Untitled Document
May 8, 2024 [GMT]
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி! - சுவிஸ் பேட்டியில் ரணில்
[Friday 2016-01-22 07:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உள்ளூர், வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உள்ளூர், வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினார்.

  

இலங்கை புதிய பாதையில் பயணிக்கின்றது. ஆசியாவிலே முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இங்கு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவைப் பொறுத்த அளவில் இதுவொரு பாரிய சவாலை வெற்றி கொண்டதற்கு சமமானதாகும் இந்ததேசிய அரசு உதயமானதன் பின்னர் மக்களுக்கு பல்வேறுபட்ட நன்மையான பணிகளை முன்னெடுத்திருக்கின்றது. மக்களின் பிரதான பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டுள்ளன. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்த கால கட்டத்தில் நாட்டை மீட்டெடுத்து நல்லாட்சியின் மூலம் ஜனநாயகத்தை மலரச் செய்ய முடிந்துள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த, அல்லது வெளியேற்றப்பட்ட வடக்கு கிழக்கு மக்களை மீளக்குடியமர்த்துவதிலும், நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் முடிந்துள்ளது. நாட்டுக்குத் தேவையான பொருளாதார மாற்றம் மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பலமுன்னேற்பாடான திட்டங்களில் ஆரம்ப வெற்றியை ஈட்டிக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று அரசியலமைப்பினூடாவே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலத்துக்குக் காலம் தேர்தல்கள் மூலம் அரசுகள் மாறி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் எக்காலத்திலும் மாற்றம் காண முடியாத தேசிய கொள்கைத் திட்டத்தை தயாரிப்பதில் எமது அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படி கருத்துக்களுடன் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் விரிவான விளக்கங்களை அளித்தார்.

கேள்வி - சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொள்ளும் உடன்படிக்கை தொடர்பாக தெளிவுபடுத்துவீர்களா?

பதில்- இது தொடர்பாக நாம் இன்னமும் சர்வதேச நாணயத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். உலகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இப்போதிருந்தே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையில் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது குறித்து ஆழமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன் பிரகாரமே இந்த உடன்படிக்கையை தயாரிக்க எண்ணியுள்ளோம்.

கேள்வி - தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு எவ்வாறாகச் செயற்படுகின்றது?

பதில் - எமது அரசு இது தொடர்பில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேசி வருகின்றது. அத்துடன் புதிய தேர்தல் முறை குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். தமிழ் மக்களின் காணிகளை அவற்றின் சொந்த உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றச் செயற்பாடுகளின் போது மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு பெற்றுக் கொடுக்கும். அத்துடன் பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாமனைவரும் இலங்கையர்கள் என்பதே எமது ஒரே நிலைப்பாடாகும்.

கேள்வி - தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வாறாக உள்ளது?

பதில்- தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரசியல் கைதிகள் என வெவ்வேறு பிரிவுகள் கிடையாது. நாட்டில் கைது செய்யப்பட்ட கைதிகள் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டில்லாத பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேள்வி - அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்ற அடிப்படையில் இலங்கை எதிர்நோக்கும் சவால் என்ன? அத்துடன் சீனா இலங்கையில் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?

பதில் - சீனா உலகில் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அந்த நாடு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நாடாகவே நாம் சீனாவை நோக்க வேண்டும். இலங்கையின் அடிப்படை வசதிகளுக்காக பெருந் தொகையான பணத்தை சீனா செலவிட்டுள்ளது. அந்த நாட்டின் பல திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் அம்பாந்தோட்டை துறை முகத்துக்கு அண்மித்த பகுதியின் அபிவிருத்தித் திட்டம், கொழும்புத்துறைமுக நகரத் திட்டம் என்பனவற்றை குறிப்பிடலாம். எனினும் நாம் சீனாவிடமிருந்து எதிர்பார்ப்பது நிதி உதவிகளையும், கடனுதவிகளையும் மட்டுமல்ல. எமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான முதலீடுகளை சீனா செய்யவெண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். சீனாவிடமிருந்து மட்டுமல்ல பொருளாதார வளம் பொருந்திய உலக நாடுகளிடமிருந்து பெருமளவிலான முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு எமது நாட்டை பொருளாதார பலம்மிக்கதாகி உன்னத நிலைக்குக் கொண்டு வருவதே எமது இலக்காகும்.

  
   Bookmark and Share Seithy.com



உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்காது! - சுமந்திரன் கூறுகிறார்.
[Wednesday 2024-05-08 05:00]

யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



வெளிநாடுகளுக்கு வளங்களை கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டிருக்காது!
[Wednesday 2024-05-08 05:00]

தாயக வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் 2009 இல் அழிக்கப்பட்டிருக்காது என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



வடக்கு கிழக்கில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - அடுத்தவாரம் சூடு தணியும்!
[Wednesday 2024-05-08 05:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானியலாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



மோசடியை அம்பலப்படுத்திய இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் சிக்கல் வரும்!
[Wednesday 2024-05-08 05:00]

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.



ஏமாந்து விடாதீர்கள் - படையினருக்கு கமல் குணரத்ன வேண்டுகோள்!
[Wednesday 2024-05-08 05:00]

ரஷ்ய - உக்ரைன் போர் நடவடிக்கையில் பணியாற்றுவதற்கு ஆட்களை சேர்க்கும் மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என இலங்கை படையினருக்கு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சீனாவின் உதவியுடன் டிஜிட்டல் மயமாக்கப்படும் கல்வி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வியின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுக்கு சீன அரசாங்கம் ஆதரவை வழங்க இணங்கியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.



இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மட்டும் தான்! - வேறெதுவும் நடக்காது என்கிறார் பிரசன்ன ரணதுங்க.
[Wednesday 2024-05-08 05:00]

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளுநர் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



மோடியின் நண்பனின் நிறுவனத்துக்கே விசா வழங்கும் அனுமதி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசா வழங்குவதற்கு முழுமையான அதிகாரம் குடிவரவுத் திணைக்களத்திற்கே உள்ள நிலையில், 'ரணில் - ராஜபக்ச' அரசாங்கம் வருகை விசா மற்றும் இணைய விசா வழங்குவதற்கான அனுமதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கி நண்பரான சுபின் கர்கரியாவுக்கு சொந்தமான விஎவ்எஸ் குளோபல் (VFS Global) நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.



இது பொலிஸ் ராஜ்யமல்ல - சஜித் எச்சரிக்கை!
[Wednesday 2024-05-08 05:00]

கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல .இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



உள்ளூராட்சி சபைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சதி! - தயாசிறி குற்றச்சாட்டு.
[Wednesday 2024-05-08 05:00]

தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாக சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.



வெலிக்கடை சிறையில் முன்னாள் போராளி உண்ணாவிரதம்! - சிறிதரன், கஜேந்திரன் பார்வையிட்டனர்.
[Tuesday 2024-05-07 16:00]

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் .



விஜயதாசவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
[Tuesday 2024-05-07 16:00]

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



தாயின் கழுத்தை நெரித்துக் கொன்ற 16 வயது மகன்! - விசாரணையில் ஒப்புக்கொண்டான்.
[Tuesday 2024-05-07 16:00]

அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் வெப்ப அலையினால் 5 பேர் பலி!
[Tuesday 2024-05-07 16:00]

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.



ஆட்சிக்கு வந்ததும் மதுபான உரிம பத்திரங்கள் ரத்து!- சஜித் அறிவிப்பு.
[Tuesday 2024-05-07 16:00]

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் ஆசிர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்தால் இது கட்டாயம் நிறுத்தப்படும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். இது தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக இந்த உரிமங்களை தடை செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



விசா நடைமுறையை மாற்ற விட்டால் பதவி விலகுவேன்! - ஹரீன் எச்சரிக்கை.
[Tuesday 2024-05-07 16:00]

புதிய விசா நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் பதவி விலகுவேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பொணாண்டோ அமைச்சரவை கூட்டத்தில் எச்சரித்துள்ளார். புதிய திட்டம் முன்வைக்கப்பட்ட வேளை வி.எவ்.எஸ் கட்டணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இது குறித்து தெரியவந்ததும் நான் எனது எதிர்ப்பை வெளியிட்டேன் என ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.



மொட்டு எம்.பிக்கள், அமைப்பாளர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு!
[Tuesday 2024-05-07 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



வித்தியா கொலை வழக்கு - விசாரணையில் இருந்து விலகினார் நீதியரசர் துரைராஜா!
[Tuesday 2024-05-07 16:00]

புங்குடுதீவு மாணவி சிவலோக நாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் எஸ். துரைராஜா விலகியுள்ளார்.



போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட திருகோணமலை ஊடகவியலாளர்!
[Tuesday 2024-05-07 16:00]

திருகோணமலையில்போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



வீசா சேவைக் கட்டணத்துக்கு பாராளுமன்ற அனுமதி பெறப்படவில்லை!
[Tuesday 2024-05-07 16:00]

விசா கட்டணம் அதிகரிக்க பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டபோதும் வீ,எப்.எஸ். சேவை கட்டணத்துக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இல்லை. சட்டவிரோதமான முறையிலேயே வீ,எப்.எஸ். கட்டண அதிகரிப்பு பிரேரணை நுழைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா