Untitled Document
April 27, 2024 [GMT]
கிளிநொச்சியில் அதிர்ஷ்ட லாபச்சீட்டிழுப்பில் முதலிடம் பெற்றவருக்கான ஆட்டோ! Top News
[Thursday 2020-01-30 06:00]

யெர்மெனியை தலைமைக் காரியாலயமாக கொண்டு
இயங்கும் உதவும் இதயங்கள் அமைப்பின் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 26/1/2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் திட்டமிடல் பணியகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் அதிர்ஷ்ட லாபச்சீட்டிழுப்பில் முதலிடம் பெற்றவருக்கான ஆட்டோ இரண்டாம் பரிசான ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள் மூன்றாம் பரிசாக பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் மற்றும் ஆறுதல் பரிசாக பத்து துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொடிகாமம் நட்சத்திரமஹால் உரிமையாளரும் தொழிலதிபருமான (பிரான்ஸ்) த.பரமானந்தம் கலந்து கொண்டு முதல் பரிசில் பெற்றவருக்கான ஆட்டோவை வழங்கி வைத்தார். உதவும் இதயங்கள் நிறுவனத்தின் முற்போக்கு அணி உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யெர்மெனியை தலைமைக் காரியாலயமாக கொண்டு இயங்கும் உதவும் இதயங்கள் அமைப்பின் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 26/1/2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள உதவும் இதயங்கள் நிறுவனத்தின் திட்டமிடல் பணியகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் அதிர்ஷ்ட லாபச்சீட்டிழுப்பில் முதலிடம் பெற்றவருக்கான ஆட்டோ இரண்டாம் பரிசான ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள் மூன்றாம் பரிசாக பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் மற்றும் ஆறுதல் பரிசாக பத்து துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொடிகாமம் நட்சத்திரமஹால் உரிமையாளரும் தொழிலதிபருமான (பிரான்ஸ்) த.பரமானந்தம் கலந்து கொண்டு முதல் பரிசில் பெற்றவருக்கான ஆட்டோவை வழங்கி வைத்தார். உதவும் இதயங்கள் நிறுவனத்தின் முற்போக்கு அணி உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  

பிரதம விருந்தினர் உரையாற்றுகையில் உதவும் இதயங்கள் என்ற சொல் எல்லோருடைய இதயத்திலும் வராது சில இதயத்தில் இருந்து தான் உதிக்கும் உங்களுக்கு தெரியும் இன்றைய காலத்தில் உதவி செய்வதென்பது மிக அருகிவிட்டது பொதுநலம் மங்கி சுயநலம் உயர்ச்சியடைகின்ற காலம் இப்போ யாராவது பொது வேலையைச் சொல்லப் போனால் தடுக்கப் பார்ப்பார்கள் நவீன உலகத்தில் பிறருக்கு உதவி செய்தால் வேலைவெட்டி இல்லாதவன் என்றும் தாய் தந்தைக்கு உதவி செய்தாலும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் கூறுவார்கள் இன்று இந்த உலகில் எவ்வளவோ மனிதர்கள் இருந்தும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரிது வெளிநாட்டில் காசை உழைத்தாலும் அதை எப்படி உழைக்கிறார்கள் என்று இங்குள்ளவர்களுக்கு தெரியாது வெளிநாட்டில் காலையில் நல்ல குளிர் வெளிக்கிட முடியாது ஐம்பது அறுபது வயது ஆண்கள் பெண்கள் தலை எல்லாம் மூடிக் கட்டி இரண்டு மூன்று உடுப்புகள் அணிந்து பஸ்சிற்கு காவல் நின்று கிளீனிங் வேலைக்குச் செல்கிறார்கள் அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு வரும் நேரத்தை பார்த்தால் றெயினால் இறங்கி படியைப் பிடித்து மேலே ஏற வேண்டும் அதற்கு சக்தி இல்லாமல் வருவார்கள் அவர்கள் மிகவும் கஸ்ரப்பட்டு வேலைக்குச் சென்று மிகவும் கஸ்ரப்பட்டு வேலைக்குச் சென்று தான் இங்குள்ளவர்களுக்கு காசு அனுப்புகிறார்கள் அதனை இங்கிருக்கும் அனைவரும் உணர வேண்டும் உதவி என்பது சரியான இடத்திற்கு சேர வேண்டும் உதவிகளை வழங்கும் போது விசா எடுப்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்றும் தங்களுக்கு ரக்ஸ் கட்டுவதற்காக இங்கு வந்து செலவழிக்கிறார்கள் என்று எழுந்தமானக் கதைகளை சிலர் இங்கு கதைக்கிறார்கள் அப்படி கதைக்கும் போது இப்படி உதவி செய்பவர்களுக்கு மன வேதனையை அளிக்கும் அதனை விளங்கி கதைக்கிறார்கள் விளங்காமல் கதைக்கிறார்களா என்று தெரியாது.

அப்படியான சில கதைகள் வருகிறது அங்கிருந்து வரும் சிலர் சரியான இடங்களை இனங்காண்பதில்லை வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வந்து ஹோட்டலில் தங்கி நிற்பார்கள் அங்கிருந்து கோல் இருப்பவர்களுக்கு இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்வார்கள் எல்லா இடமும் உள்நுழைந்து இடங்களை அறிய வேண்டும் எத்தனையோ போராளிக் குடும்பங்கள் விதவைக் குடும்பங்கள் கஸ்ரப்படுகிறார்கள் இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடமும் பிழைகள் உண்டு எல்லா இடத்தையும் பார்ப்பதில்லை எல்லாம் நல்லமாதிரி இருக்கிறது ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறும்போது கிடைக்கவிருக்கும் உதவிகள் தடைப்படுகின்றன அவர்கள் பார்த்த இடங்கள் நகரங்கள் மட்டும் தான் தெரியும் நாம் உள்நுழைந்து ஆராய்ந்து பார்த்தால் உள்ள நிலை விளங்கும் இப்படியான நோக்கத்தில் தான் உதவும் இதயங்கள் செயற்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் நான் மனம் திறந்து சொல்கிறேன் என்னிடம் படித்த மாணவர் இப்படியான வேலையிலீடுபடுவதையிட்டு பெருமைப்படுகின்றேன் தொடர்ந்து நீங்கள் விருத்தி செய்ய வேண்டும் என்றால் உங்களுங்குள் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டும் செயற்பாட்டை திறமை இருக்க வேண்டும் அங்கிருந்து காசு வந்தால் மட்டும் ஒன்றும் நடக்காது உங்களுக்குள் ஒருகூட்டுறவு இருக்க வேண்டும் செயற்பாட்டு திறமை இருக்க வேண்டும் ஒழுங்கமைப்பு திட்டமிடல் நேரமுகாமைத்துவம் சரியான முறையில் இருக்க வேண்டும் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டும் போது ஏற்றுக் கொண்டு திருந்த வேண்டும். நேரம் என்பது பெறுமதியானது வெளிநாட்டில் நேரத்தை திட்டமிட்டு செய்கின்றனர் கூட்டுறவாலும் ஓற்றுமையாலும் திட்டமிடலாலும் வளம்படுத்த வேண்டும் வவுனியாவில் சுகர் பிறசர் நோய்கள் தொடர்பான கருவி ஒன்றை எளிய முறையில்் உள்ளூர் உற்பத்தியை கொண்டு உருவாக்கியுள்ளார். அவருக்கு உதவும் இதயங்கள் சார்பாக மடிக்கணனி ஒன்றை வழங்குகின்றோம்.

இப்படியான உதவிகளைப் பெறுவோர் நல்ல சிந்தனையோடு மேலும் விருத்தியடைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுள்ளவர்களாக மாற வேண்டும் இங்கு இருப்பவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் அவர்களை நாம் வாழ்த்த வேண்டும் அவர்கள் தான் இந்த மண்ணின் வருங்கால சிற்பிகள் அவர்களும் சுயசிந்தனையோடு மேலும் நன்கு பயின்று நல்ல சாதனைகள் படைக்க வேண்டும். நூறு ரூபா இருந்தாலும் கோடி ரூபா இருந்தாலும் உதவி செய்யும் எண்ணம் வேண்டும் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது எனது கருத்து அந்த வகையிலே இந்த நிறுவனத்தை ஆரம்பித்த சிறீரஞ்சன் மற்றும் அவரின் சகோதரர் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் உறுப்பினர்கள் எல்லோரும் மேன்மேலும் இந்த அமைப்பை வளம்படுத்த வேண்டும் நாங்கள் இறந்தால் எஞ்சுவது இவன் இப்படி வாழ்ந்தான் என்ற அசைவுடன் வேறு ஒன்றும் வராது எங்களுக்கு எல்லோரும் நல்ல எண்ணத்தோடு வாழ வேண்டும் என உரையாற்றினார்.

  
   Bookmark and Share Seithy.com



யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சிவராம் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-04-27 16:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.



நாச்சிக்குடா பாடசாலை விவகாரம் - அதே பெயரைப் பயன்படுத்த உத்தரவு!
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்ப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலையானது எப்படி?
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.



அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.



அனுர, சஜித்துடன் டீல் வைத்துள்ளாரா பேராயர்?
[Saturday 2024-04-27 16:00]

கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.



வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது!
[Saturday 2024-04-27 16:00]

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



விஜயதாசவை நீக்க மொட்டு அழுத்தம்! - தம்மிக்கவுக்கு அமைச்சர் வாய்ப்பு?
[Saturday 2024-04-27 16:00]

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.



நாகை- காங்கேசன் கப்பல் சேவை 13ஆம் திகதி ஆரம்பம்!
[Saturday 2024-04-27 16:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



வடக்கு கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடு!
[Saturday 2024-04-27 16:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



முகமாலையில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Saturday 2024-04-27 06:00]

கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று நேற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.



வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - பிரித்தானிய அரசாங்கம் கவலை!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.



இந்தியத் தூதுவரைச் சந்தித்தார் பசில்!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ரணில் களமிறங்கினால் முழுமையான ஆதரவு! -மஹிந்தவுக்கு முன்பாக கூறிய மொட்டு எம்.பிக்கள்.
[Saturday 2024-04-27 06:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



ஈரானிய ஜனாதிபதிக்கான இராப்போசனத்தை புறக்கணித்தது ஏன்?- சஜித் விளக்கம்.
[Saturday 2024-04-27 06:00]

ஈரான் ஜனாதிபதியை கௌரவிக்கும் இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தௌிவு படுத்தியுள்ளது.



ஒட்டாவா படுகொலைகள் - விசாரணைக்கு திகதி குறிப்பு!
[Saturday 2024-04-27 06:00]

கனடா - ஒட்டாவா Barrhaven பகுதியில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரிடம் முதற்கட்ட விசாரணைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் அஜித் தோவலா?
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.



எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது!
[Saturday 2024-04-27 06:00]

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.



மூளை யார் என்று கூறாத மைத்திரி!
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெள்ளிக்கிழமை முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.



ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் பெட்டிகளுக்கு நடுவே சிக்கி படுகாயம்!
[Saturday 2024-04-27 06:00]

கொழும்பில் இன்று பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் ரயிலின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். கண்டி நோக்கி பயணிப்பதற்காக ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா