Untitled Document
May 8, 2024 [GMT]
ஜப்பானில் சீக்கிரமாக புறப்பட்டதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்!
[Friday 2017-11-17 08:00]


நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 20 நொடிகள் முன்னதாக ரெயில் புறப்பட்டதற்காக ஜப்பான் ரெயில்வே நிர்வாகம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.பொதுவாக போக்குவரத்துக்கான வண்டிகள் கால தாமதமாக புறப்பட்டோ அல்லது வந்தோ சேருமானால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 20 நொடிகள் முன்னதாக ரெயில் புறப்பட்டதற்காக ஜப்பான் ரெயில்வே நிர்வாகம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.பொதுவாக போக்குவரத்துக்கான வண்டிகள் கால தாமதமாக புறப்பட்டோ அல்லது வந்தோ சேருமானால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.

  

ஆனால், ஜப்பான் நாட்டு ரெயில்வே வித்தியாசமாக, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, 20 நொடிகளுக்கு முன் ரெயிலை இயக்கியதற்காக தனது பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஜப்பான் நாட்டில் உள்ள மினாமி பகுதியிலிருந்து நகரேயாமா பகுதிக்கு காலை 9.44.40 மணிக்கு சுகுபா விரைவு ரெயில் புறப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 14-ம் தேதி சுகுபா விரைவு ரெயில் காலை 9.44.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக ரெயில்வே நிறுவனத்துக்கு சிலர் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரெயில்வே நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சம்பவத்தன்று குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக, அதாவது 20 நொடிகளுக்கு முன்னதாக சுகுபா விரைவு ரெயிலை ஓட்டுநர் இயக்கியுள்ளார். அவர் நேரத்தை சரிபார்க்காமல் எடுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட அசவுகரியத்துக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனிமேல் இதுபோல் நடக்காது என தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக புறப்பட்ட ரெயிலுக்காக ஜப்பான் ரெயில்வே பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

  
   Bookmark and Share Seithy.com



நோர்வேயில் பயங்கரம்: காரில் எரிந்த நிலையில் யாழ் தமிழரின் சடலம்!
[Wednesday 2024-05-08 18:00]

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பட்டுள்ளதாக கூற்றப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



ஹமாஸ் நிபந்தனையை ஏற்க மறுத்த இஸ்ரேல்!
[Wednesday 2024-05-08 18:00]

காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸ் விதித்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கூட்டு பிரார்த்தனை செய்துவிட்டு ரஃபா நகருக்குள் நுழைந்தனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அறிவித்திருந்தது.



அமெரிக்காவில் அதிர்ச்சி: 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை!
[Wednesday 2024-05-08 18:00]

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32). இவருடைய மகன் கெய்தன் (வயது 3).



30 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் பெண்: புலம்பெயர்தல் அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி!
[Wednesday 2024-05-08 18:00]

பெண்ணொருவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், திடீரென அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளதால், கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அவர். பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்னும் பெண், கர்ப்பமுற்றதால், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின்போதும் உதவி செய்ய ஆட்கள் தேவை என்பதால் தனது உறவினர்கள் வாழும் ஜமைக்கா நாட்டுக்குச் சென்றுள்ளார்.



புடின் பதவியேற்பு நாளில் பரிசாக ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டம்!
[Wednesday 2024-05-08 06:00]

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, பாதுகாப்புப் பணியில் இருந்த இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய தாக்குதல் 2 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வரும் நிலையில், விளாடிமிர் புடின் 5வது முறையாக ஜனாதிபதியாகியுள்ளார்.



இஸ்ரேலில் 26 போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் கைது!
[Wednesday 2024-05-08 06:00]

இஸ்ரேல் நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் உள்ள இலாத் நகரில், போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அதிரடி நடவடிக்கையாக 26 பேரை பொலிஸார் கைது செய்தனர்.



ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்க பெண்!
[Wednesday 2024-05-08 06:00]

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக 4 பிள்ளைகள் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான்கு பிள்ளைகளும் ஒரே உருவம் கொண்டவை. இது 15 மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வு ஆகும்.



ரஃபா எல்லையை கைப்பற்றிய இஸ்ரேல்!
[Tuesday 2024-05-07 18:00]

இஸ்ரேல் - ஹமாச் போ இன்னும் முடிவுக்கு வராத நிலையில் காசா பகுதியில் உள்ள ரஃபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.



கனடாவில் பல ஆண்டுகளாக அயல் வீட்டு மின் கட்டணத்தை செலுத்திய பெண்!
[Tuesday 2024-05-07 18:00]

கனடாவில் தசாப்தங்களாக அயல் வீட்டவரின் மின் கட்டணத்தை செலுத்திய பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கனடிய மின் விநியோக நிறுவனமான ஹைட்ரோ நிறுவனம் மீது குறித்த பெண் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது மின்மாணிக்கு பதிலாக மின் விநியோக நிறுவனம் அயலவர் வீட்டு பட்டியலை தமக்கு பல தசாப்தங்களாக வழங்கி வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



"ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்" - பிரபலத்தின் பேச்சால் சர்ச்சை!
[Tuesday 2024-05-07 18:00]

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2 வயதே ஆன அந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய், 24 உளவுத்துறை அதிகாரிகளை கடித்துள்ளதாக புகார் எழுந்ததால் கடந்தாண்டு இறுதியில் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.



2 லிட்டர் சிறுநீர் அருந்துங்கள்: ஏஐ பதிலால் பெரும் அதிர்ச்சி!
[Tuesday 2024-05-07 18:00]

சிறுநீரகக் கற்களை விரைவாக கரைக்க சிறுநீரை அருந்துங்கள்' என்ற கூகுள் ஏஐ இன் அறிவுரைக்கு இணையவாசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகாட்டல் முதல் உடல் உபாதைக்கான மருத்துவ ஆலோசனை வரை சகலத்துக்கும் கூகுளில் விடை தேடும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது.



அமெரிக்க ராணுவ வீரர் ரஷ்யாவில் கைது!
[Tuesday 2024-05-07 06:00]

தென் கொரியாவில் படை வீரராக பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ சார்ஜண்ட் கார்டன் (Gordon Black) பிளாக், திருட்டு பேரில் ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது . பிளாக் மே 2 ஆம் திகதி ரஷ்யாவின் கிழக்கு முனையிலுள்ள விளாடிவோஸ்டாக் நகரில் பிளாக் கைது செய்யப்பட்டதாகவும், அவர் அதிகாரபூர்வ பயணத்தில் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
[Tuesday 2024-05-07 06:00]

இஸ்ரேல் உடனான போர் நடவடிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



3 குழந்தைகளின் தாயை கொன்ற குற்றவாளி: சிறையில் மரணம்!
[Tuesday 2024-05-07 06:00]

மூன்று குழந்தைகளின் தாயாரை கொலை செய்த கைதி விக்டர் ஃபாரன்ட் சிறையில் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் மூர்க்கத்தனமாக கிளெண்டா ஹோஸ்கின்ஸை கொலை செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஃபாரன்ட் சிறையில் இறந்துள்ளார். கிளெண்டா ஹோஸ்கின்ஸ், மூன்று குழந்தைகளின் தாயார், 44 வயதாக இருந்தபோது, ​​அவரது முன்னாள் காதலனான ஃபாரண்ட் அவரை தாக்கினார்.



வியட்நாமில் வெப்ப அலை தாங்காமல் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்!
[Monday 2024-05-06 18:00]

சுட்டெரிக்கும் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாங் மே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.



கனடா தபால் திணைக்களம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!
[Monday 2024-05-06 18:00]

கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓராண்டு காலப்பகுதிக்குள் நிதிப் பற்றாக்குறை நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



அவுஸ்திரேலிய பெண் எம்.பிக்கு மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம்!
[Monday 2024-05-06 18:00]

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எம்.பியான 37 வயதான பிரிட்டானி லாவ்கா தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெளியே சென்றபோது, அவரை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கிறார்.



கனடாவில் உயிரணு தான் மூலம் பிறந்த 600 குழந்தைகள் தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி!
[Monday 2024-05-06 18:00]

கனேடிய மாகாணமொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், உயிரணு தானம் மூலம், 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைகளாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில், ஒரு ஆண், இத்தனை முறை மட்டுமே உயிரணு தானம் செய்யலாம் என விதிமுறைகள் உள்ளன. அப்படியிருந்தும், விதிகளை மீறி பல பிள்ளைகளுக்கு தந்தைகளான ஆண்களைக் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.



300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு: மன்னர் சார்லஸ் முடிவு!
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டு விழாவின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த வார இறுதியில் தனது ஆதரவு தரும் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தியுள்ளார்.



பிரித்தானியாவில் 5 மாத குழந்தை மாரடைப்பு: லேகோலேண்டில் பெண் கைது!
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானியாவின் லேகோலாந்தில் குழந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லேகோலாந்து விண்ட்சர் (Legoland Windsor) பொழுதுபோக்கு பூங்காவில் ஐந்து மாத கைக்குழந்தை மாரடைப்பு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் ஆபத்தான (Critical) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. டேம்ஸ் வேலி காவல்துறை (Thames Valley Police) தகவல் படி, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது..


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா