Untitled Document
April 26, 2024 [GMT]
இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு 17 வருட சிறைத்தண்டனை! - யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு
[Wednesday 2016-02-10 18:00]

மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார். அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார். அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

  

தண்டப் பணம் செலுத்தத் தவறினால் 2 வருடங்கள் கடூழியச் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்தத் தீர்ப்பு நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 14 ஆம் திகதி சித்திரை புதுவருட தினத்தன்று மீசாலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் சந்திரசிறி என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை, இராணுவ சிப்பாய் கவிந்த என்பவரைத் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி கொலை முயற்சி புரிந்தமை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு கனிஸ்ட அதிகாரி லான்ஸ் கோப்ரல் எதிரிபால என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ் மேல் நீதிமன்றில் கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சியமளித்த காயமடைந்த இராணுவ சிப்பாயாகிய கவிந்த, 14.4.2002 ஆம் திகதி இரவு 11.45க்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எதிரியான லான்ஸ் கோப்ரல் எதிரிபால என் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.இதனால் எனக்கு காலில் காயமேற்பட்டது. அதன் பின்னர் எதிரி இராணுவ சிப்பாய் சந்திரசிறி மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அதனால் காயமடைந்த சந்திரசிறி பின்னர் இறந்து போனார். இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை என் கண்களால் கண்டேன் என தெரிவித்தார்.

சரத் விஜயசிறி என்ற இன்னுமொரு இராணுவ சிப்பாய் சாட்சியமளிக்கையில், சம்பவம் நடைபெற்றபோது நான் நித்திரையில் இருந்தேன். துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தபோது, எதிரியான லான்ஸ் கோப்ரல் எதிரிவீர என்னை நோக்கி ரீ56 ரக துப்பாக்கியை நீட்டியவாறு நின்றிருந்தார். அதனைக் கண்டு, நான் எழ முயன்ற போது, என்னை நோக்கி துப்பாக்கியால் குறிவைத்த வண்ணம், நீ நல்லவன். தப்பி ஓடு என கூறினார். அவருடைய கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து, வெடி மருந்து மணம் வீசியது என தெரிவித்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், இந்த சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதன் பின்னர், எதிரியைக் கைது செய்து, அவரிடமிருந்த ரீ56 ரக துப்பாக்கியைக் கைப்பற்றினேன். அதன் பின்னர், எதிரியையும் அவர் வசமிருந்த துப்பாக்கியையும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தினேன் என்றார்.

இந்தச் சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் இராணுவ சிப்பாய் சந்திரசிறியின் மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி உருத்திர பசுபதி மயூரதன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். இந்தச் சம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் இராணுவ சிப்பாய் சரத் சந்திரசிறிக்கு காயம் ஏற்படுத்தப்பட்டதாக, இராணுவ வைத்திய அதிகாரி டாக்டர் மேஜர் முகமட் சரீப் நியாஸ் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் புலனாய்வு விசாரணைகளை நடத்திய பொலிஸ் புலனாய்வு பெறுப்பதிகாரி அந்த இடத்தில் இரத்தக் கறைகள் இருந்ததாகவும் அங்கிருந்து நான்கு வெற்றுத் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட வெற்றுத் தோட்டாக்களை அடையாளம் காட்டி சாட்சியமளித்தார். அரச இராணுவ பகுப்பாய்வாளர் பத்திரனலாகே காமினி மடவல நீதிமன்றில் சாட்சியமளித்தபோது, அவரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வு குறித்த பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பகுப்பாய்வுக்காகத் தன்னிடம் கையளிக்கப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கியில் இருந்தே தனக்குக் கையளிக்கப்பட்ட நான்கு வெற்றுத் தோட்டக்களுக்குரிய துப்பாக்கிக் குண்டுகள் புறப்பட்டுச் சென்றன என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.

எதிரியான லான்ஸ் கோப்ரல் எதிரிபாலவுக்கு அரச கடமைக்காக துப்பாக்கி வழங்கிய இராணுவ அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில், குறிப்பிட்ட இலக்கம் கொண்ட ரீ 56 ரக துப்பாக்கியை 2000 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கையளித்ததாகவும், அதனை அவர் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி ஆயுதக் கிடங்கின் ஆவணப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறி, அதற்கான ஆதாரமாக அந்தப் பட்டியலை நீதிமன்றத்தில் சான்றாக சமர்ப்பித்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்ட எதிரி லான்ஸ் கோப்ரல் எதிரிவீரவும் சாட்சியமளித்தார்.சம்பவ தினத்தன்று நான் மதுபோதையில் இருந்தேன். நான் யார் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. அன்றிரவு சாமம் 2 மணிக்குப் பின்னர் நான் பொலிஸ் நிலைய கைதிக்கூண்டில் இருப்பது எனக்குத் தெரிந்தது. கடமைக்காக எனக்கு எதுவித ஆயுதமும் யாரும் தரவில்லை' என நம்பகத்தன்மையற்ற வகையில் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான சம்பவத்தில், துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெறுவதற்கு 5, 10 நிமிடங்களுக்கு முன்னர், எதிரிக்கும் இறந்தவருக்கும் இடையில் திடீர்ச் சண்டையொன்ற எற்பட்டிருந்தது என்பது வழக்கு விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரைக் கொலை செய்வதற்கான எண்ணம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இதனால் முதலாது குற்றச்சாட்டை நீpதிபதி கைமோசக் கொலைக் குற்றச்சாட்டாக மாற்றம் செய்தார். விசாரணையின் முடிவில், கைமோசக் கொலைக் குற்றச்சாட்டு, கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றங்களிலும் எதிரியை குற்றவாளி என நீதிமன்றம் கண்டது.

அப்போது, எதிரியை நோக்கி ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, கூறுவதற்கு எதுவுமில்லை என எதிரி பதிலளித்தார். இதனையடுத்து நீதிபதி இளஞ்செழியன் தனது தண்டனைத் தீர்ப்பில் தெரிவித்ததாவது: இந்த வழக்கில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ லான்ஸ் கோப்ரல் எதிரிவீர தானாகவே விரும்பி மது அருந்தியது அவருடைய தவறு. இந்த இராணுவ வீரர், கடமை புரியும் இராணுவ முகாமில் மது போதையில் ஆபத்தான ஆயுதமாகிய துப்பாக்கியை ஏந்தி துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதனை பாரதூரமான ஒரு செயலாக நீதிமன்றம் கருதுகின்ற போதிலும், குற்றவாளியாகிய எதிரிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது. இந்தத் தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறினால், ஒரு வருடம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதேபோன்று, சரத் விஜயசிறி என்ற இராணுவ வீரர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது.

தண்டப் பணத்தைக்கட்டத் தவறினால் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் எதிரியின் செயற்பாட்டினால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பதனால்,எதிரி 2 தண்டனைகளுக்கும் மொத்தமாக 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அத்துடன் மொத்மதாக 20 ஆயிரம் ரூபத தண்டமாகச் செலுத்த வேண்டும்.தண்டப் பணம் செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைவாசம் செய்ய வேண்டும்.இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரும், நீதிமன்றத் தண்டனை பெற்றவரும் வவுனியா உலுக்குளம் என்ற ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.



புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்!
[Thursday 2024-04-25 06:00]

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை!
[Thursday 2024-04-25 06:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய வழக்கு விசாரணை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 06:00]

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



தலைமன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
[Thursday 2024-04-25 06:00]

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.



சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு?
[Thursday 2024-04-25 06:00]

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.



ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Thursday 2024-04-25 05:00]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை!
[Thursday 2024-04-25 05:00]

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.



பொய்கூறும் கோட்டாவின் புத்தகம்!
[Thursday 2024-04-25 05:00]

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



இறக்குமதி பால்மா விலை குறைகிறது!
[Thursday 2024-04-25 05:00]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா