Untitled Document
April 26, 2024 [GMT]
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம்: - பிரதமர் நரேந்திர மோடி
[Tuesday 2016-06-28 07:00]

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம், இது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.தில்லியில் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு மோடி திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, சுப்பிரமணியன் சுவாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், உங்கள் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஒருவர் ரகுராம் ராஜன் குறித்துத் தெரிவித்த கருத்துகள் சரியானதுதானா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து மோடி கூறியதாவது:எனது கட்சி சம்பந்தபட்ட நபராக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது முறையானது அல்ல. பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தாக்கிப்பேசுவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவது இல்லை. அனைவரும் அதிகபட்ச பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அரசு நிர்வாகத்தைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று யாராவது நினைத்தால் அது தவறு என்றார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம், இது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.தில்லியில் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு மோடி திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, சுப்பிரமணியன் சுவாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், உங்கள் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஒருவர் ரகுராம் ராஜன் குறித்துத் தெரிவித்த கருத்துகள் சரியானதுதானா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து மோடி கூறியதாவது:எனது கட்சி சம்பந்தபட்ட நபராக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது முறையானது அல்ல. பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தாக்கிப்பேசுவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவது இல்லை. அனைவரும் அதிகபட்ச பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அரசு நிர்வாகத்தைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று யாராவது நினைத்தால் அது தவறு என்றார்.

  

ரகுராம் ராஜனுக்கு பாராட்டு: அண்மையில் அலாகாபாதில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில், கட்சியினர் பேச்சிலும், செயலிலும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறிய பிறகும் அரசு உயரதிகாரிகள் மீதான தாக்குதல் போக்கு தொடர்கிறதே என்ற கேள்விக்கு, "இந்த விஷயத்தில் நான் கூறியுள்ளது மிகவும் தெளிவாக உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ரகுராம் ராஜனின் தேசப்பற்று எந்தவகையிலும் குறைந்தது இல்லை. இந்தியாவை நேசிக்கும் நபரான அவர், பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி தேசத்துக்காகப் பணியாற்றுவார். அவருடனான எனது அனுபவம் சிறப்பானது. அவர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அவர் இந்தியாவின் நலனுக்காகப் பணியாற்றவில்லை என்று கூறுவது நியாயமற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துவிட்டார். அவர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டாலும், பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய இருக்கிறார்' என்றார் மோடி.

ஊடகங்களின் தவறு: ரகுராம் ராஜன் வெளியேறுவதால் சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரத்துக்குப் பின்னடைவு ஏற்படும்; முதலீடுகள் குறையும் என்று கூறப்படுவது குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, "எனது தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு பதவியேற்றபோது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை மோடி நீக்கிவிடுவார்; ஏனெனில், அவர் காங்கிரஸ் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் என்று பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின. அவை தவறு என்று இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மோடி பதிலளித்தார்.

சுவாமியும் சர்ச்சையும்... முன்னதாக, ரகுராம் ராஜன் மீது சுப்பிரமணியன் சுவாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர், இந்தியா மீது பற்று இல்லாதவர் என்று குற்றம்சாட்டினார். இதற்கு அடுத்த சிலநாள்களிலேயே ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிமணியம் மீது சுவாமி குற்றச்சாட்டுகளைக் கூறி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை நிராகரித்ததுடன், அரவிந்த் சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து அருண் ஜேட்லி மீது சுவாமி மறைமுகமாகக் குற்றம்சாட்டினார்."கட்டுப்பாடுகளைத் தாண்டி நான் பேச ஆரம்பித்தால் கடும் விளைவுகள் ஏற்படும்' என்றும் ஜேட்லியை சுவாமி எச்சரித்தார்.ஆளும் பாஜகவில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர் ஒருவரே மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்து வந்தது அரசியல் அரங்கில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், சுவாமியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரதமர் மோடி நிராகரித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2024-04-26 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
[Friday 2024-04-26 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - அமித்ஷா!
[Friday 2024-04-26 06:00]

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் ஆவேசம்!
[Wednesday 2024-04-24 18:00]

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.



'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி!
[Wednesday 2024-04-24 06:00]

'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.



பாபநாசம் பட பாணியில் கொலை: போலீசாரே அதிர்ந்த சம்பவம்!
[Wednesday 2024-04-24 06:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.



'பஞ்சுமிட்டாய் போல நைட்ரஜன் பிஸ்கட் தடை செய்யப்படுமா?
[Wednesday 2024-04-24 06:00]

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி!
[Tuesday 2024-04-23 18:00]

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்: விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்!
[Tuesday 2024-04-23 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-04-23 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா