Untitled Document
April 26, 2024 [GMT]
கறுப்புயூலை நினைவுகளுடன் தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்! - பிரதமர் வி.உருத்ரகுமாரன்
[Sunday 2017-07-23 18:00]

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இது கறுப்புயூலை இனப்படுகொலையினை மையப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அறிக்கையிக் முழுவிபரம் :

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது கறுப்புயூலை இனப்படுகொலையினை மையப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அறிக்கையிக் முழுவிபரம் :

  

1983 ஆம் ஆண்டு யூலை மாத இறுதிவார நாட்களில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த இனவாதப்பூதம் நடாத்திய இனஅழிப்பு நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கில் பெறுமதி கொண்ட தமிழர் வர்த்தக நிறுவனங்கள், குடிமனைகள், சொத்துக்கள் இனவெறிக் காடையர்களால் கொள்ளையிடப்பட்டு நாசம் செய்யப்பட்டன. தமிழ் மக்கள் பாதுகாப்புத்தேடி தமிழர் தாயகப்பிரதேசங்களை நோக்கி ஓடி வந்தனர்.

தமிழினஅழிப்புக் கொடுமையின் உச்சக்கட்டமாக வெலிக்கடைச்சிறைச்சாலையில் வைத்து தங்கத்துரை, குட்டிமணி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மலரும் தமிழீழத்தை கண்தானம் செய்யப்படும் தனது கண்களின் ஊடாகப்; பார்ப்பேன் என நீதிமன்றத்தில் முழங்கிய தோழர் குட்டிமணியின் கண்களைத் தோண்டி காலால் மிதித்து குரூரக் களியாட்டத்தை சிங்களம் ஆடி மகிழ்ந்தது. நாகரீக உலகம் வெட்கத்தால் தலைகுனிந்தது.

சிங்களம் ஆடிய இந்த இனவெறியாட்டம் தற்செயலாக நடந்தவொன்றல்ல. சில காடையர்களால் மட்டும் முன்னெடுக்ப்பட்ட சட்டத்தை மீறிய குற்றவியல் செயற்பாடுகளுமல்ல. இது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட தமிழினஅழிப்பு. சிங்கள ஆட்சியாளர்களின் தீர்மானத்தின் பேரில், அவர்களின் ஒத்துழைப்புடன் நடாத்தி முடிக்கப்பட்ட பெருங் கொலைக்களம்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்களை அரசியல், பொருளாதார, சமூகரீதியில் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்த சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட நிராயுதபாணிகள் மீதான ஆயுதம் தாங்கிய போரே கறுப்புயூலை இனஅழிப்பு நடவடிக்கை. இத் தமிழின அழிப்பினை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை பல தமிழ் மக்களைப் பாதுகாத்த நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களையும் நாம் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

இவ்வினவழிப்பு நடைபெற்று 34 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதுவரை இதற்குக் காரணமானவர்கள் எவரும் விசாரணைக்கோ தண்டனைக்கோ உள்ளாக்கப்படவில்லை. கறுப்புயூலை தமிழின அழிப்பு நடைபெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதுவர் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் எவருமே தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என அனைத்துலக சமூகத்தின் முன் அளித்த வாக்குறுதி முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து தற்போதய சிறிலங்கா ஆட்சியாளர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நினைவு படுத்துகிறது.

அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதிகளை வழங்கி விட்டு அவர்களை சிறிலங்கா அரசு காலம் காலமாக ஏமாற்றி வருகிறது என்று எம்மில் சிலர் நினைப்பதுண்டு. சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏமாறும் அளவுக்கு அனைத்துலக சமூகம் வாயில் சூப்பியை வைத்திருக்கும் சிறுகுழந்தையல்ல என்பதனை நாம் கருத்திற் கொண்டாக வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கறுப்புயூலைக் குற்றத்தை அனைத்துலக சமூகம் கடுமையாகத் தண்டித்திருந்தால் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடைபெறுவதற்கான நிலைமைகள் அரிதாக இருந்திருக்கலாம். நட்பு அரசு என்றும் அரசுகளுக்கிடையிலான நலன்கள் என்றும் போடப்படும் கணக்குகள் ஊடாக சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக அரசுகள் காட்டிவரும் மெத்தனப் போக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் மத்தியில் எந்தவித மனமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய போதிய அழுத்தத்தை வழங்குவதற்குத் தடையாகவே இருந்து வருகிறது. இதனை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தற்போதய ஆட்சியாளர்கள் கறுப்புயூலையின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் தான். முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரழிப்பின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களே. இன்றுவரை தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த குற்றத்தை உணர்ந்து மனமுருகி மன்னிப்போ வருத்தமோ இவர்கள் கேட்டதில்லை. இத்தகைய ஆட்சியாளர்களால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அல்லது அரசியற்தீர்வைக் காணவோ முடியப்போவதுமில்லை என்பதே உண்மை.

எந்தவொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் இ;ருக்கும் என்பது இயற்கையின் விதி. கறுப்புயூலை இனவழிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியடையவும் அனைத்துலகமயப்படவும் வழிவகுத்தது. இதேபோல் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் முன்னெடுக்கப்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சுதந்திர வாழ்வை எட்டும்வரை உரிமைப் போராட்டம் ஓயப் போவதில்லை என்பதும் இயங்குநிலை வழிப்பட்ட உண்மையாக அமைகிறது.

கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை நினைவேந்தும் இத் தருணத்தில் இவ் இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைசாய்த்து வணக்கம் செலுத்தி தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு பிரதமர் வி.உருத்ரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா