றல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை, பிதிர்க்கடன் நிறைவேற்றல் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!- பிரதான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு.
[Saturday 2024-05-18 04:00]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.



கோட்டாவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு!
[Saturday 2024-05-18 04:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்துக் சர்வதேச விசாரணையே தீர்வு! - உறவுகள் வலியுறுத்தல்.
[Saturday 2024-05-18 04:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட்டிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரம் - குமாரபுரத்தில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 04:00]

திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்! - நிமால் விநாயகமூர்த்தி
[Saturday 2024-05-18 04:00]

பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. "எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?" என்னும் ஏக்கத்துடன் எங்கள் மக்கள் மரண உலகின் கைதியானார்கள். உலகம் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பினோம் - எங்களால் முடிந்தது எல்லாம் செய்தோம் - இறுதியில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்னும் செய்தி எங்களுக்கு கிடைத்தது.



மூன்றாவது ஆண்டாக இன அழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சட்டமூலம்-104! Top News
[Saturday 2024-05-18 04:00]

தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் செயல்முறை. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கை அரசானது இனப்படுகொலையின் பாதையிலேயே திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது.



வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
[Saturday 2024-05-18 04:00]

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



வவுனியா இரட்டைக் கொலை - சாட்சிகளை அச்சுறுத்திய பெண் கிராம அலுவலர்!
[Saturday 2024-05-18 04:00]

வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



போர் என்பது வெற்றியல்ல - அது நாட்டினதும் மனித குலத்தினதும் தோல்வி!
[Saturday 2024-05-18 04:00]

போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும். 30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளது. வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.



தெல்லிப்பழையில் நாய் இறைச்சிக் கொத்து? - உணவகத்துக்கு சீல்.
[Saturday 2024-05-18 04:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!
[Friday 2024-05-17 16:00]

திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டுவதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்!
[Friday 2024-05-17 16:00]

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எலிசபெத் வேண்டாம்! - நிராகரியுங்கள் என்கிறார் கம்மன்பில.
[Friday 2024-05-17 16:00]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது டெலோ!
[Friday 2024-05-17 16:00]

தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா