Untitled Document
May 19, 2024 [GMT]
மக்கள் போராட்டத்தின் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்
[Wednesday 2019-01-02 07:00]

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை 
உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008 அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப்  போராட்டங்களையே 2019 ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008 அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

  

பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தி;ன் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் குறித்துரைத்துள்ளார்.

இந்நிலையில், மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அதனது புத்தாண்டுச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.

பிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தி :

ஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகெங்கும் தமது உரிமைகட்;காகப் போராடும்; அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நிறைவடைகிறேன். மலரும் இவ் 2019 ஆம் ஆண்டில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னோக்கிய காலடிகளை வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் இப் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக!

கடந்து சென்ற 2018ம் ஆண்டு உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தி;ன் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் அமையும் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப் போராட்டம் உணர்த்தி நிற்கிறது.

இலங்கைத்தீவைப் பொறுத்தவரை ஒரு அரசின் மூன்று முக்கிய தூண்களான நாடாளுமன்றம், நிறைவேற்று அரசாங்க நிர்வாகம், நீதித்துறை மூன்றும் முட்டி மோதிக் கொண்ட காட்சிகளை நாம் 2018 இல் கண்டோம். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் தறித்துக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி ஆடிய அரசியல் ஆட்டங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் இவ் அரசியல் மோதல்கள் உண்மையில் கனதியான அனைத்துலகத் தலையீட்டால், குறிப்பாக அமெரிக்கத் தலையீட்டால்தான், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகப் பலராலும் கணிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிமாறாமல் தடுக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் மாறான தீரப்பை வழங்கினால் அதன் விளைவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்துலக அரங்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் உட்பட பல்வேறு வகையான அனைத்துலகத் தலையீடுகள் இவ் விடயத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. தீவிர சிங்களத் தேசியவாதிகள் இம் முரண்பாட்டை சிங்கள தேசத்துக்கும் அந்நிய கைப்பாவைகளுக்குமிடையிலான முரண்பாடாகவே சித்தரிக்கின்றனர். சிங்கள தேசத்தை இவ் விடயத்தில் அந்நிய கைப்பாவைகள் வெற்றி கொண்டதாக அவர்கள் மத்தியில் ஒரு கொதிப்பு இருக்கிறது. சிங்கள தேசத்தின் இத் தோல்விக்குத் தமிழ், முஸ்லீம் மக்களும், அமெரிக்க, இந்திய அரசுகளுமே காரணம் என அவர்கள் நம்புகிறார்கள். இதனால் மலரும் 2019 ஆம் ஆண்டில் சிங்கத் தேசியவாதிகளின் தீவிரமான செயற்பாட்டை இலங்கைத்தீவு எதிர்கொள்ள வேண்டி வரலாம். இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

2019 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாண்டு நினைவைப் பதிவு செய்யப் போகிறது. நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டு, பெரும் தமிழின அழிப்பு நடைபெற்று 10 வருடங்கள் நிறைவுறும் தருணத்திலும்கூட இனஅழிப்புக்குக் காரணமானவர்கள் ஒருவர் கூடத் தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை. தமிழின அழிப்பைத் திட்டமிட்ட வகையில் புரிந்த சிறிலங்கா அரசும் இதுவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவில்லை. இவ் விடயத்தில் சிறிலங்கா அரசைப் பாதுகாப்பதில் சிங்கள தேசியவாதிகள் மட்டுமல்ல, அனைத்துலக அரசுகளும் சிறிலங்கா அரசின் பக்கம்தான் நிற்கின்றன என்பதே உண்மை. இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதா, அல்லது சிறிலங்கா அரசின் ஊடாகத் தாம் அடைந்து கொள்ள வேண்டிய நலன்களை உறுதிப்படுத்துவதா என்பதில் தமது நலன்களின் பக்கம்தான் அரசுகள் நிற்கின்றன. இப்போது இந்த அரசுகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் சில கண்துடைப்பு நடவடிக்கைகளே தவிர நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் அல்ல.

கொலைக்குற்றவாளியே தன்மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றச்சாட்டை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் போல சிறிலங்காவின் போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை சிறிலங்கா அரசிடம் அனைத்துலக அரசுகள் வழங்கின. இவ் விடயத்தில் எதுவும் நடைபெறவில்லை என்பது அம்பலமாகியுள்ள இத் தருணத்தில், தமது நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி நீதியின்பாற்பட்டுச் செயற்படும் மிகவும் உன்னதமான நீதித்துறை என்ற பட்டுக்குஞ்சத்தை இப்போது சிறிலங்காவின் நீதித்துறையின்மீது கட்டுகிறார்கள். சிறிலங்கா உச்சமன்றம் ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பானது யுத்தக்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்றினை நியாயப்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டின்போது பயன்படுத்தப்படப்போகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை மூடிமறைக்க சிங்களத் தேசியவாதிகள் அனைத்துலக அரசுகளின் உதவியுடன் மேற்கொள்ளும் பகீரத முயற்சியினை எதிர்த்து உண்மையை நிலைநிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட தமிழ் மக்களின் அமைப்புகள் நீதியின் பாற்பாட்டு இயங்கும் அனைத்துலக சிவில் சமூக அமைப்புகளின் உதவியுடன் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன. தமிழின அழிப்பை மூடிமறைக்க முயலும் முயற்சியை முறியடித்து தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை உயிர்ப்பாக வைத்திருப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக அரங்கில் நீதிகோரும் போராட்டம் காலநீட்சி கொண்டது என்பதனால் இக் காலநீட்சியில் எமது போராட்டம் நீர்த்துப் போகாமற் பாதுகாப்பதில்தான் இவ் விடயம் தொடர்பான எமது வெற்றி தங்கியுள்ளது. இப் புரிதலுடன் நாம் அனைத்துலக அரங்கில் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை 2019 ஆம் ஆண்டிலும்; உறுதியாக முன்னெடுக்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் தமிழின அழிப்பையோ, அல்லது தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதனையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை நடாத்துவது தவிர்க்க முடியாத வரலாற்று நிரப்பந்தமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப் போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது. இந் நிலையில், தாயகத்தில் தமிழர் தலைமை வௌ;வேறு காரணங்களைக்கூறி சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். அவர்கள் கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவது குறித்தும் எவ்வித அக்கறையும் இல்லாத நிலையே தெரிகிறது.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் தாயக மக்கள் தீரக்கமான அரசியல் முடிவொன்றை எடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களாவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தலைவர்களை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல் நேரடி ஜனநாயகப்போராட்டங்களில்; அணியணியாக இறங்குவதன் மூலம் நாம் ஏற்படுத்தக் கூடிய அரசியற்தாக்கம் குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்;. அரபு வசந்தம் போலவோ அல்லது பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம் போலவோ தாக்கமுள்ள அரசியல் ஜனநாயகவழி நேரடிப் போராட்டங்களைத் தமிழ் மக்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் போது அவர்களை ஆதரித்து புலம் பெயர் மக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். தமிழ் நாட்டிலும், உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்களை ஆதரித்துப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இக் கூட்டுப் போராட்டச் செயற்பாடு எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோக்கிய காலடிகளை எடுத்து வைப்பதற்கு உறுதுணையாக அமையும் என நான் நம்புகிறேன்.

இந் நேரடி ஜனநாயகப் (direct action) போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது: ஈழத் தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்தட்டும். இதுவே 2019 ஆம் ஆண்டு மலர்ந்துள்ள இத் தருணத்தில் நான் விடுக்கும் முதன்மைச் செய்தியாகும் என பிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாதம் ஊடகசேவை

  
   Bookmark and Share Seithy.com



குற்றமிழைத்தவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாகின்ற நிலையில் தமிழ் மக்கள் 2009 இனப்படுகொலைகளை நினைவுகூரும்போது அவர்களிற்கு தங்கள் ஆதரவை வெளியிடுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



மாவை தலைமையில் தமிழரசின் மத்திய குழு கூடியது!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.



நீர்மூழ்கிகளை தடுக்க அமெரிக்காவிடம் ஒத்துழைப்புக் கோரியது இலங்கை!
[Sunday 2024-05-19 17:00]

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.



கூலிப்படைகளாகச் சென்றவர்கள் குறித்து 400 முறைப்பாடுகள்!
[Sunday 2024-05-19 17:00]

ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.



ஒக்டோபர் 5 அல்லது 12இல் ஜனாதிபதி தேர்தல்!
[Sunday 2024-05-19 17:00]

ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.



மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வை குழப்பிய பொலிசாருக்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் செயலை ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் தெரிவித்துள்ளார்.



காங்கேசனுக்கான கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு!
[Sunday 2024-05-19 17:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையர்களுடன் துணை நிற்கிறது அமெரிக்கா!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



எலோன் மஸ்க்கைச் சந்தித்தார் ஜனாதிபதி!
[Sunday 2024-05-19 17:00]

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.



ஈரானியத் தூதுவரைத் தாக்கிய கொழும்பு வர்த்தகர் கைது!
[Sunday 2024-05-19 17:00]

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர கனேடிய பிரதமர் அழைப்பு!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் சார்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.



இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு கனடா சுகாதார அமைச்சர் அஞ்சலி! Top News
[Sunday 2024-05-19 08:00]

கனடாவின் சுகாதார அமைச்சரான மார்க் ஹொலண்ட் அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.



நினைவேந்தல் கைதுகள் - அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு கவலை!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்து கவலையடைந்துள்ளதாக அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின் தெரிவித்துள்ளார்.



கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தலைக் குழப்பியதற்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 08:00]

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை காவல்துறையினர் அநாகரீகமான அடாவடியான விதத்தில் குழப்பியமை குறித்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது



தமிழரின் விடிவு காலம் நினைவேந்தல் சுடரில் பிரகாசமாக ஒளிர்வதை காண்கின்றேன்!
[Sunday 2024-05-19 08:00]

வட, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக்கொண்டுவரும் விதத்தில் நடந்து கொள்வோம் என்று தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



பொது வேட்பாளரை ஏற்கவே முடியாது! - அடம்பிடிக்கிறாராம் சம்பந்தன்.
[Sunday 2024-05-19 08:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்! - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு. Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2024!
[Saturday 2024-05-18 20:00]

எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.



மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா