Untitled Document
May 18, 2024 [GMT]
கனடியத் தமிழ் மக்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த திட்டத்திற்க்கான உதவி கோரல்:
[Friday 2019-09-06 17:00]

அன்புள்ள தமிழ்க் கனடியர்களே !,



 

கடந்த இரு தசாப்தங்களாக தமிழ்ச் சமூகம் கனடாவில் அபரிமிதமான வளர்ச்ச்சியைக் கண்டுள்ளதுடன் பல துறைகளிலும் வெற்றிகளையும் ஈட்டியுள்ளது. மூன்று இலட்சத்துக்கும் (300,000) அதிகமான தமிழர்கள் கனடாவைத் தாயகமாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களில் பெரும்பாலோர் ரொறொண்டோ பெரும்பாகத்தில் வசிக்கிறார்கள்.

அன்புள்ள தமிழ்க் கனடியர்களே !,

கடந்த இரு தசாப்தங்களாக தமிழ்ச் சமூகம் கனடாவில் அபரிமிதமான வளர்ச்ச்சியைக் கண்டுள்ளதுடன் பல துறைகளிலும் வெற்றிகளையும் ஈட்டியுள்ளது. மூன்று இலட்சத்துக்கும் (300,000) அதிகமான தமிழர்கள் கனடாவைத் தாயகமாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களில் பெரும்பாலோர் ரொறொண்டோ பெரும்பாகத்தில் வசிக்கிறார்கள்.

  

நாம் தேர்ந்தெடுத்த இந்நாட்டில் வாழ்ந்த காலம் சொற்பமாயினும், ஒப்பீட்டளவில் நாம் சாதித்தது குறித்துப் பெருமையடையத்தான் வேண்டும். எமது தமிழ் அடையாளத்தைத் தசாப்தங்களாகவும் , நுற்றாண்டுகளாகவும் பாதுகாத்துக் கொண்டாடி மகிழ வேண்டுமாயின் நீண்டகால நோக்கோடு நாம் சில முக்கிய விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஜூன் மாதம் 2018 ம் ஆண்டு, கனடாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ரொறொண்டோ பல்கலைக் கழகத்தில் நிரந்தரமான தமிழ் இருக்கை (Tamil Chair) ஒன்றை நிறுவுவதற்கான முயற்சியை எடுத்திருந்தோம். இத் தமிழ் இருக்கையை ஆரம்பிப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்னர், கனடிய தமிழர் பேரவை, தமிழ்ச் சேயர் இங்க் -யு.எஸ்.ஏ. (Tamil Chair Inc. USA), ஆகிய இரு அமைப்புக்களும் ரொறொண்டோ பல்கலைக் கழகத்துடன் (ஸ்காபரோ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன.

இப் பல்கலைக் கழகத்தில் நிரந்தரமானதொரு தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு மூன்று மில்லியன் டாலர்கள் தேவையாயிருந்தது. இது வரையில் உறுதியளிக்கப்பட்டதும், சேர்க்கப்பட்டதுமாக, 1 மில்லியன் டாலர்களை எட்டியாகிவிட்டது.

நிறுவப்பட்டதும், இதுவே ரொறொண்டோ, கனடாவில் அமையும் முதலாவது தமிழ் இருக்கையாகவும், கனடாவின் பரந்த தமிழ்ச் சமூகத்தின் ஆதரவுடனும், பங்களிப்புடனும், ஆசியாவிற்கு வெளியே தமிழ் கற்கைத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் மையமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

தமிழர்கள் அதிகம் வாழும் ஆசிய நாடுகளில், சுதந்திரமான இயங்குதலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஏற்படக்கூடிய தடைகளையும், நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு, தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு ஆகியவற்றின் மீதான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நிதர்சனமாக்கவும் கனடா போன்ற நாடே உகந்தது எனக் கருதுகிறோம். முக்கியமாக, கனடாவில் இருக்கக்கூடிய எமது எதிர்காலச் சந்ததிகள், தமது நாட்டின் மிகப் பிரபலமானதொரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஓர் இருக்கை நிறுவப்பட்டிருப்பது குறித்து பெருமையடையவும், தமிழ் ஆராய்ச்சியில் இளைய தலைமுறை பங்கேற்க வழி வகுப்பதாகவும் ஆகும்.

இது ஒரு முக்கியமான பெருமை தரும் சமூக முனைப்பு என்பதும், ஒரு சிலர் பெரும் தொகையான பணத்தைத் தானம் செய்வதை விடுத்து, பெருந்தொகையான தமிழர்கள் முன்வந்து இத்திட்டத்தில் பங்கெடுத்து உரிமையோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டால் மட்டுமே வெற்றியளிக்கும் என்பதும் உணரப்பட வேண்டும்.

நாம், தமிழ்க் கனடியர்கள் இதை ஒரு எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகளுக்கான பணி என்று எண்ணியும், தமிழர் தமிழருக்குச் செய்யும் கடமையெனக் கருதியும் செயற்பட முன்வர வேண்டும். ரொறொண்டோ பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ் இருக்கையை நிறுவியதன் மூலம் நாங்கள் எங்கள் கடமையைச் செய்தது மட்டுமல்லாது, எமது சமூகத்திலுள்ள ஏனையவர்களையும் இதில் ஈடுபடச் செய்திருக்கிறோம் என்ற செய்தியை நாம் எமது குழந்தைகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் சொல்லிக் செல்வதற்கான சந்தர்ப்பமாக இது அமையும்.

தமிழ் இருக்கைக்காக நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு டாலரும் நேரடியாக ரொறொண்டோப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை நிதியத்துக்குப் போய்ச் சேரும் என்ற உத்தரவாதம் இங்கு தரப்படுகிறது. நீங்கள் தானமாகக் கொடுத்த தொகை ரொறொண்டோ தமிழ் இருக்கை இணையத் தளத்தில் உங்கள் பெயர் குறிக்கப்பட்ட நிரலில் வெளியிடப்படும். தமிழ் இருக்கையின் நிர்வாகச் செலவுகளுக்காக எந்தவொரு பணமும் நீங்கள் கொடுத்த பணத்தில் இருந்து எடுக்கப்பட மாட்டாது.

இணையத்தின் வழியாக உங்கள் அன்பளிப்பு இடம்பெறுமாயின், நீங்கள் கொடுக்கும் பணம் $20 க்கு மேலாக இருக்கும் பட்சத்தில், அதற்கான வரி விலக்குப் பற்றுச் சீட்டு உடனடியாகவே வழங்கப்படும். (இதற்கான தொடுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது). காசோலை மூலம் வழங்கப்படும் அன்பளிப்புகளுக்கான பற்றுச் சீட்டுகள் ரொறொண்டோ பல்கலைக் கழகத்தால் நேரடியாக வழங்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் ஆதரவு முக்கியமாக இரண்டு வழிகளில் கோரப்படுகிறது :

1) உங்களது அன்பளிப்பை இன்றே செய்யுங்கள். அன்பளிப்பு எவ்வளவு என்பது முக்கியமில்லை. ரொறொண்டோ தமிழ் இருகைக்காக, உங்களால் இயன்ற அளவுக்கு ஏற்ப அன்பளிப்பு செய்யுங்கள்.

2) உங்கள் குடும்பத்தினர், நண்பர்களை, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உன்னதமான திட்டத்திற்க்கு அன்பளிப்பு செய்யும்படி வற்புறுத்துங்கள். உங்களிடம் பணத்தைத் தரும்படி கேட்காதீர்கள், மாறாக, ரொறொண்டோ பல்கலைக் கழகத்துக்கு நேரடியாக அன்பளிப்பைச் செய்து பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். உங்கள் அன்பளிப்புகளுக்கு வரிச் சலுகைகள் உண்டு என்பதை மறவாதீர்கள் .

பின் காணும் தொடுப்பை அழுத்தி உங்கள் அன்பளிப்புக்களைச் செய்யுங்கள்.

2019 Tamil Canadian Walk in support of the Toronto Tamil Chair Initiative

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்! - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு. Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2024!
[Saturday 2024-05-18 20:00]

எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.



மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.



மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வடக்கு -கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மன்னாரில் இன்று காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.



நல்லூரில் இனப்படுகொலை வரலாற்று ஆவண காட்சியகம்! Top News
[Saturday 2024-05-18 20:00]

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதத்தினால் நேர்ந்த இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவண காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக பிதிர்க்கடன் நிறைவேற்றல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை, பிதிர்க்கடன் நிறைவேற்றல் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.



வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.



யாழ். பல்கலைக்கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.



மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மரணம்!
[Saturday 2024-05-18 20:00]

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!- பிரதான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு.
[Saturday 2024-05-18 04:00]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.



கோட்டாவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு!
[Saturday 2024-05-18 04:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்துக் சர்வதேச விசாரணையே தீர்வு! - உறவுகள் வலியுறுத்தல்.
[Saturday 2024-05-18 04:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட்டிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரம் - குமாரபுரத்தில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 04:00]

திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்! - நிமால் விநாயகமூர்த்தி
[Saturday 2024-05-18 04:00]

பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. "எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?" என்னும் ஏக்கத்துடன் எங்கள் மக்கள் மரண உலகின் கைதியானார்கள். உலகம் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பினோம் - எங்களால் முடிந்தது எல்லாம் செய்தோம் - இறுதியில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்னும் செய்தி எங்களுக்கு கிடைத்தது.



மூன்றாவது ஆண்டாக இன அழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சட்டமூலம்-104! Top News
[Saturday 2024-05-18 04:00]

தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் செயல்முறை. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கை அரசானது இனப்படுகொலையின் பாதையிலேயே திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது.



வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
[Saturday 2024-05-18 04:00]

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



வவுனியா இரட்டைக் கொலை - சாட்சிகளை அச்சுறுத்திய பெண் கிராம அலுவலர்!
[Saturday 2024-05-18 04:00]

வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



போர் என்பது வெற்றியல்ல - அது நாட்டினதும் மனித குலத்தினதும் தோல்வி!
[Saturday 2024-05-18 04:00]

போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும். 30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளது. வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.



தெல்லிப்பழையில் நாய் இறைச்சிக் கொத்து? - உணவகத்துக்கு சீல்.
[Saturday 2024-05-18 04:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா