Untitled Document
May 3, 2024 [GMT]
ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் கடிதம்!
[Tuesday 2017-11-14 18:00]

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்கான சர்வதேசப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் திறந்த முறையீடு ஒன்றை இன்று  அனுப்பியுள்ளது.

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்கான சர்வதேசப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் திறந்த முறையீடு ஒன்றை இன்று அனுப்பியுள்ளது.

  

இலங்கை அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தை ஒட்டிய விரிவான மகஜர் ஒன்றை ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமை உயர் ஸ்தானிகரான இளவரசர் செயித் ஹுசைன் அவர்களுக்கும், மனித உரிமைப் பேரவையின் 11ம் சுற்றுக்கான அதிபரான ஜோக்குயின் அலெக்சாண்டர் அவர்களுக்கும், ஜெனீவாவில் இயங்கும் அமெரிக்க அரசின் ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறைக்கான நிரந்தரப் பிரதிநிதியான திரு தியோடோர் அலெக்ரா அவர்களுக்கும் யாழ்ப்பாண வதிவிடக் காரியாலயங்களூடாக இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் கையளித்துள்ளது.

தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைப் பேரவைக்கும், மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திற்கும் இலங்கை அரசோடு 2015 இல் ஒத்திசைவுத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பின்னர் இந்த வருடம் மேலும் இரண்டு வருட நீடிப்பைக் கொண்டுவந்த அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான ஜெனீவாத் தூதுவருக்கும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் சர்வதேச பொறுப்பு உள்ளது.

இந்தப் பொறுப்பு சர்வதேசச் சட்டவிதிகளில் தமிழர்களுக்கு உள்ள உரிமையின் பாற்பட்டது. தவிரவும், அமெரிக்க அரசு தனது மனித உரிமைப் பொறிமுறை ஊடான நேரடித் தலையீடு மூலமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசோடு ஒத்திசைவு நிகழ்ச்சிநிரல் ஒன்றின் மூலம் உள்நாட்டுப் பொறிமுறையிடமே நீதிவழங்கலை ஏறத்தாழ முழுமையாகக் கையளித்துவிட்டுள்ள ஒரு நிலை தோன்றியுள்ளது.

இதற்கு மேலதிகமாக இரண்டு வருட கால நீடிப்பை வழங்கும் கைங்கரியத்தையும் அமெரிக்க அரசின் மனித உரிமைப் பொறிமுறையே செய்திருக்கிறது. எனவே, ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த இரண்டு தரப்பினருக்கும் அவரவருக்குரிய பொறுப்பை நினைவுபடுத்தி, சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையில் தமிழ் அரசியற் கைதிகளுக்குரிய உரிமைகளையும் நினைவுபடுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது.

குறிப்பாக, இலங்கை அரசு தமிழ் அரசியற் கைதிகளின் வேண்டுகோள்களைத் தனது சட்டத்தையும் சட்டப்பொறிமுறைகளையும் கோடிட்டுகாட்டிப் புறக்கணிக்கும் நிலையில் தமிழர்களின் தரப்பு சர்வதேசச் சட்டப் பொறிமுறைகளுக்குள் தமிழ் அரசியற் கைதிகளுக்கு உள்ள உரிமையைத் தட்டிக்கேட்காத நிலை மிகவும் பரிதாபகரமானது.

எனவே, தமிழ் அரசியற் கைதிகளுக்குள்ள சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையிலான உச்சபட்ச உரிமைகள் எவை என்பதைக் குறித்த சர்வதேசத் தரப்பினருக்கு நினைவுபடுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இதன் மூலம் இலங்கை அரசின் மீது உடனடியாக அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறும், தவறும் பட்சத்தில் சர்வதேச தரப்பினருக்கும் தமிழ் அரசியற்கைதிகள் மீது இழைக்கப்படும் துன்பியலுக்கு மனிதாபிமானப் பொறுப்பு இருக்கிறதென்பதையும் மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் அனைவரும் சர்வதேச சட்ட நியமங்களின் பிரகாரம் விடுவிக்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் அரசியற்கைதிகளாக இலங்கை அரசால் அங்கீகிரிக்கப்பட்டு அரசியல் முடிவொன்றின் மூலம் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என்பதையும் நான்கு அடிப்படைகளை மையமாக வைத்து மாணவர் சமூகத்தின் மகஜர் எடுத்துக்கூறுகிறது.

சர்வதேச மட்டத்தில் தமிழர் தரப்பாக பேச்சுவார்த்தைகளிலும் போர்நிறுத்த உடன்படிக்கையிலும் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் போரில் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பதால், தமிழ் அரசியற் கைதிகளின் உறவுகளும் தமிழ்ச் சமூகமும் மாத்திரமே கைதிகளின் நலன் குறித்துப் பேசவேண்டிய சூழல் நிலவுகிறது.

குறிப்பாக சர்வதேச சட்டத்தில் தமிழர் தரப்புக் கைதிகளுக்கு இருக்கவேண்டிய உரிமைகள் என்ன என்பதை முதலாவதாகவும், ஐ.நா. இலங்கையில் இழைத்தாகத் தானே ஒத்துக்கொண்ட தவறுகள் மூலம் ஐ.நாவுக்கு இருக்கும் பொறுப்பை இரண்டாவதாகவும், பேச்சுவார்த்தைக் காலத்தில் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாகவும், போரின் பின்னர் ஜெனீவாவில் தொடர் தீர்மானங்களைக் கொண்டுவந்ததன் மூலமும் அமெரிக்காவின் மனித உரிமைத் தரப்புக்கு தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் முக்கிய பொறுப்பு இருக்கிறது என்பதை மூன்றாவதாகவும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்ற உரிமைகளை மாத்திரம் வைத்து அணுகினாற் கூட அவர்கள் அரசியற் கைதிகள் என்ற தீர்ப்புக்கு வரமுடியும் என்பதை நான்காவது காரணியாகவும் பல்கலைக்கழக மாணவர்களின் மகஜர் எடுத்துக்காட்டியுள்ளது.

குறிப்பாக, ஜெனீவாக் கோட்பாடுகளின் மேலதிக நெறிமுறை ஒன்றின் பிரகாரம், இலங்கையில் நடைபெற்றது ஒரு சர்வதேசத்தன்மையுடைய, சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட, வேற்று இன ஆக்கிரமிப்பு என்று கருதப்படக்கூடிய சூழலில் இடம்பெற்ற போர் என்பதை மாணவ சமூகத்தின் மகஜர் சர்வதேசச் சட்ட நியமங்களின் பிரகாரம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆக, சர்வதேசத் தன்மையுடனான போர் ஒன்று முடிவுக்கு வரும்போது போர்க்கைதிகள் மீளத் தத்தம் குடும்பங்களோடு ஒன்றிணைய வேண்டும் என்பதும் அவர்கள் குற்றவியற் சட்டங்களுக்கு ஆட்படுத்தப்படலாகாது என்பதும் சர்வதேச சட்டம் வழங்கும் உரிமை.

ஆனால், இலங்கை அரசோ தமிழ் அரசியற் கைதிகளின் தண்டனை வழங்கப்பட்டவர்களைப் போர்க்கைதிகளாகப் பார்க்கத் தயாராக இல்லை. எனவே, அவர்கள் தமது தண்டனைக்காலத்தை சிறைகளில் கழித்தேயாகவேண்டிய நிலை. இது அநீதியான செயல் என்பதைச் சர்வதேச சட்டங்களில் தமிழர் தரப்புக்கு இருக்கும் பிடிமானத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு தொடர்பு பட்டவர்களாகச் சித்தரித்து போலியான குற்றப்பத்திரிகைகள் மூலம் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் அரசியற் கைதிகள் என்ற அந்தஸ்துக்கு உரித்தானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மாணவர்களின் மகஜர் ஐ.நாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கப்பட்ட கைதிகளாக உள்ள அனைவரையும் அரசியற்கைதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு ஐ.நாவும் அமெரிக்காவும் பொறுப்போடு அங்கீகரித்தாலே இலங்கை அரசுக்கும் முறையாக விண்ணப்பத்தை அவர்களால் மேற்கொள்ளமுடியும் என்பதையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் பொதுக்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச பேச்சுக்கள் மூலம் உடன்பாடு ஒன்று காணப்பட்டது. இந்த உடன்பாட்டை வரவேற்ற அமெரிக்க அரசு, எதிர்பாராத விதமாக இந்தக் கட்டமைப்புக்குத் தான் பங்களிக்க முடியாதென்பதையும் அதற்குச் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் ஒரு நிலைப்பாட்டை அறிவித்தது.

இந்த நிலைப்பாடு வெளியாகிய ஒரு சில நாட்களிலே தீவிரவாதத் தரப்புகள் இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து குறித்த சுனாமி உடன்படிக்கையைச் சட்டரீதியாக இரத்துச் செய்தார்கள். இது மிகவும் கவலைக்குரிய ஒரு முன்நிகழ்வு என்றும், இதைப்போன்ற நிலையைத் தமிழர்களுக்கு மீண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க மனித உரிமைப் பொறிமுறையினரிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் அரசியற் கைதிகள், அரசியற் கைதிகளாகச் சர்வதேச தரப்புகளால் அங்கீகரிக்கப்படுவது அவசியம் என்பதையும், சர்வதேசப் பொறிமுறைகளுக்கும் தலையீடு செய்துள்ள சக்திகளுக்கும் இது விடயத்தில் பொறுப்பு இருக்கிறதென்பதையும் குறித்த மகஜர் சுட்டிக்காட்டியிருக்கிறது.

குறித்த மகஜரின் பிரதிகள் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரம்சிங்காவுக்கும், நல்லிணக்கப் பொறிமுறையின் தலைவி சந்திரிக்கா அம்மையாருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



அச்சுவேலியில் வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
[Friday 2024-05-03 05:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த, வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை!
[Friday 2024-05-03 05:00]

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.



கட்டுநாயக்க விமான நிலைய விசா வழங்கும் பிரிவை இந்திய நிறுவனம் பொறுப்பேற்கவில்லை!
[Friday 2024-05-03 05:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.



வட இலங்கை சமாதானத்தை அனுபவிக்கிறதாம்!- சொல்கிறார் சொல்ஹெய்ம்.
[Friday 2024-05-03 05:00]

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு - 15ஆம் ஆண்டு நினைவு நாள்! Top News
[Friday 2024-05-03 05:00]

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திரவேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்டஎம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணிதிரள்வோம் வாரீர்.



உமா ஓயாவினால் மின்சார சபைக்கு தினமும் 80 மில்லியன் ரூபா மிச்சம்!
[Friday 2024-05-03 05:00]

உமாஓயா அபிவிருத்தி திட்டம் செயற்படத் தொடங்கியதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படுவதாக என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.



நள்ளிரவில் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை!
[Friday 2024-05-03 05:00]

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்ற அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



அனுரவின் மேதின கூட்டத்திலேயே அதிக சனம்! - என்கிறார் சம்பிக்க.
[Friday 2024-05-03 05:00]

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



இன, மதக் கலவரத்தை தடுத்தவர் பேராயர்!
[Friday 2024-05-03 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.



கனடாவில் முதியவர்களிடம் மோசடி செய்த இரு தமிழர்கள் கைது!
[Friday 2024-05-03 05:00]

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்துக்கு சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.



எரிக் சொல்ஹெய்முக்கு அம்பிகா கண்டனம்!
[Thursday 2024-05-02 17:00]

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.



அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்!
[Thursday 2024-05-02 17:00]

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்குவதை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றதால் பதற்றம்!
[Thursday 2024-05-02 17:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், நேற்று மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.



லக்ஷ்மன் யாப்பா, நஸீர் அஹமட் ஆளுநர்களாக சத்தியப் பிரமாணம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.



சரத் பொன்சேகாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை!
[Thursday 2024-05-02 17:00]

ஐக்கிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எந்தப் பங்கையும் வகிக்கவில்லை, எனவே அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதன் உப தலைவர் சுஜீவ சேனசிங்க இன்று தெரிவித்துள்ளார்.



பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவு!
[Thursday 2024-05-02 17:00]

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



புங்குடுதீவு அகழ்வில் செப்புக் காசுகளுடன் பெண்ணின் எலும்புக்கூடு சிக்கியது! Top News
[Thursday 2024-05-02 17:00]

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.



அனுரகுமாரவைச் சந்தித்தார் நோர்வே தூதுவர்!
[Thursday 2024-05-02 17:00]

நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.



மன்னாரில் கைதான சந்தேக நபரின் 9 கோடி 30 லட்சம் சொத்துக்கள் முடக்கம்!
[Thursday 2024-05-02 16:00]

யுக்திய தேடுதல் நடவடிக்கையின் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடி 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா