Untitled Document
May 17, 2024 [GMT]
திருமணத்துக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியா?- அடிப்படை உரிமை மீறல்!
[Tuesday 2021-12-28 08:00]


திருமணம் என்பது இனம், மதம், மொழி, நாடு உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கு இருக்கக்கூடிய அடிப்படை மனித உரிமையாகும்.
அதற்கும் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறுமாறு வலியுறுத்துவதன் ஊடாக ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களிலும் அடிப்படை மனித உரிமைகளிலும் அரசாங்கம் தலையீடு செய்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

திருமணம் என்பது இனம், மதம், மொழி, நாடு உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கு இருக்கக்கூடிய அடிப்படை மனித உரிமையாகும். அதற்கும் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறுமாறு வலியுறுத்துவதன் ஊடாக ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களிலும் அடிப்படை மனித உரிமைகளிலும் அரசாங்கம் தலையீடு செய்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

  

அதுமாத்திரமன்றி விவசாய அமைச்சின் செயலாளரைப் பதவியிலிருந்து விலக்குவதன் மூலமும் ஜனாதிபதியின் செயலாளர் அவராகவே பதவியிலிருந்து இராஜினாமா செய்வதன் மூலமும் பொருளாதாரம் உள்ளடங்கலாகப் பல்வேறு துறைகள் சார்ந்தும் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வு கிடைத்து விடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அண்மைக்காலத்தில் அத்தியாவசியப்பொருட்களின் சடுதியான விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கைச்செலவு உயர்வடைந்திருப்பதனால், அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இதற்கு உலகசந்தையில் ஏற்பட்ட பொருட்களின் விலையதிகரிப்போ அல்லது சர்வதேச மட்டத்தில் உயர்வடைந்த பணவீக்கமோ காரணமல்ல. மாறாக அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களும் செயற்திறனற்ற பொருளாதார நிர்வாகமுமே நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கான பிரதான காரணங்களாகும்.

இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்ததுடன் அதன் விளைவாக நாட்டின் தேசிய உற்பத்தி வீழ்ச்சிகண்டுள்ளது.

அரசாங்கம் அரிசி உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையிலிருக்கின்றது. ஒவ்வொருவரும் தமது வீடுகளிலேயே அவசியமான மரக்கறி வகைகளைப் பயிர்செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினரொருவர் ஆலோசனை கூறுகின்றார். இத்தகைய ஆலோசனைகளைக் கூறுவதற்காக மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இம்முறை புதிய ஆண்டில் தொடக்கத்திலேயே நாடு பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, மேலும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த இருமாதங்களாக நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையில், அரசாங்கம் தற்போதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கவில்லை. அதேபோன்று நாட்டில் நிலவும் உரப்பிரச்சினைக்கும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இவையனைத்தும் அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான தோல்வியையே வெளிப்படுத்துகின்றன.

மேலும் அண்மைய காலத்தில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின்மீது பழிசுமத்தப்பட்டுவந்தது. இப்போது அவர் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்திருப்பதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்வதன் மூலம் பொருளாதார் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு துறைகளிலும் நிலவும் நெருக்கடிகள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடுமா? அடுத்த ஆண்டில் உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடும் என்று கூறிய விவசாயத்துறை அமைச்சின் செயலாளரைப் பதவி விலக்குவதன் ஊடாக அப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா? உண்மையில் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமே இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதியின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளரை பதவி விலகுமாறு மக்கள் கோரவில்லை. மாறாக 2022 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய மிகப்பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களைச் செய்யாமலிருக்கும் அரசாங்கத்தையே அவர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றார்கள்.

அடுத்ததாக வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்வதாயின் அதற்கு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டும் என்ற பதிவாளர் நாயகத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதென்பது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை உரிமையாகும். அதற்கு இனம், மதம், மொழி, நாடு உள்ளிட்ட ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்கள் ஓர் இடையூறாக அமையமுடியாது.

அவ்வாறிருக்கையில் வெளிநாட்டவரொருவரைத் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற மட்டுப்பாட்டை விதிப்பதன் ஊடாக பிரஜைகளின் அடிப்படை உரிமையில் அரசாங்கம் தலையீடு செய்கின்றது.

அதுமாத்திரமன்றி இத்தகைய மட்டுப்பாட்டை விதிப்பதற்கான காரணங்களாகக் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் மிகவும் நகைப்பிற்குரியவையாகவே இருக்கின்றன. நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசாங்கம் இவ்வாறான அநாவசியமான விடயங்களில் அவதானம் செலுத்திக்கொண்டிருக்கின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னமும் முடிவடையவில்லை என்றாலும்கூட, கடந்த சிலமாதங்களாகவே மக்கள் அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் முழுமையாகப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.

ஆகவே எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்க்கின்ற வருடமாக மாற்றிக்கொள்வதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுக்கின்றோம். மேலும் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவிற்குவருவதுடன் மாகாணசபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவுற்றிருக்கின்றது. அவற்றுக்கான தேர்தல்களைத் தாமதமின்றி நடாத்தவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கேள்வி ; எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 6 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் ; எத்தகைய செய்திகள் வெளியானாலும், யார் எத்தகைய ஆசைகளைக் கொண்டிருந்தாலும் அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மாத்திரமேயாவார். ஏனெனில் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் தலைவரையே நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானத்தின் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும் நாட்டிற்கும் நேர்ந்த கதியைப் பார்த்தோம். ஆகவே மீண்டும் அத்தகைய தவறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை என்று குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா