Untitled Document
May 14, 2024 [GMT]
ஓய்வூதிய வயதெல்லையை குறைக்க வேண்டும்!
[Thursday 2021-12-02 10:00]


வடக்கு, கிழக்கில், மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் காணப்படும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு முடிவுக்கான  வேண்டும். இதன் மூலமே தேசியப்பாடசாலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கில், மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் காணப்படும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு முடிவுக்கான வேண்டும். இதன் மூலமே தேசியப்பாடசாலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.

  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ ஓய்வூதிய வயதெல்லை 65 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்பார்வைக்கு இதனை நல்ல விடயமாக பார்க்கலாம். ஆனால் 20-22 ஆசிரியராக நியமனம் பெறும் ஒருவர் தனது வாழ்நாளில் 55 வயது, 60 வயது வரை உடல்ரீதியான உழைப்பை வழங்கி அவர் ஓய்வு பெறும் காலத்தில் இயற்கை மரணம் எய்துபவர்களின் கணக்கை பார்த்தால் 65 வயதுக்குள் இயற்கை மரணத்தை அடைபவர்கள் அநேகமானவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

அரச உத்தியோகத்தர்களில் ஆசிரியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள். எனவே ஓய்வூதிய வயது என்பது 55 வயதாக இருந்து கொண்டு விரும்பினால் 65 வயது வரை சேவை புரிய முடியும் என்ற திட்டமே இந்த நாட்டுக்கு பொருத்தமாக இருக்கும்.

2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் பலர் ஓய்வு நிலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 55 வயதிலே அவர்கள் ஓய்வுக்கு விண்ணப்பித்து அவர்கள் 5 வருடங்களுக்கு மேலும் நீடிப்பு கேட்டு 60 வயதிலே அவர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் தற்போது ஓய்வு பெறும் வயது 65 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் 2020 ஆம் ஆண்டிலே கொரோனாவை காரணம் காட்டி வேலை செய்ய முடியாது ஓய்வு பெற்ற இந்த ஓய்வூதியர்களும் தாங்கள் 65 வயது வரை சேவையாற்ற விரும்புவதாக விண்ணப்பித்தால் இந்த அரசு அவர்களையும் 65 வயதுவரை அனுமதிக்க வேண்டும். அதுதான் யதார்த்தம்.

கல்வி அமைச்சு. உயர்கல்வி அமைச்சு ,தேசிய கல்வி நிறுவகம்,பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டு திணைக்களம் ஆகியவற்றில் தமிழ் மொழி மூலமான செயற்பாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 வருடங்களை திரும்பிப்பார்த்தால் கல்வி அமைச்சில் 4 மேலதிக செயலாளர்கள் இருக்கின்ற போது ஒருவர் தமிழராக இருந்தார்.

ஆனால் இன்று கல்வி அமைச்சில் 9 மேலதிக செயலாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் ஒருவர் கூட தமிழராக இல்லை. ஒரு மேலதிக செயலாளரையாவது தமிழ் மொழிமூல மேலதிக செயலாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் கல்வி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களில் மொழி ரீதியான பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

கல்வித்துறையில் போதிய ஆளணிகள் இல்லை. கல்வி அமைச்சுக்கு நாம் செல்கின்றபோது தமிழ் மொழியில் பேச முடியாதுள்ளது. வேறு அமைச்சுக்களிலும் இதே நிலைதான். இது ஒரு பாரிய பிரச்சினை.

தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழ் மொழிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கென தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். இலங்கையின் கல்வி நிர்வாக சேவையில் கூட தமிழ் மொழிமூல ஆளணி பற்றாக் குறையாகவுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தேவையான கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளால் மூன்றில் இரண்டு பகுதியினரே இப்போதுள்ளனர்.

வடக்கை எடுத்துப்பார்த்தால் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 238 பேருக்கான வெற்றிடம் இருக்கின்றது. அங்கு இருக்கின்றவர்கள் மொத்த தொகை 136 இன்னும் 102 பேருக்கு அங்கு வெற்றிடம் உள்ளது.

இதேபோல் இலங்கை அதிபர்கள் சேவையில் 1,212 பேருக்கு வடக்கு மாகாணத்திலே தேவை இருக்கின்றது. ஆனால் அங்கு நியமிக்கப்பட்டிருப்பவர்கள் 972 பேர். இன்னும் 240 பேருக்கு வெற்றிடம் உள்ளது.

அதேபோல் இலங்கை ஆசிரியர் சேவையை சார்ந்தவர்களில் வடக்கு மாகாணத்திற்கு 18,286 பேர் தேவை.ஆனால் 16,987 பேர்தான் இருக்கின்றார்கள். இன்னும் 1,299 பேருக்கு வெற்றிடங்கள் உள்ளன.

இது கல்வி ரீதியான பெரும் விழுக்காடு தேசிய பாடசாலைகளின் பெருமை பற்றி கூறினீர்கள். 1,987 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு கல்வி அதிகாரம் ,சுகாதார அதிகாரம் வழங்கப்பட்டது.

இப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் 13 ஆவது திருத்தமும் கிடப்பில்போடப்பட்டு இந்த அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அதிகாரங்கள் பறிப்பில் ஒருவகைதான் இந்த தேசிய பாடசாலைகள் திட்டமாகும்.

இந்த தேசிய பாடசாலைகள் மூலம் நாட்டில் சாதிக்கப்பட்ட விடயங்கள் என்ன? முழங்காவில் தேசிய பாடசாலையில் என்ன முன்னேற்றம் நடந்துள்ளது? இந்த பாடசாலை தேசிய பாடசாலையாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகின்றன. இங்கு ஏற்பட்ட முன்னேற்றத்தை உங்களால் சொல்ல முடியுமா? ஏனைய பாடசாலைகளுக்கு கிடைத்த வசதிகள் கூட இந்தப்பாடசாலைக்கு கிடைக்கவில்லை.

இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகளில் இலங்கை அதிபர் சேவை 1 ஐ சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்யக்கூடிய பாடசாலைகள் 43 என சுற்றறிக்கை மூலம் சொல்லப்பட்டுள்ளன. இதில் எந்தவொரு தமிழ் பாடசாலையும் கிடையாது. அதேபோல் இலங்கை கல்வி நிர்வாக சேவை 1 ஐ சேர்ந்தவர்கள் அநேகமாக வலய கல்விப்பணிப்பாளர்களாக ,மாகாண கல்விப்பணிப்பாளர்களாக இருக்கின்றார்கள். கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகள் இந்த தரத்தை சேர்ந்தவர்கள் அதிகாரம் செலுத்த முடியும். இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள 40 பாடசாலைகளில் ஒரு பாடசாலைக்கூட தமிழ்பாடசாலை இல்லை.

மேற்கூறிய தரத்தை சேர்ந்த தமிழ் அதிபர் ஒரு தமிழ் பாடசாலைக்கு அதிபராக செல்ல முடியாத நிலைதான் உள்ளது. அதேபோல் இலங்கை கல்வி நிர்வாக சேவை 2 அல்லது 3 ஐ சேர்ந்தவர்கள் அதிபர்களாக கடமையாற்றக்கூடிய பாடசாலைகளாக 62 பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தான் 9 தமிழ் பாடசாலைகள் இலங்கை முழுவதிலுமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதான் தேசிய பாடசாலைகளின் தரங்கள். அப்படியானால் வடக்கில், கிழக்கிலே ஏனைய இடங்களில் உள்ள தமிழ் பாடசாலைகள் வளர்ச்சி பெற முடியும்? இது மிகப்பெரும் பாதகமான விடயம்.

எனவே இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு,கிழக்கில், மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் காணப்படும் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கு முடிவுக்கான வேண்டும். இதன் மூலமே தேசியப்பாடசாலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முடியும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடாது!
[Tuesday 2024-05-14 05:00]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ கட்டளை பிறப்பித்தார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபோதும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை. இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள்,இவர்களை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.



இனவாதப் பொலிசாரின் எடுபிடிகளாகியுள்ள நீதிமன்றங்கள்! - கஜேந்திரன் காட்டம்.
[Tuesday 2024-05-14 05:00]

வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.



ஜனாதிபதி ரணிலுடன் டொனால்ட் லூ சந்திப்பு! Top News
[Tuesday 2024-05-14 05:00]

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றுச் சந்தித்து கலந்துரையாடினார்.



விஞ்ஞான பரீட்சையில் நீக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து 12 புள்ளிகளுக்கான வினாக்கள்!
[Tuesday 2024-05-14 05:00]

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடப்பரப்பில் இருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சாத்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹிணி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.



ரஷ்யாவில் 600 இலங்கை தற்கொலை குண்டுதாரிகள்!
[Tuesday 2024-05-14 05:00]

ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால் ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என எதிரணி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.



கஞ்சி வழங்கியதற்காக கைதா? நாடு எங்கே போகின்றது? - விக்னேஸ்வரன் கேள்வி.
[Tuesday 2024-05-14 05:00]

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் கொழும்பிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.



பள்ளிமுனை கடற்பரப்பில் காற்றுடன் கடும் மழை - வள்ளம் கடலில் மூழ்கி மீனவர் பலி!
[Tuesday 2024-05-14 05:00]

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று மாலை வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் மூழ்கி கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ரஷ்யாவில் உயிருடன் எஞ்சியிருப்போரை இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு!
[Tuesday 2024-05-14 05:00]

ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது,இவர்களினால் அங்கு அனுப்பப்பட்டு ரஷ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் உயிருடன் இருப்பவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.



முறிகண்டியில் ஆணின் சடலம்!
[Tuesday 2024-05-14 05:00]

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குப் பின் பகுதியிலேயே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.



ரஷ்யாவுக்கு கூலிப்படையினரை அனுப்பும் மோசடிக்குப் பின்னால் உதயங்க வீரதுங்கவா?
[Tuesday 2024-05-14 05:00]

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பி.யான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்



முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் நள்ளிரவில் கைது!
[Monday 2024-05-13 17:00]

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையில் தொற்று நோய் அபாயம் - வெசாக்கிற்கும் தடை வருமா?
[Monday 2024-05-13 17:00]

தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார், அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.



கஞ்சிக்கு விதித்த தடை வெசாக் தன்சல்களுக்கும் பொருந்துமா?
[Monday 2024-05-13 17:00]

நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.



நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் அருகதை இலங்கை அரசுக்கு இல்லை!
[Monday 2024-05-13 17:00]

நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும், அச்சுறுத்தும் , கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சை விஞ்ஞானம், ஆங்கில பாட வினாத்தாள் சர்ச்சை! - அமைச்சர் விளக்கம்.
[Monday 2024-05-13 17:00]

க.பொ.த சாதாரண தர (சா/த) விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக இன்று தெரிவித்தார்.



கொழும்பு வந்தார் டொனால்ட் லூ!
[Monday 2024-05-13 17:00]

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வந்துள்ளார்.



தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே நல்லது!
[Monday 2024-05-13 17:00]

இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் சிறிதரன்!
[Monday 2024-05-13 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ''சிரட்டை ''ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.



மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஜீப்! - இளைஞனின் கால்கள் முறிந்தன.
[Monday 2024-05-13 17:00]

யாழ்ப்பாணம் - இலுப்பையடிச் சந்திப் பகுதியில் நேற்று மாலை ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீது பொலிஸ் தாக்குதல்!
[Monday 2024-05-13 16:00]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தற்போது பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். 08 வருடங்களாக நிலவி வரும் சம்பள பிரச்சினை, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா